கேள்வி: எனக்கும் என் தங்கைக்கும் ஒரே மாதத்தில் திருமணம் நடந்தது. உறவு கள் இடையில் விரிசல், பகை, நோய் என்று வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருக்கின்றேன். ஒரு குடும்பத்தில் ஒரே மாதத்தில் இருவரும் திருமணம் செய்யக்கூடாது என்று புத்தகத்தில் படித்தேன். இதனால்தான் எங்களுக்கு இந்த நிலைமையா? எங்கள் பிரச்சினைகள்தீர உரிய வழி கூறுங்கள்? -வேணுகோபால், சென்னை.
பதில்: ஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்யக்கூடாது என்ற கருத்துதான் உண்டுதவிர ஒரே மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது என்று இல்லை. மிருகசீரிட நட்சத்திரம், மிதுன ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு களத்திர ஸ்தான அதிபதி சந்திரன் 6-ல் அமைந்து ராகு சேர்க்கைப்பெற்று இருப்பது சற்று சாதகமற்ற அமைப்பாகும். பொதுவாக ராகு- சந்திரன் சேர்க்கைப்பெற்றால் வீண் குழப்பங்கள், தேவையற்ற மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ஜாத கத்தில் சனி, குரு, செவ்வாய் ஆகிய கிரகங் கள் பலமாக இருப்பது நல்ல அமைப்பு. தற்போது உங்களுக்கு புதன் தசை நடக்கிறது. 6-ஆம் அதிபதி புதன் 12-ல் இருப்பதால் விபரீத ராஜயோகம் ஆகும். புதன், கேது சேர்க்கைப்பெற்று இருப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. விஷ்ணு வழிபாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்கட்டும். குறிப்பாக உங்களுக்கும், உங்கள் சகோதரிக்கு இருக்கக்கூடிய ஒற்றுமை குறைவுக்கு பூர்வ ஜென்ம தோஷம் ஒரு காரணமாக இருக்கலாம். அதற்கு குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது. வீண் குழப்பத்தை குறைத்துவிட்டு இறைவழிபாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும். அக்டோபர் 30-க்குப் பிறகு வாழ்வில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
கேள்வி: எனக்கு இரண்டாவது குழந்தை எப்போது பிறக்கும்? ஆணா, பெண்ணா என்று கூறுங்கள்? -மீனா, தூத்துக்குடி.
பதில்: திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு குழந்தை பாக்கியத்தை குறிக்கக்கூடிய ஸ்தானமான 5-ஆம் அதிபதி செவ்வாய் வக்ரம் பெற்றி ருப்பது புத்திர தோஷமாகும். ஒரு ஜாதகத் தில் ஆண் கிர கங்கள் என வர்ணிக்கப் படக்கூடிய சூரியன், செவ்வாய், குரு பலமாக இருந்தால் அதுவும் குறிப்பாக 5-ல் பலமாக இருந்தால் ஆண் வாரிசு யோகம் உண்டாகும். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் வக்ரம்பெற்று, நீச வீட்டில் உள்ளார். சூரியன் ராகுவுக்கு மிக அருகில் அமையப்பெற்று கடுமையான கிரகண தோஷத்தில் உள்ளார். குரு 10-ல் இருந்தாலும் பெண் கிரகமான சந்திரன் நட்சத்திரத்தில் உள்ளது. உங்களுக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது என தெரிவித்துள்ளீர்கள். தற்போது சனி தசையில் சுய புக்தி நடைபெறுவதால் அடுத்த குழந்தை பெறுவது என்பது சிறிது சிரமத்துக்கு பிறகு தான் ஏற்படும். அடுத்த குழந்தை பெண் வாரிசுக்கான அமைப்புதான் பலமாக இருக்கிறது. உங்கள் கணவர் ஜாதகம் பலமாக இருந்தால் கணவரின் ஜாதக யோகத்தால் கூட ஆண் வாரிசு ஏற்படலாம். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்கட்டும்.
கேள்வி: என் எதிர்காலம் மற்றும் ஆயுள் பற்றி கூறவும்?- தரன், திருவில்-புத்தூர்.
பதில்: அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு ஆயுள்காரகன் சனி ஆட்சிபெற்று இருப்பது நீண்ட ஆயுளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் தற்போது சந்திரன் நீசம்பெற்று கேது சேர்க்கைப்பெற்று சந்திர தசையில் சனி புக்தி 6-3-2025 முடிய நடப்பது அனுகூலமற்ற அமைப்பாகும். சந்திரன் காலபுருஷப்படி 8-ஆவது ராசியில் அமை யப்பெற்று நீசம்பெற்று சந்திர தசை நடப்பதும், சந்திர தசையில் கடக லக்னத்திற்கு 7-ஆம் அதிபதியான சனி ராகு சாரம் பெற்று புக்தி நடப்பதும் உடல் உபாதை களை ஏற்படுத்தக்கூட அமைப்பாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பெருமாள் வழிபாடு மேற்கொள்வது நல்லது. கேள்வி- பதில் பகுதியில் கேள்வி கேட்கின்றபொழுது பொதுவாக எதிர் காலம் எப்படியிருக்கும் என்று கேட்காமல் அடுத்து ஒரு வருடத்தில் நடக்கக்கூடிய விஷயத்தைப் பற்றி சுருக்கமாக கேள்வி கேட்டால் வசதியாக இருக்கும்.
கேள்வி: என் ஆயுள் காலம் எவ்வளவு, நான் இன்னும் எத்தனை காலம் வேலைக்கு செல்வேன் என்று கூறுங்கள்? -சக்திவேல், உடுமலைபேட்டை.
பதில்: உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது 8-ஆம் அதிபதியான புதன் 2-ல் அமையப்பெற்று புதன் தசையில் சுயபுத்தி நடப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு அல்ல. ஸ்திர லக்னத்திற்கு 8-ஆம் அதிபதி பலமீனமாக இருந்து புதன் தசையில் சுய புத்தி நடப்பதால் அதிக வேலைப்பளு இல்லாத பணி களை செய்வது, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது, ஆரோக்கியத் தில் அக்கறை எடுத்துக் கொள்வது, முடிந்தவரை ஓய்வெடுப்பது நல்லது. புதன் நீச வக்ரகதியில் இருப்பதால் உடல் பலவீனத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு ஆகும் என்பதால் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தரவும். விஷ்ணு வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது. ஜாதகம் பார்ப்பது ஒருவருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு தான். ஜோதிடத்தில் நான் பெரும்பாலும் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள் என்றுதான் கூறுவனேதவிர ஒரு குறிப்பிட்ட காலம்வரை தான் உங்களுக்கு ஆயுள் இருக்கிறது என்று யாருக்கும் கூறுவது இல்லை. தயவுசெய்து எவ்வளவு நாட்கள் ஆயுள் உள்ளது போன்ற கேள்விகளை முடிந்தவரை இந்த பகுதியில் தவிர்க்கவும்.
கேள்வி: குரு தசை எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -வள்ளிநாயகம், திருநெல்வே-.
பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு குரு 5-ல் உச்சம்பெற்று 3-5-2023 முதல் குரு தசை தொடங்கி இருப்பது சிறப்பான அமைப்பாகும். அதன்காரணமாக ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய அமைப்புகள், இருக்குமிடத் தில் மதிப்பு, மரியாதைகள் மேலோங்க கூட அமைப்பு கள், தாராள தனவரவுகள் ஏற்படும். சந்திரன் கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்று சந்திரனுக்கு 4-ல் குரு உச்சம்பெற்று இருப்பது கெஜகேசி யோகம் ஆகும். தற்போது குரு தசை நடப்பதால் பொதுக்காரியங்கள் ஈடுபடக்கூடிய அமைப்பு, பலருக்கு உதவி செய்யக்கூடிய பண்பு, ஆன்மிக- தெய்வீக நாட்டங்கள், கௌரவ பதவிகளை அடையும் வாய்ப்பு ஏற்படும்.
கேள்வி: என் மகனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது. படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறான். இந்த நிலை எப்போது மாறும் என்று கூறுங்கள்? - செந்தில், திருச்செங்கோடு
பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு சனி உச்ச வீட்டில் இருந்தாலும் வக்ரகதியில் இருப்பது சற்று சாதகமற்ற அமைப்பாகும். உங்கள் மகன் ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன் உச்சம்பெற்று செவ்வாய்- புதன் பரிவர்த்தனைப் பெற்று இருப்பதால் நீண்ட ஆயுள் உண்டு. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த உங்கள் மக னுக்கு தற்போது கோட்சாரத்தில் ஜென்ம ராசி யில் ஜெனன காலத்தில் கேது இருக்கிற வீட்டில் ராகு தற்போது சஞ்சரிப்பதால் உடல் உபாதை கள் ஏற்படுகிறது. அக்டோபர் 30-க்குப் பிறகு குறிப்பாக ராகு- கேது பெயர்ச்சி பிறகு உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சூரியன்- புதன் இணைந்து புதாதித்த யோகம் ஏற்பட்டு இருப்பதால் படிப்பில் கண்டிப்பாக ஒரு நல்ல நிலை அடைவார்; கவலைப்பட வேண்டாம்.