இந்த ஜாதகருக்கு தற்போது என்ன தசை நடக்கிறது? அடுத்து வரும் தசையில் நல்ல பலன் உண்டாகுமா என்று கூறுங்கள்?
பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத் தில் பிறந்த இந்த ஜாதகருக்கு தற்போது லக்கனத்திற்கும் ராசிக்கும் 7-ல் இருக்கக்கூடிய குரு தசையில் 8-ல் உள்ள சனி புக்தி 14-10-2024 முடிய நடக்கிறது. அடுத்து 6-ல் ஆட்சி பெற்று உள்ள புதன் புக்தி தொடங்க இருக்கிறது. புதன் ஆட்சி உச்சம் பெற்றிருப்பதால் குரு தசை புதன் புக்தியில் வளமான பலன்கள் ஏற்படும். புதன் பலமாக இருப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறக்கூடிய அமைப்புகள், குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. புதன் 6-ல் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது.
(ஆண்) இந்த ஜாதகருக்கு வேலைமாற்றம் எப்போது ஏற்படும்? நல்ல தசை எப்போது வரும்?
பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னத் தில் பிறந்த ஜாதகருக்கு லாப ஸ்தானத்தி லுள்ள ராகு தசையில் 10-ல் உள்ள சனி புக்தி 7-8-2026 முடிய நடப்பது சிறப்பான அமைப்பே. தற்போது சனி புக்தி நடப்பதால் விரைவில் பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்பு கள் உண்டு. குரு பார்வை சனிக்கு இருப்பதால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். நடப்பது ராகு தசை என்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
என் மகனின் திருமணம் மற்றும் எதிர்காலம் பற்றியும் பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் கூறுங்கள்? -ஸ்ரீதரன், கோவை.
பதில்: கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய் 2-ல் அமையப்பெற்று உடன் சுக்கிரன், குரு இருப்பது நல்ல அமைப்பாகும். செவ்வாய், குரு, சுக்கிரன் சேர்க்கைப் பெற்றிருப்ப தால் சிறப்பான மணவாழ்க்கை, திருமணத் திற்குபிறகு நல்ல ஒரு வளர்ச்சி ஏற்படும் அதிர்ஷ்டங்கள் உண்டு. ராகு- கேது 1, 7-ல் இருந்தாலும் பாவகரீதியாக 6-ல் கேது 12-ல் ராகு இருப்பது கெடுதி கிடையாது. தற்போது ராகு தசையில் சனி புக்தி 16-6-2025 முடிய நடப்பதால் அடுத்து வரக்கூடிய புதனுடைய புக்தியில் ஒரு சிறப்பான வாழ்க்கை அமையக்கூடிய யோகங்கள் உண்டு. தற்போது ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, தற்போதைக்கு எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நன்மை தரும்.
தற்போது எந்த தசை மற்றும் புக்தி நடக்கிறது? என்னால் எந்த வேலையும் சரிவர செய்ய முடியவில்லை. கண்பார்வையும் சரியாக தெரிவதில்லை. கண் அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாமா? இனிமேல் நல்லபடியாக வாழமுடியுமா? -ராம்நாத், சென்னை.
பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம லக்னத்திற்கு 12-ல் உள்ள செவ்வாய் தசையில் 8-ல் உள்ள சனி புக்தி 24-6-2025 முடிய நடக்கிறது. சனி வக்ரகதியில் 8-ல் அமையப் பெற்று 2-ஆம் வீட்டை பார்ப்பது சற்று சாதகமற்ற அமைப்பாகும். செவ்வாய் தசையில் சனி புக்தி நடப்பதால் தேவையற்ற தடை, இடையூறுகள் ஏற்பட்டுகொண்டு இருக்கிறது. அடுத்த ஜூன் பிறகு வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். ஜென்ம ராசியில் சந்திரன் ஆட்சிபெற்று, 2-ல் சூரியன் ஆட்சிபெற்று இருப்பதால் கண் பார்வையில் சில பாதிப்புகள் இருந்தாலும் அதற்கான மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டால் கண்டிப்பாக நல்ல பார்வை கிடைக்கக்கூடிய அமைப்பு உண்டு. மருத்துவ ஆலோசனைக்கு ஏற்ப முறையான சிகிச்சைகளை மேற்கொள்ளவும். தற்போது நடைபெறக்கூடிய சனி புக்தி முடிஞ்சு அடுத்த புதன் புக்தி வருகின்றபொழுது ஒருசில நல்ல மாற்றங்கள் ஏற்படும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் யோகம் உண்டு. செவ்வாய் தசை நடப்பதால் முருக வழிபாடு மேற்கொள்ளவும்.
திருமண ஏற்பாடு பிரச்சினையாக உள்ளது, என்ன செய்யலாம்? வேலை வாய்ப்பு எப்படி உள்ளது என்று கூறுங்கள்?
பதில்: அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் வீட்டில் களத்திர காரகன் செவ்வாய்- கேது சேர்க்கைப்பெற்று கேது சாரம் பெற்று தற்போது கேது தசை நடப்பதால் திருமண சம்பந்தப்பட்ட விஷயத் தில் நல்ல பலன் அடைய இடையூறுகள் ஏற்படுகிறது. லக்னத்திற்கு 2-ஆம் வீட்டில் செவ்வாய்- கேது சேர்க்கைப்பெற்று தற்போது கேது தசை நடப்பதால் திருமணம் நடைபெற்றாலும் தேவையற்ற பிரச்சினைகள், ஒற்றுமை குறைவு ஏற்படலாம் என்பதால் அமையும் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்லவேண்டும். ஜாதகிக்கு 10-ஆம் அதிபதி சூரியன் 5-ல் வலுவாக இருப்பதாலும், சனி- குரு சேர்க்கை பெற்று 7-ல் இருப்பதாலும் நல்ல வேலை வாய்ப்பு அமையக்கூடிய யோகம் இருந்தாலும், 3-ஆவது தசையாக தற்போது கேது தசை நடப்பதால் அமையும் வாழ்வில் பெரிய திருப்தி இருக்க வாய்ப்பு இல்லை. தற்போது கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதும், கிடைக்கும் வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக்கொண்டு விட்டுக்கொடுத்து செல்வதும் நல்லது. இந்தப் பெண்ணுக்கு 2030 முதல் சுக்கிர தசை நடக்கின்றபொழுது வாழ்க்கை நன்றாக இருக்கும். 7, 5-க்கு அதிபதிகளான குரு, சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் திருமண விஷயத்தில் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முத-ல் ஒரு தடை அதன்பிறகு வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். கேது தசை நடப்பதால் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.