ஜோதிடம் பார்க்க வரு பவர்கள் பல்வேறு கேள்விகள் கேட்டாலும், அதில் முக்கிய கேள்வியாக இருப்பது "எனக்கு குழந்தை பாக்கி யம் உண்டா? எப்போது கிடைக்கும்?' என்பது தான். அதனைப் பற்றி சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

பொதுவாக குழந்தை பாக்கியத்தைப் பற்றி பார்க்கும்பொழுது நிறைய விஷயங்களைக் கருத்தில்கொண்டு பார்க்கவேண்டும். ஒரு கிரகம் அமைந்திருக்கும் நிலையை மட்டும் வைத்து பொதுவாகப் பலனைக் கூறிவிடக் கூடாது.

ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டால், அதில் குழந்தை பாக்கியத்தை பற்றி பார்க்கும் பொழுது குரு புத்திர காரகன் ஆவார். ஆண் ஜாதகத்திலும், பெண் ஜாதகத்திலும் குரு பலமாக இருந்தால் எளிதில் குழந்தை பிறக் கும் யோகம் உண்டாகிறது.

Advertisment

ccc

அடுத்து ஆண் ஜாதகத்தில் 5-ஆம் வீட்டைக்கொண்டும், பெண் ஜாதகத்தில் 5 மற்றும் 9-ஆம் வீட்டைக்கொண்டும் பார்க்கவேண்டும். ஒரு ஜாதகத்தில் ஐந்தாமதி பதி ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் சிறப்பான குழந்தை பாக்கியம் உண்டாகிறது. ஐந்தில், ஆண் கிரகங்கள் என வர்ணிக்கப்படும் குரு, சூரியன், செவ்வாய் அமையப்பெற்றாலோ அல்லது குரு, சூரியன், செவ்வாய் ஆகியவை 5-ஆம் அதிபதியுடன் இணைந்திருந்தாலோ, சுப நட்சத்திரத்தில் அமைந்திருந்தாலோ அந்த ஜாதகருக்கு ஆண் குழந்தை யோகம் உண்டா கும். ஐந்தாம் வீட்டில் பெண் கிரகங்களான சுக்கிரன், சந்திரன் அமைந்திருந்தால் பெண் குழந்தை யோகம் உண்டாகும். இவை பொதுவான விஷயங்கள்.

நுணுக்கமான விஷயங்கள் பற்றி பார்க்கும் பொழுது 5-ல் பாவ கிரகங்கள் அமையப் பெற்றால்- குறிப்பாக சனி, ராகு, கேது அமைந் தால் குழந்தை பாக்கியம் இல்லையென சிலர் கூறிவிடுகிறார்கள். அவ்வாறு மேலோட்ட மாகக் கூறக்கூடாது. ஐந்தில் சனி, ராகு, கேது இருந்தாலும், அவை பாவகத்தில் எப்படி இருக்கின்றன என பார்க்கவேண்டும். ஒருசிலர் ஜாதகத்தில் ஐந்தில் அமையும் கிரகங்கள் பாவகத்தில் அடுத்த கட்டத்திற்கோ அல்லது முன் கட்டத்திற்கோ சென்றுவிடும். இது போன்ற நிலையில் ராசிக் கட்டத்தை மட்டும் வைத்துக் கூறும் பலன் தவறாகிவிடும்.

5-ல் சனி இருந்தால் தாமதம் என கூறலாமே தவிர, குழந்தையை இல்லையென கூறமுடி யாது. சிலருக்கு சனி லக்னாதிபதியாகவோ நட்சத்திராதிபதியாகவோ அல்லது ராசி யாதிபதியாகவோ இருந்தால் கெடுதியைச் செய்யாது. அதுபோல சனி லக்னத்திற்கு நட்பு கிரகமாக இருந்தாலும் கெடுதியைச் செய்யாது.

ஐந்தில் ராகு- கேது இருந்தால் புத்திர தோஷம் என்ற கருத்து இருந்தாலும், குரு போன்ற சுபகிரகப் பார்வைபெற்றால் கெடுதியை ஏற்படுத்துவதில்லை. குறிப்பாக ஆண் ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் ஐந்தாம் வீடு குழந்தை பாக்கியத்தை குறிக்கும் ஸ்தானம் என்றாலும், மூன்றாம் வீட்டையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஆண் ஜாதகத் தில் மூன்றாம் வீடு ஆண்மை, வீரியத்தைக் குறிக்கும் ஸ்தானமாகும். ஆண் ஜாதகத்தில் மூன்றாமதிபதி ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் நற்பலன் உண்டாகும். அதுவே மூன்றாமதிபதி நீசம் பெற்றாலும்- குறிப்பாக வக்ரகதியில் இருந்தாலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மூன்றாமதிபதி பலவீனம் அடையும்பொழுது அந்த ஆணுக்கு குழந்தை பாக்கியம் உண்டாவதில் இடையூறு, தாம்பத்திய வாழ்வில் நாட்டமில்லாத நிலை ஏற்படுகிறது.

புத்திரகாரகன் குரு, ஒரு ஆண் ஜாதகத்தில் வலுவாக இருந்துவிட்டால் குழந்தை பாக்கியம் சிறப்பாக அமைந்துவிடுகிறது. குரு சுபகிரக நட்சத்திரத்தில் இருந்தால் எளிதில் குழந்தை பாக்கியம் ஏற்படுகிறது. குரு ராகு- கேது நட்சத்திரத்தில் இருந்தால் குழந்தை பாக்கியம் பெற தாமதம் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக குரு வக்ரம் பெற்ற ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் இடையூறு உண்டாகும்.

ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன் ஆகிய கிரக நிலையும் கருத்தில் கொள்ளவேண்டும். சூரியன் நல்ல நிலையில் இருந்தால் எளிதில் குழந்தை பாக்கியம் ஏற்படும். அதுவே சூரியன் ராகு நட்சத்திரத்தில் இருந்தாலும், சூரியனுக்கு முன்பு ராகு அல்லது கேது இருந்தாலும் குழந்தை பாக்கியம் கிட்டுவதில் இடையூறுகள் ஏற்படுகின்றன.

பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஐந்தாம் வீடு, புத்திரகாரகன் குரு மட்டுமில்லாமல் செவ்வாயையும் பார்க்கவேண்டும். பெண்களுக்கு மிக முக்கிய கிரகமே செவ்வாய் தான். செவ்வாய் பெண்ணின் ஜாதகத்தில் ஆட்சி, உச்சம் பெற்றாலும், நட்பு நட்சத்திரத் தில் நட்பு கிரக சேர்க்கைப் பெற்றாலும் சிறப் பான மணவாழ்க்கை ஏற்படுவது மட்டுமல் லாமல், எளிதில் குழந்தை பாக்கியமும் கிட்டு கிறது. பெண்களுக்கு செவ்வாய் பலவீனமாக இருந்தால் உடல்நலக் குறைபாடு, திருமண வாழ்க்கையில் நாட்டமில்லாத நிலை, குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் தடை உண்டாகிறது. குறிப்பாக செவ்வாய் வக்ரம் பெற்றாலும், பாவ கிரகத் தொடர்பிருந்தாலும், ராகு- கேது நட்சத்திரத்தில் இருந்தாலும் உடல் பலவீனம், குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் தடங்கல்கள் ஏற்படுகின்றன.

பெண்களுக்கு குரு சிறப்பாக இருந்தால் குழந்தை பாக்கியம் சிறப்பாக அமைகிறது. குரு வக்ரம் பெற்றிருந்தால் கர்ப்பப்பை பிரச்சினை, ஒருசிலருக்கு ஆண் குழந்தை ஏற்பட இடையூறுகள் ஏற்படுகின்றன.

குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கு மென பார்க்கும்பொழுது, ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ நடைபெறும் தசை, புக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. ஐந்தாமதிபதியின் தசை, புக்தி; குருவின் தசை, புக்தி நடை பெறும் சமயத்தில் குழந்தை பாக்கியம் உண் டாகிறது. அதுபோல ஜனன ஜாதகத்தில் சனி இருக்கும் இடத்திற்கு கோட்சார சனி வருகின்றபொழுது குழந்தை பாக்கியம் பெரும்பாலும் ஏற்படுகிறது. அதேபோல் ஜனன ஜாதகத்தில் குரு இருக்கும் இடத்திற்கு கோட்சார குரு வருகின்றபொழுது, குருவுக் குத் திரிகோணத்தில் குரு வருகின்றபொழுது குழந்தை பாக்கியம் ஏற்படுகிறது.

கணவன்- மனைவி ஜாதகத்தில் ராகு- கேது தசை, புக்தி நடைபெற்றால் குழந்தை பாக்கியம் ஏற்படுவதில்லை. அப்படியே ஏற்பட்டா லும் பெண் குழந்தை பிறக்கிறது. திருமணத் திற்குப்பிறகு கணவன்- மனைவிக்கு ராகு தசை நடைபெறும்பொழுது குழந்தை பாக்கியத் திற்காக பலமுறை முயற்சித்தும் நல்லது நடக்கா மல், ராகு தசை முடிந்து குரு தசை வந்தவுடன் குழந்தை பாக்கியம் ஏற்பட்ட நிகழ்வுகளும் நிறைய உண்டு.