மனிதன் வாழ்வதற்கு அடிப்படையானது உயிர்.
அதன் பிறகு ஒவ்வொரு மனிதருக்கும் அத்தியாவசிய மானது பணம்.
ஒருவரிடம் பணம் மட்டும் இருந்துவிட்டால் பெற்ற தாய் தந்தையைத் தவிர மற்ற அனைத்தையும் விலை கொடுத்து வாங்கிவிட முடியும்.
இதுதான் நாம் வாழும் சமூகத்தின் நிலையாக உள்ளது.
மருத்துவம், செல்வாக்கு, அந்தஸ்து, பதவி, புகழ், காதல், வாழ்க்கை என்று எதை எடுத்துக்கொண்டாலும் அங்கே அடிப்படையாக இருப்பது பணம் மட்டும்தான்.
ஒருவரிடம் பணம் இருக்கும்போது அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கும். அவர் சொல்வதை எல்லாம் விருப்பமில்லை என்றாலும் கேட்டுக் கொண்டிருக்கும். அவருக்கு அடிபணிந்து நடந்துகொண்டிருக்கும். இன்றைய உலகம் இப்படித்தான் இருக்கிறது.
இந்த நேரத்தில் நம்முடைய பிறந்த ஜாதகத்தை வைத்து ஒவ்வொருவருக்கும் பணம் வரக்கூடியநாள் எந்தநாள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியுமா? என்று கேட்டால் சுலபமாக தெரிந்து கொள்ள முடியும் என்பேன்.
இதற்கு நம்முடைய பாரம்பரிய ஜோதிட சாஸ்திரமே நமக்கு வழிகாட்டுகிறது.
சரி, அதை எப்படி நாம் தெரிந்து கொள்வது? என்று நீங்கள் கேள்வி கேட்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் மூலம், அடிப்படை என்பது 12 லக்னங்கள், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள்தான்.
நட்சத்திரங்களும் கிரகங்களும்
இந்த 27 நட்சத்திரங்களுக்கும் அதிபதிகளாக இருப்பவர்கள் நவ கிரகங்களான ஒன்பது கிரகங்கள்தான். அஸ்வினி முதல் ரேவதி வரையிலான இந்த 27 நட்சத்திரங்களையும் நவ கிரகங்களான ஒன்பது கிரகங்களும் மூன்று, மூன்று நட்சத்திரங்களாக தமக்குள் கொண்டிருக்கின்றன.
சந்திரன்
மனிதன் வாழ்வதற்கு அடிப்படையானது உயிர்.
அதன் பிறகு ஒவ்வொரு மனிதருக்கும் அத்தியாவசிய மானது பணம்.
ஒருவரிடம் பணம் மட்டும் இருந்துவிட்டால் பெற்ற தாய் தந்தையைத் தவிர மற்ற அனைத்தையும் விலை கொடுத்து வாங்கிவிட முடியும்.
இதுதான் நாம் வாழும் சமூகத்தின் நிலையாக உள்ளது.
மருத்துவம், செல்வாக்கு, அந்தஸ்து, பதவி, புகழ், காதல், வாழ்க்கை என்று எதை எடுத்துக்கொண்டாலும் அங்கே அடிப்படையாக இருப்பது பணம் மட்டும்தான்.
ஒருவரிடம் பணம் இருக்கும்போது அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கும். அவர் சொல்வதை எல்லாம் விருப்பமில்லை என்றாலும் கேட்டுக் கொண்டிருக்கும். அவருக்கு அடிபணிந்து நடந்துகொண்டிருக்கும். இன்றைய உலகம் இப்படித்தான் இருக்கிறது.
இந்த நேரத்தில் நம்முடைய பிறந்த ஜாதகத்தை வைத்து ஒவ்வொருவருக்கும் பணம் வரக்கூடியநாள் எந்தநாள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியுமா? என்று கேட்டால் சுலபமாக தெரிந்து கொள்ள முடியும் என்பேன்.
இதற்கு நம்முடைய பாரம்பரிய ஜோதிட சாஸ்திரமே நமக்கு வழிகாட்டுகிறது.
சரி, அதை எப்படி நாம் தெரிந்து கொள்வது? என்று நீங்கள் கேள்வி கேட்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் மூலம், அடிப்படை என்பது 12 லக்னங்கள், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள்தான்.
நட்சத்திரங்களும் கிரகங்களும்
இந்த 27 நட்சத்திரங்களுக்கும் அதிபதிகளாக இருப்பவர்கள் நவ கிரகங்களான ஒன்பது கிரகங்கள்தான். அஸ்வினி முதல் ரேவதி வரையிலான இந்த 27 நட்சத்திரங்களையும் நவ கிரகங்களான ஒன்பது கிரகங்களும் மூன்று, மூன்று நட்சத்திரங்களாக தமக்குள் கொண்டிருக்கின்றன.
சந்திரன் ஒரு ராசிக்குள் உள்ள ஒன்பது பாதங்களில் இரண்டேகால் நாட்கள் சஞ்சரிக்கும் நிலையினில் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும்போதும் ஒவ்வொரு ஜாதகருக்கும் ஒவ்வொரு விதமான பலன்களை வழங்குவார் என்றாலும், அந்த இரண்டேகால் நாட்களும் ஒரேவிதமான பலனை அவர் வழங்குவதில்லை. அவர் சஞ்சரிக்கும் நட்சத்திரங்களுக்கேற்ப பலன்கள் இருக்கும்.
இந்த ரகசியத்தை நாம் தெரிந்து கொண்டோம் என்றால் நட்சத்திரங்களின் பலத்தை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
ஒவ்வொருவரிடமும் இரண்டு தன்மைகள் ஒருவர் மேஷ ராசியில் பிறக்கிறார் என்றாலோ, ரிஷப ராசியில் பிறக்கிறார் என்றாலோ, மற்ற மற்ற ராசிகளில் பிறக்கிறார் என்றாலோ அந்த ராசிநாதனுடைய காரகம் மட்டுமே அவரிடம் நிறைந்திருப்ப தில்லை. அந்த ராசியில் எந்த நட்சத்திரத்தில் அவர் சஞ்சரித்துள்ளாரோ அந்த நட்சத்திராதி பதிக்குரிய கிரகத்தின் காரகத்துவமும் அவரிடம் கலந்திருக்கும். அதனால்தான் ஒரே ராசியில் பிறந்தவர்களாக இருந்தாலும் ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயம் இருக்கும்.
தாராபலன்
நம்முடைய ராசி பலன்களை சந்திரன் சஞ்சரிக்கும் ராசியை வைத்து தெரிந்து கொள்ளும் நமக்கு, அப்பலன்களை மிகத் துல்லியமாக தெரிந்து கொள்வதற்காகவே தாரா பலனை நம் முன்னோர்கள் நமக்கு வழங்கியுள்ளனர்.
இதற்கு நீங்கள் பிறந்த நட்சத்திரம் என்ன என்பது தெரிந்தால் மட்டும் போதும். ராசிக்குரிய பலன்கள்போல், நீங்கள் பிறந்த நட்சத்திரத்தை வைத்து அதன் வழியாக அன்றைய நட்சத்திரத்தின் நாளில் எத்தகைய பலன் உண்டாகும் என்பதை நம்மால் மிகச்சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்.
உங்கள் நட்சத்திரத்திற்கு எந்தநாளில் பணம்வரும் என்பதையும் உறுதியாக கூற முடியும்.
உங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கை யிலும் நிறைய எதிர்பார்ப்புகள், தேவைகள் இருக்கிறது. இன்றைய தினம் நமக்குப் பணம் கிடைக்கும்! என்ற நம்பிக்கை யோடும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போயிருக்கும்.
இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட நாளில் நீங்களே எதிர்பார்க்காத போது உங்கள் கைக்கு பணம் வரும். அந்த நாள் எந்த நாளாக இருக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் உங்களுடைய வாழ்க்கை மேலும் வளமாகும்.
ஆரம்பத்தில் நான் சொன்னதுபோல் உங்களுடைய பிறந்த நட்சத்திரம்தான் அதற்கு அடிப்படையானது.
பொதுவாக, உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6, 11-ஆம் ராசிகளில் சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களிலும், உங்கள் ராசிக்கு 1 மற்றும், 2, 3, 12-ஆம் ராசிகளில் சுக்கிரன் சஞ்சரிக்கும் நாட்களிலும் உங்களுக்கு பணம்வரும்.
ஆனால், இந்த நாளில் உறுதியாக நமக்குப் பணம் வரும் என்பதை நமக்குத் தெரிவிப்பதுதான் தாராபலன்.
இப்போது 27 நட்சத்திரங்களையும் பார்ப்போம். அந்த 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் எந்தநாளில் பணம்வரும் என்பதையும் கூறுகிறேன். அந்தநாட்களில் உறுதியாக உங்களுக்குப் பணம்வரும்!
இந்த ரகசியத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் அந்த நாளை நம்பிக்கையோடு எதிர்பார்த்திருக்கலாம்.
27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் பணம்வரும் நாட்கள் முதன்மையாக கேதுவின் நட்சத்திரங் களான அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத் திரங்களில் பிறந்தவர்களுக்கு எந்த, எந்த நாட்களில் பணம் வரும் என்றால் சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சரிக் கும் நாட்களில் உறுதியாக பணத்தை எதிர் பார்க்கலாம். அந்த நாட்களில் பணத்தை நீங்கள் எதிர்பார்க்காமல் இருந்தாலும், உங்களுக்குப் பணத்தேவை இல்லாமல் இருந்தாலும் உங்கள் கைக்கு ஏதேனும் ஒரு வழியில் பணம் வரும்.
அடுத்து, சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங் களில் பிறந்தவர்களுக்கு எந்த, எந்த நாட்களில் பணம்வரும் என்றால், சூரியனின் நட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களில் நீங்கள் எதிர்பார்க்காமல் இருந்தாலும், அந்த நாட்களில் உங்கள் கைக்கு பணம் வரும்.
அடுத்து, சூரியனின் நட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங் களில் சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களில் எதிர்பார்த்த பணவரவு என்பது உறுதியாக இருக்கும்.
அடுத்து, சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களில் உறுதியாக பணம்வரும்.
அடுத்து, செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களில் எதிர்பார்த்த பணம் உறுதியாக வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
அடுத்து, ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங் களில் பிறந்தவர்களுக்கு, குருவின் நட்சத்திரங் களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களில் எதிர்பார்த்திருந்தாலும் சரி, எதிர்பார்க்காமல் இருந்தாலும் சரி உறுதி யாக பணம் வரும்.
அடுத்து, குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட் டாதி ஆகிய நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களில் பண வரவு உறுதியாக இருக்கும்.
அடுத்து, சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங் களில் பிறந்தவர்களுக்கு, புதனின் நட்சத்திரங் களான ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும். உறுதியாக பணவரவு இருக்கும்.
அடுத்து, புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங் களில் பிறந்தவர்களுக்கு, கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களில் கண்டிப்பாக பணவரவு இருக்கும்.
உங்களுக்கு தசாபுத்தி சாதகமாக இல்லை என்றாலும், எட்டு கிரகங்கள் எதிர்மறையாக சஞ்சரித்தாலும் உங்கள் வாழ்நாள் வரையில் நீங்கள் வாழ்வதற்குரிய அடிப்படைத் தேவை களை சந்திரனின் சஞ்சாரம் உங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும்.
செல்: 94443 93717