னக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? அல்லது அரசியலில் உயர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதா? திருமண வாழ்க்கை யிலுள்ள பிரச்சினைகள் எப்பொழுது தீரும் என்று கூறுங்கள்? -இளங்கோவன், சிதம்பரம்.

கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி குரு 8-ல் சூரியன், புதன் சேர்க்கைப்பெற்று அமைந்துள்ளது. 10-ஆம் அதிபதி பரிவர்த்தனை பெற்றிருப்ப தால் தற்போது செய்யும் வேலையை தொடர்ந்து செய்வது நல்லது. ஒரு குறிப் பிட்ட காலத்துக்கு பிறகு நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய யோகமுண்டு. 10-ஆம் அதிபதி குரு என்பதால் வங்கிப் பணி, மற்றவருக்கு ஆலோசனை சொல்லக்கூடிய பணிகள், பொது காரியங்களில் ஈடுபடக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது குரு தசை நடப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சூரியன் 8-ல் இருப்பதால் நேரடியாக அரசு வேலை என்று இல்லாமல் அரசு சார்ந்த இடங்களில் வேலை கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ஜாதகத்தில் 7-ல் சனி இருப்பதால் மண வாழ்வில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுக்கிரன் 10-ல் இருப்பதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

ss

நான் ஜோதிடம் கற்றுக்கொண்டு தொழில் செய்யலாம் என்று நினைக்கிறேன். அது நடக்குமா என்று கூறுங்கள்? -ராஜ.சண்முகசுந்தரம், திருத்துறைப்பூண்டி.

உத்திராட நட்சத்திரம், மகர ராசி, மகர லக்னத் தில் பிறந்த உங்களுக்கு லக்னாதிபதியும், லக்ன ராசிக்கு 2-ஆம் அதிபதியுமான சனி 10-ஆம் அதிபதி சுக்கிரன் சேர்க்கைப்பெற்று குரு வீட்டில் உள்ளார். குரு பார்வை 10-ஆம் வீட்டுக்கு உள்ளது. இதன்காரணமாக பேசி சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பு கள், ஜோதிடத் தின் மூலமாக ஒரு சில அனுகூலங்கள் அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. புதன் கேந்திர ஸ்தானத் தில் கேது நட்சத் திரத்தில் இருப்ப தால் ஜோதிடம், ஜோதிடம் சார்ந்த விஷயங்களை முழு ஈடுபாட்டு டன் செய்யவும்; நல்லது நடக்கட் டும்.

எனக்கு பண பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. என்னுடைய பொருளாதார நிலை எப்படி யிருக்கும்? என் வாழ்க்கையில் நல்ல நேரம் எப்பொழுது வரும் என்று கூறுங்கள்? -சண்முகம், மராட்டிப்பாளையம்.

அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னத் தில் பிறந்த உங்களுக்கு லக்னாதிபதி குரு, சனி சேர்க்கை பெற்று லாப ஸ்தானத் தில் உள்ளது நல்ல அமைப்பாகும். உங்கள் ஜாதகத்தில் 10-ஆம் வீட்டில் சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்கள் இணைந்திருப்பது ஒரு சிறப்பான அமைப்பாகும். தற்போது நடக்கக்கூடிய குரு தசையைவிட 20-6-2026 முதல் உங்களுக்கு உச்சம் பெற்ற சனி தசை நடக்க இருக்கிறது. சனி 11-ல் இருந்து சனி தசை நடக்கின்ற பொழுது உங்களுக்கு இருக்கக் கூடிய பண பிரச்சினைகள் படிப் படியாக குறைந்து வாழ்வில் ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய அமைப்புகள் உண்டு. சனி உச்சம் பெற்றிருப்பதால் எவ்வளவு கடன்கள் வந்தாலும் அந்த கடன்களை தைரியத்தோடு அடைக்கக்கூடிய ஒரு பலம் உண்டாகும். சிறிது காலத்திற்கு பொறுமையாக இருக்கவும்.

என் கடன் பிரச்சினைகள் தீருமா? மகளுக்கு திருமணம் செய்து வைக்கமுடியுமா? பணவரவுகள் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -மோகனவண்ணன், மதுரை.

பூர நட்சத்திரம், சிம்ம ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு பாதக ஸ்தானத் திலுள்ள குரு தசையில் ராகு புக்தி 2-4-2026 முடிய நடக்கிறது. சிம்ம ராசி யில் பிறந்த உங்களுக்கு கோட்சாரப் படி 8-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் அஷ்டமச்சனி நடக்கிறது. அடுத்து உங்களுக்கு வக்ரகதியிலுள்ள சனி தசை தொடங்க இருக்கிறது. இதன் காரணமாக கடன் பிரச்சினைகளை அவ்வளவு சீக்கிரம் தீர்க்க முடியாதபடி இடையூறுகள் ஏற்படும். நெருங்கிய வரின் உதவியால் ஒருசில பிரச்சினைகளை குறைத்துக்கொள்ள வாய்ப்புகள் உண்டாகும். ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு தொடர்ந்து மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும். பிள்ளைகளுடைய ஜாதகத்தை பொருத்தவரை அவர்கள் ஜாதகத்தை அனுப்பிவைக்கவும். அதனைப் பார்த்து தான் தீர்க்கமான முடிவுகளை சொல்ல முடியும்.

இந்த ஜாதகருக்கு (பெண்) உடல்நிலை சற்று கவலையாக உள்ளது. இவர் ஜாதகப்படி இவருக்கு அறுவை சிகிச்சை செய்யலாமா அல்லது மருந்து மாத்திரையில் குணபடுத்த முடியுமா? இதற்கு ஏதாவது பரிகாரம் இருந்தால் கூறுங்கள் -செல்வராஜ், சென்னை.

பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு லக்னாதிபதி சனி 2-ல் அமையப் பெற்று சனிக்கு 7-ல் செவ்வாய் அமையப்பெற்று சனி, செவ்வாய் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கிறார் கள். தற்போது சுக்கிர மகா தசையில் குரு புக்தி நடப்பது சற்று சாதக மான அமைப்பு என்றாலும் ஏழரைச்சனி யில் ஜென்மச் சனி நடப்பதால் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. ஜென்ம ராசியையும், சனியையும் ஜெனன காலத்தில் செவ்வாய் பார்ப்பதால் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என்றால் மருத்துவ ஆலோசனைக்கு ஏற்ப மேற்கொண்டால் நற்பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஏழரைச் சனி நடப்பதால் ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.