திருமணம் சொர்க்கத்தில் நிச்சியக்கப்படுகிறது என்பது நம் நாட்டு பழமொழி. இது தெய்வீக யோக அமைப்பால் நிச்சயிக்கப்படும், திருமணம் நல்லதொரு முகூர்த்த நாளில் நடைபெற்றால் மட்டுமே, அந்த தம்பதிகளின் வருங்கால வாழ்க்கை மிகச் சிறப்பாக தொல்லையில்லா நடைமுறை யோடு சீரும் சிறப்புமாக அமையும்.

திருமணம் என்ற வைபோகம் சுபகாரியங்களில் முதல் தரம் பெற்றவையாகும். எனவே இப்படிப்பட்ட சுபத்தன்மைகொண்ட நிகழ்ச்சி நிச்சயம் நல்லதொரு யோகமான முகூர்த்த நாளில்தான் இடம்பெற்று இருக்கவேண்டும். இவை சார்ந்த சில முக்கியமான தகவல்களை ஆய்வுசெய்வோம்.

தெரியவேண்டிய முக்கிய செய்திகள்

1. திருமணம் மலமாதத்தில் இடம்பெறக் கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசையும், இரண்டு பௌர்ணமியும் ஒரே மாதத்தில் இடம்பெறக்கூடாது.

Advertisment

ff

2. சுக்லபட்சம், தவிர கிருஷ்ணபட்சம் காலங்களில் திருமணம் விரும்ப தகுந்ததல்ல. அதாவது அமாவாசைக்கு பின்வரும் வளர்பிறை- தேய்பிறை என்பதுதான்.

3. திருமணம் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி மாதங்கள் தவிர பிற மாதங்களில் நடைபெறுவதைத் தவிர்த்தல் மிக நல்லது.

Advertisment

4. புதன், வியாழன் வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமை தவிர மற்ற கிழமைகளில் நடைபெறுவது யோகமானதல்ல.

5. திருமணம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்னங் களைத் தவிர பிற லக்னங் களைத் தவிர்ப்பது நல்லது.

6. திருமணம், துவிதியை, திரிதியை, பஞ்சமி சப்தமி, தசமி, திரயோதசி போன்ற சுபதிதிகளில் நடைபெறுவது உயர்தரமான மேன்மைக்கு வழிகாட்டும்.

7. முகூர்த்த லக்னத்திற்கு 17-ஆமிடம் முகூர்த்த தினத்தன்று சுத்தமாக இருத்தல் வேண்டும்.

* திருமணம் ரோகிணி, மிருகசீரிஷம், மகம், உத்திரம், உத்தராடம், அஸ்தம், உத்திரட் டாதி, சுவாதி, அனுஷம், மூலம், ரேவதி ஆகிய சுப நட்சத்திரங்கள் மேன்மையானது. ஆகவே இதனைக் கடை பிடித்தல் நல்லது.

* திருமணம் அக்னி நட்சத்திரம், மிருத்யு பஞ்சகம் போன்ற அசுப யோகங்களில் நடைபெறக் கூடாது.

* திருமணத்தின்போது குரு- சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள், திருமண லக்னத் திற்கு மணமகன்- மணமகள் ஜனன ராசிக்கு எட்டாம் வீட்டில் இடம் பெறக்கூடாது.

* மணமகன்- மணமகள் பிறந்த தேதி அல்லது கிழமைகளில் திருமணம் நடைபெறக் கூடாது.

பொருத்தம் பாராமலே மிக சிறந்த நட்சத்திரம்- எவை எவை?

மிருகசீரிடம், மகம், சுவாதி, அனுஷம் இந்த நான்கு நட்சத்திரங்கள் பெண் அல்லது ஆண் நட்சத்திரம் என்றால் விவாகம் செய்யலாம் என்கிறது சாஸ்திரம்.

திருமணத்திற்கு முக்கியமான பொருத்தங்கள்

தினப்பொருத்தம், கணப்பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப்பொருத்தம், ரஜ்ஜீப் பொருத்தம், ஆனால் இந்த பொருத்தங்களுடன் ஜாதகரீதியாக அங்காரக தோஷம், தம்பதிகளின் ஒற்றுமை, ஆயுள், சந்தான பாக்கியம், அதிர்ஷ்ட யோகங்கள், இதனையும் பார்க்கவேண்டும். மனப்பொருத்தம் மிக முக்கியம்.

16-ம் பெற்று பெருவாழ்வு வாழ 16 பொருத்தங்கள் உண்டு

தினம், கணம், ஸ்திரி தீர்க்கம், மகேந்திரம், யோனி, ராசி, ராசியாதிபதி, வசியம், ரஜ்ஜு, வேதை, நாடி, ராசி வருணம், பஞ்சபூதம், பஞ்ச பட்சி, விருச்சிகம் மற்றும் ஆயுள் இவற்றையெல்லாம், ஆய்வுசெய்து திருமணம் செய்யமுற்படுவது இயலாத காரியம். எனவே மேலே கூறப்பட்ட ஐந்தும் மிக முக்கியமானது.

* பொதுவாக எட்டாமிடம்- அதாவது லக்னத்திற்கு எட்டாமிடம் ஆண்களுக்கு ஆயுள் ஸ்தானம், பெண்களுக்கு அந்த எட்டாமிடம் எப்படிப்பட்ட மணமகன் வீட்டில் வாழ்க்கை நடத்தப் போகிறாள் என்பதை குறிப்பதாம். எட்டாமிடத்தில் குரு காணப்பட்டால் கல்வியாளர்கள் நிரம்பிய குடும்பம் கிடைக்குமாம்.

* எட்டாமிடத்தில் பெண்ணின் ஜாதகத் தில் சனி, ராகு, கேது போன்ற கிரக நாதர்கள் காணப்பட்டால் வில்லங்கம் சூழ்ந்த குடும் பத்தில் வாழநேரிடும் என்கிறது ஜோதிடம். உஷார்.

யோனிப் பொருத்தம் மிக முக்கியம்

மணமகன் ஜாதகத்தில் ஐந்தாமிடம் சந்தான பாக்கியத்தை, சுட்டிக்காட்டுவது, அது சுத்தமாகவும், ராகு- கேது போன்ற வீரிய கிரகங்கள் இருந்தால் குழந்தைகள் பிறக்க தாமதம் அல்லது பிறவாமலும் இருக்கலாம். பெண்ணின் ஜாதகத்தில், குரு, நல்ல இடத்தில் இருந்தால் கருப்பை அவருக்கு நல்வழிகாட்டி, குழந்தை செல்வத்தைத் தர பேருதவி செய்யும்.

சில நட்சத்திரங்கள் (பெண் நட்சத்திரங்கள்) ஆண் நட்சத்திரத்திற்கு, பகை யோனியாகும் அதனைத் தெரிந்து நடந்துகொள்ளவேண்டும் அஸ்வினி- ஹஸ்தம், ஸ்வாதி, பகையோனி இதை மணமகள் தவிர்க்கவும்.

பரணி- அவிட்டம், பூரட்டாதி, பகையோனி.

கிருத்திகை- முதல் பாதம், பூராடம், திருவோணம், பகையோனி.

ரோகிணி- மகம், பூரம், மிருகசீரிடம்.

மகம்- பூரம், பகையோனி. திருவாதிரை.

அனுஷம்- கேட்டை, புனர்பூசம், மகம்- பூரம் பூசம், திருவோணம்- அவிட்டம், ஆயில்யம்- பூரம்- (மட்டும் பகையோனி) மகம்- ரோகிணி மிருகசீரிஷம், புனர்பூசம், (மூன்று பகையோனி) பூரம்- ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை புனர்பூசம், ஆயில்யம் (ஐந்தும் பகையோனி) உத்திரம்- சித்திரை, (மட்டும் பகையோனி) ஹஸ்தம், அஸ்வினி பகையோனி. சித்திரை உத்திரம்- உத்திரட்டாதி (ஆகியவை) சுவாதி- அனுஷம்,

விசாகம்- உத்திரட்டாதி. அனுஷம்- திருவாதிரை, மூலம். பகையோனி. கேட்டை- திருவாதிரை, மூலம் அனுஷம். பூராடம்- கிருத்திகை, உத்திராடம். சித்திரை, பகையோனி. திருவோணம், கிருத்திகை, பூஷம், அவிட்டம் பரணி, ரேவதி சதயம், எதுவும் பகையோனி யாகாது. பூரட்டாதி, பரணி- உத்தரட்டாதி, சித்திரை,

விசாகம் ரேவதி- அவிட்டம், பூரட்டாதி பகையோனி.

3. மகேந்திர பொருத்தம் இன்றியமையாதது

இதனை சம்பத்து விருத்தி- குழந்தை செல்வம் போன்றவைக்கு உறுதுணை புரியும். கருத்தரிப்பு மையத்தை நாடாதிருக்க முக்கிய பங்குவகிக்கும். அதாவது- பெண் நட்சத்திரம்முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணின் தொகை 4-7-10,113 16, 19, 22- 25 வந்தால் மகேந்திர பொருத்தம் உண்டு. தம்பதிகளுக்கு சம்பத்தை கொடுக்கும்.

பாடாய்ப்படுத்தும் அங்காரக தோஷம் என்ற செவ்வாய் தோஷம் பொதுவாக லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் தோஷமான ஜாதகமாக கருதவேண்டும் என்கிறது ஜோதிடம். இருந்தாலும் இதற்கான விதிவிலக்கையும் கண்டறிய வேண்டும். செவ்வாய்- மேஷம், விருச்சிகம் மகரத்தில் இருந்தால் தோஷமில்லை. குரு- சனி ஆகியவர்களுடன் சேர்ந்தோ, பார்க்கப்பட்டிருந்தாலோ கெடுதல் இல்லை. இந்த செவ்வாய் தோஷம் தம்பதி களில் ஒருவருக்கு இருந்து மற்றவருக்கு இல்லையென்றால் ஜாதகத்தை இணைப்பது கூடாது. என்றாலும், ஜோதிடம் பலமொழி களில் இருப்பதால் பாகுபாட்டை பார்ப்போம்.

தேவகேரளம் போன்ற சாஸ்திர கிரந்தங்களில் தென்படும் மாறுபட்ட செய்தியை கவனத்தில் கொள்வோம்.

* கடக லக்னம், சிம்ம லக்னம் என்ற இரண்டு லக்னங்களில் பிறந்தோருக்கும் செவ்வாய் எங்கிருந்தாலும் அந்த ஜாதகருக்கு அங்காரக தோஷம் கிடையாதாம்.

* செவ்வாய் இருக்குமிடம், 2-ஆமிடம் என்றால் அதுவும் மிதுனம் அல்லது கன்னியெனில் தோஷம் தவிர்க்கப்படும்.

* செவ்வாய் இருக்குமிடம் 4-ஆமிடம் என்றால் அதுவும் மேஷம், விருச்சிகம் எனில் தோஷம் கிடையாது.

* செவ்வாய் இருக்குமிடம் 7-ஆமிடம், கடகம், மகரமெனில், தோஷமில்லை.

* செவ்வாய் இருக்குமிடம் 8-ஆமிடம் எனில் தனுசு, மீன ராசிக்கு தோஷம் தவிர்க்கப்படும்.

* செவ்வாய் இருக்குமிடம் 12-ஆமிடம் ரிஷபம், துலாம் என அமைந்தால் தோஷம் கிடையாது.

* சிம்மத்தில் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷம் கிடையாது.

* குருவுடன் செவ்வாய் இணைந்தால் தோஷமில்லை.

* சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்தால் தோஷமில்லை.

* புதனுடன் சேர்ந்தாலும் பார்த்தாலும் தோஷமில்லை.

* சூரியனுடன் செவ்வாய் சேர்ந்தாலும் பார்த்தாலும் தோஷமில்லை.

* சனி, ராகு, கேது, இவர்களுடன் கூடியாவது இவர்களால் பார்க்கப்பட்டாவது செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.

செவ்வாய் தோஷ சுலப பரிகாரம்

திருமணத்தடை தொடர்ந்தால் செவ்வாய்க்கிழமை, சூரிய உதயத்திற்கு பின் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை சிவப்புத் துணியில் முடிந்து, சிறிது தேனை நீரில் கலந்து உட்கொண்டு சங்கல்பம் எடுக்கவேண்டும். தாய் அல்லது மணமகள் செய்யலாம். அதாவது திருமணம் நிறைவேறியதும் திருச்செந்தூர் அல்லது திருத்தணியில் தங்கத்தேர் இருப்பதாக சங்கல்பம் எடுக்கவேண்டும். திருமணம் நிறைவேறியபின் நேர்த்திக்கடன் போதுமானது. ஆண்கள்- காவடி எடுக்கலாம்.