கேள்வி: என் மகன் தற்போது வங்கி சம்பந்தமான படிப்பு படித்துக்கொண்டிருக்கின்றான். அவருக்கு வங்கியில் வேலை கிடைக்குமா? அவருடைய அம்மாவின் ஆரோக்கிய பிரச்சினைகள் தீருமா என்று கூறுங்கள்.

பதில்: உத்திராட நட்சத்திரம், மகர ராசி, கடக லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 10-ஆம் அதிபதி செவ்வாய் 5-ல் ஆட்சிப்பெற்றிருப்பது சிறப்பான அமைப்பு என்றாலும் வக்ரம் பெற்றிருப்பதால் ஒருசில இடையூறுகள் ஏற்படும். செவ்வாய் புதன் நட்சத்திரத்தில் இருப்பது சிறப்பான அமைப்பாகும். ராசிக்கு 10-ஆம் அதிபதி சுக்கிரன் ஆட்சிபெற்றிருப்பதும் உன்னதமான அமைப்பாகும். ஜாதகத்தில் குரு- புதன் இணைந்து புதன் ஆட்சிப்பெற்றிருப்பதால் வங்கி, பணம் சம்பந்தப்பட்ட இடங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். மனம் தளராமல் முயற்சிக்கவும்; நல்லது நடக்கும். தற்போது ஏழரைச்சனி நடப்பதால் சிறிதுகாலம் பொறுமை யோடு போட்டி தேர்வுகளில் பங்கு பெறவும். கண்டிப்பாக ஒரு நல்ல பலன் கிடைக்கும். பொதுவாக ஏழரைச்சனி நடைபெற்றால் ஜாதகருக்கு உடல் பாதிப்பு, முன் னேற்ற தடை, ஜாதகர் சார்ந்த பெற்றோருக்கு உடம்பு பாதிப்பு கள் ஏற்பட்ட படி இருக்கும். 2025 மார்ச் சில் ஏழரைச்சனி முடிகின்றபொழுது நல்ல முன்னேற்றங் கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தாயின் ஆரோக்கியத்தை பற்றி தெளிவாக அறிய தாயின் ஜாதகத்தை தான் கண்டிப்பாக பார்க்கவேண்டும். தற்போதைக்கு ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நற்பலனை தரும்.

aa

கேள்வி: என் திருமணம் எப்போது நடக்கும்? ஆயுள் எப்படியிருக்கும் என்று கூறுங்கள். -தேவேந்திரன், உத்திரபிரதேசம்.

பதில்: பூராட நட்சத்திரம், தனுசு ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 7-ஆம் அதிபதி சனி 12-ல் மறைந்தது சாதகமற்ற அமைப்பாகும். காலபுருஷப்படி 7-ஆவது ராசியான துலாத்தில் ராகு இருந்து ராகு தசை நடைபெற்றதும் ஒரு சாதகமற்ற அமைப்பாகும். லக்னம் கேது சாரம் பெற்று, 7-ஆம் அதிபதி சனியாகி, தந்தை காரகன் சூரி யன் சனி சாரம் பெற்று, பாரம்பரியத்தை குறிக்கக் கூடிய கிரகமான குரு வக்ர கதியில் இருப்பதால் வாழ்வில் நல்லது நடக்க இடையூறுகள் ஏற்பட்டு விட்டது. இதுபோன்ற அமைப்பு கொண்டவர் கள் சொந்தத்தில் வரன் பார்க்காமல் அந்நியத்தில் வேற்று ஜாதிப் பெண்ணை திருமணத்திற்காக முயற்சி செய்யலாம். அப்படி செய்கின்றபொழுது நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. 12-5-2024 முதல் குரு தசை நடைபெறுகின்ற காலத்தில் இறையருளால் ஒரு நல்லது நடக்கும். குலதெய்வ வழி பாடு மேற்கொள்ளவும்.

கேள்வி: நான் நீண்டநாட்களாக வேலையில்லாமல் இருக்கிறேன். வேலை கிடைக்குமா அல்லது ஏதாவது படிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கூறுங்கள்? -விக்னேஷ், நாகர்கோவில்.

பதில்: கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சனி 2-ல் இருப்பது நல்ல அமைப்பு என்றாலும் சந்திரன் நீசம்பெற்ற ராசியில் பிறந்திருப்பதால் மன குழப்பமிருந்து கொண்டிருக்கும். தற்போது உங்களுக்கு சுக்கிர தசை நடைபெற்றாலும் 3-ஆவது தசையாக சுக்கிர தசை நடப்பதால் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருப்பது சிறப்பல்ல. பொதுவாக மூன்றாவது தசை நடக்கின்றபொழுது மனநிறைவு உடைய பணி கிடைக் காது. உங்களுக்கு 22 வயதுதான் ஆகிறது. எந்த ஒரு துறையிலும் அனுபவமும் படிப்படியான வளர்ச்சியும்தான் நல்லது. முதலில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல வாய்ப்பினை பெறமுடியும். உங்கள் ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி உச்சம்பெற்று இருப்பதால் மேற்படிப்பு யோகம் பலமாக இருக்கிறது. உங்களுக்கு தற்போது நடக்கக்கூடிய சுக்கிர தசைவிட எதிர்காலத்தில் வரக்கூடிய சூரிய மகா தசை காலங்களில்தான் பெரிய வாய்ப்புக்கான வாய்ப்புகள் உண்டு. தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் எதிர்காலத்தில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும்.

கேள்வி: என் திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள். - தினேஷ் கண்ணா, காஞ்சிபுரம்.

பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி புதன் 2-ல் இருந்து தற்போது சூரிய தசையில் புதன் புக்தி 18-3-2024 முடிய நடக் கிறது. திருமண முயற்சிகள் மேற் கொண் டால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம்பெற்றதால் இறையருளால் நல்லது நடக்கும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது. உங்கள் ஜாதகத்தில் ஐந்தாமதிபதி சனி சாரம் பெற்றிருப்பதாலும், சூரியன் ராகு சாரம் பெற்றிருப்பதாலும், 7-ல் ராகு இருப்பதாலும் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது.

கேள்வி: நான் கடந்த 7 வருடமாக தொழில் சம்பந்தமான பிரச்சினைகளால் மன உளைச்சலில் உள்ளேன். என் வாழ்க்கையில் நல்லமாற்றம் வருமா? எனக்கிருக்கும் பொருளாதார நெருக்கடி, கடன் பிரச்சினைகள் தீருமா என்று கூறுங்கள். -கருப்புசாமி, ஈரோடு.

பதில்: திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்சமயம் சிம்ம லக்னத்திற்கு 6, 7-க்கு அதிபதி சனி 5-ல் வக்ர கதியில் அமையப்பெற்று சனி தசையில் 7-ல் இருக்கக் கூடிய ராகு புக்தி 31-10-2025 முடிய நடக்கிறது. வக்ர சனி தசை அவ் வளவு சிறப்பு இல்லை. திருவாதிரையில் பிறந்த உங்க ளுக்கு 3-ஆவது தசையாக நடக்கக்கூடிய சனி தசை பெரிய யோகத்தை தராது. அது மட்டும் இல்லாமல் சிம்ம லக்னத் திற்கு அதிபதியான சூரியனுக்கு சனி பகைவர் என்ற காரணத்தாலும், வக்ர சனி என்பதாலும் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாக சில தடை, தடங்கல் இடையூறு கள் கொடுக்கும், அதிலும் குறிப்பாக சனி தசையில் ராகு புக்தி என்பது மிகவும் நெருக்கடியான நேரம் ஆகும். ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு நவம்பர் முதல் வாரம் முதல் 11-ல் குரு தனித்து கோட்சாரத்தில் சஞ்சரிக்கும்போது ஒருசில முன்னேற்றங்கள் ஏற்படும். 2025-ல் சனி தசையில் குரு புக்தியில் ஒருசில முன்னேற் றங்களை அடைய முடியும். தற்போது நடைபெறக்கூடிய சனி தசையைவிட 13-5-2028 முதல் நடைபெற இருக்கக்கூடிய புதன் தசைதான் உங்கள் வாழ்வில் ஒரு நல்ல முன்னேற்றத்தை தரும். நவம்பருக்கு பிறகு கிடைக்கும் சிறுசிறு வாய்ப்பைக்கொண்டு இருக்கும் கடன்களை குறைத்துக்கொண்டு சற்று பொறுமையோடு நடந்துகொண்டால் எதிர்கால வாழ்க்கை மிகமிக சிறப்பாக இருக்கும், பைரவர் வழிபாடு, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

கேள்வி: இவருக்கு (பெண்) முதல் திருமணம் விவகாரத்தாகிவிட்டது. மறுமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள். -பாலகிருஷ்ணன், சுரண்டை

Advertisment

பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு 7-ஆம் அதிபதி சந்திரன் 7-ல் வலுவாக இருப்பது நல்ல அமைப்பே, களத்திரகாரகன் செவ்வாயும், திரிகோண ஸ்தானமான 9-ல் இருப்பது அனுகூலப் பலனை ஏற்படுத்தக் கூடிய யோகங் கள் உண்டு. தற்போது ஜாதகிக்கு சுக்கிர தசையில் குரு புக்தி 9-1-2025 முடிய நடப்பது அற்புதமான அமைப்பாகும். சூரியன்- செவ்வாய் இணைந்து மிக அருகில் இருப்பதால் கண்டிப்பாக மறுமண யோகம் உண்டு. நீங்கள் திருமண முயற்சி செய்தால் 2024 மே மாதத்திற்குப் பிறகு குரு லாப ஸ்தானத்தில் கோட்சாரத்தில் சஞ்சரிக்கும் தருவாயில் கண்டிப்பாக நல்லது நடக்கும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.

கேள்வி: என் திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள். -திருவாசகம், திருச்சி.

பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 2-ஆம் அதிபதி புதன் வக்ரம்பெற்று, 7-ஆம் அதிபதி சனி நீசம் பெற்றிருப்பது நல்ல அமைப்பில்லை. நீசம்பெற்ற சனி தசை தற்போது நடப்பதும் சாதகமான அமைப் பல்ல. 20 வருடத் துக்கு முன்பு கேட்கவேண்டிய கேள்வியை தற்போது நீங்கள் கேட்கிறீர் கள். பலருக்கு பலன் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த பகுதியை நடத்திவருகிறோம். தயவுசெய்து வயதுக்கும், கேள்விக்கும் சம்பந்தம் இல்லாத கேள்விகளை முடிந்தவரை தவிர்க்கவும். 53 வயதில் திருமணம் எப்போது என்று நீங்கள் கேட்கிறீர்கள். கடந்த வாரம் 80 வயது கடந்த ஒரு நபர் எனக்கு எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும் என்று கேட்கிறார். கேள்விக்கும் வயதுக்கும் சம்பந்தம் இருந்தால் மட்டுமே இனி இந்த பகுதியில் பதிலளிக்கப்படும். மனவருத்தம் அடைய வேண்டாம். அப்படி உங்களுக்கு பதில் கிடைக்கவேண்டும் என்றால் தயவுசெய்து இலவச பகுதியில் கேட்காமல் அருகில் இருக் கக்கூடிய ஜோதிடர்களை அணுகவும்.

Advertisment