பாலமுருகன் பதில்கள் 18.10.2024

/idhalgal/balajothidam/balamurugan-answers-18102024

எனது மகனுக்கு வீடு கட்டும் காலம் எப்போது வரும்? எதிர்காலம் எப்படி யிருக்கும்?

பதில்: கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு பிறக்கின்றபொழுது குரு, செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்கள் உச்சம் பெற்றிருப்பது நல்ல அமைப்பு என்பதாலும் குரு பார்வை ஜென்ம லக்னத் திற்கு இருப்பதாலும் எதிர் கால வாழ்க்கை நல்ல சிறப்பாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. லக்னத்திற்கு 4-ஆம் அதிபதி சனி 8-ல் மறைந் திருப்பதால் சொந்த வீடு ஆகியவை அமைய காலதாமதம் ஆகும். 4-ஆம் அதிபதி சனி என்ற காரணத்தினால் பழைய வீட்டை புதுப்பித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள்

எனது மகனுக்கு வீடு கட்டும் காலம் எப்போது வரும்? எதிர்காலம் எப்படி யிருக்கும்?

பதில்: கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு பிறக்கின்றபொழுது குரு, செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்கள் உச்சம் பெற்றிருப்பது நல்ல அமைப்பு என்பதாலும் குரு பார்வை ஜென்ம லக்னத் திற்கு இருப்பதாலும் எதிர் கால வாழ்க்கை நல்ல சிறப்பாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. லக்னத்திற்கு 4-ஆம் அதிபதி சனி 8-ல் மறைந் திருப்பதால் சொந்த வீடு ஆகியவை அமைய காலதாமதம் ஆகும். 4-ஆம் அதிபதி சனி என்ற காரணத்தினால் பழைய வீட்டை புதுப்பித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள், சொத்துகளை கூட்டாக வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வளமான பலன்களைப்பெற அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்ளவும்.

ss

எனது பேத்தியின் மேற்படிப்பு வெளி நாட்டில் அமையுமா? -ராமலிங்கம், சென்னை.

பதில்: புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்கள் பேத்திக்கு உயர் கல்வி ஸ்தானமான 5-ஆம் அதிபதி புதன் 7-ல் அமைந்திருப்பது மேற்படிப்பு யோகத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். தற்போது லக்னத்திற்கும், 12-ஆம் அதிபதியுமான சனியின் தசை நடப்பதால் மேற்படிப்புக்காக வெளியூர், வெளிநாடுகளில் செல்வதற்கு முயற்சித்தால் நற்பலன் கிடைக்கும்.

என் திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்?

பதில்: திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி புதன் 4-ல் ஆட்சிபெற்று தற்போது உங்களுக்கு சனி தசையில் சுக்கிர புக்தி 13-1-2025 முடிய நடப்பதால் திருமண முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் விரைவில் நல்லது நடக்க வாய்ப்புண்டு. குரு வக்ரகதியில் இருக்கும்பொழுது பிறந்திருப்பதால் தற்போது கோட்சாரத்தில் குரு வக்ரகதியில் இருப்பதால் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் விரைவில் நல்லது நடக்க வாய்ப்புண்டு.

நானும் என் மகனும் என் கணவரை விட்டு பிரிந்து வாழ்கின்றோம். நாங்கள் மீண்டும் ஒன்று சேரமுடியுமா? என் கணவர் சொத்து என் பெயருக்கு வருமா? -வனிதா, கரூர்.

பதில்: மூல நட்சத்திரம், தனுசு ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 1, 7-ல் உள்ள ராகு- கேது பாவகரீதியாக 2, 8-ல் இருப்பதும், தற்போது கேது சாரம்பெற்ற சந்திர தசையில் சனி புக்தி நடப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். கேது சாரம் பெற்ற சந்திர தசை நடப்பதால் ஒற்றுமை குறைவு உண்டாகியுள்ளது. அடுத்து புதன் புக்தி வர இருக்கும் தருவாயில் விட்டுக்கொடுத்து சென்றால் மீண்டும் ஒற்றுமையாக வாழ்வதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சிபெற்று சனி- செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் கணவர்வழியில் அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு; குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.

எனக்கு திருமணம் காலம் எப்போது? -ராஜா, சேலம்.

பதில்: சித்திரை நட்சத்திரம், துலா ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது குரு தசையில் புதன் புக்தி 3-3-2025 முடிய நடக்கிறது. 2026 மார்ச்சுக்குபிறகு குரு தசையில் சுக்கிர புக்தி நடக்கும். சுக்கிரன் 7-ஆம் அதிபதி என்பதாலும் களத்திரகாரன் என்பதாலும் 2026-ல் சிறப்பான மண வாழ்க்கை அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குரு- சனி வக்ரம் பெற்றிருப்பதாலும் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும் ஒருசிறு தடைக்குபிறகு நல்லது நடக்க வாய்ப் புண்டு; 2026-ல் நல்லது நடக்கும்.

bala181024
இதையும் படியுங்கள்
Subscribe