ஏழாம் இடத்தில் புதன் இருந்தால் ஜாதகரின் வாழ்க்கைத் துணை நன்கு கற்றறிந்தவராக இருப்பார். தோற்றத் தில் அழகு மிளிரும். செல்வ நிலையில் உயர்ந்தவராய் இருப்பார். ஆனால், நல்ல பரம்பரையில் இல்லாதவராய் இருப்பார். எதற்கெடுத்தாலும் சண்டையிடு வார். ஜாதகர் தானே ஒரு பெரிய ஆளாகி இருப்பார். (சாராவளி).
களத்திர பாவத்திலுள்ள புதனை ஒரு சுப கிரகம் பார்த்தால் ஜாதகர் பெண்களுடன் பழகுவதில் கூச்ச சுபாவம் உடையவராய் இருப்பார். அந்த புதன் ஒரு சுப ராசியில் இருப்பாராகில், மிக உயர்ந்த கௌரவம்மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார். (மனசாகிரி).
ஜாதகர் தன் தாயிடமிருந்து மிகுந்த அன்பையும், சந்தோஷத்தையும் பெறுவார். நல்ல வாகனயோகம் உண்டு. (குதிரை). மதம், பக்தி ஆகியவற்றில் மிக்க ஆர்வமுடையவராய் இருப்பார். பரந்த மனப்பான்மை உடையவராய் இருப்பார். உலகளாவிய புகழ், மதிப்பு, கௌரவம் உடையவராகவும், அரசால் மதிக்கப்படுபவராகவும் இருப்பார்.
அதுவே, ஒரு சுபரோடு இணைந்திருந் தால் ஜாதகர் நவீன, உலகத்தரம் வாய்ந்த வாகனங்களை உடையவராய் இருப்பார். நல்ல மனைவி அமைவாள். அசைவ உணவை மிக விரும்பி உண்பார். (பிருகு சூத்திரம்).
7-ஆம் இடத்தில் புதன் இறங்கு முகம் இல்லாமல் இருப்பின், மிக அழகான மனைவி அமைவாள். அவளது உடல் தங்க மென ஜொலிக்கும். ஜாதகர் உற்பத்தித் திறன் அற்றவராக (மலட்டுத்தன்மை) தன் ஜோடியை திருப்திப்படுத்த முடியாத வராக இருப்பார். ஆனால், செல்வ நிலையில் நிகரற்றவராக இருப்பார். புதன் அஸ்தமன நிலையில் மேற்சொன்ன பலன் களை எதிர்பார்க்க முடியாது. (சமத்கார சிந்தாமணி).
இதற்க
ஏழாம் இடத்தில் புதன் இருந்தால் ஜாதகரின் வாழ்க்கைத் துணை நன்கு கற்றறிந்தவராக இருப்பார். தோற்றத் தில் அழகு மிளிரும். செல்வ நிலையில் உயர்ந்தவராய் இருப்பார். ஆனால், நல்ல பரம்பரையில் இல்லாதவராய் இருப்பார். எதற்கெடுத்தாலும் சண்டையிடு வார். ஜாதகர் தானே ஒரு பெரிய ஆளாகி இருப்பார். (சாராவளி).
களத்திர பாவத்திலுள்ள புதனை ஒரு சுப கிரகம் பார்த்தால் ஜாதகர் பெண்களுடன் பழகுவதில் கூச்ச சுபாவம் உடையவராய் இருப்பார். அந்த புதன் ஒரு சுப ராசியில் இருப்பாராகில், மிக உயர்ந்த கௌரவம்மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார். (மனசாகிரி).
ஜாதகர் தன் தாயிடமிருந்து மிகுந்த அன்பையும், சந்தோஷத்தையும் பெறுவார். நல்ல வாகனயோகம் உண்டு. (குதிரை). மதம், பக்தி ஆகியவற்றில் மிக்க ஆர்வமுடையவராய் இருப்பார். பரந்த மனப்பான்மை உடையவராய் இருப்பார். உலகளாவிய புகழ், மதிப்பு, கௌரவம் உடையவராகவும், அரசால் மதிக்கப்படுபவராகவும் இருப்பார்.
அதுவே, ஒரு சுபரோடு இணைந்திருந் தால் ஜாதகர் நவீன, உலகத்தரம் வாய்ந்த வாகனங்களை உடையவராய் இருப்பார். நல்ல மனைவி அமைவாள். அசைவ உணவை மிக விரும்பி உண்பார். (பிருகு சூத்திரம்).
7-ஆம் இடத்தில் புதன் இறங்கு முகம் இல்லாமல் இருப்பின், மிக அழகான மனைவி அமைவாள். அவளது உடல் தங்க மென ஜொலிக்கும். ஜாதகர் உற்பத்தித் திறன் அற்றவராக (மலட்டுத்தன்மை) தன் ஜோடியை திருப்திப்படுத்த முடியாத வராக இருப்பார். ஆனால், செல்வ நிலையில் நிகரற்றவராக இருப்பார். புதன் அஸ்தமன நிலையில் மேற்சொன்ன பலன் களை எதிர்பார்க்க முடியாது. (சமத்கார சிந்தாமணி).
இதற்கு மாறுபட்ட சில கருத்துகள், "ஜாதக சாரதீபா' என்ற நூலில் விளக்கப் பட்டுள்ளது. 7-ல் புதன் இருப்பின் மன்மத லீலையில் மிகவும் வல்லவராய் இருப்பார். செல்வம் மிக்கவராக இருப்பார். நற்குணம் உடையவராகவும், வளவள என்று அதிகம் பேசக்கூடியவராகவும் இருப்பார். அவருடைய மனைவி நேர்த்தியாக உடை அணிபவராகவும், அழகுப் பதுமையாகவும் இருப்பார். ஜாதகர் தன்னைவிட வசதி குறைந்த குடும்பத்திலிருந்து, ஏழ்மையான பெண்ணை மணப்பார். இந்த நூலில் புதனுடன் மற்ற கிரக இணைவுகளுக்கான பலன்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
புதன் + குரு = ஒரே தாரம் உடையவ ராக இருப்பார். அவர் தரமானவராக, நற்குணம் உடையவராக இருப்பார். அனு கூலமான மனைவியை உடையவராக இருப்பார். சொந்த சமூகத்தவரின் முழு ஆதரவு கிட்டும்.
புதன் + சூரியன் = பயமற்ற, மிகுந்த கோப குணமுள்ள வராகவும், பொறாமை குணம் அற்றவராகவும் இருப்பார்.
புதன் + சந்திரன் = ஜாதகர் ஒரு அரசராகவோ அதற்கு நிகரானவராகவோ இருப்பார். நல்ல கவிஞராக இருப் பார். அரசரால் கௌரவிக்கப்படுபவராகவும் இருப்பார்.
புதன் + செவ்வாய் = ஜாதகரின் முதல் மனைவி மரணம் எய்துவாள். ஜாதகர் அலைந்து திரிபவராகவும், எதற்கெடுத்தாலும் வாதாடுபவராகவும் இருப்பார்.
புதன்+ சுக்கிரன்= ஜாதகர் அரசனுக்கு அமைச்சராக இருப்பார். அனுகூலமான சந்தோஷங்களை அனுபவிப் பார். அவரது உடற்பாங்கு பெண்தன்மை உடையதாக இருக்கும்.
"பாவார்த்த ரத்னாகரா'வில், ஜாதகர் பிற பெண்களை விரும்பும் குணமுடையவராக இருப்பார் என குறிப்பிடப் பட்டுள்ளது.
"கேத் கவுதுக்' என்ற பெர்சியன் நூலில் மேலே சொல்லப் பட்ட அனைத்துப் பலன்களும் சொல்லப்பட்டுள்ளன. ஜாதகர் உண்மையானவராகவும், செல்வந்தராகவும், இரக்கமுள்ளவராகவும், அழகானவராகவும், மிக்க புத்திசாலியாகவும், நற்குணம் உடையவராகவும், ஒரு மந்திரியாகவும் இருப்பார்.
"ஜாதகாபரணம்' என்ற நூலில், 7-ல் புதன் இருந்தால் ஜாதகர் நற்குணமுள்ளவராகவும், செல்வந்தராகவும், உண்மை விளம்பியாகவும், நல்ல மனைவி, மக்களை யும் பொன்னையும் உடைய வராகவும் இருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாதகரின் மனைவி இளம் வயதுடையவராகவும், ஓரளவு கருப்பு நிறமுடையவராகவும் இருப்பார்.
7-ஆமதிபதி புதனின் பார்வை பெற்றோ அல்லது அதன் பிரிவுகளில் இருந் தாலோ ஜாதகருக்கு அமையும் மனைவி பரத்தையாக (உண்மை யில்லாதவளாக, துரோகி யாக, ஒழுக்கமற்றவளாக) இருப் பாள் என்று "சம்புஹோரா பிரகாசிகா'வில் குறிப்பிடப்பட் டுள்ளது.
"சர்வார்த்த சிந்தாமணி'யில், 7-ல் புதன் இருப்பின் ஜாதகர் பிற பெண்ணுடன் தகாத உறவில் இருப்பார் என்றும், புதன் அசுபரோடு இணைந் திருக்க, கிரகண அல்லது பாபகர்த்தாரியில் இருக்க அல்லது அசுபரால் பார்க்கப்பட ஜாதகரின் மனைவியால் அவரது குடும்பம் அழியும்.
குடும்ப பாரம்பரியம் அழியும் வகையில் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவாள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே பலன்களே "ஜாதக பாரி ஜாதம்', "ஜாதக ஜம்பூயாதீயம்' ஆகிய நூல்களிலும் குறிப்பிடப் பட்டுள்ளது.
புதன் பலம்மிக்க 7-ஆமதி பதியாகி நட்பு வீட்டில், உச்ச வீட்டில் அல்லது கோபுராம்சம் போன்ற சிறப்பான அம்சங் களில் இருக்க, ஜாதகரின் மனைவி விரதமிருந்து தூய வளாக இருப்பாள். அவள் வசதி வாய்ப்புகளுடன், நற்குண முள்ள புத்திரர்களை உடையவளாகவும் இருப்பாள்.
"ஜாதக பாரிஜாத'த்தில் ஜாதகரின் மனைவிக்கு நற்குணமுள்ள புத்திரர்கள் இருப்பர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஜாதக தத்துவா' (ப்ரகிரண தத்துவா, சப்தம விவேகா) ஆகிய நூல்களில் புதன் 7 அல்லது 12-ஆம் இடங்களில் இருந்தால் ஜாதகர் வேசிகளுடன் தொடர்பில் இருப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதன் 7-ல் இருந்தால் ஜாதகர் ஒழுக்கக் கேடுள்ளவர். ஊதாரி மற்றும் நன்றி மறந்த வராய் இருப்பார்.
குருவின் நவாம்சத்தில் 7-ஆம் வீட்டில் புதன் இருக்க, ஜாதகருக்கு ஒரு திருமணம் மட்டுமே ஏற்படும்.
காரகாம்சத்திலிருந்து 7-ல் புதன் இருக்க, ஜாதகரின் மனைவி சகலகலாவல்லியாக இருப்பார்.
7-ல் புதன், சனி இணைவுள்ள ஜாதகருக்கு விதவையுடன் திருமணம் நடக்கும்.
சுக்கிரன், புதன் இணைவு களத்திர இழப்பை குறிகாட்டும்.
ஜாதகர் பல சந்தோஷங்களை அனுபவிப்பார். கற்புள்ள மனைவியை உடையவராக இருப்பார். ஆழமான ஆசைகள் இருக்காது. நவீனமானவராகவும், பிறருக்கு உதவக்கூடியவராகவும் ஜாதகர் விளங்குவார். (ஹோரா ரத்தினம்).
7-ல் புதன் உள்ள ஜாதகர் எது சரியான செயல்? எது தவறான செயல் என்பதை அறிந்தவராக இருப்பார். தாராள மனமுடைய, பெரும் புகழுடையவராகவும் இருப்பார். (ஹோரா சாரா).
அனைத்துமறிந்த அறிவாளியாக, தன்னை எப்போதும் அலங்கரித்துக் கொள்ளும் ஆசை, ஆர்வம் உடையவராக இருப்பார். இவரது மனைவி கீழ்சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பார். பிறரிடையே குழப்பங்களை ஏற்படுத்துவதில் வல்லவர். பல வகையான சிந்தனைகளை அல்லது எண்ண ஓட்டங்களை உடையவராக இருப்பார். (பூர்வ பராசரியம்).
7-ல் உள்ள புதனைப்பற்றி மேலும் பல கருத்துகள் "ஜாதக ஜம்பூநாதீயம்' என்ற பண்டைய நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது.
7-ல் அஸ்தமனமான புதன் இருக்க, ஜாதகரின் மனைவி நிலையற்ற மனமுடையவராகவும், எதிலும் ஒரு தீர்மானத் துக்கு வரமுடியாதவராகவும், உணர்வில்லாத வராகவும், ஏமாற்றுக்காரியாகவும் இருப்பார். புதன் சுபராகி 7-ல் இருந்தால் அல்லது சுபரின் தாக்கம் பெற்றிருந்தால் ஜாதகரின் மனைவி மிக்க அழகியாக, நல்ல குடும்பத்தில் பிறந்தவளாக, போற்றதக்க, புகழத்தக்க குணமுடைய மற்றும் காதலுள்ளவளாக இருப்பாள். ஜாதகர் பல பெண்களுடன் தொடர்புடையவராக இருப்பார்.
சூரியன் + புதன் = ஜாதகர் தன் முயற்சிகளில் தடைகளை சந்தித்து, தன் மேலான நம்பகத் தன்மையைக் கெடுத்துக்கொள்வார். சந்திரன்+ புதன் = ஜாதகர் கவிஞராக, வீரம் மிக்கவராக மற்றும் ஆள்பவராக இருப்பார். செவ்வாய் + புதன் = ஜாதகர் இராணுவம், ஆயுதம், போர்த் தளவாடக் கிடங்கு ஆகிய வற்றின்மூலமாக தொல்லைகளை அனுபவிப்பார். மிக மோசமான காரியங் களை செய்யக்கூடியவராகவும், சந்தோஷமற்றவராகவும் விளங்குவார்.
சனி + புதன் = ஜாதகரும் அவரது மனைவியும் ஊமையாக இருப்பர்.
வளர்பிறைச் சந்திரன் + புதன் = நல்ல குழந்தைகள் அமைவர்.
7-ல் புதன் சுபராக இருந்தால் ஜாதகர் அழகாயிருப்பார். இளம் பெண்களிடம் பழகுவதில் ஆர்வமுள்ளவர். நல்ல மகனைப் பெற்றெடுப்பார். உணர்வுப் பூர்வமான சந்தோஷங்களில் ஆர்வம் குறைவாக இருக்கும். ஆண்மைக் குறைவும் இருக்கும். பெண்கள் மூலமாக சம்பாதித்த செல்வத்தோடு வாழ்வார் என்று "மார்கண்டேய ஜ்யோதிஷா' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்: 97891 01742