ப் கேள்வி: என் ஜாதகப்படி நான் சொந்த வீடுகட்ட முடியுமா, முடியாதா என்று கூறுங்கள்? -தனசேகரன், ஈரோடு.

பதில்: பூராட நட்சத்திரம், தனுசு ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 3, 4-ஆம் அதிபதி சனி 12-ல் அமையப்பெற்று 12-ஆம் அதிபதி சுக்கிரன் 3-ல் அமையப்பெற்று சனி, சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். 4-ஆம் அதிபதி பரிவர்த்தனை பெற்ற காரணத்தால் கண்டிப்பாக சொந்த வீடு யோகம் உண்டு. குறிப்பாக 4-ஆம் அதிபதி பரிவர்த்தனை பெறுகின்றபொழுது முதலில் ஒரு வீடு வாங்கி அதனை விற்றுவிட்டு வேறு ஒரு இடத்தில் சொத்து வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். குறிப்பாக உங்கள் ஜாதகத்தில் லக்னத்திற்கு 4-ஆம் அதிபதி சனி உச்சம்பெற்று இருப்ப தால் உங்களுக்கு பழைய வீட்டையோ, கட்டிய வீட்டையோ வாங்கும் யோகம்தான் பல மாக இருக்கிறது. புதிய வீடு கட்டக்கூடிய யோகம் என்பது சற்று குறைவாக இருக்கிறது. கடந்த ஏழரை வருடங்களாக ஏழரைச்சனி நடைபெற்றதால் ஒருசில இடர்பாடுகளை சந்தித்து வந்திருக்கிறீர்கள். விரைவில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு உங்கள் பெயரில் ஒரு வீடு அமையக்கூடிய யோகம் உண்டாகும். மனோ தைரியத்துடன் இருக்கவும்; விரைவில் நல்லது நடக்கும். ராகு தசை நடப்பதால் கோபத்தை குறைத்துக்கொள்வது மணவாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வது அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

கேள்வி: என் மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? வாழ்க்கை எப்படி அமையும் என்று கூறுங்கள்? -வெங்கட், சென்னை.

பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி குரு 2-ல் உச்சம்பெற்றிருப்பது நல்ல அமைப்பாகும். 7-ல் சனி, 2-ல் கேது 8-ல் ராகு இருப்பது ஒருசில இடையூறு களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். சந்திரன், சுக்கிரன் இருவரும் கேது நட்சத்திரத்தில் இருப்பதால் உறவு இல்லா மல் அந்நியத்தில் வரன் பார்ப் பது நல்லது. தற்போது சந்திர தசையில் புதன் புக்தி 2-9-2023 முதல் நடக்கிறது, ராகு- கேது மாற்றத்திற்கு குறிப்பாக நவம்பர் மாதத்திற்குப்பிறகு கண்டிப்பாக ஒரு நல்ல வாழ்க்கை ஏற்படும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வும்.

Advertisment

கேள்வி: எங்களுக்கு திருமணமாகி 11 வருடம் ஆகிவிட்டது. 2 முறை கரு கலைந்து விட்டது. எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறுங் கள்? -அரவிந்த் குமார், சென்னை.

பதில்: அவிட்ட நட்சத் திரம், மகர ராசி, கடக லக்னத் தில் பிறந்த உங்களுக்கு புத்திரகாரகன் குருபகவான் சூரியனுக்கு 6-ல் அமையப் பெற்று வக்ர கதியில் உள் ளார். சூரியன் ராகு சாரம் பெற்றுள்ளது. இந்த இரு அமைப்பே குழந்தை பாக்கியத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்திவருகிறது. உங்கள் மனைவி ஜாதகத்தில் 5-ஆம் அதிபதியும் களத்திர காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய செவ்வாய், கேது நட்சத்திரத்தில் இருப்பது நல்ல அமைப்பு அல்ல. உங்கள் மனைவி ஜாதகத்திலும் குருபகவான் வக்ரகதியில் உள்ளது. பொதுவாக குரு வக்ரகதியில் இருந்தால் குழந்தை பாக்கியம் ஏற்பட இடையூறுகள் தேவையற்ற தடங்கல்கள் ஏற்படும். உங்கள் மனைவிக்கு இருமுறை கரு கலைந்துவிட்டது எனக் கூறியுள்ளீர்கள். உங்கள் மனைவிக்கு தற்போது ராகு தசை நடக்கிறது. சர்ப்ப கிரக ஆதிக்கம் இருந்தால் ஆங்கில மருத்துவத்தைவிட இயற்கை மருத்துவங்கள், ஆயுர்வேத மருந்துக்கள் எடுத்துக்கொள்வதன்மூலம் உடல்ரீதியாக இருக்கக்கூடிய சிறுசிறு குறைபாடுகள் விலகி நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. உடல்பலத்திற்கு இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலமாகவும், ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக்கொள்வதன்மூலமாக நல்லது நடக்கும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வும்.

கேள்வி: என் பேரன் தற்போது 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கின்றான். அவன் நன்றாக படிப்பானா, அவனுக்கு உயர்கல்வி படிக்கும் யோகம் இருக்கிறாதா? அவனுக்கு ஆரோக்கியம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -பிரபாகர்.

Advertisment

பதில்: பூராட நட்சத்திரம், தனுசு ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்கள் பேரனுக்கு 4-ஆம் அதிபதி சூரியன் உச்சம்பெற்றிருப்ப தால் கல்வியில் சாதிக்கக்கூடிய யோகம் உண்டு. புதன் லக்ன கேந்திரம் பெற்றதும் கல்விரீதியாக படிப்படியான வளர்ச்சி களை பெறுவார். புதன் வக்ரகதியில் இருப்பதால் முதலில் ஒரு துறையில் படித்து விட்டு அதன்பிறகு தனது எண்ணத் û த மாற்றிக் கொண்டு வேறு துறையில் படிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 4-ல் சனி இருப்பதால் படிப்பில் இடை யூறுகள் ஏற் படும் என கருத்தை கூறு வார்கள். பாவக ரீதியாக சனி 5-ல் இருப்பதால் பாதிப்புகள் குறைவு. சனி தசை நடந்தால்தான் படிப்பு தடை உண்டாகும். தற்போது பாவகரீதியாக 9-ல் இருக்கக் கூடிய சந்திர தசை நடக்கிறது. ஏழரைச்சனி முடிந்துவிட்டதால் இனி படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். சூரியன், சுக்கிரன் உச்சம்பெற்று வலுவாக இருப்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ss

கேள்வி: என் ஜாதகத்தில் குரு தசை எப்படியிருக்கும்? என் ஜாதகப்படி என் மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? அவளின் எதிர்காலம் எப்படி அமையும் என்று கூறுங்கள்? -செந்தில், ஈரோடு.

பதில்: மக நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 2, 5-க்கு அதிபதியான குரு 9-ல் உச்சம்பெற்று 20-1-2023 முதல் குரு தசை நடப்பது சிறப் பான அமைப் பாகும். நல்ல உடல் அமைப்பு இருக்கும் இடத் தில் பெயர், புகழ், கௌரவமான வாழ்க்கை, பொருளாதார ரீதியாக சிறப்பு, ஆன்மிக, தெய்வீக காரியங்களில் நாட்டம், புத்திரர்களால் மகிழ்ச்சி ஏற்படும். குரு தசையில் ஒரு வளமான பலன் களை பெறக்கூடிய யோகங்கள் உண்டு. உங்கள் மகளின் எதிர்காலத்தை பற்றி அறிந்துகொள்ள உங்கள் மகள் ஜாதகத்தை தான் பார்க்கவேண்டும். உங்கள் மகள் ஜாதகத்தை வாய்ப்பு கிடைக்கும்போது அனுப்பிவைக்கவும்.

கேள்வி: என் மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்?

பதில்: சுவாதி நட்சத்திரம், துலா ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன் 10-ல் இருப்பது அற்புதமான அமைப்பாகும். 7-ல் செவ்வாய் நீசம்பெற்றாலும் கடகத்தில் செவ்வாய் கடைசி நவாம்சத்தில் அதாவது ஆயில்யம் 4-ஆம் பாதத்தில் இருப்பது பெரிய கெடுதி இல்லை. செவ்வாய் நின்ற வீட்டு அதிபதி சந்திரன் கேந்திரம் பெற்றிருப்பது நல்ல அமைப்பாகும். தற்போது குரு மகா தசையில் சுக்கிர புக்தி 20-7-2025 முடிய நடைபெறுவதால் ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல வரன் அமையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. சுவாதி நட்சத்திரத் தில் பிறந்திருப்ப தால் அம்மனின் வழிபாடு, துர்க்கை வழி பாடு மேற் கொள்வது உக்ர தெய்வங்களை வழிபடுவது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நன்மையை தரும். ஜென்ம ராசிக்கு 1, 7-ல் இருக்கக்கூடிய ராகு- கேது வரும் 30-10-2023-ல் பெயர்ச்சி ஆகின்றபொழுது வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

கேள்வி: என் குலதெய்வம் (மூதாதையர்கள் வழிபட்ட கடவுள்) எது என்று தெளிவாக கூறவும்? -கணேசன், தஞ்சாவூர்

பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னத் திற்கு 5-க்கு அதிபதியான சுக்கிரன் சூரிய நட்சத்திரத்தில் அமையப்பெற்று குரு வீட்டில் உள்ளது. ராசிக்கு 5-ஆம் அதிபதி சூரியன். பொதுவாக குலதெய்வம் என்பது பெற்றோர் மற்றும் மூதாதை யரால் வழி காட்டக் கூடிய ஒன்றாகும். ஜோதிட ரீதியாக பார்க் கின்றபொழுது ஐந்தாம் வீட்டை கொண்டு குலதெய்வத்தை அறியலாம். குறிப்பாக உங்கள் ஜாதகத்தில் லக்னத்திற்கு 5-ஆம் அதிபதி சுக்கிரனாக இருப்பதால் பெண் தெய்வமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் ஜாதகத்தில் பாரம்பரியத்தை குறிக்கக்கூடிய கிரகமான குரு- கேது சேர்க்கைப்பெற்று சனி பார்வையுடன் இருப்பதால் குலதெய்வ வழிபாடு தடைப் பட்டு உள்ளது. நீங்கள் அம்பாள் வழிபாடு செய்வது, பாடல்பெற்ற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதுமூலம் உங்களின் பூர்வ ஜென்ம, பூர்வீகரீதியாக உள்ள தோஷம் விலகி நன்மை ஏற்படும்.