ஜாதக பலனை மேம்படுத்தும் பாகைமுறை ஜோதிடம்! - சென்ற இதழ் தொடர்ச்சி.

/idhalgal/balajothidam/astrology-method-improve-horoscope-results-continuation-last-issue

ரு ஜாதக கட்டத்தில் ஒரு பாவகத்தின் முடிவில் அதிக பாகையில் நிற்கும் கிரகத்திற் கான பலன்களையும் பரிகாரங்களையும் காணலாம்.

சூரியன்

சூரியன் அதிக பாகையில் இருந்தால் ஆன்ம பலம் பெருகும். எதையும் நினைத்த வுடன் திட்டமிட்டு நடத்தி வெற்றிபெறுவார் கள். காரிய சித்தி உண்டு. நிர்வாகத்திறன் நிறைந்தவர்கள். .அதிகார தோரணையுடன் பிறரை கவரும் தோற்றமும் பேச்சும் உள்ளவர் கள். உயர்ந்த பதவியில் இருப்பார்கள். தனக்கு மட்டும் எல்லாம் தெரியும் தான் சொல்வதை அனைவரும் கேட்க வேண்டும் என்ற அகங் காரம் உண்டு. அரசியல் ஆதாயம் உண்டு. எளிதில் திருஷ்டி தோஷம் எதுவும் அண்டாது. தந்தை மற்றும் தந்தைவழி உறவுகள், மூத்த மகன், மாமனாரின் பாசத்தை புரிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்வார்கள்.

பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரையில் ஒரு கிலோ கோதுமை தானம் செய்ய வேண்டும்.

jj

சந்திரன்

ஒருவருக்கு சந்திரன் அதிக பாகையில் இருந்தால் மன சஞ்சலம், மன பயம் அதிகம் இருக்கும். ஆனால் வெளியில் பயப்படாதவர் கள்போல் காட்டிக் கொள்வார்கள். பெண் தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகம். பலரை தனது வசீகரத் தோற்றத்தால் வசப்படுத்து வார்கள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஓடி ஓடி உழைப்பார்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயமாட்டார் கள். சிறிய முயற்சியில் பெரிய வெற்றி உண்டு. தாயார், மாமியார், வயதானவர்களின் அன்பை உதாசினம் செய்வார்கள். எந்த நோய் வந்தாலும் எளிதில் குணமாகி விடும்.

பரிகாரம்

திங்கட்கிழமை சந்திர ஓரையில் ஒரு கிலோ பச்சரிசி அல்லது நெல் தானம் செய்ய வேண்டும்.

செவ்வாய்

செவ்வாய் அதிக பாகையில் நின்றால் தோற்றத்தில் மிடுக்காக இருப்பார்கள். கோபம், தைரிய

ரு ஜாதக கட்டத்தில் ஒரு பாவகத்தின் முடிவில் அதிக பாகையில் நிற்கும் கிரகத்திற் கான பலன்களையும் பரிகாரங்களையும் காணலாம்.

சூரியன்

சூரியன் அதிக பாகையில் இருந்தால் ஆன்ம பலம் பெருகும். எதையும் நினைத்த வுடன் திட்டமிட்டு நடத்தி வெற்றிபெறுவார் கள். காரிய சித்தி உண்டு. நிர்வாகத்திறன் நிறைந்தவர்கள். .அதிகார தோரணையுடன் பிறரை கவரும் தோற்றமும் பேச்சும் உள்ளவர் கள். உயர்ந்த பதவியில் இருப்பார்கள். தனக்கு மட்டும் எல்லாம் தெரியும் தான் சொல்வதை அனைவரும் கேட்க வேண்டும் என்ற அகங் காரம் உண்டு. அரசியல் ஆதாயம் உண்டு. எளிதில் திருஷ்டி தோஷம் எதுவும் அண்டாது. தந்தை மற்றும் தந்தைவழி உறவுகள், மூத்த மகன், மாமனாரின் பாசத்தை புரிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்வார்கள்.

பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரையில் ஒரு கிலோ கோதுமை தானம் செய்ய வேண்டும்.

jj

சந்திரன்

ஒருவருக்கு சந்திரன் அதிக பாகையில் இருந்தால் மன சஞ்சலம், மன பயம் அதிகம் இருக்கும். ஆனால் வெளியில் பயப்படாதவர் கள்போல் காட்டிக் கொள்வார்கள். பெண் தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகம். பலரை தனது வசீகரத் தோற்றத்தால் வசப்படுத்து வார்கள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஓடி ஓடி உழைப்பார்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயமாட்டார் கள். சிறிய முயற்சியில் பெரிய வெற்றி உண்டு. தாயார், மாமியார், வயதானவர்களின் அன்பை உதாசினம் செய்வார்கள். எந்த நோய் வந்தாலும் எளிதில் குணமாகி விடும்.

பரிகாரம்

திங்கட்கிழமை சந்திர ஓரையில் ஒரு கிலோ பச்சரிசி அல்லது நெல் தானம் செய்ய வேண்டும்.

செவ்வாய்

செவ்வாய் அதிக பாகையில் நின்றால் தோற்றத்தில் மிடுக்காக இருப்பார்கள். கோபம், தைரியம், வீரம் நிரம்பியவர்கள். எந்த பிரச்சினைக்கும் பயப்படாமல் எதிர்த்து நின்று போராடுவார்கள். அதிக சொத்து சுகம் நிறைந்தவர்கள். சொத்துக்களால் ஆதாயம் உண்டு. விவசாயம், ரியல் எஸ்டேட் துறையில் தனித்தன்மையுடன் திகழ்வார்கள். கனரக வாகனங்கள் ஓட்டுநர்கள், இயந்திரப் பணியாளர்களுக்கு செவ்வாய் அதிக பாகை யில் இருக்கும். பங்காளிப் பகையை அதிகம் சந்திப்பார்கள்.உடன் பிறந்த சகோதரர்களை கைப் பாவையாக ஆட்டிப் படைப்பார்கள். செவ்வாய் அதிக பாகையிலுள்ள பெண்கள் கணவரை தன் விருப்பப்படி எளிதில் மாற்றி வசப்படுத்துவார்கள். அடிக்கடி ரத்தக்காயம் ஏற்படும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் ரத்த தானம் செய்யவேண்டும். அல்லது சிவப்பு துவரை ஒரு கிலோ தானம் வழங்கவேண்டும்.

புதன்

புதன் அதிக பாகையில் இருப்பவர்கள் நளினமான தோற்றம் கொண்டவர்கள். சந்தோஷத்தை மட்டும் வெளியில் காட்டி துக்கத்தை மறைத்து வாழும் தன்மையுடைய வர்கள். காதல் உணர்ச்சிமிகுந்தவர்கள். பலரை காதலிப்பார்கள். அதிக நண்பர்கள் உடையவர் கள். யாருடனும் சட்டென்று பழகி நண்பர் களாக்கிக் கொள்வதில் கைதேர்ந்தவர்கள். எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் புத்தி சாலிகள். தந்திரவாதிகள். கிடைத்த சந்தர்ப்பத்தை தவறாமல் பயன்படுத்துவார் கள். படித்த மேதாவிகள். படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை, தொழில் உண்டு. வங்கிப்பணி, ஆசிரியப் பணி, ஜோதிடத்துறையில் தனி முத்திரை பதிப்பவர்கள். தோல், நரம்பு, சுவாச உறுப்புகளில் பாதிப்பு இருக்கும். சகோதரன், சகோதரி, காதலன், காதலி, தாய்மாமன் போன்ற உறவுகளின் அன்பை புரிந்துகொள்ளாதவர்கள்.

பரிகாரம்

புதன்கிழமை புதன் ஓரையில் பச்சைப்பயிறு ஒரு கிலோ தானம் வழங்க வேண்டும்.

குரு

குரு அதிக பாகையில் இருப்பவர்கள் உயர்ந்த குலத் தில் பிறந்தவர்கள். மதிப்புமிக்கவர் கள். சமுதாய அந்தஸ்து, குலகௌரவம் நிறைந் தவர்கள். செல்வாக்கு, சொல்வாக்கு மிகுந்த வர்கள். கௌரவத் தோற்றம் உள்ளவர்கள். பெரும் பணம் சம்பாதிப் பார்கள். குலதெய்வ அனுகிரகம் உண்டு. பெரியோர்கள் முன்னோர்களின் ஆசிர்வாதம் உள்ளவர் கள். பெற்றவர்களால் பிள்ளைகளுக்கும், பிள்ளைகளால் பெற்றவர்களுக்கும் பயன் உண்டு. பிறருக்கு ஆலோசனைகள் வழங்கி நல்வழிப்படுத்துவதில் வல்லவர்கள். கோவில், தர்ம ஸ்தாபனம் மற்றும் பொதுக் காரியம் செய்வதில் ஆர்வம் அதிகம். கல்வி நிறுவனம் நடத்துபவர்கள். புரோகிதம், ஜோதிடம் போன்ற தொழிலில் ஆர்வம் காட்டுவார்கள். உடல் பருமன், அதிககொழுப்பு சார்ந்த நோய் பாதிப்பு இருக்கும்.

பரிகாரம்

வியாழக்கிழமை குரு ஓரையில் ஒரு கிலோ கொண்டைக்கடலை தானம் வழங்க வேண்டும்.

சுக்கிரன்

சுக்கிரன் அதிக பாகையில் இருப்பவர் களுக்கு அழகு, ஆடம்பரச் செலவு, கலை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு அம்சங்களில் ஆர்வம் அதிகம் நிறைந்தவர்கள். உரிய வயதில் திருமணம் நடக்கும். மனைவி, மூத்த மகள், அத்தை, மூத்த சகோதரி, பெரியம்மா போன்ற உறவுகளின் அன்பை கண்டு கொள்ள மாட்டார்கள். குறிப்பாக மனைவியை மதிக்கமாட்டார்கள். ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் மனைவியைக் குறிக்கும் கிரகம் என்பதால் சுக்கிரன் அதிக பாகையிலுள்ள ஆண்கள் பொதுச் சபையில் நாகரீக மின்றி மனைவியை ஏளனம் செய்வார்கள் அல்லது மதிக்க மாட்டார்கள். கையில் எப்பொழுதும் தாராள பணப்புழக்கம் இருக்கும். குறைந்த உழைப்பில் நிறைந்த வருமானம் உள்ளவர்கள். தனது ஆசை மற்றும் லட்சியத்தை நிறைவேற்ற எதைச் செய்யவும் தயங்காதவர்கள்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் ஒரு கிலோ வெள்ளை மொச்சை தானம் வழங்கவேண்டும்.

சனி

கர்மகாரகன் மற்றும் தொழில்காரகன் சனிபகவான் ஒரு ஜாதகத்தில் அதிக பாகையில் இருந்தால் தோற்றப்பொழிவு குறையும். பல தொழில் ஞானம், அனுபவம் உள்ளவர்கள். எந்த ஒரு தொழிலையும் உறுப்படியாக செய்ய மாட்டார்கள். ஒரு தொழிலில் இருக்கும்போதே அடுத்த தொழிலுக்கு தாவுவார்கள். சிலர் தொழிலில் இருந்து உத்தியோகத்திற்கு மாறுவார்கள். மறுபடியும் உத்தியோகத்திலிருந்து தொழிலுக்கு செல்வார்கள். கடன், ஆயுள், ஆரோக்கியம் பற்றிய பயம் இல்லாதவர்கள். விதிவந்தால் அனைவரும் ஒருநாள் போய் செல்ல வேண்டியவர்கள்தான் என எதையும் எதார்த்தமாக எதிர்கொள்வார்கள். பூர்வீகத்தில் வாழ்வதில் அதிக விருப்பம் உண்டு. குல தெய்வம், காவல் தெய்வ வழிபாட்டில் அதீத ஈடுபாடு உண்டு.

பரிகாரம்

சனிக்கிழமை நல்லெண்ணெய் ஒரு கிலோ தானம் வழங்கவேண்டும்.

ராகு

தந்தைவழி முன்னோர்களின் வம்சாவளி குணத்தை பிரதிபலிக்கும் ராகு அதிக பாகையில் இருந்தால் முன்னோர்களின் பாவ, புண்ணியம் எளிதில் ஜாதகரை தாக்கும். எதிர்மறை எண்ணங் களின் தாக்கம் சற்று அதிகப்படியாக இருக்கும். கரடு முரடான தோற்றம், பிடிவாத குணம் நிரம்பியவர்கள். அதீத ஆர்வக் கோளாறால் தேவையற்ற பிரச்சினை யில் தாமே வழியச் சென்று சிக்குவார்கள். பொய்யைக்கூட பிறர் நம்பும் வகையில் .உண்மை போல் பேசுவார்கள். தேவையில்லாத புரளியை கிளப்பி வம்பு, வழக்குகளில் சிக்குவார்கள். பரம்பரை வழி நோய் தாக்கம் அதிகம் உள்ளவர்கள். வாழ்க்கையில் மிகுதியான தடைகள் உள்ளவர்கள். பெற்றவர்கள், பெரியவர்களை மதிக்க மாட்டார்கள். நவநாகரீக உலகின் லௌகீகம் தொடர்பான அனைத்து விசயங்களையும் அனுபவித்துப் பார்க்கவேண்டும் என்று விரும்புவார்கள்.

பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் ஒரு கிலோ கருப்பு உளுந்து தானம் வழங்கவேண்டும்.

கேது

தாய்வழி முன்னோர்களின் கர்மவினைத் தாக்கத்தை மிகைப்படுத்தும் கேது ஒரு ஜாதகத்தில் அதிக பாகையில் நின்றால் தாய்வழி முன்னோர் களின் கர்ம வினைப்பதிவு மிகைப்படுத்தலாக இருக்கும். எப்பொழுது மன இறுக்கத்துடன் அமைதியாக இருப்பார்கள். பயந்த தன்மை, பயந்த பேச்சு, வெறுமை, தனிமை உணர்வு மிகுதியாக இருக்கும். ஆன்மிக நாட்டம் அதிகம் உள்ளவர்கள். பழமையை அதிகம் விரும்புவார்கள். அதிக செலவு செய்து வைத்தியம் பார்க்கும் நோய் உள்ளவர்கள். அடிக்கடி வம்பு, வழக்கு, சிக்கலான பிரச்சினைகள் இவர்களைத் தேடிவரும். திருமண வாழ்க்கையில் தோல்வியை அதிகம் சந்திப்பார்கள். ராகுவிற்கு நேராக 180 டிகிரியில் கேது இருப்பார். ராகுவும் கேதுவும் ஒரே டிகிரியில் இருப்பதால் இணைந்தே செயல்படுவார்கள். எனவே ராகு தசை புக்தி காலங்களில் ராகுவினால் பாதிப்பும் கேது தசை புக்தி காலங்களில் கேதுவினால் பாதிப்பும் இருக்கும்.

பரிகாரம்

சனிக்கிழமை எமகண்டத்தில் கொள்ளு ஒரு கிலோ தானம் வழங்கவும்.நாம் அருந்தும் காபியில் டிகாஷன் அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் காபி ருசிக்காது. அதேபோல் நமது ஜாதகத்திலும் கிரகங்கள் அதிக பாகையில் இருப்பதும், குறைந்த பாகையில் இருப்பதும் சிறப்பில்லை. மத்திம பாகையில் இருப்பதே நல்லது. அதிக பாகை, குறைந்த பாகை யிலுள்ள கிரகங்களுக்கு சர, ஸ்திர, உபய செயல்பாடுகளின் பாதிப்பு அதிகம் இருக்கும். இந்த கட்டுரைக்கு பாலஜோதிடம் வாசகர்கள் கொடுத்த வரவேற்பு மனதை நெகிழச் செய்தது.

bala220923
இதையும் படியுங்கள்
Subscribe