பாலமுருகன் பதில்கள்!

/idhalgal/balajothidam/balamurugan-answers-14

ப் கேள்வி: என் மகளின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -குருசாமி, திருச்சி.

பதில்: திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதி குரு 4-ல் இருப்பதும், 7-க்கு 2-ல் சனி, 7-க்கு 12-ல் ராகு இருப்பதும் அவ்வளவு சிறப்பல்ல. களத்திரகாரன் என வர்ணிக் கப் படக்கூடிய செவ்வாய் கடகத்தில் நீசம் பெற்றிருப் பதும், நல்ல அமைப்பில்லை. இதனால் மண வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து சென்றால்தான் நல்லது. தற்போது 24-10-2024 முடிய குரு தசையில் ராகு புக்தி நடக்கிறது. ராகு காலப்புருஷப்படி 8-ஆவது ராசியில் இருப்பதாலும், ராகு நின்ற வீட்டு அதிபதி செவ்வாய் நீசம்பெற்று இருப்பதாலும் உடல் உபாதைகள், மன நிம்மதிக்குறைவு ஏற்படும். தற்போது முன்கோபத்தை குறைத்துக்கொண்டு இல்லற வாழ்வில் அனுசரித்து செல்லவேண்டும். 2024 அக்டோபருக்கு பிறகு சனி தசை தொடங்கு கின்றபொழுது வாழ்வில் சில நல்ல மாற்றங் கள் ஏற்படும்.

ass

ப் கேள்வி: என் தாயாரின் ஆயுள் பற்றி கூறவும்? -சேத்தன் ஷர்மா.

பதில்: புனர் பூச நட்சத்திரம், கடக ராசி, ரிஷப லக்னத் தில் பிறந்த உங்கள் தாய்க்கு ஆயுள்காரகன் சனி லாப ஸ்தானத்தில் இருப்பதும், அஷ்டமாதிபதி குரு பரிவர்த் தனை பெற்றிருப்பதும் நீண்ட ஆயுளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு. பொதுவாக ஸ்திர லக்னத்தில் பிறந்த வர்களுக்கு 3, 8-க்கு அதிபதியின் தசை புக்தி நட

ப் கேள்வி: என் மகளின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -குருசாமி, திருச்சி.

பதில்: திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதி குரு 4-ல் இருப்பதும், 7-க்கு 2-ல் சனி, 7-க்கு 12-ல் ராகு இருப்பதும் அவ்வளவு சிறப்பல்ல. களத்திரகாரன் என வர்ணிக் கப் படக்கூடிய செவ்வாய் கடகத்தில் நீசம் பெற்றிருப் பதும், நல்ல அமைப்பில்லை. இதனால் மண வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து சென்றால்தான் நல்லது. தற்போது 24-10-2024 முடிய குரு தசையில் ராகு புக்தி நடக்கிறது. ராகு காலப்புருஷப்படி 8-ஆவது ராசியில் இருப்பதாலும், ராகு நின்ற வீட்டு அதிபதி செவ்வாய் நீசம்பெற்று இருப்பதாலும் உடல் உபாதைகள், மன நிம்மதிக்குறைவு ஏற்படும். தற்போது முன்கோபத்தை குறைத்துக்கொண்டு இல்லற வாழ்வில் அனுசரித்து செல்லவேண்டும். 2024 அக்டோபருக்கு பிறகு சனி தசை தொடங்கு கின்றபொழுது வாழ்வில் சில நல்ல மாற்றங் கள் ஏற்படும்.

ass

ப் கேள்வி: என் தாயாரின் ஆயுள் பற்றி கூறவும்? -சேத்தன் ஷர்மா.

பதில்: புனர் பூச நட்சத்திரம், கடக ராசி, ரிஷப லக்னத் தில் பிறந்த உங்கள் தாய்க்கு ஆயுள்காரகன் சனி லாப ஸ்தானத்தில் இருப்பதும், அஷ்டமாதிபதி குரு பரிவர்த் தனை பெற்றிருப்பதும் நீண்ட ஆயுளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு. பொதுவாக ஸ்திர லக்னத்தில் பிறந்த வர்களுக்கு 3, 8-க்கு அதிபதியின் தசை புக்தி நடைபெறுகின்றபொழுது ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக 6, 8-க்கு அதிபதிகள் தசை புக்தியில் உடம்பு பாதிப்புகள் இருக்கும். தற்போது 6-அதிபதி சுக்கிர தசையில் 8-ஆம் அதிபதி குரு புக்தி 1-4-2024 முடிய நடப்பதால் ஆரோக்கியரீதியாக சிறுசிறு பாதிப்புகள் ஏற்படுகிறது. குரு புக்திக்கு பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தற்போது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது இறைவழிபாடுகள் மேற்கொள்வது இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது.

ப் கேள்வி: இந்த ஜாதகிக்கு எதிர்காலத்தில் அரசு வேலை கிடைக்குமா, இவருடைய திருமண வாழ்க்கை எப்படி அமையும் என்று கூறுங்கள்?

பதில்: மக நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு 7, 10-க்கு அதிபதியான குருவும், 5, 12-க்கு அதிபதியான சுக்கிரன் பரிவர்த் தனை பெற்றி ருப்பதும், பெண்களுக்கு களத்திரக் காரர்கள் எனக் கூறக்கூடிய செவ்வாய் வலு வாக இருப்ப தும் சிறப்பான அமைப்பாகும். இதன் காரணமாக ஒரு சிறப்பான மணவாழ்க்கை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 9, 10-ஆம் அதிபதியான குரு- சனி சேர்ந்திருப்பதால் பலமான தர்மகர்மாதிபதி யோகம் ஏற்பட்டிருக்கிறது. எதிர்கால வாழ்க்கையும், திருமண வாழ்க்கையும் மிகமிக நன்றாக இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. 10-ஆம் அதிபதி குரு என்ற காரணத்தினால் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பணி, பணப் புழக்கம் தொடர்புடைய பணிகளில் வேலைக்காக முயற்சித்தால் நல்லவாய்ப்புகள் கிடைக்கும். 10-ஆம் அதிபதி பரிவர்த்தனை பெற்றிருப்பதால் முத-ல் ஒரு தற்கா-க பணியில் அமைந்து அதன்பின்பு ஒரு நிரந்தரப்பணி அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மனம் தளராமல் முயற்சிக்கவும்; எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

ப் கேள்வி: நான் BE Electronics and communication Engineering முடித்திருக்கிறேன். வேலைக்காக காத்திருக்கிறேன், எப்போது வேலை கிடைக்கும் என்று கூறுங்கள்? -ஸ்ரீராம் சிதம்பரம், சிவகங்கை.

பதில்: ஆயில்ய நட்சத்திரம். கடக ராசி. மிதுன லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 10-ஆம் அதிபதி குரு லக்ன கேந்திரம் பெற்று செவ்வாய் சேர்க்கை பெற்று இருப்பது உன்னதமான அமைப்பாகும். தற்போது 12-ஆம் அதிபதியான சுக்கிர தசை நடக்கிறது. கடக ராசியில் பிறந்த ஜாதகருக்கு நல்ல வேலைவாய்ப்பு அமையக்கூடிய யோகமிருந்தாலும் தற்போது அஷ்டமச்சனி நடப்பதால் ஒருசில இடையூறுகள் இருக்கும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் 2025 ஏப்ரலுக்கு பிறகு அஷ்டமச்சனி முடியும் தருவாயில் ஒரு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது ஜாதகருக்கு சுக்கிர தசையில் சுய புக்தி 22-11-2024 முடிய நடக்கிறது. சுய புக்தியின் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. பொது வாக சுயபுக்தி யில் நற்பலன் கிடைத்தால் அடுத்தடுத்த புக்திகள் நல்ல பலன் தராது, அதனால் பொறுமை காப்பது நல்லது.

ப் கேள்வி: இவருக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -பாலு, சென்னை.

பதில்: புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி குருவும் களத்திரகாரகன் சுக்கிரனும் 6-ல் அமைந்திருப்பதால் திருமண தாமதமாகிறது. தற்போது புதன் தசையில் கேது புக்தி நடப்பது சாதகமற்ற அமைப்பாகும். 5-2-2024 முதல் புதன் தசையில் சுக்கிர புக்தி நடக்கும் காலத்தில் சிறப்பான மணவாழ்க்கை உண்டாகும். சுக்கிரன், குரு- சனி நட்சத்திரத்தில் இருப்பதால் உறவில்லாமல் அன்னியத்தில் திருமணத்திற்காக வரன் பார்ப்பது நல்லது. பைரவர் வழிபாடு நற்பலனை தரும்.

ப் கேள்வி: குரு தசை எப்படியிருக்கும், எனக்கு கிடைக்கவேண்டிய பணம் எப்போது கிடைக்கும். எப்போது எந்த புக்தியில் கேட்கலாம் என்று கூறுங்கள்? -சுந்தரம், ஈரோடு

பதில்: மக நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 2, 5-க்கு அதிபதி யான குரு 9-ல் உச்சம்பெற்று தசை நடப்ப தால் இருக்கும் இடத்தில் செல்வம், செல்வாக்கு டன் ஒரு கௌரவமான நிலை உண்டாகும். ராகு- கேது பெயர்ச்சிக்குப்பிறகு குறிப்பாக 2023 நவம்பருக்கு பிறகு உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் எல்லாம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் ஜாதகத்தில் குரு, சூரியன், புதன், சனி போன்ற கிரகங்கள் வலுவாக இருப்பதால் சகலவிதத்திலும் அனுகூலங்களை வருகின்ற நாட்களில் அடைவீர்கள். கடந்த காலங்களில் ஜென்ம லக்னத்தில் இருந்து நடைபெற்ற ராகு தசையை விட தற்போது நடைபெறும் குரு தசையில் சுய புக்திக்குப் பிறகு (9-3-2025) மேலும் வளமான பலன்களை பெறுவீர்கள். தட்சிணா மூர்த்தி வழிபாடு மேற்கொள்ள வும், நல்லது நடக்கும்.

ப் கேள்வி: என் மகனுக்கு எப்போது திரு மணம் நடை பெறும், வேலை யில் பதவி உயர்வு எப்போது கிடைக்கும் என்று கூறுங்கள்?

பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 7-ஆம் வீட்டில் சுக்கிரன் உச்சம்பெற்று இருப்பதும், ஏழாம் அதிபதி குரு லக்னத்தில் இருப்பதும் சிறப்பான அமைப்பாகும். சுக்கிரன் உச்சம்பெற்று இருப்பதால் ஒரு நல்ல மணவாழ்க்கை ஏற்படக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. தற்போது சந்திர மகா தசையில் ராகு புக்தி நடப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை. 11-2-2024 முதல் குரு புக்தி நடக்கின்றபொழுது ஒரு நல்ல வாழ்க்கை அமையக்கூடிய யோகங்கள் உண்டு. குறிப்பாக 1-5-2024 முதல் குரு கோட்சாரத்தில் 2-ல் சஞ்சரிக்கும் காலத்தில் வாழ்வில் நல்லது நடக்கும். தற்போது தசைநாதன் சந்திரனுக்கு 8-ல் இருக்கக்கூடிய ராகு புக்தி நடப்பதால் வேலையில் நெருக்கடிகள் உழைப்புக் கான பலனை அடைய இடையூறுகள் உண்டாகிறது. விரைவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பொறுமை காக்கவும். தொடர்ந்து பெருமாள் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

bala010923
இதையும் படியுங்கள்
Subscribe