எனது மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? வரன் உறவிலா அல்லது அந்நியத்திலாலி? பரிகாரம் ஏதாவது செய்ய வேண்டுமா என்று கூறுங்கள்? -பாலாஜி, செவ்வாய் பேட்டை.
பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு ஜென்ம லக்னத்திற்கு 2-ல் சனி, கேது, 8-ஆம் வீட்டில் செவ்வாய், ராகு இருக்கின்றபொழுது பிறந்துள் ளார். 2, 8-ல் நான்கு பாவ கிரகங்கள் இருப்பதால் அமையும் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய ஜாதகம் ஆகும். கும்ப லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 7-ஆம் அதிபதி சூரியன் கேந்திரம் பெற்று குருபார்வை பெறுவதும், களத்திரகாரகன் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்று சிறப்பாக இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் சிறப்பான வாழ்க்கை அமையக் கூடிய யோகங்கள் உண்டு. 2, 8-ல் பாவ கிரகங்கள் இருந்தாலும் அந்த கிரகங்களின் தசை திருமண காலங் களில் நடக்காது என்பதால் குறிப்பாக திருமணம் முடிந்து அடுத்து வரக்கூடிய 15 வருடத்திற்குள் பாவ கிரகங்கள் தசை நடக்காது என்பதால் பெரிய கெடுதிகள் இல்லை. ராகு 8-ல் இருந்தாலும் பாவகரீதியாக 7-ல் இருப்பதாலும், சுக்கிரன்- ராகு சாரம் பெற்றிருப்பதாலும் சொந்தமில் லாமல் அந்நியத்தில் வரன் அமையக் கூடிய வாய்ப்புகள் பலமாக இருக்கிறது. 2, 8-ல் பாவகிரகங்கள் இருப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
எனது எதிர்கால நிலை என்ன? உடல்நிலை, பொருளாதார நிலை எப்படியிருக்கும்? -முருகானந்தம், பழனி.
பதில்: பூர நடசத்திரம், சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம லக்னத்தில் 5, 8-க்கு அதிபதியான குரு- கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்று சந்திரன் சேர்க்கைப் பெற்று உள்ளார். சந்திரன்- குரு சேர்க்கைப் பெற்று, குரு- கேது சாரம் பெற்றிருப்ப தால் பொது காரியங் கள், ஆன்மிக தெய்வீக ஈடுபாடுகள் அதிகரிக்க கூடிய நேரமாகும். தற்போது குரு தசை 12-5-2027 முடிய நடப்ப தால் இருக்கும் இடத் தில் மதிப்பும், மரியாதை யுடன் வாழும் அமைப் புண்டு. சனி உச்சம் பெற்றிருப்ப தால் நல்ல ஆரோக்கியம் ஏற்படும். அடுத்துவரும் சனி தசையில் சுயபுக்தி காலத்தில் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொண்டால் நற்பலனை அடையமுடியும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.
எனது திருமணம் விவாகரத்தில் முடிந்துவிட்டது. லக்னத்தில் சூரியன், செவ்வாய் சேர்ந்திருந்தால் திருமண வாழ்வில் பிரிவு வருமா? இரண்டாவது திருமணம் அமைந்து நல்லமுறையில் வாழமுடியுமா என்று கூறுங்கள்? -சதிஷ்குமார், அவிநாசி.
பதில்: பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னத் தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 7-க்கு அதிபதியான சனி வக்ரம் பெற்றிருப்பதால் திருமண வாழ்வில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. 7-ஆம் அதிபதி சனி வக்ரம் பெற்றிருப்பதாலும், சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்கள் சேர்க்கை பெற்றிருப்பதாலும் மறுமணத் திற்கான முயற்சிகள் மேற் கொள்ளலாம். உங்கள் ராசிக்கு 7-ல் கேது இருப்பதாலும், லக்னத்திற்கு 7-க்கு அதிபதி சனி என்ற காரணத்தாலும் உறவில்லாமல் அந்நியத் தில், வேறு பிரிவில் உள்ள பெண்ணை மறுமணத்திற்காக பார்த்தால் வாழ்க்கை ஓரளவுக்கு நன்றாக இருக்கும். சுக்கிரனுடன் சூரியன், செவ்வாய் இணைந்திருப்பதால் மறுமணத்திற்கான வாய்ப்புகள் உண்டு. சந்திரனுக்கு 7-ல் கேது அமையப் பெற்று 5-7-2026 முதல் கேது தசை நடைபெற இருப்பதால் வாழ்க்கை அமைந்தாலும் கேது தசை காலத்தில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய ஜாதகம் ஆகும். வினாயகர் வழிபாடு நன்மை தரும்.
எனக்கு திருமணம் எப்போது நடக்கும்? ஜாதகத்தில் தோஷம் ஏதாவது உள்ளதா என்று கூறுங்கள்? -கார்த்திக், சென்னை.
பதில்: உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, மகர லக்னத் தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன்- கேது சேர்க்கைப்பெற்று களத்திரகாரகன் சுக்கிரன் 12-ல் மறைந்த காரணத்தாலும் ராசிக்கு 7-ல் ராகு அமையப்பெற்று ராகு தசை நடைபெற்றதாலும் திருமணம் தாமதம் ஆகியுள்ளது. 20-10-2024 முதல் குரு தசை தொடங்க இருப்பதால் குரு தசை யில் நல்ல வாழ்க்கை அமையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருபுறம் ராகு ராசிக்கு 7-ல் இருப்பதாலும், லக்னத்திற்கு 3-ல் உள்ள ராகு பாவகரீதியாக 2-ல் அமையப்பெற்று ராகு தசை நடந்த காரணத்தால்தான் உங்களுக்கு ராகு தசை காலத்தில் வாழ்க்கை அமையவில்லை. தற்போது ராகு முடிந்து குரு தசைவர உள்ள தால் நல்ல வாழ்க்கை அமையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமண முயற்சிகளை மேற்கொண் டால் இந்த ஆண்டு இறுதியில் கண்டிப்பாக நல்லது நடக்கும். கவலைப்பட வேண்டாம். குரு வக்ரகதியில் இருப்பதால் குல தெய்வ வழிபாடு மேற்கொள்ள வும்.
எனது மகளுக்கு எப்போது வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது நடக்கும்?
பதில்: திருவோண நட்சத்தி ரம், மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 8, 10-க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றுள்ளது. தற்போது 3-ஆவது தசையாக ராகு தசை நடைபெறுகிறது. அது மட்டு மில்லாமல் ஏழரைச்சனி 29-3-2025 முடிய நடக்கிறது. தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் ராகு முடிந்து குரு வருகின்றபொழுது வேலை நிமித்தமாக ஒரு நல்ல வாய்ப்புகளும், முன்னேற்றமும் உண்டாகும். உங்கள் மகளுக்கு 7-ல் உள்ள ராகு தசை தற்போது நடப்பதால் ராகு முடிந்த பிறகு திருமணம் செய்தால் மிகவும் சிறப்பு. குறிப்பாக 23-11-2026 வரை ராகு தசை முடிந்து குரு தசை தொடங்கும். குரு தொடங்கியபிறகு திருமணம் செய்தால் மிகவும் நல்லது. அதற்குள் திருமணம் செய்தால் ராகு முடியும் வரை விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய ஜாதகம் ஆகும். ஜாதகிக்கு முதலில் ஒரு பணி அமையும் அதன்பிறகு அதில் ஒரு மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் வெளியூர் தொடர்புகள் ஏற்படக்கூடிய அமைப்பும் உள்ளது. குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய ஜாதகமாகும்.
எனக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள்? -மகாராஜா, திருநெல்வேலி.
பதில்: அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன் 2-ல் அமைந்து குரு பார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பது அற்புதமான அமைப்பு. பிறக்கின்றபொழுது சுக்கிரன், குரு, புதன் சேர்க்கைப் பெற்றிருப்பதும் திருமணத்திற்குபிறகு நல்ல ஒரு வளர்ச்சியை தரக்கூடிய அமைப்பாகும். தற்போது உங்களுக்கு குரு தசையில் கேது புக்தி 25-9-2024 முதல் நடக்கிறது. 2025 செப்டம் பருக்கு பிறகு உங்களுக்கு சுக்கிர புக்தி நடக்கும். சுக்கிர புக்தி நடக்கும் பொழுது ஒரு நல்ல வாழ்க்கை அமையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. கவலைப்படவேண்டாம். நிதானத்தைக் கடைபிடிக்கவும். குரு பரிவர்த்தனை பெற்றிருப்பதால் வாழ்வில் நல்ல மாற்றங் கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்ளவும்.