அமிர்தாதி யோகங்கள்
யோகங்கள் பலவகை உள்ளன. சில யோகங்கள் நன்மை- தீமை இரண்டுக்கும் துணைபோகும். அமிர்தாதி யோகத்தில் நான்குவகை இருக்கும். அமிர்த யோகம், சித்த யோகம், பிரபலாரிஷ்டம்- மரண யோகம் ஆகியவை. இதில் அமிர்த யோகம் சிறப் பானது. பிரபலாரிஷ்டம் -மரணயோகம் இரண்டும் கெடுதலுக்கு துணைபோகும். மற்ற பிற இரண்டும் மத்திம பலனை தருபவை.
ஒரு கிழமையோடு, ஒரு நட்சத்திரம் இணையும் தன்மை தான் யோகமா, அப யோகமா என நிர்ணயிப்பது.
பிரபலாரிஷ்டம், எந்தக்கிழமையும் நட்சத்திரமும் இணைந்தால் உருவாகிறது.
ஞாயிற்றுக்கிழமை- பரணி- பிரபலாரிஷ்டம்.
திங்கட்கிழமை- சித்திரை- பிரபலாரிஷ்டம்.
செவ்வாய்க்கிழமை- உத்திராடம்- பிரபலாரிஷ்டம்.
புதன்கிழமை- அவிட்டம்- பிரபலாரிஷ்டம்.
வியாழக்கிழமை- அவிட்டம்- பிரபலாரிஷ்டம்.
வெள்ளிக்கிழமை- பூராடம்- பிரபலாரிஷ்டம்.
சனிக்கிழமை- ரேவதி- பிரபலாரிஷ்டம்.
இவ்வாறு அமைந்த நாட்களை சுப காரியங்களுக்கு தவிர்த்தல் வ
அமிர்தாதி யோகங்கள்
யோகங்கள் பலவகை உள்ளன. சில யோகங்கள் நன்மை- தீமை இரண்டுக்கும் துணைபோகும். அமிர்தாதி யோகத்தில் நான்குவகை இருக்கும். அமிர்த யோகம், சித்த யோகம், பிரபலாரிஷ்டம்- மரண யோகம் ஆகியவை. இதில் அமிர்த யோகம் சிறப் பானது. பிரபலாரிஷ்டம் -மரணயோகம் இரண்டும் கெடுதலுக்கு துணைபோகும். மற்ற பிற இரண்டும் மத்திம பலனை தருபவை.
ஒரு கிழமையோடு, ஒரு நட்சத்திரம் இணையும் தன்மை தான் யோகமா, அப யோகமா என நிர்ணயிப்பது.
பிரபலாரிஷ்டம், எந்தக்கிழமையும் நட்சத்திரமும் இணைந்தால் உருவாகிறது.
ஞாயிற்றுக்கிழமை- பரணி- பிரபலாரிஷ்டம்.
திங்கட்கிழமை- சித்திரை- பிரபலாரிஷ்டம்.
செவ்வாய்க்கிழமை- உத்திராடம்- பிரபலாரிஷ்டம்.
புதன்கிழமை- அவிட்டம்- பிரபலாரிஷ்டம்.
வியாழக்கிழமை- அவிட்டம்- பிரபலாரிஷ்டம்.
வெள்ளிக்கிழமை- பூராடம்- பிரபலாரிஷ்டம்.
சனிக்கிழமை- ரேவதி- பிரபலாரிஷ்டம்.
இவ்வாறு அமைந்த நாட்களை சுப காரியங்களுக்கு தவிர்த்தல் வேண்டும். இருப்பினும் தவிர்க்க இயலவில்லை என்றால் கிழமை அதிபதிக்கும் நட்சத்திர அதிபதிக்கும் உரிய பரிகார பூஜை செய்துவிட்டு சுபகாரியம் தொடங்கவேண்டும்.
சில திதிகள் சுபயோகம் தரத்தான் செய்யும்
ஞாயிற்றுக்கிழமையில் வரும்- அஷ்டமி
திங்கட்கிழமையில் வரும்- நவமி
செவ்வாய்க்கிழமையில்- வரும் சஷ்டி
புதன்கிழமையில் வரும்- திருதியை
வியாழக்கிழமையில் வரும்- ஏகாதசி
வெள்ளிக்கிழமையில் வரும்- திரயோதசி
சனிக்கிழமையில் வரும்- சதுர்த்தசி
நாள் செய்யாததை எமனும் செய்யான் என்று ஒரு பழமொழி உண்டு அதன் உட்பொருள் என்ன வென்றால், நல்ல நாளும் கிழமையும் பார்த்து செய்யும் எந்த ஒரு காரியமும் நற்பலனை பெற்றுத்தரும் என்பதுதான்.
வாரங்கள் என்று சொல்லக்கூடிய கிழமை களில் குண விஷேடங் களில் எத்தனையோ நல்ல மற்றும் தீய பலன்கள் இலை மறைவு காய் போல், கனிபோல் மறைந்து கிடக்கின்றன.
கிழமை என்ற வாரங்கள்
1. ஞாயிற்றுக்கிழமை- ஆதிவாரம்- இது பரணியில் பிறந்தது.
2. திங்கட்கிழமை- சோமவாரம்- இது சித்திரையில் பிறந்தது.
3. செவ்வாய்க்கிழமை- மங்களவாரம்- இது உத்திரட்டாதியில் பிறந்தது.
4. புதன்கிழமை- குருவாரம்- இது அவிட்டத்தில் பிறந்தது.
5. வியாழக்கிழமை- குருவாரம்- இது கேட்டையில் பிறந்தது.
6. வெள்ளிக்கிழமை- சுக்கிரவாரம்- இது பூரட்டாதியில் பிறந்தது.
7. சனிக்கிழமை மந்த வாரம் இது ரேவதியில் பிறந்தது.
ஒவ்வொரு கிழமையும் நாம் பிறந்த நட்சத்திரத்தில் வந்தால் அது சுபகாரியத்திற்கு ஏற்றதல்ல என்பதால் அது அசுப தினமாக கருதப்படுகிறது.
வார சூன்யம் என்றும் தன்மையுண்டு அதாவது ஒவ்வொரு கிழமையும் நடப் பில் உள்ளபோது சில நட்சத்திரங்கள் குறுக் கிட்டால் அன்றைய தினம் அந்த கிழமை யானது சூன்யமடைந்து விடுகிறது. ஆகவே அப்படிப்பட்ட கிழமையை வார சூன்யம் என்கிறோம். இப்படிப்பட்ட காலங்களில் சுப காரியங்களைத் தவிர்ப்பது சாஸ்திரரீதியாக நல்லது.
1. ஞாயிற்றுக்கிழமை- பரணி, மிருக சீரிடம், மகம், விசாகம், அனுஷம், கேட்டை நட்சத்திரம் நடப்பில் இருந்தால் அந்த கிழமை சூன்யமடைந்து விடுகிறது. இதைபோல் ஒவ் வொரு கிழமைக்கும் பார்ப்பது மிக நன்று.
2. திங்கட்கிழமை- கிருத்திகை, விசாகம், அனுஷம், பூராடம், பூரட்டாதி.
3. செவ்வாய்க்கிழமை- திருவாதிரை, கேட்டை, திருவோணம், அவிட் டம், சதயம்.
4. புதன்கிழமை- அஸ்வினி, பரணி, கிருத்திகை, மூலம், திருவோணம், அவிட்டம்.
5. வியாழக்கிழமை- மிருகசீரிடம், புனர் பூசம், ரேவதி.
6. வெள்ளிக்கிழமை- ரோகிணி- மிருக சீரிடம், பூசம், விசாகம், அனுஷம், அவிட்டம்.
7. சனிக்கிழமை- புனர்பூசம், பூசம், உத்திரம், ரேவதி.
இதனைக் கடைப்பிடித்தால் வருமுன் காக்க உதவும். பன்னிரண்டு ராசி இல்லங் களுக்கும் அவற்றின் ராசியாதிபதிகள் "சூன்யம்' பெற்றுவிடுவதுண்டு. ஆனால் பௌர்ணமி, அமாவாசை இரண்டுக்கும் திதி சூன்யம் என்பது கிடையாது.
ராசிகளின் திசைகள்
ராசிகள்- திசை- அதிதேவதை
மேஷம், ரிஷபம்- கிழக்கு- இந்திரன்.
மிதுனம், தென்கிழக்கு- அக்கினி.
கடகம், சிம்மம்- தெற்கு- எமன்.
கன்னி- தென்மேற்கு நிருதி.
விசாகம், துலாம்- மேற்கு- வருணன்.
தனுசு- வடமேற்கு- வாயு.
மகரம், கும்பம்- வடக்கு- குபேரன்.
மீனம்- வடகிழக்கு- ஈசான்யம்.
சாஸ்திரங்கள் கூடா நாட்கள்- ஆகாத நாட்கள் என்று எச்சரிப்பதுண்டு
கடன் வாங்கி சென்றவர் திரும்பவும் தர மாட்டார்களாம், பிரயாணம் சென்றவர் நெடுநாட்கள் வீடு திரும்ப மாட்டார்களாம். நோயின் காரணமாக நீண்டநாட்கள் ஆரோக் கியம் கெடுதலை தருமாம். சில நட்சத்திரங் களில் நாம் அதன் தன்மை அறியாமல் தொடங்கிவிட்டால் கேடுகள் பின் தொடருமாம்.
உதாரணமாக: திருவாதிரை, பரணி கார்த் திகை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம் ஆகிய 12 நட்சத்திரத்தில் கடன் கொடுத்தால் வாங்கியவர் திருப்பித் தரமாட்டார் உஷார்.
வெளியூர் பிரயாணம் மேற்கொண்டோர் பல இன்னல்களை அனுபவிப்பார் களாம்.