* கேள்வி: எனக்கு மத்திய அரசு வேலை எந்த வருடம் கிடைக்குமென்று கூறுங்கள்?
பதில் : உத்திர நட்சத்திரம், சிம்ம ராசி, துலா லக்னத் தில் பிறந்தவர் களுக்கு அரசு துறையில் பணி எப்பொழுது கிடைக்கும் என கேள்வி கேட்டுள் ளீர்கள். ஒரு ஜாதகத் தில் 10-ஆம் வீட்டில் சூரியன்- செவ்வாய் போன்ற கிரகங் கள் வலுப்பெற்று குரு பார்வை போன்ற அமைப்பு இருந்தால் அரசு துறையில் பணிபுரியக்கூடிய அதிர்ஷ் டங்கள் உண்டாகும். உங்கள் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி சந்திரன் சூரியன் வீடான சிம்ம ராசியில் அமையப்பெற்று, நவாம்ச கட்டத்தில் குரு வீட்டில் இருப் பது நல்ல பணியில் அமையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. பிறக் கின்றபொழுதே சூரியன் உச்சம் பெற்று, செவ்வாய் ஆட்சிபெற்று, சுக்கிரன் உச்சம்பெற்று இருப்பதால் அரசு, அரசு சார்ந்த பணிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தற்போது ராகு தசை சுயபுக்தி நடப்பதால் 2024 ஜனவரிக்கு பிறகு சுய புக்திக்கு பிறகு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது ராகு தசை சுய புக்தி நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நன்மையை தரும். சூரியன் உச்சம் பெற்று, உடன் செவ்வாய் ஆட்சிபெற்று அமைந்திருப்பது சிறப்பான அமைப்பாகும். அது மட்டும் இல்லாமல் சிம்ம ராசிக்கு பத்தாம் அதிபதியான சுக்கிரன் உச்சம்பெற்று இருப்பதால் நல்ல நிர்வாகத் திறனுடன் உயர் பதவியில் வைக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு, மனம் தளராமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெறவும்; வெற்றி கிடைக்கும்.
ப் கேள்வி: இப்பிறவியுடன் பிறவி முடிந்து மோட்சம் கிட்டுமா? -வள்ளிநாயகம், திருநெல்வேலி.
பதில்: இப்பிறவியில் ஒருவர
* கேள்வி: எனக்கு மத்திய அரசு வேலை எந்த வருடம் கிடைக்குமென்று கூறுங்கள்?
பதில் : உத்திர நட்சத்திரம், சிம்ம ராசி, துலா லக்னத் தில் பிறந்தவர் களுக்கு அரசு துறையில் பணி எப்பொழுது கிடைக்கும் என கேள்வி கேட்டுள் ளீர்கள். ஒரு ஜாதகத் தில் 10-ஆம் வீட்டில் சூரியன்- செவ்வாய் போன்ற கிரகங் கள் வலுப்பெற்று குரு பார்வை போன்ற அமைப்பு இருந்தால் அரசு துறையில் பணிபுரியக்கூடிய அதிர்ஷ் டங்கள் உண்டாகும். உங்கள் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி சந்திரன் சூரியன் வீடான சிம்ம ராசியில் அமையப்பெற்று, நவாம்ச கட்டத்தில் குரு வீட்டில் இருப் பது நல்ல பணியில் அமையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. பிறக் கின்றபொழுதே சூரியன் உச்சம் பெற்று, செவ்வாய் ஆட்சிபெற்று, சுக்கிரன் உச்சம்பெற்று இருப்பதால் அரசு, அரசு சார்ந்த பணிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தற்போது ராகு தசை சுயபுக்தி நடப்பதால் 2024 ஜனவரிக்கு பிறகு சுய புக்திக்கு பிறகு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது ராகு தசை சுய புக்தி நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நன்மையை தரும். சூரியன் உச்சம் பெற்று, உடன் செவ்வாய் ஆட்சிபெற்று அமைந்திருப்பது சிறப்பான அமைப்பாகும். அது மட்டும் இல்லாமல் சிம்ம ராசிக்கு பத்தாம் அதிபதியான சுக்கிரன் உச்சம்பெற்று இருப்பதால் நல்ல நிர்வாகத் திறனுடன் உயர் பதவியில் வைக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு, மனம் தளராமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெறவும்; வெற்றி கிடைக்கும்.
ப் கேள்வி: இப்பிறவியுடன் பிறவி முடிந்து மோட்சம் கிட்டுமா? -வள்ளிநாயகம், திருநெல்வேலி.
பதில்: இப்பிறவியில் ஒருவர் செய்யக்கூடிய பாவ, புண்ணியங்கள்தான் அவரின் காலத்துக்குப்பிறகு வரக்கூடிய விஷயங்களை பிரதிபலிக்கும்.
ஜோதிடத்தில் இதனை பற்றிய கருத்தை பார்க்கின்றபொழுது 12-ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லை என்ற ஒரு கருத்து உண்டு. உங்கள் ஜாதகத்தில் 12-ஆம் அதிபதி சனி வக்ரகதியில் இருப்பது மன சஞ்சலத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாக இருந்தாலும் உங்கள் ஜாதகத்தில் நீங்கள் பிறந்தது கேது நட்சத்திரம் என்பதாலும் தற்போது உங்களுக்கு குரு தசை நடப்பதாலும் ஆன்மிக தெய்வீக பணியில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் பலருக்கு சேவை செய்யக்கூடிய நல்ல பண்பு தரும். தற்போது குரு தசை நடப்பதால் உங்களால் முடிந்த நற்பணிகளை செய்யவும் இறையருள் கிட்டட்டும்.
கேள்வி: என் மகனின் படிப்பு, எதிர்காலம் எப்படியிருக்கும். இன்ஜினீயராக முடியுமா?
பதில்: ரிஷப லக்னம், திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசியில் பிறந்த உங்கள் மகனுக்கு கல்வி ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சனி, கேது ஆகிய பாவ கிரகங்கள் இருப்பது கல்வியில் சில இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். நான்காம் அதிபதி சூரியன் 7-ல் இருப்பதா லும் புதன் பாவக ரீதியாக 7-ல் இருப்பதாலும் சில இடையூறு கள் இருந்தா லும் கல்வியில் சாதிக்ககூடிய வாய்ப்புகள் உண்டு. 4-ஆம் அதிபதி சூரியன் சனி நட்சத்திரத்தில் இருப்பதால் இன்ஜினியரிங் படிப்புகள் சாதிக்கும் அமைப்பு நவீனகரமான கல்வியை கற்கக்கூடிய யோகம் உண்டாகும். 5-10-2025 முதல் குரு மகா தசை நடக்க இருக்கிறது. குரு கேது சாரம் பெற்று இருப்பதால் கெமிக்கல் இன்ஜினியரிங் போன்ற படிப்புகளுக்கான வாய்ப்புகள் உண்டு.
ப் கேள்வி: எனக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -நிஷாந்த், திருச்சி
பதில்: சிம்ம லக்னம், அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசியில் பிறந்த உங்களுக்கு 2-ல் ராகு, 8-ல் சனி, கேது இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். 8-ல் உள்ள கேது தசை 14-8-2026 முதல் 14-8-2033 வரை நடக்க இருக்கிறது. தற்போது புதன் தசையில் குரு புத்தி 5-12-2026 முடிய நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்துகொண்டாலும் வாழ்வில் விட்டுக்கொடுத்து சென்றால்தான் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சுக்கிரன் உங்களுக்கு ஜாதகத்தில் 10-ல் ஆட்சிபெற்று இருப்பதால் தற்போது சில இடையூறுகளை சந்தித்தாலும் எதிர்கால வாழ்க்கை நன்றாக இருக்கும். விநாயகர் வழிபாடு நன்மை தரும்.
ப் கேள்வி: என் மகளின் படிப்பு எப்படியிருக்கும். மேற்கொண்டு எந்த படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பது என்று கூறுங்கள்?
பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 4-ஆம் அதிபதி சுக்கிரன் நான்காம் வீட்டை பார்ப் பதும், கல்விக் காரகன் புதன் குரு நட்சத்திரத் தில் அமையப் பெற்று குரு பார்வை பெறுவதும், தற்போது புதன் தசை நடப்பதும் கல்விரீதியாக சாதிக்கக்கூடிய அமைப்பாகும். புதன் வலுவாக இருப்பதால் கம்ப்யூட்டர், டிசைனிங் தொடர்புடைய கல்வி ஆர்க்கிடெக்சர் படிப்புகள் சிறப்பாக இருக்கும். கலை, இசை, ஓவியம் சம்பந்தப் பட்ட விஷயங்களும் நாட்டங்கள் சிறப்பாக இருக்கும். படிக்கும் வயதில் புதன் தசை நடப்பதே கல்வியில் சாதிக்கக்கூடிய யோகத்தை தரும். சூரியன்- ராகு சேர்க்கை ஏற்பட்டு கிரண மாதத்தில் பிறந்து இருப்பதால் குலதெய்வ வழிபாடுகள் தொடர்ந்து செய்யவும்.
ப் கேள்வி: எங்கள் குடும்பத்தில் பிரச்சினைகளும் கஷ்டங்களுமே நிறைந்துள்ளன. இந்த நிலை மாறி இல்லறம் சிறக்க பிரச்சினைகளிலிருந்து நிரந்திர தீர்வுகாண வழி இருக்கா என்று கூறுங்கள்? ஞானசேகரன், திருவண்ணாமலை
பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன்- ராகு சேர்க்கைப்பெற்று கிரகண மாதத்தில் நீங்கள் பிறந்துள்ளீர்கள். அடுத்து 2013 முதல் 2020 வரை கேது மகா தசை நடைபெற்றது. உங்கள் ஜாதகத் தில் குரு- சனி சேர்க்கைப் பெற்று 2-ல் கன்னி ராசியில் அமைந்ததும் சாதகமற்ற அமைப்பாகும். இதன்காரணமாக கடந்த காலங்களில் மனக்கசப்புகள் குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலை ஏற்பட்டது. 1-7-2020 முதல் சுக்கிர மகா தசை நடப்பது ஒரு சாதகமான அமைப்பாகும். இதன்காரணமாக வரும் நாட்களில் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருப் பதற்கான வாய்ப்புகள் உண்டு. சுக்கிரன்- கேது சாரம் பெற்று இருப்பதால் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்லவும். விநாயகர் வழிபாடு தொடர்ந்து செய்யவும். விரைவில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். கிரகண ஏற்பட்ட மாதத்தில் பிறந்திருப்பதால் குலதெய்வ வழிபாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளவும்.
ப் கேள்வி: என் மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும்?
பதில்: ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி குரு உச்சம்பெற்று இருப்பது அற்புதமான அமைப்பாகும். களத்திர காரகன் சுக்கிரன் 11-ல் இருப்பதும் நல்ல அமைப் பாகும். 7, 11-க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் வாழ்க்கையில் சில இடையூறு களை சந்தித்து அதன்பிறகு வாழ்வில் ஒருநல்ல நிலையை அடையக்கூடிய அமைப்பு உண்டு. ஒருசில தடைக்குப்பிறகு அணுகூலங்கள் உண்டாகும். அடுத்து ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி பலவீனமாக இருந்தால் அவர்களுக்கு திருமணம் தொடர்பாக ஏதாவது ஒரு மன உளைச்சல்கள் ஏற்படும். உங்கள் மகன் ஜாதகத்தில் 5-ஆம் அதிபதி வக்ரகதியில் இருப்பது சாதகமான அமைப்பு அல்ல. இதன்காரணமாக திருமணம் தொடர்பாக ஏதாவது ஒரு மனகவலை உண்டாகி அதன்பிறகு நல்லது நடக்கும். தற்போது 2-ல் குரு கோட்சாரரீதியாக சஞ்சரிப்பதாலும், பாக்கியஸ்தானத்தில் இருக்கக்கூடிய சூரிய தசை நடப்பதாலும் இந்த ஆண்டிலே நல்லது நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பைரவர் வழிபாடு, தாய்வழி குலதெய்வத்தை வழிபாடு செய்வது நன்மையை தரும்.
ப் கேள்வி: என் மகள் மருத்துவராக முடியுமா?
பதில்: எந்த ஒரு ஜாதகத்தில் சூரியன்- செவ்வாய் நன்றாக வலுவாக 4, 10-ஆம் பாவத்தில் அமைந்திருக்கிறதோ, 4-ஆம் அதிபதியுடன் சூரியன், செவ்வாய் இணைந்து பலமாக இருக்கிறதோ அவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான யோகங்கள் உண்டு. உங்கள் மகள் ஜாதகத்தில் நான்காம் அதிபதி சுக்கிரன் ஐந்தில் இருக்கிறார். புதன் வக்ரகதியில் இருக்கிறது. பொதுவாக கல்வி காரகன் புதன் வக்ரகதியில் இருந்தாலே கல்விரீதியாக அவர்களின் எண்ணங்கள் நிறைவேற சில இடையூறுகள் ஏற்படும். மருத்துவ படிப்பிற்கான கிரகமான சூரியன் 6-ல் இருப்பதும், செவ்வாய் 7-ல் இருப்பதும் அவ்வளவு சிறப்பு எனக் கூறமுடியாது. நான்காம் அதி பதி சுக்கிரன்- புதன் சேர்க் கைப்பெற்று 5-ல் இருப்பதால் டிசைனிங் தொடர்புடைய கல்வி, கலை தொடர்புடைய கல்விக்கான யோகங்கள் வலுவாக இருக்கிறது. புதன் வக்ரகத்தில் இருப்பதால் படித்துக்கொண்டிருக்கின்றபொழுது ஒரு துறை மாறி மற்ற துறைக்கு செல்லக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. மனம் தளராமல் முயற்சி செய்யவும்; உங்கள் எண்ணங்கள் நிறைவேறட்டும்.