என் மகன் வெளிநாட்டில் பணிபுரிகிறார். அவர் எப்போது தாயகம் திரும்பி குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வார் என்று கூறுங்கள்? - வெங்கடேசன், சென்னை.

பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 9, 12-க்கு அதிபதியான சந்திரன், செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும், 10-ஆம் அதிபதி 12-ல் இருப்பதாலும் காலபுருஷபடி 9-ஆவது ராசியான தனுசு ராசியில் ராகு அமையப்பெற்று தற்போது ராகு தசை நடப்பதாலும் வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரியக்கூடிய அமைப்புகள், வெளிநாட்டில் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய அமைப்புதான் பலமாக இருக்கிறது. அடுத்து 12-ல் இருக்கக்கூடிய குரு தசை நடப்பதால் ஜாதகர் தற்போது உடனடியாக பிறந்த ஊருக்கு வருவதைவிட வெளியூர், வெளிநாட்டில் இருப்பதுதான் சிறந்தது. லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி சனி வக்ரகதியில் அமையப்பெற்று 6-ல் இருப்பதால் ஜாதகருக்கு குடும்பத்தோடு வாழக்கூடிய அமைப்புகள் சற்றுக் குறைவு. தற்போது ராகு தசை நடப்பதால் பிரதான காலங்கள் வெளிநாட்டில் இருக்கக்கூடிய அமைப்புதான் பலமாக இருக்கிறது.

ss

நானும் என் தங்கையும் கும்பகோணத்தில் இருக்கிறோம். நாங்கள் எப்போது சென்னை வர முடியும் என்று கூறுங்கள்? -ராதா, கும்பகோணம்.

பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது புதன் தசையில் புதனுக்கு 8-ல் உள்ள சந்திர புக்தி நடக்கிறது. தசாநாதனுக்கு புக்திநாதன் 8-ல் இருந்து 27-9-2024 முடிய சந்திர புக்தி நடப்பது ஒரு தேவையற்ற குழப்பங் கள், நிம்மதி குறைவை ஏற்படுத்தும் அமைப்பாகும். அடுத்து 27-9-2024-க்கு பிறகு செவ்வாய் புக்தி வர உள்ளது. செவ்வாய் புக்தி காலத்தில் நீங்கள் விரும்பிய இடமாற்றத்தை மேற்கொள்ள முயற்சித்தால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. புதன் வக்ரகதியில் இருப்பதால் மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.

எனக்கு திருமணம் எப்போது நடைபெறும்? எனக்கு திருக்கணித ஜாதகப்படி பூரம் 4-ஆம் பாதம் வருகிறது. ஆனால் வாக்கியப்படி உத்திரம் 1-ஆம் பாதம் வருகிறது. இதில் எதை எடுத்துக்கொள்வது என்று கூறுங்கள்? -பிரியா, காரைக்கால்.

பதில்: பூர நட்சத்திரம், சிம்ம ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் 6-ல் நீசம் பெற்றாலும் உடன் புதன் இருப்பதால் நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டிருக்கிறது. களத்திர காரகன் செவ்வாய் 9-ல் அமையப் பெற்று குரு பார்வையுடன் இருப்பது நல்ல அமைப் பாகும். தற்போது செவ்வாய் தசை 12-7-2025 முடிய நடப்பதால் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் விரைவில் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. 7-ஆம் அதிபதி நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு இருப்பதால் திருமண முயற்சியில் ஒரு தடைக்குப் பிறகு அனு கூலங்கள் இருக்கும். குரு பார்வை 7-ஆம் வீடு மற்றும் செவ்வாய்க்கு இருப்பதால் நல்ல பலன் ஏற்பட வாய்ப்பு உண்டு. திருக்கணித பஞ்சாங்கம்தான் துல்லியமான கணிதம் ஆகும். திருக்கணிதப்படி பூர நட்சத்திரம் சிம்ம ராசி வருகிறது. அதனை எடுத்துக்கொள்வது நல்லது.

எனக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்று கூறுங்கள்? -ஜெகநாதன், கோவை.

பதில்: அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, மகர லக்னத் தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன் 11-ல் நீசம் பெற்றா லும் நீச வீட்டு அதிபதி பரிவர்த்தனை பெற்றதால் நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு உள்ளது. உங்கள் ஜாதகத்தில் 2-ல் கேது, 8-ல் சனி, ராகு, செவ்வாய் ஆகிய கிரகங்கள் அமைந்தது தோஷமாகும். அதுமட்டுமில்லாமல் 2-ல் அமையப்பெற்ற கேது தசை 2013 முதல் 2020 வரை நடந்தது சாதகமற்ற நிலை ஆகும். தற்போது சுக்கிர தசையில் சூரிய புக்தி 16-3-2025 முடிய நடப்பதால் திருமண முயற்சிகள் தற்போது மேற்கொண்டால் நல்லது நடக்க வாய்ப்புண்டு. சிம்மத்தில் அதிக பாவ கிரகம் இருப்பதால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும்.

என் கணவர் அரசாங்க உத்தியோகத்தில் உள்ளார். அவர் வேலைக்கு போகாமல் வீட்டுக்கு வந்துவிடுகிறார். அவருக்கு வேலையில் ஏதாவது பிரச்சினையா? ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா என்று கூறுங்கள்?

பதில்: ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்கள் கணவருக்கு தற்போது குரு தசையில் ராகு புக்தி 8-7-2026 முடிய நடக்கிறது. சிம்மத்தில் சனி, ராகு அமையப்பெற்று தற்போது ராகு புக்தி நடப்பதால் மேலதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரமாகும். அது மட்டுமில்லாமல் குரு வக்ரகதியில் இருக்கும்போது பிறந்து தற்போது குரு தசை நடப்பதால் அனைத்து விஷயத்திலும் அதிகமாக கௌரவம் பார்ப்பார். அது மட்டு மில்லாமல் அவருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்ற கவலை இருக்கும். குறிப்பாக தனக்கு சரியான மதிப்பு, மரியாதை கிடைக்கவில்லை என்ற கவலை அதிகப் படியாக இருக்கும். சிம்மத்தில் ராகு இருக்கும் பொழுது பிறந்திருப்பதால் மேலதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் பணி செய்தால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பிறந்த ஜாதகத்தில் சனி, சூரியன் பரிவர்த் தனை பெற்றிருப்பதால் ஜாதகருக்கு ஏதாவது ஒரு இடமாற்றம் வந்து அதன்பிறகு அனுகூலங்கள் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.