எனக்கு குழந்தை பாக்கியம் எப்போது? ஆண் குழந்தைக்கு வாய்ப்பு உள்ளதா? என் ஜாதகப்படி கணவருக்கு யோகம் உண்டா? பிறந்த தேதி 3-8-1998, 9.43 காலை கோயம்புத்தூர்.

பதில்: கன்னி லக்னம், அனுஷ நட்சத்தி ரம், விருச்சிக ராசியில் பிறந்த உங்களுக்கு புத்திர காரகன் குரு வக்ரகதியில் இருப்பதும், ஐந்தாம் அதிபதி சனி 8-ல் நீசம்பெற்று கேது நட்சத்திரத்தில் இருப்பதும் கடுமையான புத்திர தோஷமாகும். பெண்களுக்கு மிக முக்கிய கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் 10-ல் இருப்பது சாதகமான அமைப்பு என்ற காரணத்தினால் குழந்தை பாக்கியத் திற்கான யோகங் கள் உண்டு. தற்சமயம் சுக்கிர மகா தசை நடப்பதால் பெண் குழந்தைக்கான வாய்ப்புகள் இருக்கிறது. குரு சனி பலவீனமாக இருப்பதால் காலதாமதம் செய்யாமல் குழந்தை பேருக்கு முயற்சித்தால் பெண் குழந்தைக்கான வாய்ப்புகள் பலமாக இருக்கிறது. ஏழாம் அதிபதி வக்ரம் பெற்றிருப்பதும், லக்னாதிபதி புதன் வக்ரம் பெற்றிருப்பதும் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் உடல் பலவீனத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு ஆகும். ஏழுக்கு இருபுறமும் பாவ கிரகம் இருப்பதும் அவ்வளவு சிறப்பு என கூறமுடியாது. ஒரு ஜாதகத்தில் எவ்வளவு தோஷங்கள் இருந்தாலும் நடக்கும் தசை நல்ல தசையாக இருந்தால் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கக்கூடிய நிலையும், உங்களை சார்ந்த கணவருக்கும் உங்களுடன் இருப்பவர்கள் ஒரு வளமான பலன்கள் தரக்கூடிய அனுகூலங்களும் உண்டு. ஒருசில தோஷங்கள் இருந்தாலும் நடப்பது சுக்கிர தசை என்பதால் நல்ல பலன் அடையமுடியும்.

Q&A

Advertisment

என் மகள் பிறந்த தேதி 21-10-1998, இடம் புனே, நேரம் மாலை 2.01 மணிக்கு, எப்போது திருமணம்? அவர்களின் திருமண வாழ்க்கை எப்படியிருக்கும்? பெயர்- லதா ரகுநாதன்.

பதில்: சுவாதி நட்சத்திரம், துலா ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு திருமணம் விரைவில் நடைபெறும். 7-ஆம் அதிபதி 10-ல் இருப்பதும், பெண் களுக்கு களத்திரகாரகனான செவ்வாய் எட்டில் இருப்பதாலும் வர்கோதமம் பெற்றிருப்பதாலும் ஒரு சிறப்பான மணவாழ்க்கை ஏற்படக்கூடிய அமைப்பு உண்டு. உங்கள் மகள் ஜாதகத்தில் தற்போது நான்காம் வீட்டில் வக்ரம், நீசம்பெற்ற சனி மகா தசையில் சுய புத்தி 24-12-2025 வரை நடக்கிறது. சனி வக்ரகதியில் இருந்து நீசம் பெற்று கேது நட்சத்திரமான அஸ்வினியில் இருப்பதால் அது உடல் ஆரோக்கியத்திற்கும், திருமணம் செய்து கொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சி கரமாக நடத்துவதற்கும் சாதகமான அமைப்பு அல்ல. கேது சாரம் வக்ரம் பெற்ற சனி தசை சுய புத்தி காலங்கள் இல்லற வாழ்க் கைக்கு ஒரு சாதகமற்ற நேரம் என்ற காரணத் தாலும் ஆரோக்கிய குறைபாடுகள் இருக்கும் என்பதாலும் சனி தசை சுய புக்தி முடியும் வரை அதாவது 24-11-2025 வரை பொறுமை காப்பது மிக மிக அவசியம். சனி தசையில் சுய புக்தி. அடுத்த புதன் புக்தி வருகின்றபொழுது திருமணம் செய்தால் மன வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் மகள் ஜாதகத்தில் செவ்வாய்- ராகு சேர்க்கை பெற்றாலும் செவ்வாயை ராகு கடந்து நான்கு பாதங் கள் சென்று விட்டதால்- அதாவது ராசியில் செவ்வாய்- ராகு சேர்க்கை பெற்று இருந்தாலும் நவாம்சத்தில் செவ்வாய் சிம்மத்திலும் ராகு ரிஷபத்திலும் இருப்பதால் கெடுதி இல்லை. செவ்வாயும் சந்திரனும் சாதகமாக இருப்பதால் இந்த சுய புக்தி தாண்டிவிட்டால் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

வருகின்ற சனி தசையில் சொந்த வீடுகட்டும் யோகம் எனக்கு உண்டா? பரிகாரம் இருந்தால் கூறுங்கள்? -பெருமாள், திருக்கோவிலூர்.

பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு சொந்தவீடு யோகத்தைப் பற்றி பார்க்கின்றபொழுது, பொதுவாக சொந்தவீடு அமைய நான்காம் பாவமும், சுக்கிரனும் சிறப்பாக இருக்க வேண்டும். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சிபெற்று நல்ல பலமாக இருக்கிறார். நான்காம் வீட்டு அதிபதி சனி குரு வீடான தனுசில் அமையப் பெற்று இருப் பது சிறப்பு. சொந்தமாக வீடு அமையும் யோகம் இருப்பதாலும், உங்கள் ஜாதகத் தில் நான்காம் அதிபதி சனி என்ற காரணத்தாலும் 2025 அக்டோபர் முதல் உங்களுக்கு சனி மகா தசை நடக்க இருப்பதாலும் சனி பழைய பொருட்களுக்கு காரணம் என்பதால் புதிதாக வீடு கட்டும் யோகத்தை விட கட்டியை வீட்டை வாங்கக்கூடிய அமைப்பு, பழைய வீட்டை வாங்கி புதுப்பித்துக் கொள்ளக்கூடிய யோகம்தான் உங்களுக்கு பலமாக இருக்கிறது. தற்போது குரு தசையில் ராகு புக்தி நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு செய்வதும் அடுத்து வரக்கூடிய சனி 2-ல் இருக்கக்கூடிய சனி என்ற காரணத்தால் சனி தசை காலத்தில் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது ஆரோக்கியத்திற்கு அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. சனிக்கு பரிகாரமாக ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

என் ஜாதகப்படி நான் சொந்த வீடு கட்டலாமா? அல்லது பழைய குடோனை பழுது பார்க்கலாமா என்று கூறுங்கள்? -விஸ்வநாதன்.

பதில்: மிருகசீரிஷ நட்சத்திரம், ரிஷப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னத்திற்கு 4-ஆம் அதிபதி சந்திரன் உச்சம்பெற்று வலுவாக இருப்பது அற்புதமான அமைப்பு ஆகும். ஜென்ம லக்னத் தில் சுக்கிரன் வலுவாக இருப்பதும் சிறப் பான அமைப்பாகும். சொந்தமாக வீடு கட்டக்கூடிய யோகமானது உங்களுக்கு சிறப்பாக இருக்கிறது. 6-ஆம் அதிபதியான புதன் தசை நடப்பதால் கடன் வாங்கி வீடு கட்டக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. நான்காம் அதிபதி சந்திரன் உச்சம்பெற்று இருப்பதால் உங்களுக்கு அழகிய கலை நயத்துடன் உள்ள வீடு அமையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. பழைய குடோனை பழுது பாரப்பதைவிட புதிதாக வீடு அமையும் யோகமுண்டு. நான்கில் குரு உச்சம் பெற்று இருப்பதால் பிள்ளைகள், நெருங்கியவரின் உதவியோடு உங்களின் எண்ணங்கள் விரைவில் நிறைவேறும்.

என் பேரன் ஊப்ங்ஸ்ரீற்ழ்ண்ஸ்ரீஹப் ஊய்ஞ்ண்ய்ங்ழ்ண்ய்ஞ் முடித்திருக்கிறான். எப்போது வேலை கிடைக்குமென்று கூறுங்கள்? -மீனாட்சி, கோடம்பாக்கம்.

பதில்: புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 10-ஆம் வீட்டில் சுக்கிரன் வலுவாக இருப்பது உடன் செவ்வாய் அமைந்திருப்பது அற்புதமான அமைப்பாகும். நல்ல வேலை உயர் பதவி வைக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தற்போது 8-ல் இருக்கக்கூடிய சனி தசையில் 2-ல் இருக்கக்கூடிய ராகு புக்தி 5-5-2025 முடிய நடக்கிறது. லக்னாதிபதி சூரியனுக்கு சனியும் ராகுவும் பகைவர் என்பதால் 8-ல் அமையப்பெற்ற சனி தசை காலத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பதற்கான யோகம் இல்லை. தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு இருந்துவிட்டால் 16-11-2027 முதல் உங்களுக்கு புதன் தசை நடக்கின்றபொழுது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது சம்பளம் குறைவாக வேலை கிடைத்தாலும் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளில் மேலதிகாரியிடம் வாக்குவாதம் செய்யாமல் பொறுமையோடு இருப்பது ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவது தற்சமயத்திற்கு உத்தமம். சனி- கேது சேர்க்கைபெற்று இருப்பதால் அடிக்கடி உடம்பு பாதிப்புகள் ஏற்படும். சனி தசையில் ராகு புக்தி நடப்பதால் ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

நான் ஆசிரியராக பணிபுரிகிறேன். நான் சொந்தத் தொழில் செய்யலாமா? என்ன தொழில் செய்வது, எப்போது செய்வது என்று கூறுங்கள்? -ரவிச்சந்திரன்.

பதில்: சித்திரை நட்சத்திரம், துலா ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்தவர் உங்களுக்கு, பிறக்கின்றபோதே புதன் ஆட்சி, உச்சம்பெற்ற காரணத்தால் கல்வி துறையில் பணிபுரிந்து உள்ளீர்கள். தற்போது பணி நிறைவுக்கு பிறகு சொந்தத் தொழில் செய்யலாமா என பார்க்கின்றபொழுது ஒரு ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி வலுவாக இருக்கவேண்டும். உங்கள் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி சனி 10-ல் அமைந்திருந்தாலும் சனி வக்ரம் பெற்றிருப்பது அவ்வளவு சிறப்பு எனக் கூறமுடியாது. தற்போது உங்களுக்கு ஆட்சி, உச்சம் பெற்ற புதன் தசை நடப்பதால் பணி நிறைவுக்கு பிறகும் கல்வி சார்ந்த பணிகள், பிறரை வழிநடத்தக்கூடிய பணிகள் பேச்சால் சம்பாதிக்கக்கூடிய பணிகள் செய்வது நல்லது. பணத்தை முதலீடு செய்து தொழில் செய்ய முயற்சிப்பது அவ்வளவு சிறப்பு என ஜாதகரீதியாக கூறமுடியாது.