ஜோதிட பலன் கூறுவதில் ஜோதிட ருக்கு ஜோதிடர் பலன் மாறுபடுவது சகஜம். ஆனால் பலன் வேறுபடுவது ஏன் என்று பலருக்கும் சந்தேகம் ஏற்படுகிறது.
ஜோதிடம் தவறா- ஜோதிடர்கள் தவறா என்று பட்டிமன்றம் நடத்தும் வகையில் ஜோதிடம் பற்றிய சந்தேகம் சிலருக்கு ஏற்படுகிறது.
ஒவ்வொருவரின் அறிவு, ஞானம், அனுமானம், யூகத் திறமைகளும் வேறுபடு கிறது என்பதுதான் முதல்காரணம். ஒரு ஜாதகத்தின் பலனை அறியும் போது தசை நடத்தும் கிரகத்தை லக்னம், ராசி, காரகம் ரீதியாக ஆராய்ந்துதான் பலன்களை மிகத்துல்-யமாக கூறமுடியும். கிரகங்கள் எந்த விதத்திலும் பங்கப்படாமல், முழுமை யான பலத்துடன் இருந்தால் மட்டுமே, அதனுடைய தசாபுக்தியில் முழு பலனை அளிக்கும். கிரகங்கள் ஆறுவிதமான பலன் களை அடைகின்றன.
1. ஸ்தான பலம்
ஒரு கிரகம் ஆட்சி, உச்சம் மூலத் திரிகோணம், நட்பு, பகை மூலத் திரிகோண வீட்டிற்கு அருகில் செல்கிறதா, உச்ச வீட்டிற்கு அருகில் உள்ளதா, நீச வீட்டை நெருங்குகிறதா என்பதை துல்-ய மாக அதன் டிகிரி சுத்தமாக கணிக்க வேண்டும். அதுபோல் கிரகங்கள் ஆரோ கண கதியில் உள்ளதா? அவரோகண கதியில் உள்ளதா? என்பதை துல்-யமாக கணிக்கவேண்டும். உச்ச வீட்டில் உச்ச பாகையில் உள்ளதா? நீச வீட்டில் நீச புள்ளியில் உள்ளதா? என்பதை துல்-யமாக கணிக்கவேண்டும்.
2. திருஷ்டி பலம்
இதை நம் பார்வை பலம் என்று சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட கிரகம், தசை நடத்தும்போது, அவை சுபகிரக பார்வைபெற்று உள்ளதா? அல்லது பாவ கிரக பார்வை பெற்றுள்ளதா என்பதை கணித்து பலன் அறிய வேண்டும். பாபகிரகங்கள் குரு, வளர்பிறை சந்திரன், தனித்த புதன், சுக்கிரன் இவற்றின் பார்வையை பெறுதல் சிறப்பு.
3. திக்பலம்
திக் என்றால் திசை என்று பொருள். குறிப்பிட்ட கிரகங்கள், குறிப்பிட்ட இடத்தில் திக்பலம் பெறும். புதனும், குருவும், லக்னத்தில் திக் பலமடையும். (கிழக்கு) சந்திரனும், சுக்கிரனும் 4-ஆம் வீட்டில் திக்பலம் அடையும். (வடக்கு),
ஜோதிட பலன் கூறுவதில் ஜோதிட ருக்கு ஜோதிடர் பலன் மாறுபடுவது சகஜம். ஆனால் பலன் வேறுபடுவது ஏன் என்று பலருக்கும் சந்தேகம் ஏற்படுகிறது.
ஜோதிடம் தவறா- ஜோதிடர்கள் தவறா என்று பட்டிமன்றம் நடத்தும் வகையில் ஜோதிடம் பற்றிய சந்தேகம் சிலருக்கு ஏற்படுகிறது.
ஒவ்வொருவரின் அறிவு, ஞானம், அனுமானம், யூகத் திறமைகளும் வேறுபடு கிறது என்பதுதான் முதல்காரணம். ஒரு ஜாதகத்தின் பலனை அறியும் போது தசை நடத்தும் கிரகத்தை லக்னம், ராசி, காரகம் ரீதியாக ஆராய்ந்துதான் பலன்களை மிகத்துல்-யமாக கூறமுடியும். கிரகங்கள் எந்த விதத்திலும் பங்கப்படாமல், முழுமை யான பலத்துடன் இருந்தால் மட்டுமே, அதனுடைய தசாபுக்தியில் முழு பலனை அளிக்கும். கிரகங்கள் ஆறுவிதமான பலன் களை அடைகின்றன.
1. ஸ்தான பலம்
ஒரு கிரகம் ஆட்சி, உச்சம் மூலத் திரிகோணம், நட்பு, பகை மூலத் திரிகோண வீட்டிற்கு அருகில் செல்கிறதா, உச்ச வீட்டிற்கு அருகில் உள்ளதா, நீச வீட்டை நெருங்குகிறதா என்பதை துல்-ய மாக அதன் டிகிரி சுத்தமாக கணிக்க வேண்டும். அதுபோல் கிரகங்கள் ஆரோ கண கதியில் உள்ளதா? அவரோகண கதியில் உள்ளதா? என்பதை துல்-யமாக கணிக்கவேண்டும். உச்ச வீட்டில் உச்ச பாகையில் உள்ளதா? நீச வீட்டில் நீச புள்ளியில் உள்ளதா? என்பதை துல்-யமாக கணிக்கவேண்டும்.
2. திருஷ்டி பலம்
இதை நம் பார்வை பலம் என்று சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட கிரகம், தசை நடத்தும்போது, அவை சுபகிரக பார்வைபெற்று உள்ளதா? அல்லது பாவ கிரக பார்வை பெற்றுள்ளதா என்பதை கணித்து பலன் அறிய வேண்டும். பாபகிரகங்கள் குரு, வளர்பிறை சந்திரன், தனித்த புதன், சுக்கிரன் இவற்றின் பார்வையை பெறுதல் சிறப்பு.
3. திக்பலம்
திக் என்றால் திசை என்று பொருள். குறிப்பிட்ட கிரகங்கள், குறிப்பிட்ட இடத்தில் திக்பலம் பெறும். புதனும், குருவும், லக்னத்தில் திக் பலமடையும். (கிழக்கு) சந்திரனும், சுக்கிரனும் 4-ஆம் வீட்டில் திக்பலம் அடையும். (வடக்கு), சனி 7-ல் திக்பலம் அடையும். (மேற்கு) சூரியனும் செவ்வாயும் லக்னத்திற்கு 10-ஆமிடத்தில் திக்பலம் பெறும் (தெற்கு)
4. சேஷ்டா பலம்
சூரியனும் சந்திரனும் (உத்ராயண காலத்தில் தைமுதல் ஆனிவரை) பலமாக இருக்கும். மற்ற கிரகங்கள் வக்ர காலங்களில் பலமாக இருக்கும். கிரக யுத்தத்தில் வெற்றிபெறும்போதும் சுபகிரகங்களுடன் கூடும்போதும் கிரகங்கள் பலமாக இருக்கும்.
5. கால பலம்
பகல், இரவு என இரண்டு காலங்கள் உள்ளன. சூரியன், குரு, சுக்கிரன் பக-ல் பலம் பெறுகிறார்கள். சந்திரன், செவ்வாய், சனி இரவில் பலமுடையவர்கள். புதன் மட்டும் பகல் மற்றும் இரவு இரண்டு வேளைகளிலும் பலமடையும் கிரகம். அரவு (பாம்பு) கிரகங்கள் இரவில் வ-மை யுடன் இருக்கும்.
6. நைசர்கிக பலம்
ஒரு ஜாதகத்தில், ஒரு கட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் நெருக்கமாக இருக்கும்பொழுது கிரகயுத்தம் நடைபெறும். சனி, செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சந்திரன், சூரியன், ராகு, கேது என்ற வரிசையில் கிரகங்கள் பலம் பெறுகின்றன. இதில் பலமான கிரகம் கேது. மிக வ-மை குறைந்த கிரகம் சனி. செவ்வாய், புதன், சனி, குரு, சுக்கிரன் இந்த 5 கிரகங்களும் ஒரு ஜாதக கட்டத்தில் கூடும்போது கிரகயுத்தம் ஏற்படும். ஒரே ராசி கட்டத்தில் 5 கிரகங்கள் இருந்தாலும், எட்டு டிகிரிக்குமேல் விலகி இருந்தால், அவை கிரக யுத்தத்தில் வெற்றி பெற்ற கிரகங்களாக கருதப்படும்.
அதுபோல் கிரக யுத்தம் என்பது செவ்வாயை மையப்படுத்தி இருப்பதால், செவ்வாயை விட்டு தாண்டிய கிரகங்கள் கிரக யுத்தத்தில் இடம் பெறாது.
செவ்வாயை நோக்கி செல்லும் கிரகங்கள், செவ்வாயிடம் தோற்று தன் சுய பலத்தை இழந்துவிடும். சூரியனிடம் குறிப்பிட்ட டிகிரிக்குள் நெருங்கும் கிரகம் அஸ்தமனமாகும்.
அஸ்தமனமான கிரகங்கள் பலம் இழக்கும்.
அஸ்தமனமான கிரகங்களின் பலனை சூரியனே செய்வார். மற்ற கிரகங்களை அஸ்தமனம் செய்யும் சூரியன், ராகு- கேதுகளை 8 டிகிரிக்குள் நெருங்கும் பொழுது, தன் சுய பலத்தை இழந்து, கிரகண தோஷத்தை அடைவார். ராகு கேதுக்களின் பிடியில் 8 டிகிரிக்குள், எந்த கிரகங்கள் இருந்தாலும், தன் சுய பலத்தை இழந்துவிடும். மிக நெருக்கமான நிலையில் இருக்கும்பொழுது அதன் காரக ஆதிபத்தியங்கள் கண்டிப்பாக கெடும். ராகு சுப கிரகங்களுடன் இணையும்போது சுப தன்மையையும், அசுபக் கிரகங்களுடன் இணையும் பொழுது கடுமையான பாவ தன்மையையும் பெறுவார்.
ராகுவுடன் நெருங்கி இருக்கும் கிரகம், தன் வ-மையை இழந்துவிடுவதால், தன் தசா புக்தியில் பெரிய அளவில் யோகத்தை கொடுக்காது.
இதுபோக ஒரு கிரகத்தின் யோகி, அவயோகி, ஷட்பல நிர்ணயம், புஷ்கராசம், திதி சூன்யம், யோகம், கரணம் போன்ற உபவிதிகளையும், கிரகங்கள் அமர்ந்த நட்சத்திர சாரம், நடப்பு தசை, கோட்சாரம் இவற்றை கணித்து இவற்றை எல்லாம் கூட்டிக்கழித்து, பலன் கூறவேண்டும். இது போன்ற அதிக கணக்கீடு இல்லாமல் மிக எளிமையாக ஜாதக பலன் கூற முடியும். ஒரு ஜாதகத்தின் பலனை எளிமையாக்குவதில் பாகை முறை ஜோதிடத்தின் பங்கு அளப் பரியது.
ஒரு ராசி மண்டலம் என்பது 360 பாகை யாககொண்டு பன்னிரண்டு ராசிகளையும் உள்ளடக்கிய அமைப்பாகும். இந்த 360 பாகையில் ஒரு ராசியானது 30 பாகையை கொண்டதாகும். இந்த ஒரு ராசியில் 0 பாகை முதல் 30 பாகை வரையில் கிரகங்கள் பயணிக்கும். பிறந்தகால ஜாதகத்தில் கிரகங்கள் வெவ்வேறு ராசியில் நின்றாலும் தாங்கள் நின்ற பாகைக்கு முன்பின் மூன்று பாகைக்குள் நெருங்கி இருக்கும்போது ஏற்படுத்தும் விளைவுகளின் விளக்கமாகும். பிறந்தகால ஜாதகத்தில் குறைந்த பாகை, அதிகப் பாகை பெற்ற கிரகம் எதுவோ அக் கிரகம் ஜாதகரின் வாழ்வை தீர்மானிக்கிறது. ஒரு கிரகம் நிற்கும் அல்லது பயணிக்கும் பாகை யின் அளவை வைத்து பலன் சொல்லப்படும் ஜோதிட முறையே பாகை முறை ஜோதிட மாகும். வேத ஜோதிடத்தில், இது ஒரு புதிய அணுகுமுறை. ஒரு ராசியில் ஒரு கிரகமானது 0 பாகை முதல் 30 பாகைக்குள்தான் பயணிக்கும்.
இதில் 0 பாகை முதல் 10 பாகை வரை குறைந்த பாகை (கர்ஜ் உங்ஞ்ழ்ங்ங் – கஉ) உடைய கிரகம் என்றும் 20 முதல் 30 வரை அதிக பாகை (ஐண்ஞ்ட் உங்ஞ்ழ்ங்ங் – ஐஉ) பெற்ற கிரகங்கள் என்றும் பிரித்து பலன் சொல்லலாம். குறைந்த பாகை பெற்ற கிரகங்கள் அது இருக்கும் பாவப் பலன்களை உடனடியாக செய்யாமல் மிகவும் தாமதப்படுத்தும் இயல்பை கிரகங்கள் பெறுகின்றன. ஆதலால், கிரகங்கள் இயங்கா நிலை போன்று தோற்றமளிப்பதாக இருக்கும். ஜாதகருக்கு அந்த கிரகம் வேலை செய்யவில்லை என்ற எண்ணம் ஏற்படும். அந்த கிரகம் தொடர்பான உறவு களுக்கும் பலன்களுக்காகவும் ஜாதகர் ஏங்கிக் கொண்டும் எதிர்பார்த்துக் கொண்டும் இருப்பார். அதிக பாகை பெற்ற கிரகங்கள் அது இருக்கும் பாவத்தின் பலன்களை விரைவாகச் செய்யும் தன்மையுடன் இயங்கு கின்றன. ஆதலால் அந்த கிரகத்தின் பலன் களிலும் ஜாதகருக்கு உடன் பலனளிக்கும்.
ஜாதகர் எதிர்பாராமல் பலன்களை கொடுத் துக்கொண்டே இருக்கும். ஆனால், அந்த பாவத்தின் உறவுகளிலும் அந்த கிரகத்தின் பலன்களிலும் அந்த கிரகம் தொடர்பான உறவுகளிடமும் ஜாதகர் அசட்டை தன்மை யுடன் செயல்படுவார். அதாவது, அதிக பாகை உள்ள கிரகங்கள் ஜாதகரைக் தேடி வந்து பலன் தருகிறது. குறைந்த பாகை உள்ள கிரகங்களுக்கான பலனை ஜாதகர் தேடி அலைந்து அனுபவிக்கிறார். இதுவே குறைந்த பாகையுடைய கிரகங்களும் அதிக பாகையுடைய கிரகங்களின் இயல்புகள் மற்றும் செயல்பாடுகளாகும்.
உதாரணமாக ஒருவர் ஜாதகரீதியாக வழிபடவேண்டிய தெய்வத்தை பாகை முறையில் எவ்வாறு கண்டறிவது என்பதை பார்க்களாம். ஒரு ஜாதகத்தில், எந்த கிரகம் அதிக பாகையில் நிற்கிறதோ (ஐண்ஞ்ட் க்ங்ஞ்ழ்ங்ங்) அந்த குறிப்பிட்ட கிரகம் உங்களுக்கு ஆத்ம காரகனாக செயல்படும். ஆத்ம காரக கிரகத்தின் அதி தேவதையை வழிபாடு செய்யும்பொழுது பிரார்த்தனை எளிதில் நிறைவேறும். ஆத்ம திருப்தி, தெய்வ அனுகூலத்தை எளிதாக பெற முடியும். உதாரணமாக ஒருவருக்கு சூரியன் அதிக பாகையில் நிற்கிறார் என வைத்துக்கொண்டால், சிவ வழிபாடு உபாசனை போன்றவை கை கொடுக்கும் உடனடி பலன் தரும். ஆனால் அதனை ஜாதகர் உணர்வதில்லை. அத்துடன் குறைந்த பாகையில் நிற்கும் கிரகத்தின் அதி தேவதைமீது அதிக ஈடுபாடு, மிகுந்த பிரார்த்தனையும் வைப்பார்கள்.
அதற்காக அதிக சிரமம் எடுத்தாலும் பலன் அவ்வளவு எளிதில் கிடைக்காது. (High degree planets)அதிதேவதை வழிபாடு உடனடி பலனையும். Lowest degree planet மீது ஜாதகருக்கு அதிக ஈடுபாடை கொடுக்கும். ஆனால் பலன் கிடைப்பது மிக மிக தாமதமாகும். இதைப் பாகை முறை ஜோதிடம் அல்லது ஜெய்மினி முறையென சொல்வதுண்டு.
இதை மேலும் புரியும்படி கூறினால் ஒரு ஜாதகத்தில் சூரியன் குறைந்த பாகையில் இருந்தால் ஜாதகர் தந்தைமீது அளவு கடந்த அன்பு வைப்பார். ஜாதகர் முன்னேற் றம் பாதிக்கும். அடுத்தவர்களை சார்ந்தே இருக்கவேண்டும்.
ஜாதகரின் தனிப்பட்ட திறமைகள் வெளியே தெரியாது. அரசியிய-ல் ஜெயிக்க முடியாது, அதிக பாகையில் சூரியன் இருந்தால் ஜாதகர் தன் தந்தையின் அன்பை உதசீனபடுத்திவிடுவார், ஜாதகர் நிரந்தர வருமானம் அரசியல் ஆதாயம் பெறமுடியும் என எளிமையாக பலன் கூறமுடியும். இதில் பாகை என்பது ஒரு ராசியில் 30'' பாகை இருக்கும். இதில் ஆரம்ப நட்சத்திர சாரத்திலே சூரியன் இருந்தால் அது குறைந்த பாகை. ராசிக் கட்டத்தின் கடைசி வரும் நட்சத்திரத்தின் சாரம் எனில் சூரியன் அதிக பாகையில் உள்ளது என எடுத்துகொள்ளவேண்டும். அதேபோல் தசை நடத்தும் கிரகத்திற்கு நெருக்கமான பாகையில் ராசிக் கட்டத்தில் வேறு கிரகம் இருந்தால் இரண்டு கிரகமும் கிரகச்சேர்க்கையாக இணைந்து பலன் தரும். இதுபோன்ற எளிமையாக பலன் காணும் ஜோதிட சூட்சமம் பல உள்ளது. இதுபோன்ற முறையை பயன்படுத்தினால் எளிமையாக துல்-யமாக பலன் கூற முடியும். இதன் தொடர்ச்சியாக வரும் வாரத்தில் நவகிரகங்கள் குறைந்த, அதிக பாகையில் நிற்கும்போதும் ஏற்படுத்தும் பலன்களையும் பரிகாரங்களையும் காணலாம்.