என் மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -சுரேஷ் ராமகிருஷ்ணன், சென்னை.

பதில்: கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு களத்திரகாரகன் செவ்வாய் 8-ல் நீசம்பெற்று செவ்வாய் நின்ற வீட்டு அதிபதி சந்திரன் உச்சம்பெற்றதால் நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு இருக்கிறது. செவ்வாய் நீசபங்க ராஜயோகம் பெற்றிருப்பதால் தாமதத் திருமணயோகம் எனலாம். ஜாதகிக்கு தற்போது ராகு தசையில் கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்ற சனி புக்தி 18-2-2027 முடிய நடப்பது அவ்வளவு சிறப்பான அமைப்பு என கூறமுடியாது. கேது நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்து தசை புக்தி நடைபெற்றால் அக்காலத்தில் திருமண முயற்சிகளில் தீவிரமாக முயற்சி மேற்கொண்டால்தான் நல்லது நடக்கும். ராகு- கேது சாரம் பெற்று சனி- கேது நட்சத்திரத்தில் அமைய பெற்று ராகு தசையில் சனி புக்தி நடப்ப தால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் ஆகும். ரிஷப ராசியில் பிறந்த பெண்ணுக்கு 14-5-2025-க்குபிறகு குரு 2-ல் கோட்சாரத்தில் சஞ்சரிக்கும் தருவாயில் திருமண யோகமிருக்கிறது என்றாலும் சனி புக்தி முடியும்வரை வாழ்வில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சனி, ராகு, புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் கேது நட்சத்திரத்தில் இருப்பதால் தொடர்ந்து விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது.

ww

(பெண்) இவருக்கு காதல் திருமணம் நடைபெறுமா? அல்லது பெரியவர்கள் பார்க்கும் திருமணம் நடைபெறுமா என்று கூறுங்கள்?

பதில்: பூர நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த ஜாதிக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் 11-ல் நீசம்பெற்று சுக்கிரன்- புதன் பரிவர்த்தனை பெற்று இருக்கிறது. களத்திரகாரகன் செவ்வாய் கேது சேர்க்கைப்பெற்று இருக்கிறது. லக்னத் திற்கும் ராசிக்கும் 5-ஆம் அதிபதியான குரு வக்ரம் பெற்று கேது சாரம் பெற்றிருப்பதால் ஜாதகிக்கு திருமண விஷயத்தில் தேவையற்ற இடையூறுகள் அதன்மூலம் ஒரு ஏமாற்றத்தை சந்திக்கக்கூடிய அமைப்புகள் இருக்கிறது. குறிப்பாக 5-ஆம் அதிபதி வக்ரம் பெற்றிருப் பது காதல் தோல்வி, நினைப்பது நடக்க இடையூறுகள் ஏற்பட்டு அப்புறம் ஜாத கிக்கு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. செவ்வாய்- கேது சேர்க்கை பெற்றிருப்ப தால் திருமணம் எப்படி நடைபெற்றாலும் விட்டுக்கொடுத்து சென்றால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும். செவ்வாய்- கேது சேர்க் கைப் பெற்றிருப்பதாலும், சூரியன்- சனி நட்சத்திரத்தில் இருப்பதாலும், குரு வக்ர கதியில் கேது நட்சத்திரத்தில் இருப்பதாலும் உறவில் திருமணம் அமைய வாய்ப்பில்லை. பெற்றோர் சம்மதத்துடன் அந்நியத்தில் வரன் அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 8-11-2024 முதல் சுக்கிர புக்தி சூரிய தசையில் நடக்கவிருப்பது திருமண யோகத்தை தரும். குலதெய்வ வழிபாடு மிகவும் நல்லது.

என் கடன் பிரச்சினைகள் தீருமா? எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -அந்தோணிராஜ், கோவில்பட்டி

பதில்: மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 5-ஆம் அதிபதி புதனும் 10-ஆம் அதிபதி சனியும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறது. தற்போது உங்களுக்கு வக்ரம் பெற்ற சனி தசையில் 1, 6-க்கு அதிபதியான சுக்கிர புக்தி நடக்கிறது. சுக்கிரன்- கேது சேர்க்கைபெற்று சுக்கிர புக்தி நடப்பதால் பொருளாதார நெருக்கடி கள், 6-ஆம் அதிபதி என்பதால் கடன் பிரச் சினைகள் இருக்கிறது. குறிப்பாக சனி தசை நடந்தாலே ஒருவருக்கு கடன் ஏற்படும். சனி தசையில் 6-ஆம் அதிபதி புக்தி என்ற காரணத்தாலும் கடன்கள் அதிகரிக்கிறது. 2026 பிப்ரவரிக்கு பிறகு சுக்கிர புக்திக்கு அடுத்து வரக்கூடிய சூரிய புக்தியில் கடன்கள் சற்று குறைய வாய்ப்புண்டு.

புத்திர பாக்கியம் எப்பொழுது? அதற்கான பரிகாரங்கள் கூறவும்? தொழிலில் முன்னேற்றம் உண்டா?

பதில்: கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கும் ராசிக்கும் 5-ஆம் அதிபதியான குரு 12-ஆம் வீட்டில் ராகு நட்சத்திரத்தில் அமையப்பெற்று வக்ரகதியில் உள்ளார். புத்திர காரகனான குருவே வக்ரகதியில் இருப்பதால் குழந்தை பாக்கியம் தாமதம் ஆகிறது. குரு- ராகு நட்சத்திரத்தில் இருப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்ளவும். உங்கள் ஜாதகரீதியாக 2025 மே மாதத்திற்குபிறகு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. 10-ஆம் அதிபதி 8-ல் மறைந் திருப்பதாலும் சுக்கிரன் பாதக ஸ்தானமான 9-ல் அமையப்பெற்று தசை நடப்பதா லும் தொழில் விஷயங்களில் தனித்து செயல் படாமல் உடன் யாரையாவது இணைத்துக் கொண்டு செயல்படுவது நற்பலனைத் தரும். பாதக ஸ்தானத் திலுள்ள சுக்கிர தசை நடப்ப தால் எந்த ஒரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தற்போது சுக்கிர தசையில் சுக்கிரனுக்கு 8-ல் உள்ள சனி புக்தி 9-8-2025 முடிய நடப்பதால் சனி புக்திக்கு பிறகுதான் தொழிலில் ஒருசில முன்னேற் றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்ளவும்.

என் சகோதரியின் மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? வரன் வங்கியில் பணிபுரிபவரா அல்லது மற்ற துறைகளில் பணிபுரிபவரா என்று கூறுங்கள்? -உமா, மயிலாடுதுறை.

பதில்: ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்கள் சகோதரியின் மகளுக்கு ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி சந்திரன் உச்சம்பெற்று 5-ல் உள்ளார். ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் குரு உள்ளது. தற்போது ராகு தசையில் சனி புக்தி 22-1-2027 முடிய நடப்பதால் சனி புக்திக்கு அடுத்து வரக்கூடிய புதன் புக்தி காலத்தில் திருமண யோகம் உண்டு. 7-ல் செவ்வாய், சூரியன், குரு உள்ளதால் நல்ல நிர்வாகத் திறமை கொண்ட நபர், மக்களுக்கு சேவை செய்யக் கூடிய துறைகளில் பணி புரியக் கூடிய நபர் கணவராக வரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. சந்திரனுடன் ராகுவும், சந்திரனுக்கு 2-ல் சனியும் இருந்து ராகு தசையில் சனி புக்தி நடப்பதால் இரண்டு ஆண்டுகள் பொருத்து இருக்கவேண்டிய நேரமாகும். ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.