என் மகன் ஜாதகத்தில் தொழில், திருமணம் பற்றி கூறுங்கள்? -லட்சுமி, பாளையங்கோட்டை.

மூல நட்சத்திரம், தனுசு ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி புதன் 5-ல் இருப்பதாலும் சுக்கிரன் ஆட்சி பெற்று 7-ஆம் வீட்டை குரு பார்ப்பதாலும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கக்கூடிய யோகங்கள் உண்டு. தற்போது சந்திர தசையில் கேது புக்தி நடப்பதால் 18-9-2025-க்கு பிறகு சுக்கிர புக்தி வரும் தருவாயில் சிறப் பான வாழ்க்கை ஏற்படும்.

10-ஆம் அதிபதி குரு 3-ல் இருப்பதாலும், 10-ல் சனி, சந்திரன் சேர்க்கைப் பெற்றிருப்பதாலும் வேலைக்குச் செல்வது மிகமிக சிறப்பு. சொந்தத் தொழில் செய்தால் அதில் நிறைய ஏமாற்றத்தை சந்திக்க வேண்டியநிலை ஏற்படும். தற்போது சந்திர தசை நடப்பதால் பெருமாள் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

என் தங்கை மகள் வேற்று சாதி பையனை விரும்புகிறாள். இந்த காதல் திருமணம் நடைபெறுமா? அல்லது முறிவு ஏற்படுமா? இவளின் திருமண வாழ்க்கை எப்படியிருக்கும்? -சக்திவேல், சென்னை.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த பெண்ணுக்கு 7-ஆம் அதிபதி சனி என்ற காரணத் தாலும், 5-ல் கேது இருப்பதாலும் களத்திரகாரகன் செவ்வாய்- சனி சாரம் பெற்று தந்தையை காரகன் சூரியன்- ராகு நட்சத்திர மான சதயத்தில் இருப்பதால் இந்தப் பெண்ணுக்கு உறவில் திருமணம் செய்தால் மணவாழ்க்கை நன்றாக இருக்காது. அது மட்டுமில்லாமல் தந்தை வழியில் பகைமை ஏற்படுத்தக் கூடிய அமைப்பு ஆகும்.

அந்நியத்தில் வேற்று ஜாதி பையனை அந்தப் பெண்ணே விரும்புவதால் சமாதானமாக பேசி முடித்து, திருமணம் செய்து வைப்பதுதான் ஜாதகரீதியாக நன்று. அடுத்து 5, 7-க்கு அதிபதியான குரு- சனி சேர்க்கைப் பெற்றிருப்பதால் விருப்பத்தின்மேல் திருமணம் நடைபெறு வதற்கான வாய்ப்புகள் சற்று பலமாக இருக்கிறது.

qq

எனக்கு சொந்த வீடு எந்த திசையில் அமையும்? உடல்நிலை மற்றும் பொருளாதாரம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -சிவகுமார், வடலூர்.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மகர லக்கனத்தில் பிறந்த உங்களுக்கு 4-ஆம் அதிபதி செவ்வாய்- சனி பார்வையுடன் 6-ல் மறைந்து இருப்பதால் உங்கள் ஜாதகரீதியாக சொந்தவீடு யோகம் சற்று பலவீனமாக இருக்கிறது. நீங்கள் சொத்துகள் வாங்க முயற்சிக்கின்றபொழுது கூட்டாக வாங்கினால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. உங்கள் ஜாதகரீதியாக கூட்டாக வீடு வாங்குகின்றபொழுது தெற்கு பார்த்து வாங்கினால் சற்று சாதகமாக இருக்கும்.

தற்போது சந்திரன்- கேது சேர்க்கை பெற்று சந்திர தசையில் சனி புக்தி 11-11-2025 முடிய நடக்கிறது. சந்திரன்- கேது சேர்க்கைப்பெற்று சந்திர தசை நடப்ப தால் ஜல சம்பந்தப்பட்ட உடம்பு பாதிப்புகள், மூச்சு திணறல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப் பாடோடு இருப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, பெருமாள் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

எனக்கு திருமணம் எப்பொழுது நடைபெறும்? செவ்வாய் தோஷம் உள்ளதா என்று கூறுங்கள்? -சுமன், கடலூர்.

பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சனி 9-ல் நீசம்பெற்று வக்ர கதியில் இருப்பதும் உடன் வக்ர குரு இருப்ப தும் நல்ல அமைப்பு இல்லை. திருமண சம்பந்தப்பட்ட விஷயத்தில் மேற்கொள்ளக் கூடிய முயற்சிகளில் சில இடையூறுக்கு பிறகு நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சந்திர தசையில் தற்போது சந்திர புக்தி 7-3-2025 முடிய நடக்கிறது. 2027 தொடக் கத்தில் உங்களுக்கு சந்திர தசையில் குரு புக்தி நடக்கும். குரு புக்தி நடக்கும் சமயத்தில் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடப்பதற்கான வாய்ப்புகள் பலமாக இருக்கிறது. தற்போது சந்திர தசை நடப்பதால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது, பெருமாள் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

என் மகன் சில வருடங்களாக செரிமாண சம்பந்தபட்ட உபாதைகளால் அவதிப்படுகிறான். எந்த சிகிச்சையும் பலன் அளிக்கவில்லை. தற்போது நடைபெறும் தசா புக்தியில் ஆரோக்கியம் சீராகுமா? வரும் காலம் எப்படி இருக்கும் என்று கூறுங்கள்? -பாலசாமி, கோவை.

பூச நட்சத்திரம், கடக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 16-5-2023 முதல் கேது தசை நடக்கிறது. செவ்வாய்- கேது சேர்க்கைபெற்று கேது தசை நடப்பதால் ஹார்மோன் சம்பந்தப் பட்ட பிரச்சினைகள், ரத்த சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், வயிறு உபாதைகள் ஏற்படு வதற்கான வாய்ப்புகள் உண்டு. பொதுவாக கேது தசை நடைபெற்றால் கண்டுபிடிக்க முடியாத சின்ன சின்ன உடல் உபாதைகள் ஏற்படும். கேது தசை கடந்த ஒன்றை வருடங் களாக நடக்கிறது. அடுத்து ஐந்து ஆண்டு களுக்கு கேது தசை நடக்கிறது. கேது தசையில் குரு புக்தி வருகின்றபொழுது அதாவது இரண்டு வருடம் கழித்து சற்று முன்னேற்றம் இருக்கும். நடப்பது கேது தசை என்பதால் இயற்கை உணவுகளை உட்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பதன்மூலம் ஆரோக்கியத்தில் முன்னேற் றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. கேதுவை குரு பார்ப்பதால் விநாயகர் வழிபாடு மேற்கொள் வது நற்பலனைத் தரும்.