எனக்கு சொந்தமான நிலத்தை நல்ல விலைக்கு விற்க சரியான நேரம் எதுவென்று கூறுங்கள்? -லோகநாதன், திருப்பத்தூர்.
பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 4-ஆம் அதிபதி சுக்கிரன் 8-ல் இருந்தாலும் பாவகரீதியாக 9-ல் இருப்பது நல்ல அமைப்பா கும். உங்களுக்கு தற்போது ராகு தசையில் ராகுவுக்கு 8-ல் இருக்கக் கூடிய செவ்வாய் புக்தி நடப்பது நில சம்மந்தப்பட்ட விஷயத்தில் அனுகூலத்தை அடைய இடையூறு களை ஏற்படுத்தும் அமைப்பாகும். சனி, செவ்வாய் சேர்ந்து இருந்து செவ்வாய் புக்தி நடப்பதால் உங்கள் முயற்சிகள் தாமதமாகக்கூடிய ஒரு நிலையானது இருக்கும். தற்போது நடக்கக்கூடிய ராகு தசை முடிந்து உங்களுக்கு 13-5-2025-க்கு பிறகு குரு தசை தொடங்க இருக்கிறது. குரு தசை தொடங்குகின்றபொழுது கண் டிப்பாக நிலத் தின் மூலமாக ஒரு பொருளா தார மேன்மை கள் அடையக் கூடிய வாய்ப்பு கள் உண்டு. 2025 மே மாதத்திற்கு பிறகு நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
எனக்கு திருமணம் இன்னும் நடக்கவில்லை. தட்டிக்கொண்டே போகிறது. என்ன காரணம் என்று கூறுங்கள்? -தர்மதுரை, கடலூர்.
பதில்: உத்திராட நட்சத்திரம், மகர ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சூரியன் 5-ல் குரு நட்சத்திரத்தில் அமையப்பெற்று சுக்கிரன்- புதன் சேர்க்கைப் பெற்றிருப்பது சிறப்பான அமைப்பாகும். சுக்கிரன்- சூரியன் சேர்ந்திருந்தால் அஸ்தங்க தோஷம் என்ற ஒரு கருத்து இருந்தாலும் சுக்கிரனுக்கும் சூரியனுக்கும் இடைவெளி அதிகமாக இருப்பதால் பெரிய பாதிப்பு கிடையாது. குறிப்பாக சுக்கிரன், சூரியன் சேரு கின்றபொழுது 1 அல்லது 2 டிகிரி நெருக்கமாக இருந்தால் கெடுதி. சூரியன், சுக்கிரன் ராசி கட்டத் திலும் இணைந்திருந்து நவாம்ச கட்டத்திலும் இணைந்திருந்தால் அது கடுமையான அர்த்தங்கள் தோஷம் எனக் கூறலாம். ராசி கட்டத்தில் இணைந்தி ருந்தாலும் உங்கள் ஜாதகத் தில் நவாம்ச கட் டத்தில் சுக்கிரன் கும்ப ராசியிலும், சூரியன் ரிஷப ராசியிலும் உள்ளது. அதனால் அஸ்தங்க தோஷம் கிடையாது. குறைந்த பட்சம் 10 டிகிரி இடைவேளை இருப்பதால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு திருமண யோகத்தை பற்றி பார்க்கின்ற பொழுது உங்கள் ஜாதகத்தில் 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பது கடுமையான ராகு- கேது தோஷமாகும். 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பதே கெடுதி என கூறவில்லை. நான் குறிப்பாக 2-ல் ராகு, 8-ல் கேது இருக்கின்ற பொழுது 2-ல் உள்ள ராகு தசை நடைபெற்றால் திருமணம் அமைய இடையூறுகள் ஏற்படும். ஒரு குடும்ப பாங்காக வாழ்வதற்கு தடைகள் ஏற்படும். உங்களுக்கு ராகு தசை 27-10-2025 முடிய நடக்கிறது. அடுத்த குரு தசை தொடங்குகின்றபொழுது உறவில்லாமல் அந்நியத்தில் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. குறிப்பாக குரு- கேது சாரம் பெற்றிருப்பதாலும், சுக்கிரன்- ராகு சாரம் பெற்றிருப்பதாலும் உறவில் பார்ப்பதைவிட அந்நியத்தில் பார்ப்பதன்மூலமாக நல்ல வாழ்க்கை அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நடப்பது ராகு தசை என்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
எனக்கு நிரந்திர வேலை எப்போது கிடைக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? சொந்தமா அல்லது அந்நியமா என்று கூறுங்கள்? -பாஸ்கர், மேல்பட்டாம்பாக்கம்.
பதில்: பூராட நட்சத்திரம், தனுசு ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சுக்கிரன்- கேது நட்சத்திரமான மூலத்தில் அமையப்பெற்று 12-ல் இருக்கி றார். உங்களுக்கு தற்போது செவ்வாய் தசை 5-12-2024 முடிய நடக்கிறது. ஒரு தசை முடியும் தருவாய் அடுத்த தசை ஆரம்பிக்கும் நேரம் இதனை தசை விடுதலை என்று கூறுவோம். உங்களுக்கு அடுத்து ராகு தசை தொடங்க இருக்கிறது. 9-ல் ராகு இருந்து ராகு தசை நடக்க இருப்பதால் பிறந்த ஊரைவிட வெளியூர், வெளிநாடு போன்ற இடங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அடுத்து ராகு தசை தொடங்க இருப்பதால் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் ராகு தசை சுய புக்திக்கு பிறகு சுமார் மூன்று ஆண்டுக்குப் பிறகு வேலை யில் ஒரு நிரந்தர நிலை ஏற்படும். தனுசு ராசியில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன் 12-ல் மறைந்து சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் கேது நட்சத்திரத்தில் அமைந்திருப்பதால் சொந்தத்தைவிட அன்னியத்தில் வரன் அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 2025 மே மாதத்திற்குப்பிறகு குரு 7-ல் வரும் தருவாயில் நல்லவரன் அமையும். அம்மன் வழிபாடு, துர்கை வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.
என் மகள் நன்றாக படிப்பாளா என்று கூறுங்கள்?
பதில்: அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு கல்வி காரகன் புதன் ஆட்சிபெற்று சுக்கிரன் சேர்க்கைப் பெற்றிருப்ப தாலும் 4-ஆம் அதிபதி குரு- சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்றிருப்ப தாலும் உங்கள் மகள் சிறப்பாக படிக்கக்கூடிய ஒரு அமைப்பும் ஒரு நல்ல நிலையை அடையக் கூடிய அதிர்ஷ்டங் களும் உண்டு. குறிப்பாக குரு, சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்றிருப்பதால் நிர்வாகரீதியான கல்வி, மருந்து, கெமிக்கல் தொடர்புடைய கல்விகள் சிறப்பாக இருக்கக்கூடிய யோகம் உண்டு. தற்போது ராகு தசையில் சனி புக்தி 1-8-2024 முடிய நடப்பதால் கடந்த நாட்களில் படிப்பில் மந்த நிலை ஏற்பட்டது. இனி புதன் புக்தி வருவதால் படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நடப்பது ராகு தசை என்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
என் மகனுக்கு 41 வயதாகிறது. திருமணம் எப்போது கைகூடும் என்று கூறுங்கள்?
பதில்: மிருகசீரிஷ நட்சத்திரம், ரிஷப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு களத்திர காரகன் சுக்கிரன் ஆட்சி பெற்றிருந்தாலும் உடன் சனி இருப்பதால் திருமணம் கைகூடுவதில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படுகிறது. 7-ஆம் அதிபதி குரு 7-ஆம் வீட்டை பார்ப்பது நல்ல அமைப்பாகும். 2-ல் சனி இருந்து தசை நடப்பது தேவையற்ற இடையூறு களை ஏற்படுத் தும் அமைப்பு ஆகும். சனி தசையில் புதன் புக்தி 25-7-2024 முதல் நடை பெறுவதால் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்த்தால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. குரு- கேது இணைந்திருப்பதால் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதன்மூலம் இறையருளால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு.
என் எதிர்காலம் எப்படியிருக்கும்? புத்திர சோகம் உள்ளது. -ரமணி, தர்மபுரி
பதில்: திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு செவ்வாய் ஆட்சிபெற்று, சனி உச்சம் பெற்றிருப்பது நல்ல அமைப்பு. விருச்சிக லக்னத்திற்கு தற்போது பாவகரீதியாக ஐந்தில் இருக்கக்கூடிய சுக்கிர தசை 9-1-2021 முதல் நடப்பது அனுகூலமான அமைப்பு தான். நடப்பது சுக்கிர தசை என்பதனால் வருகின்ற நாட்கள் சிறப்பாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ஜாதகத்தில் சனி 12-ல் அமையப்பெற்று வக்ர கதியில் இருப்பதால் கால் பாதங்களில் பிரச்சினை, உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒவ் வொரு செய-லும் சற்று எச்சரிக்கை யுடன் செயல் படுவது நல்லது. உங்கள் ஜாதகத் தில் குரு பகவான் 6-ல் இருப்ப தால் புத்திர வழியில் சில கவலைகள் இருக்கலாம். அதை பற்றி இப்ப நினைக்க வேண்டாம். தெய்வ வழிபாடுகள் மேற்கொள்ளுங்கள்; நல்லது நடக்கும்.
(பெண்) இவருக்கு முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்துவிட்டது. இரண்டாவது திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -பாலகிருஷ்ணன், சுரண்டை.
பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன் 7-ல் ஆட்சி பெற்றிருப்பது நல்ல அமைப்பாகும். சூரியன், செவ்வாய் இணைந்து 9-ஆம் வீட்டில் இருப்பதால் இரண்டாவது திருமணத்திற்கான வாய்ப்புகள் ஜாதகரீதியாக பலமாக இருக்கிறது. குறிப்பாக ராசிக் கட்டத்தில் சூரியன், செவ்வாய் இணைந்திருந்து நவாம்சக் கட்டத்தில் சூரியன் இருக்கக்கூடிய கட்டத்திற்கு அடுத்த கட்டத்தில் செவ்வாய் இருப்பது மறுமணத்திற்கான வாய்ப்பை பலப்படுத்துகிறது. தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி 9-1-2025 முடிய நடப்பதாலும் கோட்சாரத்தில் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதாலும் திருமண முயற்சியை தீவிரமாக மேற்கொண் டால் இந்த ஆண்டு இறுதிக்குள் நல்ல வரன் அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 7-ல் கேது இருந்தாலும் கேது தசையோ, கேது புக்தியோ உடனடியாக வராது. அதனால் கெடுதி இல்லை. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வும்; நல்லது நடக்கும்.