ப் கேள்வி: என் திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள்? -காளிராஜன், சிவகாசி.
பதில்: அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி புதன் ஆறில் இருந்தாலும் பாவகரீதியாக 7-ல் இருப்பது நல்ல அமைப்பாகும். பொதுவாக ஒரு ஜாதகத்தில் சூரியன்- செவ்வாய் இணைந்து 7-ல் இருந்துவிட்டால் செவ்வாய் தோஷம் என்றும், சூரியன்- செவ்வாய் இணைந்து தோஷம் என்றும் ஜாதகத்தை பார்ப்பவர்கள் கூறிவிடுவார்கள். இதன் காரணமாகவே ஒரு நல்லது நடக்க இடையூறுகள் ஏற்படும். பொதுவாக சூரியன்- செவ்வாய் இணைந்துவிட்டாலே கெடுதி என்று கிடையாது. சூரியன்- செவ்வாய் இருவரும் 3 டிகிரிக்குள் இருந்தால்தான் பாதிப்பு. உங்கள் ஜாதகத்தில் ராசியில் சூரியன்- செவ்வாய் இணைந்திருந்தாலும், நவாம்ச கட்டத்தில் சூரியனுக்கு 5 கட்டம் தள்ளி செவ்வாய் இருப்பதால் சூரியன்- செவ்வாய் சேர்க்கைக்கான பாதிப்புகள் இருக்காது. உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பாவகரீதியாக 8-ல் உள்ளார். கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது திருமணத்திற் காக நீங்கள் முயற்சித்தால் விரைவில் ஒரு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. வரும் அக்டோபர்முதல் ராகு புக்தி நடந்தாலும் சுக்கிரன் சாரம் பெற்ற ராகு என்ற காரணத்தினால் உறவு இல்லாமல் அந்நியத்தில் வரன் பார்க்கின்றபொழுது ஒரு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்ளவும்; விரைவில் நல்லது நடக்கும்.
ப் கேள்வி: என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா, அவன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூறுங் கள்? -சுஜாதா, சென்னை.
பதில்: சுவாதி நட்சத்திரம், துலா ராசி, மிதுன லக்னத் தில் பிறந்த உங்கள் மகனுக்கு சுக்கிரன், குரு ஆட்சிபெற்று, சூரியன் உச்சம்பெற்று இருப்பது சிறப்பான அமைப்பு ஆகும். 10-ல் குரு ஆட்சிபெற்று உடன் புதன் சேர்ந்திருப்பதும் சிறப்பான அமைப்பாகும். 10-ல் குரு ஆட்சிபெற்று பஞ்சமகா புருஷ யோகத்தில் அம்ச யோகம் ஏற்பட்டு இருப்பது சிறப்பான அமைப்பாகும். தற்போது குரு தசை நடப்பதால் வங்கிப்பணி, பணப்புழக்கம் சம்பந்தப்பட்ட இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் வேலைக் காக முயற்சித்தால் அரசு, அரசு உதவி பெறக் கூடிய இடங்களில் நல்ல வாய்ப்புகள் அமையும் யோகம் உண்டு. மன உறுதியுடன் போட்டி தேர்வுகளில் பங்குபெறவும்; நல்லது நடக்கும். இரண்டு கிரகங்கள் நீசம்பெற்று இருப்பதால் முதலில் சில தடைகள் இருந்தாலும் தடைக்குப்பிறகு ஒரு உயர்வான நிலையை எட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. முயற்சிக்கவும்; நல்லது நடக்கும்.
ப் கேள்வி: இவர்கள் இருவருக்கும் எப்போது குழந்தை பிறக்கும் என்று கூறுங்கள்?
பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு புத்திர ஸ்தானாதிபதி, புக்திரகாரகன் குரு 6-ல் நீசம் பெற்று, வக்ரம் பெற்றது கடுமையான புத்திர தோஷம் ஆகும். சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சிறப்பாக இருப்பதால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. மனைவி ஜாதகத்திலும் புத்திரகாரகன் குரு- கேது நட்சத்திரத்தில் இருப்பதால், தேவையற்ற இடையூறுகள் ஏற்படுகிறது, மனைவி ஜாதகத்தில் 5-ஆம் அதிபதி ராகு சாரம்பெற்று இருப்பதும், 5-ஆம் அதிபதி புதன் ராகு சாரம் பெற்று இருப்பதும் ஒருசில இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். 2024 பிற்பாதியில் இறையருளால் நல்லது நடக்கும்.
ப் கேள்வி: எங்களுடைய பண கஷ்டம் எப்போது தீரும், ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா என்று கூறுங்கள்? -கல்யாணி, விசாகப்பட்டினம்.
பதில்: விசாக நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னாதிபதி சூரியன் நீசம்பெற்று ராகு சேர்க்கைப்பெற்று இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். கிரகணம் ஏற்பட்டு ஓரிரு நாளில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். இப்படிப்பட்ட நிலையில் பிறந்திருந்து உங்களுக்கு கடந்த ஏழு வருடங்களாக கேது தசை நடைபெற்றது ஒரு சாதகமற்ற அமைப்பாகும். 2022 ஜூன் முதல் சுக்கிர மகா தசை நடப்பதால் கடந்தகால சோதனைகள் எல்லாம் படிப்படியாக விலகி படிப்படி யான முன்னேற் றங்களை அடை வீர்கள். விரை வில் நல்ல முன்னேற்றங் கள் ஏற்படும். 2024 மே மாதத்திற்கு பிறகு பொருளா தார அணுகூலங் கள் உண்டாகும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது கெடுதியைக் குறைக்கும். கடந்தகால கேது தசையை ஒப்பிடும்போது வரும் நாட்களில் ஆரோக்கியம் நன்றாகதான் இருக்கும்; கவலைப்படாதீர்கள்.
ப் கேள்வி: நான் ஈஆ எண்ய்ஹப் படித்து கொண்டு இருக்கின்றேன். ஆடிட்டர் எப்போது முடிப்பேன்? எனக்கு சொந்தமாக டழ்ஹஸ்ரீற்ண்ஸ்ரீங் செய்ய கூடிய யோகம் இருக்கிறதா அல்லது வேலைக்கு செல்வதா என்று கூறுங்கள்? -கிரி, சென்னை.
பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு புதன் நீசம்பெற்று, உடன் குரு அமையப்பெற்றதால் நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டிருக்கிறது. ஆடிட்டர் துறையில் சாதிக்க புதன் ஆட்சி, உச்சம் பெற்றிருப்பது சிறப்பான அமைப்பாகும். புதன் நீசம்பெற்றாலும் உடன் குரு அமையப் பெற்று நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு இருப்பதால் ஒருசில தடைக்குப் பிறகு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. மனம் தளராமல் முயற்சித்தால் தற்போது நடைபெறும் ராகு தசை முடிந்து அடுத்து குரு தசை வருகின்றபொழுது அதாவது 2026 ஜூலைக்குப் பிறகு நல்லது நடக்கும். உங்கள் ஜாதகத்தில் பத்தாம் அதிபதி நீசம்பெற்று இருப்பதால் நீங்கள் தனித்து செயல்படாமல் வேறு ஒருவர் சார்ந்து இருப்பது அல்லது ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிவது பிறந்த ஊரைவிட வெளியூரில் சென்று பணிபுரிவது நல்ல பலனை தரும். தற்போது ராகு தசை நடப்பதால் முன்கோபத்தை குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமை யோடு மனம் தளராமல் செயல்படுவது நல்லது.
ப் கேள்வி: எனக்கு எப்போது நல்ல தொழில் அமையும், என் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூறுங்கள்? -மோசஸ், தஞ்சாவூர்.
பதில்: கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி புதன் 12-ல் இருப்பதால் சொந்தத் தொழில் அமைப்பைவிட வேலைக்கு செல்வதுதான் சிறப்பு. புதன் 12-ல் இருப்பதால் பிறந்த ஊரைவிட வெளியூர், வெளியிடங்களில் ஒரு வளமான பலன்கள் அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. தற்போது 8-க்கு அதிபதியான சந்திர தசையில் சனி புக்தி நடப்பது அவ்வளவு சிறப்பல்ல. சந்திர தசையில் சனி புக்தி நடப்பதால் மன குழப்பம் தேவையற்ற இடையூறுகள், முன்னேற்ற தடை இருக்கும். அடுத்து 3-2-2024 முதல் புதன் புக்தி வருகின்றபொழுது நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். தற்போது 12-ல் நீசம்பெற்ற சந்திர தசை நடப்பதாலும் அடுத்து எட்டில் நீசம்பெற்ற செவ்வாய் தசை நடப்பதாலும் சொந்தத் தொழில் செய்வதைவிட வேலைக்கு செல்வது சிறப்பு. சந்திர தசை நடப்பதால் பௌர்ணமி காலங்களில் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்வது நன்மை தரும்.
ப் கேள்வி: என் திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள்? -ராகுல், அரியலூர்.
பதில்: பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய்- சூரியன் சேர்க்கைப் பெற்று, ராசி யிலும் நவாம்சத் திலும் இணைந்திருப் பது அவ்வளவு சிறப்பு அல்ல. தேவையற்ற இடையூறுகள் ஏற்படுத்தி அதன் பின்பு நல்லது நடக்கும். சூரியன்- செவ்வாய் இருவரும் புரட்டாதி ஒன்றாம் பாதத்தில் ஒரு நட்சத்திரத்தில் இருப்பது சற்று சாதகமான அமைப்பாகும். ஜென்ம லக்னத்திற்கு 5 11-க்கு அதிபதிகள் மிக அருகில் இணைந்திருப்பதால் பெண் வீட்டிலிருந்து உங்களை விரும்பி திருமணத்திற்காக வரன் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு, 14-1-2024 முதல் ராகு தசையில் குரு புக்தி நடக்கும் காலத்தில் திருமணம் நடக்கும்.