ரு ஜாதகத்தைக் கொண்டு அந்த ஜாதகரின் பலனை மட்டும்தான் கூறமுடியுமா? தாய்- தந்தை, உடன்பிறந்தவருடைய பலனையும் கூறமுடியுமா என்று சில வாசகர்கள் கேட்கிறார்கள்.

ஒரு ஜாதகத்தைக் கொண்டு அந்த ஜாதகரின் தனிப்பட்ட விஷயங்களை தெள்ளத் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறமுடியும். அடுத்து தாய்- தந்தையுடன் ஜாதகருக்கு இருக்கக்கூடிய ஒற்றுமை, தாய்- தந்தையரால் ஜாதகர் அடையக்கூடிய பலன் களைத் தெளிவாகக் கூறலாம். அடுத்து உடன் பிறந்த வர்களுடன் இருக்கக்கூடிய ஒற்றுமை மற்றும் கருத்து வேற்றுமையை பற்றியும் கூறலாம்.

பொதுவாக ஒரு ஜாதகத் தைத் துல்லியமாக ஆராய்ந் தால் தாய்- தந்தையரின் ஆரோக்கியம், அவர்களுடன் ஜாதகருக்கு இருக்கும் புரிந்துணர்வு பற்றியும், தாய்- தந்தைவழி உறவினர்களுடன் இருக்கக் கூடிய உறவு முறைகள் பற்றியும் விளக்கமாகக் கூறலாம்.

ஒரு தனிப்பட்ட ஜாதகத் தில் தந்தையைப் பற்றிப் பார்க்கும்பொழுது, ஜென்ம லக்னத்திற்கு 9-ஆம் வீட்டையும், தந்தை காரகன் சூரியனையும், சூரியனின் வீடான சிம்ம ராசியின் அமைப்பையும் ஆராய வேண்டும். ஒரு ஜாதகத்தில் ஒன்பதாமதிபதி ஆட்சி, உச்சம்பெற்று, கேந்திர, திரிகோணத்தில் அமையப் பெற்று, சூரியன் நல்ல ஸ்தானத்தில் அமையப்பெற்று, குரு போன்ற சுப கிரகச் சேர்க்கைப் பெற்றிருந்தால் ஜாதகருக்கு தந்தையிடம் நல்ல ஒற்றுமையும், தந்தையால் ஜாதகருக்கு நல்ல வளர்ச்சியும் ஏற்படும்.

Advertisment

jothidam

அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் வீட்டில் சூரியன் அமையப்பெற்றாலும், 10-ஆமதிபதி சூரியனின் சேர்க்கைப் பெற்றா லும், சூரியன் ஜாதகத்தில் வலுவாக இருந்தா லும் தந்தை செய்த தொழிலை எடுத்துச் செய்யக்கூடிய அற்புத நிலையுண்டாகும்.

அடுத்து ஒரு ஜாதகத்தில் தந்தை காரகன் சூரியன் தனது பகை வீடான மகரம் அல்லது கும்ப ராசியில் இருந்தால் தங்களுக்குக் கெடுதி ஏற்படுமா என சிலர் கேட்கிறார்கள்.

மகர, கும்ப ராசியில் இருக்கின்றபொழுது- குறிப்பாக கும்ப ராசியில் சூரியன், ராகு சாரம் பெறுவதுமட்டும்தான் அதிகப்படி யான கெடுதியே தவிர, மற்றபடி மகர ராசியில் உத்திராடம், திருவோணம், அவிட்டத் தில் இருந்தாலும், கும்ப ராசியில் பூரட் டாதியில் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு தந்தைவழியில் அனுகூலங்கள்தான் ஏற்படுகிறது. எந்தவிதத்திலும் பாதகங்கள் ஏற்படுவதில்லை.

அனுபவரீதியாக பார்க்கும்பொழுது ஒரு ஜாதகத்தில் சூரியன், ராகு சேர்க் கைப் பெற்றிருப்பது- அதிலும் குறிப்பாக சூரியனுக்குமுன்பு ராகு இருப்பது அல்லது சூரியன், கேது சேர்க்கைப் பெற்றிருப்பது, சூரியனுக்குமுன்பு கேது இருப்பது தந்தையை பாதிக்கக்கூடிய அமைப்பாகும். தந்தைக்கு உடல் உபாதைகளோ அல்லது ஜாதகருக்கும் தந்தைக்கும் இருக்கக்கூடிய ஒற்றுமை பாதிக்கக்கூடிய நிலையோ உண்டாகும்.

அடுத்து சூரியன், சனி சேர்க்கைப் பெற்றிருந்தாலும், சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதியில் இருந்தா லும் தந்தைக்கு அவ்வளவு சிறப்பென கூறமுடியாது.

ஒரு ஜாதகத்தில் சூரியன் நீச ராசியான துலாத்தில் இருந்தால் கெடுதியா என கேட்கிறார்கள். அப்படிப் பார்க்கும்பொழுது துலாத்தில் இருக்கக்கூடிய சூரியன் சித்திரை 3, 4-ஆம் பாதத்தில் இருந்தாலும், விசாகம் 1, 2, 3-ஆம் பாதத்தில் இருந்தாலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. அதுவே ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் இருந் தால் அதிகப்படியான பாதிப்புகளை உண்டாக்கு கிறது.

தந்தை கிரகமான சூரியனின் வீடான சிம்ம ராசியில் சனி அல்லது ராகு அமையப்பெற்றால் அது தந்தைக்கும், தந்தைவழி உறவினர் களுக்கும் சாதகமற்ற அமைப்பாகும். தந்தைவழி உறவினர்கள், பங்காளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நிலை உண்டாகிறது. எந்தவொரு ஜாதகத்தில் சூரியன்- ராகு அல்லது சனி தொடர்போடு இருக்கிறதோ, அடுத்து சிம்ம ராசியில் சனி, ராகு அமையப்பெற்றிருக்கிறதோ அவர் களுக்கு தந்தைவழி உறவினர்களிடம் ஒற்றுமை சிறப்பாக இருக்காது.

தாய் காரகன் சந்திரனும், தாய் ஸ்தானமென்று சொல்லக்கூடிய 4-ஆம் வீட்டு அதிபதியும் பலமாக இருந்தால் தாய்க்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், தாய்வழியில் அனுகூலங்கள் ஏற்படுகிறது. ஒரு ஜாதகத்தில் நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள் அமையப்பெற்றாலும், ஜாதகத்தில் சந்திரன், சனி அல்லது ராகு- கேது சேர்க்கைப் பெற்றாலும் தாய்க்கு சில சோதனைகள் உண்டாகின்றன.

ஒரு ஜாதகத்தில் சந்திரன், ராகு- கேது சேர்க்கைப் பெற்றோ, ராகு- கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்றோ இருந்தால் அந்த ஜாதகரை நினைத்து அந்த ஜாதகரின் தாய் மிகவும் கவலைப் படுகிறார். அந்த ஜாதகர் நல்லநிலை அடைவாரா, ஜாதகர் தனக்கு உதவிகரமாக இருப்பாரா என ஒரு அச்ச உணர்வுடனேயே வாழக்கூடிய நிலையும், தாய்க்கு கடைசிவரை மனக் கவலை தரக்கூடிய ஜாதகமாகவே இருக்கிறது.

அதுபோல கடக ராசியில் சனி அல்லது ராகு ஒரு ஜாதகத்தில் அமையப்பெற்றால் அந்த ஜாதகருக்குத் தாய்வழி உறவினர்வகையில் ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகிறது.

ஒரு ஜாதகத்தில் புதன் தாய்மாமனைக் குறிக்கக்கூடிய கிரகமாகும். புதன் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும், கேந்திர, திரிகோணத்தில் வலுவாக இருந்தாலும் மாமன்வழியில் அனுகூலங்கள் உண்டாகின்றன. அதுவே புதன் வக்ரம் பெற்றிருந்தால் மாமன்வழியில் பகை, நிம்மதிக் குறைவுகள் உண்டாகின்றன.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் சகோதர காரகனாவார். செவ்வாய் கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் வலுவாக இருந்தால் உடன்பிறந்த சகோதரரிடம் ஒற்றுமை சிறப் பாக இருக்கிறது. அதுவே செவ்வாய்- சனி, ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றிருந்தாலும், செவ்வாய் வக்ரம் பெற்றிருந்தாலும் உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகின்றன. வேலைக்குச் செல்பவராக இருந்தால் பணிபுரியுமிடத்தில் தங்களைவிட வயது குறைவான ஆண்களால் சில பிரச்சினைகளை சந்திக்கும் நிலை உண்டாகிறது.

அனுபவரீதியாகப் பார்க்கும்பொழுது சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் மனைவியையும், வயது குறைவான பெண்கள், இளைய சகோதரியையும் குறிக்கும். ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல வலுவான நிலையில் இருந்தால் மனைவியால் அனுகூலங்கள், இளைய சகோதரிமூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகிறது. அதுவே சுக்கிரன் வக்ரம் பெறக்கூடிய ஜாதக நேயர்களுக்கு மணவாழ்க்கைரீதியாக சோதனைகள், இளைய சகோதரிவகையில் தேவையற்ற கவலைகள் உண்டாகிறது.

மிகவும் நுட்பமாகப் பார்க்கும்பொழுது சுக்கிரன் வக்ரம்பெற்ற ஒரு ஆணுக்குத் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருப்பதில்லை. சில இடங்களில் அந்த ஆணுக்கு அமையக்கூடிய மனைவி வயது மூத்த பெண்ணாக அமையக்கூடிய நிலை உண்டாகிறது. வயது மூத்த பெண்ணைத் திருமணம் செய்யும் நபர்களுக்கு மண வாழ்க்கை நன்றாக அமைகிறது. அது போல பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் களத்திரகாரகன் என்பதால், செவ்வாய் பலமாக இருந்தால் நல்லவொரு ஆரோக்கிய மும், திடகாத்திரமான உடலமைப்பும், சிறப் பான இல்லற வாழ்க்கையும், உடன்பிறந்த வர்களால் அனுகூலங்களும், கணவரால் சாதகமான பலன்களும் ஏற்படுகின்றன.

அதுவே செவ்வாய் வக்ரம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் அல்லது ஜாதகிக்கு உடல் உபாதைகள், இல்லற வாழ்வில் பிரச்சினை, மகிழ்ச்சியற்ற நிலை- குறிப்பாக ஹார்மோன் பாதிப்புகள் உண்டாகின்றன.

ஒரு ஜாதக அமைப்பின்படி தாய்- தந்தையர் இருவரும் ஒற்றுமையாக இருப்பார்களா என பார்க்கும்பொழுது, தாய்- தந்தை கிரகங்கள் சர்ப்ப கிரகச் சேர்க்கை, சாரம் பெற்றிருந்தாலும், சனி சேர்க்கை அல்லது சாரம் பெற்றிருந்தாலும் தாய்- தந்தைக்கு சில சோதனைகள் ஏற்படுகின்றன. இருவருக்குள் ஒற்றுமைக் குறைவுகள், நிம்மதிக் குறைவு ஏற்படுகிறது.

ஒரு ஜாதகத்தில் ராகு- கேது பிடிக்குள் சந்திரன் அல்லது சூரியன் இருவரில் ஒருவர் அமையப்பெற்று, ராகு- கேது பிடிக்கு வெளியே ஒரு கிரகம் அமையப் பெற்றிருந்தால் தாய்- தந்தையர் இருவருக் குள், அந்த ஜாதகர் பிறந்ததற்குப் பிறகு ஒற்றுமையில்லாத நிலை, நிம்மதிக் குறைவுகள் ஏற்படுகின்றன. பொதுவாக சூரியன், சந்திரன் பாதிக்கப்பட்ட நபர்கள், உறவினர் கள் தொடர்பில்லாமல் வாழ்க்கை நடத்தும் பொழுது தங்களது வாழ்க்கைப் பாதை சிறப் பாக அமைகிறது.