கேள்வி: என் மகனுக்கு திருமணம் எப்போது செய்யலாம்? நல்ல வேலை எப்போது அமையும்? பிறந்த தேதி 7-7-2001, 5.16 மாலை, ராஜபாளையம், பெயர்- கார்த்திக்.
பதில்: திருமண வாழ்க்கையைப் பற்றி பார்க்கின்றபொழுது ஏழாம் அதிபதியும் சுக்கிரனும் சிறப்பாக இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். திருவோண நட்சத்திரம், மகர ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகன் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி புதன் 7-ல் ஆட்சிபெற்று இருப்பதும், களத்திரகாரகன் சுக்கிரன் 6-ல் ஆட்சி பெற்று இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் மன வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உங்கள் மகனுக்கு உண்டு. ஆனால் உங்கள் மகன் ஜாதகத்தில் 7-ல் ராகு அமையப்பெற்று 10-11-2034 வரை ராகு மகா தசை நடக்கிறது. ஒரு ஆண் ஜாதகம் என்றாலும் சரி- பெண் ஜாதகம் என்றாலும் சரி; 7-ல் பாவ கிரகம் இருந்து குறிப்பாக ராகுவோ, சனியோ இருந்து அந்த தசை நடைபெற்றால் அக்காலங்களில் மணவாழ்க்கை நன்றாக இருக்காது. திருவோணத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 3-ஆவது தசையாக ராகு தசை நடக் கிறது. அதுவும் ஒரு சாதகமில்லாத அமைப்பு. தற்போது உங்கள் மகனுக்கு 22 வயதுதான் ஆகிறது. ஏழில் ராகு இருந்து ராகு தசை நடப்பதால் ராகு தசையில் சுக்கிர புக்தி வருகின்றபோது வேண்டுமென்றால் இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து திருமணம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அப்படி செய்தாலும் ராகு தசை முடியும்வரை மண வாழ்வில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஜாதகருக்கு தற்போது ஏழரைச்சனியின் பாதச் சனி நடப்பதாலும், மூன்றாவது தசையாக ராகு தசை நடப்பதாலும் இன்னும் ஒரு இரண்டு வருடத்திற்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் ஏழரைச்சனி முடிந்தவுடன் 2025 மார்ச்க்கு பிறகு ஒரு நல்ல வேலை வாய்ப்பு அமையும். ராகு தசை தற்போது நடப்பதால் மிகவும் நிதானமாக செயல்படுவது கோபத்தை குறைத் துக்கொள்வது நல்லது. அம்மன் வழிபாடு துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது உத்தமம்.
கேள்வி: 1998-ஆம் ஆண்டு வீட்டு மனை வாங்குவதற்காக என் அம்மா, அப்பாவிடம் ரூபாய் 2 லட்சம் கேட்டேன், சரி என்றார்கள். நான் அட்வான்ஸ் தொகை கொடுத்துவிட்டேன். இடம் ரிஜிஸ்டர் ஆவதற்கு சில நாட்கள்முன்பு அம்மாவிடம் பணம் கேட்டேன், அதற்கு அவர்கள் விடுதலைப் பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்டு வாங்கிக்கொள் என்றார்கள். நெருக்கடியான அந்த நேரத்தில் கையெழுத்துபோட்டு வாங்கிக் கொண்டேன். அந்த பத்திரம் ரெஜிஸ்டர் செய்யப் படவில்லை, ஏழு ஆண்டுகளுக்குமுன்பு என் அப்பா இறந்துவிட்டார். பிறகு சில காரணங் களால் நான் என் அம்மாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டேன். அவர்கள் என் அக்கா, தம்பிகள் யாரையும் என்னிடம் பேச விடவில்லை. நேற்று நண்பர் ஒருவர் உங்கள் அம்மா அவர்கள் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொடுத்துவிட்டார் என்று சொன்னார்கள். அது உண்மையான செய்திதான். ரிஜிஸ்டர் ஆகாத விடுதலை பத்திரத்தை வைத்துகொண்டு எப்படி செய்தார்கள் என புரிய வில்லை. எனக்கு என் வீட்டிலிருந்து சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி. பிறந்த தேதி 29-2-1968, இடம் பாண்டி, நேரம் காலை 9.46 மணி. நன்றி. பெயர் குறிப்பு விரும்பாத வாசகர்.
பதில்: பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தந்தைவழி சொத்து கிடைக்குமா என்று கேள்வி கேட்டு உள்ளீர்கள். ஒருவர் ஜாதகத்தில் தந்தை ஸ்தானம் ஒன்பதாம் பாவம், தந்தைவழி மூதாதையிரை குறிக்கக்கூடிய ஸ்தானம் ஒன்பதுக்கு ஒன்பதாம் வீடான ஐந்தாம் பாவம், ஐந்தாம் வீட்டை பூர்வபுண்ணிய ஸ்தானம் என்றும் கூறலாம். தந்தை, தந்தைவழியில் அனுகூலங்கள் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு 5, 9 பாவங்கள் சிறப்பாக இருக்க வேண்டும். உங்கள் ஜாதகத்தில் ஒன்பதாம் அதிபதி குரு வக்ரகதியில் இருப்பதும், அதிலும் குறிப்பாக சூரியனுக்கு 7-ல் வக்ரம் பெற்றிருப்பது சாதகமற்ற அமைப்பாகும். ஒரு கிரகம் வக்ரம் பெற்றிருந்தால் அந்த கிரகத்தின் பாவப்பலனும், காரக பலனும் பாதிப்படுகிறது. அடுத்து தந்தை காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் அவரே உங்கள் ஜாதகத்தில் 5-ஆம் அதிபதியாகி தனக்கு பகை நட்சத்திரமான (சதயம்) ராகு நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். இது மிகவும் சாதகமற்ற அமைப்பாகும். அடுத்து சூரியன் அமைந்த வீடு பாதகஸ்தானம் ஆகும். 5, 9 பாவாதிபதிகள் பலவீனம் பெற்று சூரியனும் பகை சாரம் பெற்று இருப்பதால் தந்தைவழியில் உங்களுக்கு அனுகூலங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஜோதிட ரீதியாக மிக மிக குறைவு. தந்தைவழியில் உங்களுக்கு கிடைப்பதை வாங்கிக்கொள்வது, சமாதானமாக செல்வது தான் நல்லது. தாய் காரகன், தாய் ஸ்தானாதிபதி சந்திரனும் உங்கள் ஜாதகத் தில் பாதகஸ்தானத்தில் உள்ளார். சந்திரன் குரு சாரம் பெற்று பாவகரீதியாக 12-ல் உள்ளதால் குடும்பத் தில் வயது மூத்த பெண்கள் மூலமாக ஒரு சமாதான பேச்சுவார்த்தை நடத்தி னால் நல்ல ஆதரவு கிடைக் கும். நீங்கள் குல தெய்வத்தை வேண்டிக் கொள்வது நல்லது. பதிவு செய்யப்படாத விடுதலை பத்திரத்தை பற்றி நீங்கள் சட்ட ஆலோசகரை ஆலோசிக்கவும்.
கேள்வி: ஐயா 2020-ல் சொந்த இடத்தில் ஒரு மழலையர் பள்ளி ஆரம்பித் தோம். அட்மிஷன் குறைந்த அளவில் உள்ளது. வளர்ச்சி அடைய வாய்ப்பு எப்படியுள்ளது. உங்கள் ஆலோச னையை சொல்லும்படி கேட்டுக்கொள்கி றேன். நன்றி. பிறந்த தேதி 4-7-1976, இடம் பாண்டி, நேரம் மாலை 2.42 மணிக்கு ஊர், பெயர் குறிப்பு வேண்டாம். நன்றி.
பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, துலா லக்னத்தில் பிறந்த வர் உங்களுக்கு, கல்வி காரகன் புதன் ஆட்சிபெற்று பாக்கிய ஸ்தானமான ஒன்பதில் இருப்பது நல்ல அமைப்பாகும். அக்கிரகமே ராசிக்கு பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று இருப்பது பத்திர யோகத்தை ஏற்படுத்தும் அமைப்பு ஆகும். புதன் ஒரு ஜாதகத்தில் ராசி அல்லது லக்னத்திற்கு 10-ல் வலுவாக இருந்தால் புதன் சார்ந்த தொழில்செய்வது கல்வித் துறையில் ஈடுபடுவது நல்ல பலனை தரும். உங்கள் ஜாதகத்தில் புதன் பலமாக இருப்பது நல்ல அமைப்பு என்றாலும் தற்சமயம் நடக்கும் தசையான குரு தசை என்பது துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு அவ்வளவு சிறப்பு அல்ல. அடுத்த உங்களுக்கு சனி மகாதசை நடக்க இருக் கிறது. அடுத்து 4-3-2024 முதல் நடைபெற இருக்கக்கூடிய சனி மகா தசை உங்கள் வாழ் வில் மிகப் பெரிய ஒரு முன்னேற்றத்தை தரும். சனி தசை தொடங்கினாலும் சனி தசை சுய புத்தி காலங் கள் சற்று மந்தமாக இருந்தாலும் சுயபுத்திக்குப் பிறகு வரக்கூடிய காலங்கள்தான் ஒரு மிகப் பெரிய அளவில் ஒரு வளர்ச்சியை தருவதற்கான ஒரு அதிர்ஷ்டங்கள் ஜாதகரீதியாக உண்டு. ஒரு ஜாதகத்தில் பாவ கிரகத்தின் தசை நடை பெறுகின்றபொழுது சுய புக்தி காலங்கள் நற் பலனை தரக்கூடாது. அப்படி தந்தால் மற்ற புக்தி கள் நல்லா இருக்காது. தசை புக்திரீதியாக நான்கு வருடம் கழித்து நல்ல ஒரு அமைப்பானது உங்க ளுக்கு இருக்கிறது. குருபகவான் 8-ல் சஞ்சரிப்ப தால் பொருளாதாரரீதியாக ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் பொறுமையாக செயல்படுவது நல்லது.