னித வாழ்க்கையில் கிரகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அவை சஞ்சாரம் செய்யும் ராசிகளுக்கேற்ப ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறுபடுகிறது.

பன்னிரண்டு ராசிகளே ஒவ்வொருவருக்கும் ராசியாகவும் லக்னமாகவும் அமைகின்றன. ஒருசிலருக்கு அவர்கள் பிறந்த நேரத்தை வைத்து, ராசியும் லக்னமும் ஒன்றாகவே அமைந்துவிடும்.

ஒருவர் பிறந்த ராசி, லக்னம் எப்படியிருந்தாலும், அந்த நேரத்தில் மற்ற கிரகங்கள் எந்த எந்த ராசியில் சஞ்சரித்துக்கொண்டிருந்தார்கள்- அதாவது, இவர்களுடைய ராசி, லக்னத்திலிருந்து எந்த வீடுகளில் சஞ்சரித்துக்கொண்டிருந்தார்கள் என்பதை வைத்துதான் ஒவ்வொருவருக்கும் பலன்கள் உண்டாகின்றன.

ஒருவர் பிறந்த நட்சத்திரத்தை வைத்து அவருக்கு தசாபுக்தி தொடங்குகிறது. அந்த தசாபுக்தி அவர் பிறந்த நேரத்தில், அந்த நட்சத்திரத்தின் இருப்பினை வைத்துக் கணக்கிடப்படுகிறது.

Advertisment

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தசாபுக்தி என்பது பெரும்பங்கு வகிக்கிறது. இந்த தசாபுக்தி ஒருசிலருக்கு சாதகமான பலன்களை வழங்கக் கூடியதாகவும், ஒருசிலருக்கு பாதகமான பலன்களை வழங்கக்கூடியதாகவும் இருக்கும்.

அதேபோல் கிரகங்கள் என்று பார்க்கும்போது, இரண்டேகால் நாட்கள் மட்டுமே ஒரு வீட்டில் சஞ்சரிப்பவர் சந்திர பகவான். முப்பது நாட்கள் ஒரு வீட்டில் சஞ்சரிப்பவர் சூரிய பகவான்.

அதேபோல் புதன், சுக்கிரனும் ஒரு வீட்டில் முப்பது நாட்கள்தான் சஞ்சாரிப்பார்கள். செவ்வாய் பகவான் ஒரு வீட்டில் நாற்பத்தைந்து நாட்களும், குரு பகவான் ஒரு ஆண்டும், ராகு- கேது இருவரும் ஒன்றரை ஆண்டுகளும் ஒரு வீட்டில் சஞ்சாரம் செய்வார்கள். மிக அதிகபட்சமாக சனிபகவான் ஒரு வீட்டில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். இதன்காரணமாகத்தான் சனிப்பெயர்ச்சியைக் கண்டு நாம் அதிக அளவில் அச்சப்படுகி றோம்.

Advertisment

சனிபகவான் சாதகமான இடத்தில் சஞ்சரிக்கும் நிலையில் சாதகமான பலன்களும், பாதக மான இடத்தில் சஞ்சரிக்கும்போது பாதகமான பலன்களும் ஒவ்வொரு ராசியினருக்கும் உண்டாகும்.

ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கைக்கு, அவர்களுடைய வாழ்க்கைக் காலம் முழுவதும் வாழ்வதற்குரிய வழியினை விதியானது கிரகங்களின் வழியே உண்டாக்கியே தீரும். எந்தவொரு மனிதரும் அவருடைய விதி முடிவதற்குள் நிச்சயமாக மரணத்தை எட்டிவிட முடியாது. அவர்கள் வாழ்வதற்காகவே கிரகங்களின் வழியாக நன்மைகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விதி.

நான் தொடர்ந்து சொல்லி வருகிற ஒரு தகவல் இது தான்... ஒரு ஜாதகருக்கு எட்டு கிரகங்கள் பாதகமான நிலையில் இருந்தாலும், சந்திரன் ஒரு ராசியில் இரண்டேகால் நாட்கள் சஞ்சரிக்கின்றபோது அந்த ஜாதகருக்கு அவருடைய வாழ்க்கைக்குத் தேவையான வசதியினை வழங்கிவிட்டுச் செல்வார்.

dd

இப்படிப் பார்க்கின்றபோது சந்திரன் 1, 3, 6, 7, 10, 11 ஆகிய ஆறு வீடுகளில் சஞ்சரிக்கும்போது அந்த ஜாதகருடைய வாழ்க்கைக் குத் தேவையான வசதியினை வழங்கிவிட்டுச் செல்வார்.

அதேபோல் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு ரகசியம் சூரிய பகவானின் சஞ்சாரம். ராஜகிரகமான சூரியன் ஒரு ஆண்டுக்கு நான்கு மாதங்கள் அனைத்து ஜாதகருக்கும் நன்மையான பலன்களை வழங்குவார். எப்படியென்றால் ஒவ்வொருவரின் ராசிக்கும் 3, 6, 10, 11-ஆம் ராசிகளில் சூரியன் சஞ்சரிக்கும்போது அந்த ஜாதகருக்கு யோகமான பலன்களை வழங்குவார். அரசுவழியில் நன்மைகளை உண்டாக்குவார். செல்வாக்கினை அடையவைப்பார். இப்படி ஒவ்வொரு கிரகமும் அவர்கள் சஞ்சரிக்கும் வீடுகளுக்கேற்ப யோகப் பலன்களை வழங்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் மிக அதிகபட்சமான பயமென்பது யாருக்குமே தேவையில்லாத ஒன்று. வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சங்கடமும், நன்மைகளுமாய் மாறிமாறி வரத்தான் செய்யும். நவீனமயமாகி வரும் இக்காலத்தில் மனிதனுடைய தேவைகளும் ஆசைகளும் மிக அதிகபட்சமாகி விட்டதால் அதற்காக பணத்தேவை என் பது அதிகரித்து விட்டது.

நமக்கு மட்டுமல்ல; நம் பிள்ளை களுக்கு, அவர்களுடைய பிள்ளைகளுக் கென்று சொத்துகள் சேர்க்கவேண்டும்; ஆடம்பரமாக வாழவேண்டும்; நகைகள் வாங்கவேண்டும்; ஒரு வீட்டிற்கு நான்கு வீடு கட்டவேண்டும்; ஒரு காருக்கு நான்கு கார் வாங்கவேண்டும் என்ற எண்ணம் பலரது மனதிலும் ஆழமாக வேரூன்றிவருகிறது.

அந்த எண்ணம்தான் மனிதனை ஓட வைக்கிறது. எதிர்ப்பார்ப்புகளை அதிகரிக் கிறது.

இந்த நிலையில்தான் பலரும் தம் சக்தியை உணராமல் ஆசைபட்டு நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இவர்களுக்கெல்லாம் இவர்கள்மீதுள்ள நம்பிக்கை இவர்களின் பிள்ளைகள்மீது இல்லாமல் போவதுதான். அவர்கள் அவர்களுடைய தேவைகளுக்காக தம்மைப்போலவே சம்பாதிப்பார்கள்; சொத்து சேர்ப்பார்கள் என்ற எண்ணம் இல்லாமல் போய், அவர்களை சோம்பேறி களாக்கி, பணத்தின் அருமையை உணராத வர்களாக்கி, தங்கள் வாழ்க்கையை போர்க்களமாக்கிக் கொள்வதுடன் விதியையும் ஜாதகத்தையும் நொந்து கொள்கின்றனர்.

ஒவ்வொருவரும் தங்களுடைய நிலையையும், வாழ்க்கையையும் சரியாகப் புரிந்துகொண்டால், அவர்கள் வாழ்வதற்குரிய அடிப்படை வசதிகளை கிரகங்கள் நிச்சயமாக செய்துகொண்டுதான் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

இன்னும் சொல்லப்போனால் சந்திரன் மாதத்தில் சரிபாதியான நாட்கள் நன்மைகள் வழங்கியும், சூரியன் ஒரு ஆண்டில் 120 நாட்கள் அனைத்து ஜாதகருக்கும் நன்மையான பலன்களை வழங்கியும், அதேபோல் மற்ற கிரகங்களான செவ்வாய், புதன், சுக்கிரனும் பெருமளவில் சாதகமான பலன்களை வழங்கியும் ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் வழிகாட்டிக் கொண்டுள் ளனர்.

இதன்காரணமாக, சனிபகவான் பாதகமான இடத்தில் சஞ்சரித்தாலும், ராகு- கேதுவால் தொல்லைகள் நேர்ந்தாலும், குரு பகவானால் பாதகம் உண்டானாலும் வாழ்க்கையை வாழ்ந்திடக்கூடிய அளவுக்கு மற்ற கிரகங்கள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்துகொண்டிருக்கிறது. இதை நாம் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்.

கடைசியாக ஒரு தகவல்... ஜோதிடர் என்பவர் மந்திரவாதியுமல்ல; சாமியுமல்ல. ஒரு மருத்துவர் மருத்துவம் படித்த அறிவை வைத்து வைத்தியம் பார்ப்பதுபோல், ஒரு ஜோதிடர் அவர் கற்ற சாஸ்திரத்தை வைத்து ஒருவருடைய நேரம் எப்படியிருக்கிறது என்பதை சொல்கிறார்; அவ்வளவுதான்!

ஒருவர் தன்னுடைய நேரம் எப்படி யிருக்கிறது- நல்லநேரம் எப்போது வருமென்பதை மட்டும்தான் ஜோதிடரிடம் தெரிந்துகொள்ளமுடியும்.

ஒரு உயிர் பூமியில் உண்டாகிறது என்றாலே கடந்த ஜென்மத்தின் கர்மவினைகளைக் கழிப்பதற்காகத்தான் என்பதால், பெரும் பாலான ஜாதகங்களில் ஏதேனும் ஒரு கிரக தோஷம் இருக்கவே செய்யும். அந்த தோஷத்தின் காரணமாக செயல்களில் தடை, வாழ்க்கையில் பிரச்சினை, திருமணத்தில் பிரச்சினை, உடல்நிலையில் பிரச்சினை என்றிருக்கும்.

இந்த தோஷங்கள் பற்றி தெரிந்த ஜோதிடர்களில் ஒரு வகையினர் நேர்மையாக செயல்பட்டு அந்த கிரகத்தின் தலத்திற்கு பரிகாரத்திற்குரிய வழிமுறையுடன் ஜாதகரை அனுப்பிவைக்கின்றனர்.

ஒருசிலர், கிரகங்கள் இவர்கள் வீட்டு வேலைக்காரர்கள்போல் நினைத்து, "நானே பரிகாரம் செய்கிறேன்... பூஜை செய்கிறேன்' என்று ஏமாற்றி காசு பறித்து பாவத்தை சுமக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.

யாரால்- எந்த கிரகத்தால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோமோ அந்த கிரகம் உயிர்ப்புடனுள்ள ஆலயத்திற்குச் சென்று வணங்கி வழிபடுவதுதான் கிரகப் பரிகாரமாகும்.

கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சக்தியுண்டு; பணியுண்டு. கிரகத்தால் பாதிப்பு என்கிறபோது அந்த கிரகத்தின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதால் பாதிப்புகள் குறையும்.;

செல்: 94443 93717