வாழ்க்கையே போராட்டமாக உள்ளது, பொருளாதாரத்திலும் முன்னேற்றமில்லை; தொழிலிலும் முன்னேற்றமில்லை. இந்த நிலை மாறுமா? நல்லது நடக்குமா என்று கூறுங்கள்? -ஹரிஷ், திருச்சி.
பதில்: கடக லக்னம், திருவோண நட்சத்திரம், மகர ராசியில் பிறந்த உங்களுக்கு கடந்த ஏழரை வருடங்களாக ஏழரைச்சனி நடைபெற்றுவருகிறது. தற்போது 8-ல் வக்ரகதியிலுள்ள குரு தசை 26-6-2034 முடிய நடக்கிறது. 8-ல் மறைவு ஸ்தானத்தில் வக்ரகதியில் உள்ள தசையில் தொழில் செய்வது அவ்வளவு சிறப்பு அல்ல. நீங்கள் சொந்தத் தொழில் செய்வதாக கேள்வியில் கூறியுள்ளீர்கள். அதுமட்டுமில்லாமல் 8-ல் வக்ரகதியிலுள்ள தசை பொருளாதார நெருக்கடிகளைத் தரக்கூடிய அமைப்பாகும். மகர ராசியில் பிறந்த உங்களுக்கு 29-3-2025-ல் ஏழரைச்சனி முடிந்தால் பொருளாதாரத்தில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. 8-ல் அமையப்பெற்ற தசை நடப்பதால் சொந்தத் தொழில் செய்வதைவிட வேலைக்கு செல்வதோ மற்றவர்களை சார்ந்து ஏதாவது செய்வதோ நல்லது. குரு தசை நடப்பதால் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.
நான் வாடகை வீட்டில் வசிக்கின்றேன். தற்போது நடக்கும் தசையில் சொந்த வீடு வாங்க முடியுமா? எப்போது வாங்க முடியும் என்று கூறுங்கள்? -ராம்குமார், கோவில்பட்டி.
பதில்: அஸ்வனி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 4-ஆம் அதிபதி சனி வக்ரகதியில் இருப்பதாலும், 4-ல் குரு தனித்து இருப்பதாலும் உங்கள் பெயரில் சொத்து அமைய இடையூறுகள் ஏற்படும். 7-ஆம் அதிபதி சுக்கிரன் திரிகோண ஸ்தானத்தில் இருப்பதால் சொத்து வாங்குவதை கூட்டாக முயற்சிசெய்தால் குறிப்பாக மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரை இணைத்துக்கொண்டு முயற்சித்தால் நல்லது நடக்க வாய்ப்புண்டு. தற்போது நடைபெறும் சந்திர தசையில் 2027-ல் சுக்கிர புக்தி நடக்கும் தருவாயில் சொந்த வீடு வாங்க கூட்டாக முயற்சித்தால் நல்லது நடக்கும்.
திருமணம் எப்போது நடைபெறும்? வேலையில் மாற்றம் ஏற்படுமா? சொந்தத் தொழில் அமையுமா என்று கூறுங்கள்? -சரவணகுமார், பழனி.
பதில்: கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன் 11-ல் நீசம்பெற்றிருப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதன்காரணமாக திருமணத் தடை ஏற்பட்டுகொண்டிருக்கிறது. விருச்சிக ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது 7-ல் குரு இருப்பதால் மே மாதத்துக்குள் நல்லது நடக்க வாய்ப்புண்டு. உங்கள் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி வக்ரம் பெற்றிருப்பதாலும், சனி வக்ரகதியில் இருப்பதாலும் சொந்தத் தொழில் செய்வதைவிட வேலைக்கு செல்வதே சிறப்பு. அதிலும் குறிப்பாக 14-1-2034 முடிய சந்திர தசை நடப்பதால் வேலைக்கு செல்வது சிறப்பு. விரைவில் வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பெருமாள் வழிபாடு மேற்கொள்ளவும்.
எனது திருமணம் எப்போது நடைபெறும்? அரசாங்க வேலை கிடைக்குமா என்று கூறுங்கள்? -பாஸ்கரன், திண்டுகல்.
பதில்: உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 2-ல் சனி, கேது, 8-ல் ராகு இருப்பது அவ்வளவு சிறப்பான அமைப்பு இல்லை. 7-ல் சூரியன் ஆட்சி பெற்றிருப்பது சுக்கிரன், செவ்வாய் சேர்க்கைப் பெற்றிருப்பது நல்ல அமைப்பாகும். 8-ல் உள்ள ராகு தசையில் புதன் புக்தி 13-3-2027 முடிய நடப்ப தால் திருமண முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் திருமணம் கைகூடும் என்றாலும் மணவாழ்வில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். குறிப்பாக மனைவிவழி உறவினர்வகையில் பகை, நிம்மதி குறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி 6-ல் நீசம் பெற்றிருப்பதாலும் 2-ல் சனி- கேது சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்ப தாலும் அரசு வேலைக்கான வாய்ப்புகள் குறைவு. தனியார் துறை, வெளியூர், வெளி மாநிலங்களில் வேலை செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தற்போது ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
கடன் பிரச்சினை எப்பொழுது தீரும்? சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் எப்பொழுது அமையும் என்று கூறுங்கள்? -தேவி, திண்டுக்கல்.
பதில்: கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 2025 மார்ச் 29-க்குபிறகு சனி கோட்சாரத்தில் லாப ஸ்தானத்திற்கு வருகின்றபொழுது உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் சற்று குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 4-ஆம் அதிபதி செவ்வாய் குரு சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானத்தில் இருப்பதாலும் தற்போது குரு தசையில் சுக்கிர புத்தி 15-5-2027 முடிய நடைபெறு வதாலும் சொந்த வீடு வாங்க முயற்சி செய்தால் 2025-ல் நல்லது நடக்க வாய்ப் புண்டு. சுக்கிரன்- சனி சேர்க்கைப் பெற்றிருப் பதால் பழைய வீட்டை வாங்கி புதுப்பித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.