கேள்வி: நான் தற்போது தனியார் பள்ளியில் பணிபுரிகிறேன். எப்போது அரசு பள்ளியில் நிரந்திர பணி கிடைக்கும். என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறுங்கள்? -யுவராஜ், ஈரோடு.
பதில்: கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 10-ஆம் அதிபதி சுக்கிரன், செவ்வாய், சூரியன், புதன் சேர்க்கைப்பெற்று லக்னத்தில் அமையப்பெற்று இருப்பது நல்ல அமைப்பாகும். இக்கிரக சேர்க்கை சந்திரனுக்கு 10-ல் அமைந்திருப்பதும் சிறப்பான அமைப்பாகும். லக்னம் அல்லது சந்திரனுக்கு பத்தில் சூரியன் வலுப்பெற்றால் அரசு வழியில் அனுகூலங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு உங்கள் ஜாதகத்தில் சந்திரனுக்கு 10-ல் சூரியன் வலுவாக ஆட்சி பெற்று இருப்பதால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. சனி, சந்திரன் சேர்க்கைப்பெற்று இருப்பதால் ஒரு நல்ல காரியம் நடைபெற இடையூறுகள் ஏற்படுகிறது. பெருமாள் வழிபாடு மேற்கொள்ளவும், விரைவில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும்.
கேள்வி: சுக்கிர தசை எப்படியிருக்கும், வேலைவாய்ப்பு, திருமணம் எப்போது அமையும் என்று கூறுங்கள்? -நிர்மல், ராமநாதபுரம்.
பதில்: அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, மிதுன லக்னத் தில் பிறந்த ஜாதகருக்கு 5, 12 அதிபதியான சுக்கிர தசை 27-1-2024 முதல் நடைபெற இருப்பது சிறப் பான அமைப்பாகும். அனுஷத்தில் பிறந்த ஜாதகருக்கு ஆட்சிபெற்ற சுக்கிரன் 4-ஆவது தசையாக நடைபெறுவதால் ஒரு வளமான பலன்கள் அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. தற்போது கேது தசை நடைபெற்று கேது நின்ற வீட்டு அதிபதி சனி நீசம்பெற்று இருப்பதால் அதிலும் குறிப்பாக கேது 8-ல் இருப்பதால் தேவையற்ற தடை இடையூறுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிற
கேள்வி: நான் தற்போது தனியார் பள்ளியில் பணிபுரிகிறேன். எப்போது அரசு பள்ளியில் நிரந்திர பணி கிடைக்கும். என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறுங்கள்? -யுவராஜ், ஈரோடு.
பதில்: கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 10-ஆம் அதிபதி சுக்கிரன், செவ்வாய், சூரியன், புதன் சேர்க்கைப்பெற்று லக்னத்தில் அமையப்பெற்று இருப்பது நல்ல அமைப்பாகும். இக்கிரக சேர்க்கை சந்திரனுக்கு 10-ல் அமைந்திருப்பதும் சிறப்பான அமைப்பாகும். லக்னம் அல்லது சந்திரனுக்கு பத்தில் சூரியன் வலுப்பெற்றால் அரசு வழியில் அனுகூலங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு உங்கள் ஜாதகத்தில் சந்திரனுக்கு 10-ல் சூரியன் வலுவாக ஆட்சி பெற்று இருப்பதால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. சனி, சந்திரன் சேர்க்கைப்பெற்று இருப்பதால் ஒரு நல்ல காரியம் நடைபெற இடையூறுகள் ஏற்படுகிறது. பெருமாள் வழிபாடு மேற்கொள்ளவும், விரைவில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும்.
கேள்வி: சுக்கிர தசை எப்படியிருக்கும், வேலைவாய்ப்பு, திருமணம் எப்போது அமையும் என்று கூறுங்கள்? -நிர்மல், ராமநாதபுரம்.
பதில்: அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, மிதுன லக்னத் தில் பிறந்த ஜாதகருக்கு 5, 12 அதிபதியான சுக்கிர தசை 27-1-2024 முதல் நடைபெற இருப்பது சிறப் பான அமைப்பாகும். அனுஷத்தில் பிறந்த ஜாதகருக்கு ஆட்சிபெற்ற சுக்கிரன் 4-ஆவது தசையாக நடைபெறுவதால் ஒரு வளமான பலன்கள் அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. தற்போது கேது தசை நடைபெற்று கேது நின்ற வீட்டு அதிபதி சனி நீசம்பெற்று இருப்பதால் அதிலும் குறிப்பாக கேது 8-ல் இருப்பதால் தேவையற்ற தடை இடையூறுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. சுக்கிரன் தொடங்குகின்றபொழுது நல்ல வேலைவாய்ப்பு, சிறப் பான மணவாழ்க்கை அமையும் யோகம் உண்டு. விநாயகர் வழிபாடு மேற்கொள்ளவும்.
கேள்வி: நான் தற்போது வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கின்றேன். நான் வெளிநாடு செல்லலாமா அல்லது அரசு வேலைக்கு முயற்சி செய்யலாமா, எனக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -சந்தான கிருஷ்ணன், கன்னியாகுமரி.
பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி புதனும், லக்னாதிபதி குருவும் பரிவர்த்தனை பெற்று இருக்கிறது. குரு- புதன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் வங்கிப்பணி, பணப்புழக்கம் சம்பந்தப்பட்ட இடங்களில் பணிபுரியக்கூடிய யோகம் உண்டு. வரும் 18-9-2024 முதல் நடைபெற உள்ள குரு தசையில் நல்ல வாய்ப்பு கள் கிடைப் பதற்கான வாய்ப்புகள் உண்டு. குரு தசையில் வங்கிப் பணி, மக்கள் சேவை புரியக்கூடிய இடங்களில் அரசு சார்ந்த துறைகளில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தற்போது ராகு தசை நடைபெறு வதால் ராகு முடிந்து குரு வருகின்றபொழுது ஒரு சிறப்பான மணவாழ்க்கை உண்டாகக்கூடிய யோகம் உண்டு. அஸ்தத்தில் பிறந்த உங்ககளுக்கு 3-ஆவது தசையாக நடக்கக்கூடிய ராகு தசை அவ்வளவு விசேஷம் எனக் கூறமுடியாது. ராகு நின்ற வீட்டதிபதி செவ்வாய் வக்ரம் பெற்றிருப்ப தால் தற்போது பொறுமை காப்பது, அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
கேள்வி: நான் தற்போது செய்யும் வேலையில் நிறைய பிரச்சினைகள் உள்ளது. எப்போது நல்லவேலை கிடைக்கும், அல்லது சுயதொழில் ஏதாவது செய்யலாமா என்று கூறுங்கள்? -காளிமுத்து, பாண்டிச்சேரி.
பதில்: பூச நட்சத்திரம், கடக ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு பத்தாம் அதிபதி புதன்- குரு சேர்க்கைப்பெற்று 4-ல் இருப்பதால் பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்லநிலை அடையக்கூடிய யோகம் உண்டு. உங்களுக்கு 9-2-2022 முடிய கேது தசை நடைபெற்றது சாதகமற்ற அமைப்பாகும். தற்போது சுக்கிர தசை தொடங்கி இருக்கிறது, கன்னி லக்னத்திற்கு 2, 9-க்கு அதிபதியான சுக்கிரன் 3-ல் புதன் சாரம்பெற்று தசை நடைபெறுவது ஒரு சிறப் பான பலனை உங்களுக்குத் தரும். பிறந்த ஊரைவிட வெளியூர் மூலமாக ஒரு அனுகூலமான பலன்களை அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. கடக ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது அஷ்டமச்சனி நடப்பதாலும், கோட்சாரத்தில் குரு 10-ல் இருப்பதாலும் ஒருசில இடையூறுகள் இருந்து கொண்டிருக்கிறது. இவை அனைத் தும் படிப்படியாக குறையும். 1-5-2024 முதல் கோட்சாரத்தில் குரு 11-க்கு வருகின்றபொழுது ஒருசில அனுகூலங்களை அடையமுடியும். 2025 ஏப்ர-ல் அஷ்டமச்சனி முடிவதும், 7-9-2025 முதல் சுக்கிர தசையில் சுயபுத்தி முடிந்து சூரியபுத்தி நடைபெற இருப்பதும் சிறப்பு என்பதால் வாழ்வில் ஒரு முன்னேற்றங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போதைக்கு ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது.
கேள்வி: என் மகனுக்கு எப்போது வேலை கிடைக்கும் என்று கூறுங்கள்?
பதில்: பூச நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 10-ஆம் அதிபதி சுக்கிரன், 2-ஆம் அதிபதி சனியுடன் பரிவர்த்தனை பெற்றிருப்பது அற்புதமான அமைப்பாகும். 10-ஆம் அதிபதி பரிவர்த்தனை பெற்றிருப்பதால் ஒரு கௌரவமான நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்கள் மகனுக்கு உண்டு. உங்கள் மகனுக்கு தற்போது கேது தசை நடப்பது நல்லதல்ல. 3-ஆவது தசை யாக கேது தசை நடப்பதால் அதிலும் வக்ரம்பெற்ற குருவின் வீட்டில் இருக்கக்கூடிய கேது தசை நடப்பதால் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காது. மதிப்பு, மரியாதை ஏற்பட இடையூறுகள் ஏற்படும். தகுதிக்கேற்ற வேலை கிடைக்காது என்பதால் தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு, தனது கல்வித்தகுதியை மேலும்மேலும் வளர்த்துக் கொள்வது தற்போதைக்கு நல்லது. 2027 மார்சுக்கு பிறகு சுக்கிர தசை தொடங்குகின்றபொழுது ஒரு உயர்வான நிலையினை எட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதுவரை பொறுமை காப்பது மிகமிக நல்லது. குரு சனி வக்ரம் பெற்றிருப்பதால் எந்த ஒரு புதிய முயற்சிகளிலும் தற்போது ஈடுபடாமல் இருப்பது, பண விஷயத்தில் கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
கேள்வி: என் மகனின் திருமணம் மற்றும் எதிர்காலம் பற்றி கூறுங்கள்? -ஸ்ரீதரன், கோவை.
பதில்: கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய்- சுக்கிரன், குரு சேர்க்கைப் பெற்று 2-ல் இருப்பது அற்புதமான அமைப்பாகும். உங்கள் மகன் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, 7-ல் கேது அமையப் பெற்று தற்போது ராகு தசை நடக்கிறது. லக்னத்தில் ராகு இருந்தாலும் பாவரீதியாக 12-ல் இருப்பது சற்று சாதகமான அமைப்பாகும். சூரியன்- ராகு, சந்திரன்- கேது ஒரே ராசியில் இணைந்திருப்பதால் உறவைவிட அந்நியத்தில் வரன் பார்ப்பது மிகவும் சிறப்பு. 30-10-2023-க்கு பிறகு குறிப்பாக ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு நல்லவரன் அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ராகு தசையில் சனி புத்தி நடப்பதால் ஒருசில இடையூறுகள் இருக்கும். முன்கோபத்தை குறைத்துக்கொண்டு பொறுமையோடு இருப்பது நல்லது. ஜாதகருக்கு வெளியூர், வெளிநாடு தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அம்மன் வழிபாடு மேற்கொள்ளவும் நல்லது நடக்கும்.
கேள்வி: என் ஜாதகத்தில் சர்பதோஷம் பிதுர்தோஷம் உள்ளது. அதை எப்படி சரி செய்வது, என்ன பரிகாரம் செய்வது என்று கூறுங்கள்? -கண்ணன், ஸ்ரீரங்கம்
பதில்: விசாக நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னம் பிறந்த உங்களுக்கு லக்னத் தில் ராகு 7-ல் கேது இருக்கிறது. சர்ப்ப தோஷத்தை பற்றி பழங்கால புத்தகத்தில் அதிக கருத்துக்கள் கிடையாது. பொதுவாக 1-ல் ராகு. 7-ல் கேது இருந்து திருமணத்துக்குப் பிறகு வரக்கூடிய தசை காலங்களில் ராகு தசையோ, கேது தசையோ நடைபெற்றால் திருமண வாழ்க்கை பாதிக்கும். உங்களுக்கு கேது தசை 2011-ல் முடிந்துவிட்டது. எதையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. உங்கள் ஜாதகத்தில் சந்திரன் நீசம்பெற்று 8-ல் இருப்பதால் ஒரு பய உணர்வுடன், அச்ச உணர்வு டன் தேவை யில்லாத விஷயத்தை போட்டு குழப்பிக் கொள்கிறீர்கள். குழப்பத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பொதுவாக 5-ஆம் அதிபதி பலம் இழந்து இருந்தால் பிதுர்வழி தோஷம் எனக்கூறலாம். உங்களுக்கு 5-ஆம் அதிபதி சூரியன் எட்டில் இருந்தாலும் பாவகரீதியாக 9-ல் இருப்பது நல்ல அமைப்பு. மன குழப்பங்கள் விலக பெருமாள் வழிபாடு, குலதெய்வ வழிபாடு மேற் கொள்ளவும். தற்சமயம் சுக்கிர தசையில் வக்ரம் பெற்ற குரு புக்தி நடப்பதால் தேவையற்ற இடையூறுகள் ஏற்பட்டுகொண்டிருக்கிறது. 15-3-2024 முதல் சனி புக்தி தொடங்குகின்றபொழுது வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்படும்; கவலைவேண்டாம்.