பெயர் சூட்டுதல் என்பது, பிறந்த குழந்தைக்கு முதன்முதலில் நடத்தப்படும் சமயச் சடங்காகும். இச் சடங்கு சமூகத்திற்கு சமூகம் வேறுபடுகிறது. தற்காலத்தில் பெயர்சூட்டுதல் என்பது விழாவாக நடத்தப்படுகிறது. இந்தச் சடங்கினை நாம கரணம் என்று வடமொழி வழக்கில் அழைக்கின்றனர்.

ஒருவருக்கு சூட்டப் படும் பெயருக்கேற்பவே அவர்களுடைய வாழ்க்கை அமையுமென்பது பலரது அனுபவ உண்மை. குழந்தை பிறந்தவுடன் பெயர் சூட்ட விரும்பும் பெற்றோர் கள், பெயருக்கேற்றாற் போல் அக்குழந்தை திகழ வேண்டுமென்ற எண்ணத்தில் பெயர் வைக்கவேண்டும். பலர் தங்களுடைய குழந்தை களுக்கு அழகிய, ஃபேன்சி யான பெயர்கள் என சில மோசமான பெயர்களைச் சூட்டிவிடுகிறார்கள். சிலர் பொருள் தெரியாத பெயர்களையும் சூட்டுகிறார்கள். இதனால் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பலர் உணர்வதில்லை. பெயர்களை உச்சரிக்கும்போது வெளிப்படும் காந்த அதிர்வலைகள் குழந்தையின் ஜாதகரீதியான குறைபாடுகளை அகற்றும்படியாக இருக்கவேண்டும்.

பெயரைத் தேர்வுசெய்யும்போது பின்பற்றவேண்டியவை தந்தைக்கும் மகனுக்கும், தாய்க்கும் மகளுக்கும் ஒரே பெயரை வைக்கக்கூடாது.

ஆண் குழந்தைகளுக்கு தாத்தா, கொள்ளுத் தாத்தா பெயர்களையும், பெண் குழந்தைகளுக்கு பாட்டி, கொள்ளுப் பாட்டியின் பெயர்களையும் வைக்கலாம்.

Advertisment

குழந்தையின் பெயருடன் தந்தை பெயர், தாய் பெயர், கோத்திரப் பெயர், வம்சப் பெயர், குலத்தின் பெயரைச் சேர்த்துக்கொள்ளலாம். அரசாங்கத்தால் கொடுக் கப்படும் பட்டப் பெயர்களை அசல் பெயருடன் சேர்த்துக் கொள்ளலாம்.

அவரவர்களின் குலதேவதை, இஷ்ட தேவதைகளின் பெயர்களைச் சூட்டலாம். அத்துடன் சிறிது மாற்றம்செய்து சூட்டுவது மிகச் சிறப்பு.

ஜென்ம நட்சத்திரம், ஜென்ம நட்சத்திரத்தின் அதிதேவதை பெயர்களை ஆண் குழந்தைகளுக்கு பெயரின் பகுதியாக சேர்க்கலாம். பெண் குழந்தைகளுக்கு நட்சத்திரப் பெயர்களை வைப்பது சிறப் பல்ல.

Advertisment

நட்சத்திரம், மரம், நதி, மலை, பறவை, பாம்பு, பயங்கரமான பெயர்கள் உள்ளவர்களுக்குத் திருமணத் தடை, முன்னேற்றக் குறைவு மிகுதியாக இருக்கும்.

cc

ஜென்ம நட்சத்திரத்திற்குரிய நாம எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர்களை சூட்டலாம். இந்த நட்சத்திர நாம எழுத்து களில் பெயர் வைக்கும் வழக்கம் வேதகாலத்தில் இல்லை; பிற்காலத்தில் ஏற்பட்டதாகும்.

ஒற்றைப் பெயர் வைப்பதைத் தவிர்த்து இரட்டைப் பெயர்களை வைப்பது நல்லது. இரட் டைப் பெயர் வைத்திருப்ப வர்கள் எளிதில் வாழ்க்கையில் வெற்றியடை கிறார்கள். உதாரணமாக உமா என்பது ஒற்றைப் பெயர். உமா மகேஸ்வரி என்பது இரட்டைப் பெயர்.

சமூகத்தில் பொதுவாக பலருக்கும் வைக்கப்பட்டுள்ள பெயர்கள், அரசியல் பிரமுகர்களின் பெயர்களைத் தவிர்த்து தனித்தன்மையான பெயர்களை வைப்பது நல்லது.

உச்சரிக்கமுடியாத பெயர்களை குழந்தை களுக்கு சூட்டக்கூடாது. குழந்தைக்கு சூட்டிய பெயரை எப்படி எழுதுகிறோமோ அப்படியே பெயரின் எழுத்து வடிவம் உருக்குலையாமல் உச்சரிக்கத்தக்க பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எழுத்து வடிவம் ஒருவிதமாகவும், உச்சரிப்பு வேறுவிதமாகவும் அமைவது நல்லதல்ல.

குழந்தையின் முழுப்பெயரையும் கூப்பிடவேண்டும் சுருக்கி செல்லப்பெயராக மாற்றிக் கூப்பிடக்கூடாது.

குழந்தைகளுக்கு சூட்டும் பெயர்கள் அர்த்தமுள்ளவையாக இருக்கவேண்டும். அர்த்தமில்லாத, அர்த்தம் தெரியாத பெயர்களை சூட்டக்கூடாது. அதேநேரத்தில் காலச்சூழலுக்குத் தகுந்தமாதிரியான பெயர்களை வைத்துக்கொள்வதும் சிறந்தது.

பெயர்கள் கூப்பிடுவதற்கு சுகமானதாகவும், கொடுமையில்லாததாகவும், நல்ல அர்த்தமுள்ளதாகவும், மனம் லயிக்கும்படி பிடித்தமானதாகவும், மங்களகரமாகவும், தீர்க்க எழுத்துகளை உடையதாகவும், ஆசிர்வாதத்தைக் கொடுக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.

மத நம்பிக்கையுடைய பெற்றோர்கள், அவர் களுடைய மத நூல்களில் காணப்படும் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு சூட்டலாம். இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இராமாயணம், மகாபாரதம், இதிகாசங்கள், லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் முதலிய ஸ்தோத்திரங்களில் வரும் பெயர்களைச் சூட்டலாம். கிறிஸ்துவர்கள் பைபிளில் வரும் பெயர்களையும், இஸ்லாமியர்கள் குரானில் வரும் பெயர்களையும் குழந்தைகளுக்கு சூட்டலாம்.

ஜோதிடரீதியாக, பெயரிலுள்ள எழுத்துகளில் சனி, ராகு- கேதுவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கக்கூடாது.

இவ்வாறு தேர்வுசெய்த பெயர்களை அவரவர் குல, சமூகத்திற்குள்ள பழக்க வழக்கங்களின்படி நாட்களைத் தேர்வுசெய்து பெயர் சூட்டலாம். பொதுவாக குழந்தை பிறந்த 11, 16, 30-ஆம் நாளில் பெயர் சூட்டும்போது வாரம், திதி, நட்சத்திரம் பார்க்கவேண்டிய அவசியமில்லை. நல்ல லக்னத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டால் போதும். மேற்கண்ட நாட்களில் சூட்ட முடியாமல் போனால், 16 நாட்களுக்குப்பிறகு ஏதாவதொரு சுபதினத்தில் பெயர் சூட்டலாம்.

பெயர் சூட்டுவதற்கு உகந்த நட்சத்திரங்கள்: அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிடம். புனர்பூசம். பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், ரேவதி.

திதி: துவிதியை, திரிதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி.

வாரம்: புதன், வியாழன், வெள்ளி.

லக்னம்: ஸ்திர லக்னங்களான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை சிறப்பு.

பெயர் சூட்டும் விழாவை காலையில், உச்சிக் காலத்திற்குமுன்பே செய்யவேண்டும் நண்பகலுக்குப்பிறகு செய்யக்கூடாது.

முகூர்த்த லக்னத்திற்கு கேந்திர திரிகோணங்களில் குரு, சுக்கிரன், புதன் போன்ற சுபகிரகங்கள் நின்றால் நல்லது. அதற்கு எட்டாமிடத்தில் எந்த கிரகமும் இல்லாமல் சுத்தமாக இருக்கவேண்டும்.

சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு ஆண் குழந்தையின் பெற்றோர்கள் என்னை சந்தித்தனர். 8-12-2021 அன்று அதிகாலை 5.25-க்குப் பிறந்த குழந்தை. குழந்தையின் பெயர் மோகித். (ஙர்ட்ண்ற். இ). பெயரெண் 5. பிரமிட் எண் 4. பிறவி எண் 8. விதி எண் 16 = 7.

பிறவி எண்ணும் விதி எண்ணும் சனி, கேதுவின் ஆதிக்கத்தில் உள்ளன. பெயரெண் அஷ்டமாதிபதி புதனின் ஆதிக்கத்தில் உள்ளது. விருச்சிக லக்னம். நடப்பு சந்திர தசை, குரு புக்தி. செவ்வாய், ராகு- கேது அச்சைவிட்டு விலகியதால் முழுமையான காலசர்ப்ப தோஷமாகக் கருதமுடியாது. ஆனால் காலசர்ப்ப தோஷ பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும்.

பாதகாதிபதி சந்திரன் சனியுடன் 3-ஆமிடத்தில் (8-க்கு 8) சனியுடன் நின்று தசை நடத்துகிறது. 3-ல் நின்று 9-ஆமிடத்தை- பாதக ஸ்தானத்தை சனியும் சந்திரனும் பார்க்கின்றன. லக்னத்தில் 1, 6-க்குடைய செவ்வாய், 8, 11-ஆமதிபதி புதன், சூரியன், கேது சேர்க்கையென லக்னமும் வலிமை குறைந்து காணப்பட்டது. லக்னத்தில் 6, 8-க்குடையவர் சேர்க்கை என்பதால் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கடுமையான ஆரோக்கியக் குறை, தாய்- தந்தை கருத்து வேறுபாடு, கூட்டுக் குடும்பத்தில் பிரிவினை, வம்பு, வழக்கு என அசாதாரண சூழ்நிலையில் வந்தார்கள்.

அஷ்டமாதிபதி புதனின் ஆதிக்கத்தி லுள்ள பெயரை 5-ஆமதிபதி குருவின் 3-ஆம் எண்ணின் ஆதிக்கம் வரும்படி பெயர் மாற்றியமைத்துக் கொடுக்கப்பட்டது.

பெயரின் முதல் எழுத்து ங ராகு வின் ஆதிக்கம்; இரண்டாம் எழுத்து ர் கேதுவின் ஆதிக்கம். பெயரின் கடைசி எழுத்து ற் ராகுவின் ஆதிக்கம். கால சர்ப்ப தோஷ அமைப்பைப்பெற்ற ஒரு குழந்தைக்கு ராகு- கேதுவின் ஆதிக்கம் அதிகம்பெற்ற எண்களில் பெயர் அமைந்தது. பாதகாதிபதி தசை, அஷ்டமாதிபதி ஆதிக்கப் பெயர் என குழந்தைக்கு ஆரோக்கியக் கேடு மிகுதியாவதற்குக் காரணமாக இருந்தன. குழந்தையின் பெயரை மாற்றி உச்சரிக்கும்போது நிச்சயம் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

இதுபோன்ற பெயர்களை அவரசத்தில் சூட்டிய பலர் பள்ளி, கல்லுரி காலகட்டத்தில் பெயரை மாற்றுவதற்கான முழு முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதற்காக அதிகமாக பொருட் செலவும் உடலுழைப்பும் செய்ய நேரிட்டாலும், சகித்துக்கொண்டு பெயரை மாற்றிக்கொள்கிறார்கள்.

இதுபோன்ற இன்னல்களைத் தவிர்க்க பெயர் தேர்வு செய்யும்போது ஜனன ஜாதகத்துடன் பிறவி எண், விதி எண்ணை ஒப்பிட்டு பெயர்வைப்பது சாலச் சிறந்தது.

செல்: 98652 20406