ப் கேள்வி: எங்களுக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அடுத்ததாக ஆண் வாரிசு கிடைக்குமா, அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறுங்கள்? -ஜெயலட்சுமி, சென்னை.

பதில்: மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 5-ஆம் அதிபதியும், புத்திரகாரகனுமான குருபகவான் ஜென்ம லக்னத்தில் அமையப்பெற்று 5-ஆம் வீட்டை பார்ப்பது நல்ல அமைப்பாகும். குரு பார்வை 5-ஆம் வீட்டிற்கும் இருப் பது நல்ல சிறப் பான அமைப்பு என்றாலும் உங்கள் மனைவி ஜாதகத் தில் 5-ஆம் அதிபதி செவ்வாய் 9-ல் இருப்பது நல்ல அமைப்பு என்றா லும் மனைவியின் ஜாதகத்தில் புத்திர காரகன் குரு பகவான் சூரிய னுக்கு 7-ல் அமை யப்பெற்று வக்ர கதியில் இருப்பது சாதகமற்ற அமைப் பாகும். இதன்காரணமாக ஆண் வாரிசு ஏற்பட இடையூறுகள் ஏற்படுகிறது. நீங்கள் பிறந்தது மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி. உங்கள் மனைவி பிறந்தது அவிட்ட நட்சத்திரம், மகர ராசி. இருவருமே செவ்வாய் நட்சத்திரத்தில் பிறந்திருப்பது நட்சத்திர பொருத்தத்தில் ரஜ்ஜு பொருத்தம் வராது. ஒரே ரஜ்ஜுயில் பிறந்தவர்கள் திருமணம் செய்கின்ற பொழுது ஏதாவது ஒரு மனக்குறை ஏற்பட்டுவிடுகிறது. மனைவி ஜாதகத்தில் குரு வக்ரகதியில் இருப்பதால் தட்சிணாமூர்த்தி வழிபாடு, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதன்மூலம் இறையருளால் நல்லது நடக்கட்டும்.

qq

ப் கேள்வி: எனக்கு வேலையில் எப்போது பதவி உயர்வு கிடைக்கும். எப்போது நான் கோவில் கட்டுவேன் என்று கூறுங்கள்? -கணேசன், திருச்சி.

பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது ராகு மகா தசையில் சந்திர புக்தி 17-9-2024 முடிய நடக்கிறது. மேஷ ராசியில் பிறந்த உங்களுக்கு 4-11-2023-ல் சனி வக்ரநிவர்த்தி அடைய இருப்பது நல்ல அமைப்பு என்பதால் பணியில் பதவி உயர்வுகள் அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ஜாதகத்தில் குரு கேது நட்சத்திரத்தில் அமையப் பெற்று சூரியன் வீட்டில் இருப்ப தும் குரு சந்திர னுக்கு 5-ல் இருப்பதும் ஆன்மிகப் பணி களில் ஒருவரை ஈடுபடுத்தக் கூடிய ஒரு சிறப்பான அமைப்பாகும். 6-10-2025-ல் குரு தசை தொடங்குகின்றபொழுது ஆலய பணிகள், தெய்வீகப் பணிகளில் நீங்கள் ஈடுபட்டால் கோவில் கட்டும் வாய்ப்பு உண்டு. தற்போது ராகு தசை நடப்பதால் நற்பலன் அடைய அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, குலதெய்வங்களை வழிபாடு செய்வது நன்மை தரும்.

ப் கேள்வி: எனக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -தியாகராஜன், மதுரை.

பதில்: சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு களத்திரகாரகன் சுக்கிரன் கேது நட்சத்திரமான மகத்தில் இருப்பது சாதகமற்ற அமைப்பாகும், சந்திரன் கேது சேர்க்கைப் பெற்று சந்திரனுக்கு 7-ல் ராகு இருப்பதும், சந்திரனுக்கு 2-ல் சனி இருந்து சனி தசை நடப்பதும் அனுகூலமற்ற அமைப்பாகும். ஒருவர் ஜாதகத்தில் சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் 1, 2, 7, 8-ல் அமையப்பெற்று 2, 7-ல் இருக்கக்கூடிய பாவ கிரகத்துடன் தசை நடைபெற்றால் திருமணம் நடைபெற இடையூறுகள் ஏற்படுகிறது. உங்களுக்கு சந்திரனுக்கு 2-ல் இருக்கக்கூடிய சனி தசை 16-1-2010 முதல் நடைபெறுவது சாதகமற்ற அமைப்பாகும். இதுபோல் சனி தசை நடைபெறுகின்றபொழுது ஒரு நல்லது நடக்க இடையூறுகள் ஏற்படும். அப்படி அமைந்தாலும் ஒருசில தேவையற்ற நிம்மதி குறைவுகள் உண்டாகும். சந்திரனுக்கு 2-ல் அமைந்துள்ள சனி தசை நடைபெறுவதால் அமையும் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். உறவு இல்லாமல் அந்நியத்தில் வரன் பார்க்கவும். இறையரு ளால் நல்லது நடக்கட்டும். தற்போது நடைபெறக் கூடிய சனி தசையைவிட அடுத்து வரக் கூடிய புதன் தசையில் நிம்மதி கிடைக்கும்.

ப் கேள்வி: எனக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -சுதர்சன், கரூர்.

பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சனி 6-ல் மறைந்திருப்பது திருமணத்தை தாமதப்படுத்தக்கூடிய அமைப்பாகும். உங்கள் ஜாதகத்தில் களத்திரகாரகன் என வர்ணிக்கக் கூடிய சுக்கிரன் கேது நட்சத்திரத்தில் இருப்பதும், கேதுவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந் திருப்பதும் திருமண, வாழ்க்கைரீதியாக ஒருசில இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். சந்திரன் சுக்கிரன்- கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்று 7-ஆம் அதிபதி சனி என்ற காரணத்தால் அந்நியத்தில் வரன் பார்ப்பது ஒருசில அனுகூலத்தை தரும். தற்போது சந்திர மகா தசையில் சுயபுக்தி 28-5-2024 முடிய நடப்பதால் அடுத்து வரக் கூடிய செவ்வாய் புக்தி காலத்தில் கோட்சாரத்தில் குரு 2-ல் இருக்கின்றபொழுது அனுகூலப் பலன்கள் உண்டாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வும்; நல்லது நடக்கட்டும்.

ப் கேள்வி: என் மகள் ஆங்கிலம் 3-ஆம் ஆண்டு படிக்கிறாள். அடுத்து என்ன படிப்பு படிக்கலாம். அரசாங்க வேலை கிடைக்குமா என்று கூறுங்கள்?

பதில்: கேட்டை நட்சத்திரம், விருச் சிக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 4-ஆம் அதிபதி புதன் சூரியன் சேர்க்கைப்பெற்று இருப்பது நிபுணயோகமாகும். கல்வித்துறையில் நல்ல சாதிக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும். 5-ல் கேது இருந்து தற்போது கேது தசை நடைபெறுவது ஒருசில தடங்கல்களை ஏற்படுத்தக் கூடிய அமைப்பாகும். மனம் தளராமல் படிப்பில் கவனம் செலுத்த சொல்லுங் கள். படிப்பில் சாதிக்க முடியும். 10-ஆம் அதிபதி குரு என்ற காரணத்தினால் வங்கிப் பணி, கல்வி சார்ந்த பணிகளில் வேலை செய்வ தற்காக நீங்கள் முயற்சித்தால் உங்கள் மகளுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பணிகளில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அடுத்து வரக்கூடிய சுக்கிர தசையில் நல்லது நடக்கும்.

ப் கேள்வி: என் மகன் அரசு வங்கி பணிக்காக 6 ஆண்டுகளாக தேர்வு எழுதி கொண்டிருக்கிறார். அவருக்கு அரசு வங்கி பணி கிடைக்குமா அல்லது தனியார் துறைகளில் முயற்சிக்கலாமா என்று கூறுங்கள்? -சிவகுமார், மதுரை.

பதில்: பூச நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 10-ஆம் அதிபதி செவ்வாய் 11-ல் குரு வீட்டில் உள்ளார். பொதுவாக வங்கிப் பணியில் அமர்வதற்கு லக்ன, ராசிக்கு 10-ஆம் வீட்டில் குரு பலமாக இருக்க வேண் டும். உங்கள் மகனுக்கு லக்ன ராசிக்கு பத்தாம் அதிபதி செவ் வாய் என்ற கார ணத்தினால் நிர்வாகத் தொடர்புடைய பணிகளில் அமர்வதற்கான யோகமானது பலமாக இருக்கிறது. நிர்வாக தொடர்பான துறையில் தனது கல்வி தகுதியை வளர்த்துக் கொண்டு வேலைக்காக முயற்சித்தால் நல்ல வாய்ப்புகள் அமையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. குரு நீசம் பெற்றாலும் குருவும் சனியும் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் ஏதாவது ஒரு தற்கா-க பணியில் சிறிது காலம் அமர்ந்துவிட்டு அதன்பின்பு நிரந்தர பணியில் அமரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் மகன் ஜாதகத்தில் 10-ல் சூரியன் இருந்தாலும் பாவகரீதியாக சூரியன் 9-ல் இருப்பதால் அரசு பணி மட்டும் இல்லாமல் அரசுக்கு நிகரான பெரிய நிறுவனத்தில்கூட இடங்களில் நிர்வாக தொடர்புடைய வேலைக்காக முயற்சித்தால் நல்லது நடக்கும்.

ப் கேள்வி: எனக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -வெண்ணிலா, சிவகங்கை.

பதில்: ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன் உச்சம் பெற்றிருப்பது அற்புத மான அமைப்பாகும். எட்டிலுள்ள செவ்வாய் கேது சாரம் பெற்றிருப்பதால் ஒரு சில இடையூறுகள் ஏற்படுகிறது. தற்போது ராகு தசை நடைபெறுவதால் உடல் உபாதைகள், திருமண சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒரு சில இடையூறு கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கி றது. 1-5-2024 முதல் குரு ஜென்மத் தில் அமையப் பெற்று ஜென்ம ராசிக்கு 7-ஆம் வீட்டை பார்க்கின்றபொழுது நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. ராகு தசை நடைபெறுவதால் 6-3-2027 வரை வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மேலோட்டமாக பார்க்கின்றபோது ராகு 9-ல் இருந்தாலும் பாவகரீதியாக ராகு 8-ல் இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதன் காரணமாக திருமணமே ஆனாலும் தேவையற்ற தடைகள், தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆரோக் கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற் கொள்வது.