ப் கேள்வி: இந்த ஜாதகருக்கு திருமணம் எப்போது நடக்கும், அரசு வேலை கிடைக்குமா என்று கூறுங்கள்? -விஸ்வநாதன், பண்ருட்டி.
பதில்: மூல நட்சத்திரம், தனுசு ராசி, கடக லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 7-ஆம் அதிபதி சனி வக்ரகதியில் 9-ல் அமையப்பெற்று, குரு- சனி பரிவர்த்தனை பெற்று இருக்கிறது. 7-ஆம் அதிபதி வக்ரம்பெற்றால் திருமண சம்பந்தப்பட்ட விஷயத்தில் தடைக்குப்பிறகு அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
தற்போது சூரிய தசையில் 14-7-2023 முதல் புதன் புக்தி நடத்த இருக்கிறது. சூரியன், ராகு சாரம் பெற்றதாலும், சந்திரன், கேது சாரம் பெற்றதாலும், 7-ஆம் அதிபதி வக்ர கதியில் இருப்பதாலும் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப் பது நல்லது. 30-10-2023-க்குப் பிறகு ஒரு நல்ல வரன் அமை யும் வாய்ப்பு உண்டாகும்.
10-ஆம் அதிபதி செவ் வாய் என்ற காரணத்தால் நிர்வாக தொடர்புடைய பணிகளில் முயற்சிக்கவும். விரைவில் நல்லது நடக்கும். ஜாதகருக்கு சூரியன், ராகு சாரம்பெற்று சூரிய தசை நடப்பதால் நேரடியாக அரசாங்கம் இல்லாமல் அரசு உதவிப் பெறக்கூடிய இடங்கள் அல்லது தனியார்துறையில் முயற்சி பண்ணுவது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.
ப் கேள்வி: என் மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள்?
பதில்: ஆயில்ய நட்சத் திரம், கடக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சனி 6-ல் சுக்கிரன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று இருப்பது நல்லது. குருபார்வை
ப் கேள்வி: இந்த ஜாதகருக்கு திருமணம் எப்போது நடக்கும், அரசு வேலை கிடைக்குமா என்று கூறுங்கள்? -விஸ்வநாதன், பண்ருட்டி.
பதில்: மூல நட்சத்திரம், தனுசு ராசி, கடக லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 7-ஆம் அதிபதி சனி வக்ரகதியில் 9-ல் அமையப்பெற்று, குரு- சனி பரிவர்த்தனை பெற்று இருக்கிறது. 7-ஆம் அதிபதி வக்ரம்பெற்றால் திருமண சம்பந்தப்பட்ட விஷயத்தில் தடைக்குப்பிறகு அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
தற்போது சூரிய தசையில் 14-7-2023 முதல் புதன் புக்தி நடத்த இருக்கிறது. சூரியன், ராகு சாரம் பெற்றதாலும், சந்திரன், கேது சாரம் பெற்றதாலும், 7-ஆம் அதிபதி வக்ர கதியில் இருப்பதாலும் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப் பது நல்லது. 30-10-2023-க்குப் பிறகு ஒரு நல்ல வரன் அமை யும் வாய்ப்பு உண்டாகும்.
10-ஆம் அதிபதி செவ் வாய் என்ற காரணத்தால் நிர்வாக தொடர்புடைய பணிகளில் முயற்சிக்கவும். விரைவில் நல்லது நடக்கும். ஜாதகருக்கு சூரியன், ராகு சாரம்பெற்று சூரிய தசை நடப்பதால் நேரடியாக அரசாங்கம் இல்லாமல் அரசு உதவிப் பெறக்கூடிய இடங்கள் அல்லது தனியார்துறையில் முயற்சி பண்ணுவது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.
ப் கேள்வி: என் மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள்?
பதில்: ஆயில்ய நட்சத் திரம், கடக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சனி 6-ல் சுக்கிரன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று இருப்பது நல்லது. குருபார்வை 7-ஆம் வீட்டில் இருப்பதும் சிறப்பான அமைப்பே. தற்போது சுக்கிர தசையில் புதன் புக்தி நடப்பதால் திருமணத்திற்காக முயற்சி செய்யவும், செப்டம்பருக்கு பிறகு குரு வக்ரகதியிலுள்ள காலத்தில் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.
ப் கேள்வி: என் மகள் எங்களைவிட்டு பிரிந்து சென்றுவிட்டாள். அவள் எப்போது எங்களிடம் திரும்பி வருவாள், அவளுடைய திருமண வாழ்க்கை எப்படி யிருக்கும் என்று கூறுங்கள்?
பதில்: திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய் 4-ல் உச்சம்பெற்று குருபார்வை ஏழாம் வீட்டுக்கு இருப்பதால் ஜாதகி உடைய திருமண வாழ்க்கை என்பது நன்றாக இருக்கும். மண வாழ்க்கை ரீதியாக எந்த விதத்திலும் குறை இருக்காது. உங்கள் மகள் பிறக்கின்றபொழுது தந்தைக் காரகன் சூரியன்- ராகு நட்சத்திரத்தில் அமையப்பெற்று சனி சேர்க்கைப்பெற்று இருப்பதும், தாய்காரகன் சந்திரன்- ராகு நட்சத்திரத்தில் இருப்பதும், தாய்- தந்தையரிடம் ஒரு ஒற்றுமை குறைவை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். தாய்- தந்தை கிரகம் சர்பகிரக நட்சத்திரத்தில் இருக்கின்ற காரணத்தினால் உங்களைவிட்டு சென்றுள்ளார். உங்களது குலதெய்வத்தை வேண்டிக்கொள்ளவும்; விரைவில் நல்லது நடக்கட்டும்.
ப் கேள்வி: திருமணம் எப்போது நடக்கும், பரிகாரம் ஏதாவது இருக்கிறதா என்று கூறுங்கள்? -நிர்மல்குமார், சேலம்.
பதில்: அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன்- செவ்வாய் சேர்க்கை பெற்று 3-ல் இருப்பது நல்ல அமைப்பாகும். எந்த ஒரு ஜாதகத்திலும் 2, 7, 8-ல் சனி, ராகு, கேது ஆகிய இடங்கள் அமையப்பெற்று அந்த கிரகங்களின் தசை நடப்பது ஒரு நல்ல அமைப்பு இல்லை. உங்கள் ஜாதகத்தில் 2-ல் ராகு, 8-ல் கேது அமையப் பெற்று 31-7-2024 முதல் கேது தசை நடக்க இருப்பதால் திருமணம் கை கூடினாலும் விட்டுக் கொடுத்து செல்ல வேண் டிய ஜாதகமாகும். பொதுவாக அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறப்பவர் களுக்கு திருமண வயது காலத்தில் கேது மகா தசை நடக்கும். அக்காலங்கள் திருமண வாழ்க்கைக்கு ஒரு சாதகமற்ற நேரமாகும், அப்படியே திருமணம் நடைபெற்றாலும் ஏதாவது ஒரு பிரச்சினைகள் மேலோங்கி கொண்டிருக்கும் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்வதன்மூலமாக ஒருசில நல்லது நடக்கும். உங்கள் மகனின் ஜாதகத்தில் தந்தைகாரகன் சூரியன்- ராகு சாரம் பெற்று, தாய்க்காரகன் சந்திரன்- சனி சாரம் பெற்று, பாரம்பரியத்தை குறிக்கக்கூடிய கிரகமான குரு வக்ரகதியில் இருப்பதால் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது. தற்போது கோட்சாரரீதியாக குரு 6-ல் இருப்பதால் செப்டம்பருக்கு பிறகு குரு வக்ரம் பெறும் காலத்தில் முயற்சிக் கவும்; நல்ல வரன் அமைய வாய்ப்புகள் உண்டு.
ப் கேள்வி: என் மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும், நிரந்தர வேலை எப்போது அமையும் என்று கூறுங்கள்? -சுப்பிரமணியன், கோவை.
பதில்: சுவாதி நட்சத்திரம், துலா ராசி, விருச்சிக லக்னத் தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் 10-ல் அமைந்து வர்கோத்தம் பெற்றது சிறப் பான அமைப் பாகும். இது நாள்வரை 3-ஆவது தசையாக சனி மகா தசை நடந்தது அவ்வளவு சிறப்பான அமைப்பு என கூறமுடியாது. தற்போது புதன் தசை தொடங்கி இருப்பதால் விரைவில் ஒரு நல்ல வேலை அமையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு குறிப்பாக அக்டோபர் 2023-க்குப்பிறகு சிறப்பான மணவாழ்க்கை அமையும். சுவாதியில் பிறந்த வர்களுக்கு 4-ஆவது தசையாக புதன் தசை வருகின்றபொழுது ஒரு சிறப்பான வாழ்க்கை அமைந்து மகிழ்ச்சி ஏற்படும். அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும்.
கேள்வி: வழக்கு ஒன்று நடந்துகொண்டிருக் கின்றது. அது சாதகமாக முடியுமா? திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள்? -கென்னடி, புதுச்சேரி.
பதில்: புனர்பூச நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது 6-ஆம் அதிபதி புதன் தசையில் 12-ல் இருக்கக்கூடிய கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்ற ராகு புக்தி 23-12-2025 முடிய நடைபெறுகிறது. 6-ஆம் அதிபதி தசை நடந்தால் வம்பு, வழக்குகள் இருக் கும். தற்போது கேது நட்சத்திரத் தில் அமையப் பெற்ற ராகு புக்தி நடப்பதால் வழக்குகளில் இழுபடி நிலை நீடிக்கும். அடுத்து குரு புக்தி வருகின்றபொழுது வழக்குகளில் ஒரு முடிவு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. தற்போது ராகு- கேது நட்சத்திரத் தில் இருந்து ராகு- புக்தி நடப்பதால் திருமண வாய்ப்புகள் சற்றுக்குறைவு. அப்படி அமைந்தாலும் விட்டுக்கொடுத்து செல்லவேண்டும். அடுத்து வரக்கூடிய சுக்கிர நட்சத்திரத்தில் அமையப்பெற்ற குரு புக்தி என்ற காரணத்தினால் குரு புக்தியில் நிறைய நல்லது நடக்க வாய்ப்பு இருக்கிறது. பொறுமை காக்கவும். இல்லாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.
கேள்வி: என் மகளுக்கு திருமணம் எப்போது நடக்கும்? சொந்தமா அல்லது அசலா என்று கூறுங்கள்? -செல்வராஜு, ஈரோடு.
பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு 7-ஆம் அதிபதி குரு 5-ல் நீச்சம்பெற்றா லும், ஐந்தாம் அதிபதி சனி 7-ல் இருப்பது சாதகமான அமைப்பாகும். குரு- சனி பரிவர்த்தனை பெற்றதால் தடைக்குப்பிறகு அனுகூலங்கள் நடைபெற வாய்ப்பு உண்டு. லக்னம் ராசி கன்னியாக இருந்து ஜென்ம லக்னத்தில் ராகு இருந்து 7-ல் கேது சனி இருந்து ராகு தசை நடப்பது தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தக் கூடிய அமைப்பு ஆகும். செவ்வாய் வக்ர கதியில் இருப்பதால் திருமண விஷயத்தில் தடங்கல்கள் ஏற்பட்டபடி இருக்கும். சூரியன், ராகு நட்சத்திரத்தில் இருப்பதாலும் சந்திரன், ராகு சேர்க்கைப் பெற்று இருப்பதாலும் சொந்தத்தில் திருமணம் நடைபெற வாய்ப்பு இல்லை. அன்னியத்தில் திருமணம் நடைபெறதான் வாய்ப்பு உண்டு. 2024 மே மாத்திற்குப் பிறகு குரு 9-ல் இருக்கின்றபொழுது நல்ல வாய்ப்புகள் வரும். திருமணம் நடைபெற்றா லும் ராகு தசை நடப்பதால் வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. 13-4-2026 முதல் குரு தசை நடைபெறும் காலத்தில் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.