ப் கேள்வி: இந்த ஜாதகருக்கு திருமணம் எப்போது நடக்கும்? -ராஜேந்திரன், கோவை.
பதில்: பூராட நட்சத்திரம், தனுசு ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 7-ஆம் அதிபதி குரு- சூரியன், புதன் சேர்க்கைப்பெற்று 4-ல் இருப்பது சிறப்பான அமைப்பாகும். தனுசு ராசியில் பிறந்த ஜாதகருக்கு கடந்த ஜனவரிவரை ஏழரைச்சனி நடைபெற்றது சாதகமற்ற அமைப்பாகும். தற்போது குரு 5-ல் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பாகும். வரும் 25-9-2023 முதல் ஜாதகருக்கு செவ்வாய் தசையில் 7-ஆம் அதிபதி குரு புக்தி நடைபெற இருப்பதால் ஒரு நல்லவாழ்க்கை அமையக்கூடிய யோகம் உண்டு. 3-ல் இருக்கும் களத்திர காரகன் சுக்கிரன்- கேது நட்சத்திரத்தில் இருப்பதால் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது. விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
ப் கேள்வி: எப்போது வெளிநாட்டில் வேலை மற்றும் படிப்பு அமையும் என்று கூறுங்கள்? -சங்கீதா, ஈரோடு.
பதில்: மக நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு தற்போது 8-ல் இருக்கக்கூடிய சந்திர தசை நடக்கிறது. ஒருவர் ஜாதகத் தில் ஜென்ம லக்னத்திற்கு 9, 12 அதிபதிகள் இணைந்திருந் தாலோ அல்லது 9, 12-ல் அமைந்த கிரகங்களின் இந்த தசை நடை பெற்றாலோ வெளிநாடு யோகம் ஏற்படும் என கூறலாம். உங்களுக்கு பயணங்களை ஏற்படுத்தக் கூடிய கிரகமான சந்திர தசை நடக்கிறது. இது வெளியூர் வாய்ப்புகளை தரலாம் அல்லது ஒரு தற்காலிக பயணங்களை ஏற்படுத்தலாம். நிரந்தர வாய்ப்பினை ஏற்படுத்தாது. தற்போது சந்திர தசையில் ராகு புக்தி நடப்பதால், அடுத்து
ப் கேள்வி: இந்த ஜாதகருக்கு திருமணம் எப்போது நடக்கும்? -ராஜேந்திரன், கோவை.
பதில்: பூராட நட்சத்திரம், தனுசு ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 7-ஆம் அதிபதி குரு- சூரியன், புதன் சேர்க்கைப்பெற்று 4-ல் இருப்பது சிறப்பான அமைப்பாகும். தனுசு ராசியில் பிறந்த ஜாதகருக்கு கடந்த ஜனவரிவரை ஏழரைச்சனி நடைபெற்றது சாதகமற்ற அமைப்பாகும். தற்போது குரு 5-ல் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பாகும். வரும் 25-9-2023 முதல் ஜாதகருக்கு செவ்வாய் தசையில் 7-ஆம் அதிபதி குரு புக்தி நடைபெற இருப்பதால் ஒரு நல்லவாழ்க்கை அமையக்கூடிய யோகம் உண்டு. 3-ல் இருக்கும் களத்திர காரகன் சுக்கிரன்- கேது நட்சத்திரத்தில் இருப்பதால் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது. விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
ப் கேள்வி: எப்போது வெளிநாட்டில் வேலை மற்றும் படிப்பு அமையும் என்று கூறுங்கள்? -சங்கீதா, ஈரோடு.
பதில்: மக நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு தற்போது 8-ல் இருக்கக்கூடிய சந்திர தசை நடக்கிறது. ஒருவர் ஜாதகத் தில் ஜென்ம லக்னத்திற்கு 9, 12 அதிபதிகள் இணைந்திருந் தாலோ அல்லது 9, 12-ல் அமைந்த கிரகங்களின் இந்த தசை நடை பெற்றாலோ வெளிநாடு யோகம் ஏற்படும் என கூறலாம். உங்களுக்கு பயணங்களை ஏற்படுத்தக் கூடிய கிரகமான சந்திர தசை நடக்கிறது. இது வெளியூர் வாய்ப்புகளை தரலாம் அல்லது ஒரு தற்காலிக பயணங்களை ஏற்படுத்தலாம். நிரந்தர வாய்ப்பினை ஏற்படுத்தாது. தற்போது சந்திர தசையில் ராகு புக்தி நடப்பதால், அடுத்து 15-4-2024 முதல் நடைபெற இருக்கக்கூடிய 12-ஆம் அதிபதி குரு புக்தி காலத்தில் வெளியூர் வாய்ப்புகளுக்கும், மேற்படிப்பிற்கும் முயற்சிக்கவும்; நல்லது நடக்கும். 8-ல் இருக்கக்கூடிய சந்திர தசை என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தால் நல்லதை அடையமுடியும். பெருமாள் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
ப் கேள்வி: நான் நீண்டநாட்களாக கடன் பிரச்சினையில் உள்ளேன். எப்போது அதிலிருந்து மீள்வேன்? என்ன வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுங்கள்? -வேலு, சேலம்.
பதில்: மக நட்சத்திரம், சிம்ம ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு கடன்களை குறிக்கக்கூடிய கிரகமான சனி வக்ரகதியில் இருப்பது அவ்வளவு சிறப்பான அமைப்பு என கூறமுடியாது. பொதுவாக சனி ஆட்சி, உச்சம் பெற்றால் கடன்களை அடைக்கக்கூடிய சக்தி உண்டு. சனி வக்ரகதியில் இருப்பவர்களுக்கு வாங்கிய கடனை அடைக்க இடையூறுகள் ஏற்படும். உங்கள் ஜாதகத்தில் 6, 8-ஆம் வீடுகளை குரு பார்ப்பதால் வாங்கிய கடனை அடைக் கும் பலம் உண்டாகும். தற்போது நடைபெறக் கூடிய சனி புக்தி முடிந்து 21-7-2024 முதல் நடைபெற இருக் கக்கூடிய புதன் புக்தி காலத்தில் உங்கள் கடன்களை குறைத்துக்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அடுத்தடுத்து கடன் வாங்குகின்றபொழுது உங்கள் பெயரில் வாங்காமல் இருப்பது நல்லது. ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்மையை தரும்.
ப் கேள்வி: நான் தற்போது இன்ஜினியரிங் படிப்பு எடுத்துள்ளேன். அதில் வெற்றி பெறுவேனா, எனக்கு அரசு வேலை கிடைக்குமா என்று கூறுங்கள்? -பார்கவி, கோவை.
பதில்: உத்திர நட்சத்தி ரம், சிம்ம ராசி, மிதுன லக்னத் தில் பிறந்த உங்களுக்கு 4, 5-க்கு அதிபதி யான சுக்கிரன், புதன் இணைந்து 9-ல் இருந்து குரு பார்வை பெறுவதால் கல்வியில் தங்கு தடையின்றி நல்ல மதிப்பெண் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மேற்படிப்பு யோகங்களும் இருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி குரு வக்ரம் பெற்றிருப்பதால் நிரந்தர வேலை அமைய சில இடையூறுகள் ஏற்படும். 10-ல் சூரியன் இருப்பதால் வெளியூர், வெளிமாநிலங்களில் அரசு, அரசு சார்ந்த துறைகளில் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் அமையும். படிப்புக்குப் பிறகு போட்டி தேர்வுகளில் பங்கு பெறவும்; நல்லது நடக்கும். தற்போது படிப்பில் கவனம் செலுத்தவும். முருக வழிபாடு மேற்கொள்ளவும்.
ப் கேள்வி: என் மகனுக்கு மனநிலை சரியில்லை, பேச்சும் சரியாக வரவில்லை. அவன் எப்போது குணமாகி இயல்பு நிலைக்கு வருவான். அவனுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூறுங்கள்? -கல்யாணி, சென்னை.
பதில்: உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு சனி வக்ரகதியில் இருக்கும் பொழுது பிறந் துள்ளார். சனி வக்ரகதியில் இருந்தால் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். உங்கள் மகன் ஜாதகத்தில் 2-ல் உள்ள குரு தனது சிறப்பு பார்வை யாக 6, 8-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் எவ்வளவு உடல்ரீதியான பிரச்சினை இருந்தாலும் அதிலிருந்து குணமடைந்து நல்ல உடல் அமைப்புடன் வாழும் யோகம் உண்டாகும். அக்டோபர் 2023-க்குப்பிறகு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குல தெய்வ வழிபாடு மேற் கொள்வது மிகவும் நல்லது.
ப் கேள்வி: நானும் என் மனைவியும் கடந்த 10 வருடங்களாக பிரிந்து இருக்கி றோம். நாங்கள் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு இருக்கிறதா; இல்லையென்றால் நான் 2-ஆவது திருமணம் செய்து கொள்ளலாமா என்று கூறுங்கள்? -சந்திரசேகர், குடியாத்தம்.
பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு, 7-ஆம் அதிபதி செவ்வாய் திரிகோண ஸ்தானத்தில் இருப்பதும், சுக்கிரன் 10-ல் இருந்து சுக்கிர தசை நடப்பதும் சாதகமான அமைப்புதான். உங்கள் ஜாதக ரீதியாக மணவாழ்க்கை யோகம் சாதகமாக தான் இருக்கிறது. உங்கள் மனைவி ஜாதகத்தில் ஏதாவது குறை இருந்தால்கூட கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்பட்டு இருக்கலாம். மீண்டும் சேர்ந்து வாழ முயற்சி செய்யவும். 7-ஆம் அதிபதி செவ்வாய் சுப கிரகமான குரு சேர்க்கை பெற்று இருப்பதால் கண்டிப்பாக பிரச்சினைகள் குறைந்து நல்லது நடக்கும். முருக வழிபாடு மேற்கொள்ளவும்; நன்மை கிடைக்கும்.
ப் கேள்வி: என் மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள்?
பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சூரியன் 7-ல் ஆட்சி பெற்று இருப்பதும், சுக்கிரன் 6-ல் இருந்தாலும் செவ்வாய் சேர்க்கைப் பெற்று இருப்பது அனுகூல மான அமைப்பு தான். குரு பார்வை 7-ஆம் வீட்டுக்கு இருக்கிறதும் சிறப்பான அமைப்பாகும். 2-ல் சனி, கேது, 8-ல் ராகு இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். பொதுவாக இதுபோன்ற அமைப்பு இருந்து ராகு தசை நடப்பதால் திருமணம் நடைபெற இடையூறுகள் ஏற்படுகிறது. தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. 4-4-2027 வரை ராகு தசை நடைபெறுவதால் அதுவரை திருமணம் நடைபெற்றாலும் வாழ்வில் விட்டுக்கொடுத்து சென்றுவிட்டால் அடுத்து வரக்கூடிய குரு மகா தசையில் மணவாழ்க்கை நன்றாக இருக்கும். 8-ல் ராகு இருந்து ராகு தசை நடப்பதால் திருமணம் நடைபெற்றாலும் மனைவிவழி உறவினர் களிடம் ஒற்றுமை இருக்காது.
ப் கேள்வி: என் மகன் மன உளைச்சல் காரணமாக யாரிடமும் பேசுவதில்லை. அவன் எதிர்காலம் எப்படியிருக்கும். அவனுடைய திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள்? -விஸ்வநாதன், பண்ருட்டி.
பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு சந்திரன்- கேது சேர்க்கைப் பெற்று உள்ளது. இது சாதகமற்ற அமைப்பாகும். வரும் 26-10-2023 முடிய சந்திர தசை நடப்பதால் தேவையற்ற மன உளைச்சல்கள் ஏற்பட்டு வருகிறது. அடுத்த செவ்வாய் தசை வர இருப்பதால் தற்போது இருக்கக்கூடிய மன உளைச்சல் முழுமையாக விலகி ஒரு சிறப் பான நிலை யினை அடைய முடியும். 7-ஆம் அதிபதி 8-ல் மறைந்து இருந்தாலும், 8-ல் சுக்கிரன் ஆட்சிபெற்று பாவகத்தில் புதன் 7-ல் இருப்பதால் 2024 மே மாதத்திற்குப்பிறகு ஒரு சிறப்பான மணவாழ்க்கை உண்டாகி எதிர்காலம் சிறப் பாக இருக்கும். மகனின் ஜாதகத்தில் 8-ல் ராகு இருப்பதால் மனைவிவழி உறவுகளிடம் ஒற்றுமை என்பது குறைவாக இருக்கும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.