நலம் தரும் நட்சத்திரம்! 2 அஸ்வினி

/idhalgal/balajothidam/auspicious-star-2-ashwini

செய்ய வினை தெரிந்து செய்வான் செய்யவே யார்க்கு நல்லான் பையறு மணியும் பொன்று மகிழ்ச்சியாய் அணிய வல்லான் பொய்பொய்யுரை யென்றும் சொல்லான் புகழ் பெற வாழ வல்லான் ஐயமிட்டுண்ணல்லன் கைவினி நாளினனே.

-விரும கண்டிகை

பொருள்: அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவன்- எந்த வேலையையும் திட்டமிட்டு செய்வான். எல்லோருக்கும் நல்லவனாயிருப்பான். பொய் சொல்லாதவன். புகழ்பெறுவான்.

புள்ளிகளை இணைக்கும்போது கோலம் உருவாகிறது. அதேபோல், ஜனன ஜாதகத்தில் பாவங்களும் கிரகங்களும், அமைந்திருக்கும் நட்சத்திரப் புள்ளிகளை ஒன்றினைத்து ஆராய்ந்தால் வாழ்க்கையின் கோலம்புரியும். பாவங்கள் அமையும் நட்சத்திர அதிபதி அந்த பாவத்தின் தன்மையை விளக்குவார். கிரகங்கள் அமையும் நட்சத்திராதிபதி அந்த கிரகத்தின் குணத்தை விளக்குவார். நட்சத்திர வல

செய்ய வினை தெரிந்து செய்வான் செய்யவே யார்க்கு நல்லான் பையறு மணியும் பொன்று மகிழ்ச்சியாய் அணிய வல்லான் பொய்பொய்யுரை யென்றும் சொல்லான் புகழ் பெற வாழ வல்லான் ஐயமிட்டுண்ணல்லன் கைவினி நாளினனே.

-விரும கண்டிகை

பொருள்: அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவன்- எந்த வேலையையும் திட்டமிட்டு செய்வான். எல்லோருக்கும் நல்லவனாயிருப்பான். பொய் சொல்லாதவன். புகழ்பெறுவான்.

புள்ளிகளை இணைக்கும்போது கோலம் உருவாகிறது. அதேபோல், ஜனன ஜாதகத்தில் பாவங்களும் கிரகங்களும், அமைந்திருக்கும் நட்சத்திரப் புள்ளிகளை ஒன்றினைத்து ஆராய்ந்தால் வாழ்க்கையின் கோலம்புரியும். பாவங்கள் அமையும் நட்சத்திர அதிபதி அந்த பாவத்தின் தன்மையை விளக்குவார். கிரகங்கள் அமையும் நட்சத்திராதிபதி அந்த கிரகத்தின் குணத்தை விளக்குவார். நட்சத்திர வலிமையே பாவம் மற்றும் கிரகங்களின் செயலைத் தீர்மாணிக்கும்.

ss

அஸ்வினி நட்சத்திரத்தின் வலிமை

ப் உயர்ந்த லட்சியம் கொண்டவர்களாகவும் தங்கள் இலக்குகளை அடைய பாடுபடுபவர்களாகவும் இருப்பார்கள்.

ப் தங்கள் திறன்களிலும் முடிவுகளிலும் நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

ப் சுதந்திரமானவர்கள். விதிகள் அல்லது கட்டுப்பாடுகளால் கட்டுப்படுத்தப்படுவதை விரும்புவதில்லை.

ப் புதிய யோசனைகளை ஆராய்வதில் ஆர்வமுடையவர்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தின் பலவீனம்

ப் சில அவசர முடிவுகளால் தொல்லை வரலாம்.

ப் நீண்டகாலம் ஒரேவேலையில் இருந்தால் அமைதி குறையும்.

ப் அதிக போட்டி மனப்பான்மையால் பதட்டம் உண்டாகலாம்.

கூட்டு கிரகப் பலன்

அஸ்வினி நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன் பிற கிரகங்கள் இணையும்போது உண்டாகும் பலன்களையும் ஆராயவேண்டியது முதன்மையானது.

ப் அஸ்வினி நட்சத்திரத்தில் சூரியனிருக்க உயர்ந்த அதிகாரமான பதவியிலிருப்பார். முன்கோபம் இவர்களின் பலவீனம்.

ப் செவ்வாய் அமர்ந்திருக்க உற்சாகமுடையவர். தன் நம்பிக்கை அதிகம். ஆனாலும், அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவார்.

ப் புதன் அமர்ந்திருக்க எழுத்தாற்றல், கணிதத்தில் திறமையும், வியாபாரத்தில் விருப்பமும் உடையவர்.

ப் சுக்கிரன் அமர்ந்திருக்க, அதிக பயணம் செய்பவர். பலமொழி அறிந்தவர்.

ப் சனி அமர்ந்திருக்க, மந்த புத்தியுள்ளவர். கல்வியில் தடை யுண்டாகும்.

ப் குரு அமர்ந்திருக்க, தலைமை பொறுப்பிலிருப்பார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். மத குருவாகும் வாய்ப்பு உண்டு.

ப் ராகு அமர்ந்திருக்க, ஜோதிடத்தில் ஈடுபாடு அதிகம்.

ப் கேது அமர்ந்திருக்க, மருத்துத்துறையில் ஆர்வம் அதிகம்.

அஸ்வினி நட்சத்திர பாத பலன்

ப் அஸ்வினி நட்சத்திரத்தின் முதல் பாதம், மேஷ நவாம்சம் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் வலுவான மன உறுதி, அச்சமற்ற ஆளுமை மற்றும் முன்னோடி மனப்பான்மை கொண்டவர்கள்.

ப் அஸ்வினி நட்சத்திரத்தின் இரண்டாவது பாதம் ரிஷப நவாம்சம். சுக்கிரனால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் காம உணர்வுமிக்கவர்கள். படைப்பாற்றல் மிக்கவர்கள்.

ப் அஸ்வினி நட்சத்திரத்தின் மூன்றாவது பாதம் மிதுன நவாம்சம். புதனால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த தகவல் தொடர்பு திறன், புத்திசாலித் தனம் மற்றும் கணிதத்தில் ஆர்வமுள்ளவர்கள்.

ப் அஸ்வினி நட்சத்திரத்தின் நான்காவது பாதம் கடக நவாம்சம். சந்திரனால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள். வலுவான-உள்ளுணர்வைக் கொண்ட வர்கள்.

அஸ்வினி நட்சத்திரநாளில் செய்யத்தக்க சுப காரியங்கள்

திருமணம், மனைகோலல், புத்தாடை உடுத்துதல், உபனயனம், விதை விதைக்க, புதிய பதவி ஏற்பது, தானியம் வாங்க, வாகனம் வாங்க, கடல் பயணம் செல்ல, நோயாளி மருந்துண்ண ஏற்ற நாள்.

அஸ்வினி நட்சத்திர பரிகாரம்

ப் தங்களது பிறந்த நட்சத்திர தினத் தன்று எட்டி மரம் தலவிருட்சமாக இருக்கும் கோவில்களுக்கு சென்று, எட்டி மரத்திற்கு அடியில் அமர்ந்து தியானம் செய்வதால் தோஷங்கள் நீங்கப்பெறும்.

ப் பிறந்த நட்சத்திர தினத்தன்று அரசங்கொழுந்தும், வேப்பஞ்சாறும் கலந்து ஹோமம் செய்வதால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம்.

ப் தினந்தோறும், "ஓம் ஐம் சரஸ்வத்யை நமஹ்' எனும் சரஸ்வதி தேவி மந்திரத்தைக்கூறி வழிபடுவது நல்லது.

செல்: 63819 58636

bala090525
இதையும் படியுங்கள்
Subscribe