எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? எப்போது திருமணம் நடைபெறும்? என் பிரச்சினைகளுக்கு என்ன பரிகாரம் செய்வது என்று கூறுங்கள்? -சிவராமன், சென்னை.
பதில்: பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சூரியன் 3-ல் சனி பார்வையோடு இருப்பதால் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். தற்போது ஏழரைச்சனி நடப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. தற்போது சுக்கிர தசையில் சந்திர புக்தி நடக்கிறது. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வேலைக்கு செல்வது, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது நல்லது. உங்கள் ஜாதகத்தில் குரு 6-ல் இருந்தாலும், பாவகரீதியாக குரு 7-ல் தனித்து அமைவதால் மணவாழ்வில் ஒரு நல்லநிலை அடைய தடை உண்டாகிறது. 7-ஆம் அதிபதி சுக்கிரன் 4-ல் இருப்பதால் 2025 மே
எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? எப்போது திருமணம் நடைபெறும்? என் பிரச்சினைகளுக்கு என்ன பரிகாரம் செய்வது என்று கூறுங்கள்? -சிவராமன், சென்னை.
பதில்: பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சூரியன் 3-ல் சனி பார்வையோடு இருப்பதால் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். தற்போது ஏழரைச்சனி நடப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. தற்போது சுக்கிர தசையில் சந்திர புக்தி நடக்கிறது. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வேலைக்கு செல்வது, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது நல்லது. உங்கள் ஜாதகத்தில் குரு 6-ல் இருந்தாலும், பாவகரீதியாக குரு 7-ல் தனித்து அமைவதால் மணவாழ்வில் ஒரு நல்லநிலை அடைய தடை உண்டாகிறது. 7-ஆம் அதிபதி சுக்கிரன் 4-ல் இருப்பதால் 2025 மே மாதத்திற்குபிறகு ஒரு நல்லது நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டாகும். தற்போது சுக்கிர தசையில் சந்திர புக்தி 10-4-2026 முடிய நடப்பதால் திருப்பதி சென்றுவருவது நல்லது.
எனக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்று கூறுங்கள்?
பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி. கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி குரு 6-ல் இருந்தாலும் பூரட்டாதி நட்சத்திரமான தனது நட்சத்திரத்தில் இருப்பதும், 7-ல் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். தற்போது உங்களுக்கு ராகு தசை 2-7-2026 முடிய நடப்பதாலும் அஸ்தத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றாவது தசையாக ராகு தசை நடப்பதாலும், ராகு தசை முடிந்து குரு தசை வந்தால்தான் வாழ்வில் நல்லது நடக்க வாய்ப்புகள் பலமாக இருக்கிறது. தற்போது திருமண வாய்ப்புகள் வந்தாலும் ராகு தசை முடியும்வரை விட்டுக்கொடுத்து செல்வது, அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? தற்போது நடக்கும் தசையில் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளதா என்று கூறுங்கள்? -ரேணுகா, சென்னை.
பதில்: ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். 7-ல் சுக்கிரன் ஆட்சி பெற்றிருந்தாலும் வக்ரகதியில் இருப்ப தால் ஒருசில தடைக்குப் பிறகு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. தற்போது உங்களுக்கு சுக்கிர தசையில் சுக்கிர புக்தி 19-4-2025 முடிய நடைபெறுவதாலும், தற்போது 3-ல் சஞ்சரிக் கக்கூடிய குருபகவான் ராசிக்கு 7-ஆம் வீட்டை பார்ப்பதாலும் தீவிரமாக முயற்சிசெய்தால் அடுத்த மே மாதத்திற்குள் நல்ல மணவாழ்க்கை அமைய வாய்ப்பு உண்டு. 8-ல் சூரியன்- கேது சேர்க்கைப் பெற்றிருப்பதால் தந்தைவழி உறவினர்களிடம் பகை ஏற்பட அதிக வாய்ப்புண்டு. குறிப்பாக குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது, உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நன்மைத் தரும்.
(பெண்) எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்? குடும்ப பிரச்சினைகள் எப்போது தீரும் என்று கூறுங்கள்?
பதில்: மூல நட்சத்திரம், தனுசு ராசி, மேஷ லக்னத் தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சனி- ராகு சேர்க்கைப்பெற்று 2-ல் உள்ளார். உங்களுக்கு சூரியன் உச்சம்பெற்று லக்னத்தில் இருப்பது அரசு வழியில் அனுகூலத்தை தரக்கூடிய அமைப்பு என்றாலும் சனி- ராகு சேர்க்கை இருப்ப தால் வெளியூர், வெளிநாடு, பன்னாட்டு நிறுவனங்கள்மூலமாக அனுகூலங்கள் அடையக்கூடிய வாய்ப்புதான் பலமாக இருக்கிறது. சுக்கிர தசையில் கேது புக்தி 20-12-2024 முடிய நடப்பதால் அடுத்து வரக்கூடிய சூரிய தசையில் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் சற்று குறைந்து மன நிம்மதி ஏற்படும்.
எனது மகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்? திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -லிங்கதுரை, சென்னை.
பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-க்கு அதிபதி குரு 8-ல் கேது நட்சத்திரத்தில் சனி சேர்க்கைப் பெற்றிருக்கிறது. இது திருமணத்தை தாமதப்படுத்தக் கூடிய அமைப்பாகும். தற்போது ராகு தசையில் புதன் புக்தி 7-4-2025 முடிய நடக்கி றது. அடுத்து கேது புக்தி நடைபெற இருப்பதால் 2026 ஏப்ரலுக்கு பிறகு சுக்கிர புக்தி நடக்கும் சமயத்தில் திருமண யோகம் சிறப்பாக இருக்கும். மகர ராசியில் பிறந்த ஜாதகிக்கு 29-3-2025-ல் ஏழரைச்சனி முழுமையாக முடிவது நல்ல அமைப்பாகும். தற்போது ராகு தசை நடப்ப தால் குறிப்பாக ராகு தசை மூன்றாவது தசையாக நடைபெறுவதால் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே எதிர்கால வாழ்க்கை சிறப் பாக இருக்கும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, திருமண வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும். குரு- கேது சாரம் பெற்றிருப்பதால் சொந்தமில்லா மல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது.