மகர லக்ன 5-ஆமிட அதிபதி ரிஷப சுக்கிரன்.
மகர லக்ன 5-ல் சனி சென்ற ஜென்மத்தில், அரசு பஞ்சாயத்து அல்லது அரசர் களின் பணி, இவை சம்பந்தமாக நிறைய பணத்தை ஏமாற்றி இருந்திருப்பீர்கள். தந்தையின் சொத்து அனைத்தையும் தன் வசமாக்கிக்கொண்டு, பின் அவர் சாகுமளவுக்கு தொல்லை கொடுத்திருப்பீர்கள். நிறைய பெண்களை மறுபடியும் மறுபடியும் திருமணம்செய்து, அத்தனையையும் இழந்திருப்பீர்கள். மூத்த சகோதரனின் மனை, சொத்தை புடுங்கிவைத்து ஆண்டு அனுபவித்திருப்பீர்கள். உங்கள் தாயாரை மிக அலட்சியப்படுத் திருப்பீர்கள்.
இந்த ஜென்மத்தில், அரசு, அரசாங்க விஷயம், எப்போதும் உங்களுக்கு எதிராக செயல்படும். நீங்கள் செய்த முதல் திருமணம் நிலைக்காது. மறுமணம் செய்யும் நிலையுண்டு. காதல் திருமணம் செய்து மிக அவஸ்தைபடுவீர்கள். அந்தப் பெண் மறுமண பெண்ணாக அல்லது மறுமண ஆணாக இருக்கக்கூடும். அரசு வேலை கனவில்தான் கிடைக்கும்.
மகாலட்சுமி தாயாருடன்கூடிய பெருமாளை வணங்கவும்.
மகர லக்ன 5-ல் செவ்வாய்
சென்ற ஜென்மத்தில், நிறைய பேரிடம் "அதிக விலைக்கு உங்கள் மனையை வாங்கிக்கொள்கிறேன்'' என சத்தியம்செய்து வாங்கி, ஒரு பைசாகூட கொடுக்காமல் இருந்திருப்பீர்கள். ஒரே வீட்டில், மனைவியையும், ஆசைப் பெண்ணையும் சேர்த்து குடித் தனம் செய்து, மனைவியின் வயிற்றெரிச்சலைக் கொட்டி யிருப்பீர்கள். பூர்வீக நிலத்தில் கிடைத்த, புதையல் செல்வத்தை, உங்கள் உடன் பிறந்தவர்களுக்கு தெரியாமல், கொடுக்காமல், தானே மறைத்து அனுபவித்திருப்பீர்கள்.
இந்த ஜென்மத்தில், அரசாங்கம் உங்கள் நிலத்தை, அடி மாட்டு விலைக்கு கையகப்படுத்தும். காதல் ஃபுல் ஸ்பீடில் போகும் போது, உங்கள் மூத்த சகோதரன் வந்து, அடிபின்னி எடுத்து, காதல் விஷயத்துக்கு மூடுவிழா பண்ணிவிடுவான். கட்டிக்கிட்ட வளும் அடி பிச்சு எடுப்பாள். வச்சுக்கிட்டவளும் வச்சு செய்வாள். அடி தாங்காமல் எப்போதும் பயணம் செய்துகொண்டே இருப்பீர் கள். தொழில் விஷயம் என்று கூறிவிட்டு, அதில் பாதி நேரம் லவ்ஸ் விடுவதில் நேரம் செலவழிக்க, பயணம் செய்வீர்கள். வள்ளி தெய்வானை உடனுறை முருகரை வணங்கவும்.
மகர லக்ன 5-ல் ராகு
சென்ற ஜென்மத்தில், இவரது தந்தை மிகவும் ஒழுக்கமற்று, குலகௌரவம் பாழாகும்விதத்தில் நடந்திருப்பார். ஜாதகர், அரசாங்கத்துக்கு எதிரான தீவிர செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். இவர் தாயையும், மனைவியையும், தொழி-ல் பங்குதாரக சேர்த்துத் தொழில் ஆரம்பிக்கிறேன் என்று கூறி, முழுமையாக ஏமாற்றி இருப்பார். இந்த ஏமாற்றத்தினால், அவர்கள் தவறான முடிவை தேர்ந்தெடுத்திருப்பர்.
இந்த ஜென்மத்தில், இவரது தந்தையால் பயன் இருக்காது. இவரது தாயும், மனைவியும் போடுகிற சண்டையில், இவருக்கு பல சமயங்களில், எதையாவது தின்று, ஏதாவது செய்துவிடலாமா எனும் அளவுக்கு டார்ச்சர் உண்டாகிவிடும். பிறஇன, பிறமத மருமகளால், மிகுந்த மன உளச்சல்கள். கௌரவ குறை பாட்டுக்கு ஆளாவார். இவர் அரசிய-ல் இருப்பின், மனை, வீடு சம்பந்த வில்லங்கத்துக்கு ஆளாவார்.
சென்னை காளிகாம்பாளை வணங்கவும்
மகர லக்ன 5-ல் கேது
சென்ற ஜென்மத்தில் உங்களின் காதல் ஈடுபாடு, அரசவை, அரசாங்க பதவியில் இருந்து தூக்கியடித்து, வெளியேற்றிருக்கும். உங்கள் தாயாருக்கும், மனைவிக்கு மிடையே கௌரவச் சண்டை ஏற்பட்டு, தாயார் வீட்டைவிட்டு விலகியிருப்பார். மூத்த சகோதரனின் வெகு கௌரவத்தையும், அதிசெல்வத்தையும் கண்டு மனம் வெதும்பி, வீட்டைவிட்டு வெளியேறி இருப்பார்.
இந்த ஜென்மத்தில், பூர்வீக சொத்து என்ற ஒன்று இல்லாமல் போகலாம். அல்லது இருந்தாலும், அதனால் அரசு இம்சைக்கு ஆளாகலாம். உங்கள் காதல், உங்களை தொழில் செய்யவிடாமல் செய்துவிடும். உங்களின் மண வாழ்க்கை, உங்கள் மூத்த சகோதரன் அல்லது மறைவான தொடர்புமூலம் விவாகரத்து ஆகிவிடும்.
விநாயகரை மோதகம்கொண்டு வழிபடவும்.
இவ்விதம் மகர லக்ன 5-ஆமிடத்தில் பாபர்கள் இருப்பின், கனக துர்க்கையை வணங்கவும்.
கும்ப லக்ன ஊழ்வினை விளைவுகள்
கும்ப லக்ன 5-ஆமிடம் மிதுன புதன் ஆகும்.
கும்ப லக்ன 5-ல் சனி
போன ஜென்மத்தில், இவர், தனது இளைய சகோதரனின் ஆரோக்கிய குறைபாட்டைக் காட்டி, வீட்டைவிட்டு துரத்தியிருப்பார். வியாபார முதலீடு விஷயமாக, தனது இளைய சகோதரம் அல்லது தாய்மாமனை சம்பவம் செய்திருப்பார். அரசாங்கம், கோவில், தர்மஸ்தாபன பணத்தை, தன் சொத்துமாதிரி தண்ணீராக செலவழித்திருப்பார்.
இந்த ஜென்மத்தில் கல்வி தடையுண்டு. உடன்பிறப்பு களுடன் சதா சண்டை வரும். கள்ளக்காதல் சம்பந்தமாக, கொலைவரை செல்லக்கூடும். கையில் பணம் தங்கவே தங்காது. எப்போது பணிபர்ஸ் கா-யாகவே இருக்கும்.
பெருமாளை, துளசி மாலை கொண்டு வணங்கவும்.
கும்ப லக்ன 5-ல் செவ்வாய்
சென்ற ஜென்மத்தில் பூர்வீக, சொத்து பத்திரங்களை தன் பெயருக்கு மட்டும் அனு பவிக்கும்படி மாற்றி எழுதியிருப்பார். உடன் பிறந்தவர்களின், மேன்மையான கல்வி நிலை கண்டு இவர் மிக மனம் வெதும்பி இருப்பார். இதனால் அவர்களை சுத்தமாக பிடிக்காமல் போக, எதிரிகளாக பாவித்து, மறைமுக கொடுஞ்செயல் செய்திருப்பார். தனது குருவின் வீட்டு பெண்களிடமே தவறாக நடந்திருப்பார். அது மல்யுத்தம் போன்று வீர விளையாட்டு சொல்-த்தரும் ஆசான் இல்லறமாக இருந்திருக்கும். எல்லாத்தையும் பண்ணி விட்டு "எல்லாத்தையும் மேலே இருக்கிறவன் பாத்துப்பான்'' என அசால்ட்டா இருந்திருப்பார்.
இந்த ஜென்மத்தில், அறிவுத்திறன் குறைவால், படிப்பு மண்டையில் ஏறாது. அதனால் அவ்வப்போது வீட்டைவிட்டு ஓடிவிடுவார். பிறமத, பிறஇன பெண்களை லவ் பண்ணினாத் தான் ஆச்சு என வம்படியாக கட்டாயப்படுத்து வார். இதன்விளைவாக மறைந்து வாழ்வது அல்லது தர்ம அடி கிடைக்கும். இவர் அரசியல் வாதியாக இருந்தால், சுயலாபத்துக்காக அடிக்கடி கட்சி மாறுவார். பிறர் இதனை நக்கலடித்தாலும், இது ஐயாவோட மூளைடா எனக் கெத்து காட்டுவார்.
நரசிம்மரை வணங்கவும்.
சென்ற ஜென்மத்தில், தொழிலில், பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூட இருப்பவர் களை போட்டுத் தள்ளி இருப்பீர்கள். இவரின் புத்தி மிக அசூயையாக, விகாரமாக இருந்திருக்கும். இயற்கைக்கு மாறான விஷயங் களில் ஈடுபட்டிருப்பார். கெட்ட நண்பர் களுடன் கூடி, ஒழுக்கத்துக்கு புறம்பான பலான பலான செயல்களில் ஈடுபட்டு, குலப் பெருமையை நாசம் செய்து, குடும்பத்தை நொந்து போகச் செய்திருப்பார்.
இந்த ஜென்மத்தில், கல்வி சார்ந்த ட்யூசன் சென்டர் போன்ற படிப்புத் தொழில் ஆரம்பித்து, நிறைய கட்டணமும், கொஞ்சம் சில்மிஷமும் செய்வார். போ- கல்வி சான்றிதழ், தொழில், விளையாட்டு சம்பந்த சர்டிபிகேட் தயாரிப்பதில் கில்லாடி. யாரும் இவரை கண்டுபிடிக்கவே இயலாது. போதை, மது, காதல் இவை எல்லாம் மானாவாரியாக இருக்கும். இவர் அரசிய-ல் இருந்தால், தன் தலைவரின் வீட்டிலேயே ஒரு செட்டப்பை உருவாக்கிவிடுவார். சும்மா கெத்துதான்.
பாம்பு சயனித்திலுள்ள பெருமாளை வணங்கவும்.
கும்ப லக்ன 5-ல் கேது
சென்ற ஜென்மத்தில், பிறமத பெண்ணை காத-ப்பதால், ரத்தம் வருமளவிற்கு யுத்தம் ஏற்பட்டு, ஊரைவிட்டு ஓடும் அளவிற்கு நிலைமை உண்டாகியிருக்கும். சொத்துக் காக, இளைய சகோதரனை போட்டுத் தள்ளி யிருப்பார். அல்லது பிற மனிதர்களின் வஞ்சத்தால், விஷம் உட்கொண்டிருக்கக் கூடும். தான் தலைவனாகும் அளவற்ற ஆசை யால், தன் குருவை மடத்தைவிட்டு, நீங்கும்படி, வில்லங்கம், குசும்பு செய்திருப்பார்.
இந்த ஜென்மத்தில் சுத்தமாக படிப்பு வராமல், குழந்தை தொழிலாளியாகி, வேறிடம் செல்வீர்கள். ஒரு வௌங்காத காதல், விபரீதம் செய்ய வாய்ப்பு ஏற்படும். காதை திருகி, கண்டிப்புடன் சொல்-க் கொடுக்கும் வாத்தியாரை, செம சாத்து சாத்தி விட்டு, மாநிலம் விட்டு வேறு மாநிலம் சென்றுவிடுவீர்கள்.
விநாயகரை வணங்கவும்.
இவ்விதம் கும்ப லக்ன 5-ல் பாவிகள் இருப் பின், திருக்கோஷ்டியூர் சென்று இருந்த, நின்ற, சயனித்தப் பெருமாளை வணங்கவும்.
மீன லக்ன 5-ஆமிட ஊழ்வினை விளைவுகள்
மீன லக்ன 5-ஆமிடம் கடக சந்திரன் ஆகும்.
மீன லக்ன 5-ல் சனி
இங்கு சனி இருப்பின் அவர் புனர்பூச யோகம் பெறுவார்.
சென்ற ஜென்மத்தில், காதல் செய்வதே தொழிலாக இருந்திருக்கும். முதலீடுசெய்த தொழிலை கவனிக்காமல், காத-கள் பின் னால் சுற்றுவதைப் பார்த்த உங்கள் தாயார் நொந்துபோய் பிரிந்திருப்பார். விவசாயம், தண்ணீர் சம்பந்த தொழில்களில் மறுபடியும், மறுபடியும் முதலீடுசெய்து, திரும்ப திரும்ப தோல்வியை சந்தித்திருப்பீர்கள். வருகிற விவசாய வருமானத்தை, கண்ட, கண்ட தொடுப்புகளிடம் கொடுத்து விரயம் செய்வதால், தாயும், தாரமும் சேர்ந்து இவரை விரட்டி இருப்பர்.
இந்த ஜென்மத்தில் இவர் அரசியல், தொழில், வேலை என எதில் ஈடுபட்டாலும் அடிக்கடி அதனை மாற்றிக்கொண்டே இருப்பார். தாமதமான குழந்தைப் பேறுவுண்டு.
இவர் கற்ற கல்வி, பெற்ற அறிவுமூலம் கிடைக்கும் பலன் தாமதமாகும். இவர் காதல் திருமணம் செய்தால், அதி-ருந்து விலகி இரண்டாவது திருமணம் செய்ய வாய்ப்பு வரும்.
சாந்தமான அம்பாளை வணங்கவும்.
மீன லக்ன 5-ல் செவ்வாய்
போன ஜென்மத்தில் குலப் பெருமையை சீரழிக்கும்விதமாக செயல்பட்டு, குடும்ப கௌரவத்தை பாழாக்கியிருப்பீர்கள். நீங்கள் வயதான பெண்ணை திருமணம் செய்வதால், சகோதரர்களால் தாக்கப்பட்டு இருப்பீர்கள். தெய்வத்தை நிந்தித்து, பழி பாவங்கள் செய்திருப்பதால், தாயும், மனைவியும் வெகு துன்பத்துக்கு ஆளாகி இருப்பர்.
இந்த ஜென்மத்தில் நீங்கள் செய்யும் எந்தத் தொழிலும் நேர்மை, உண்மை இராது.
அதனால் தொழி-ல் வருமானமும் இருக்காது.
வீட்டில் பார்த்துவைத்த பெண், சரியில்லை என, வேறு ஒரு திருமணம் செய்வீர்கள். உங்க ளின் சில அந்நியாய செயல்கள் உங்களுக்கு, வீடு, தொழில், மனைவி என எல்லாவற்றையும் உங்களிடமிருந்து விலக்கிவிடும்.
நீர் நிலை அருகிலுள்ள முருகனை வணங்கவும்.
மீன லக்ன 5-ல் ராகு
போன ஜென்மத்தில் நீங்கள், தொழில் சார்ந்து, நிறைய கள்ளக் கணக்கு எழுதி ஏமாற்றியிருப்பீர்கள். அடுத்தவர் வயலுக்கு தண்ணீர் பாய்விடாமல், குசும்பு வேலைகள் செய்திருப்பீர்கள். மதுபோதையோடு, மிகவும் கீழ்த்தர வயதுக்கு மூத்த பெண்களோடு, தொடர்புகொண்டு, வருமானம் லாபத்தை இழந்திருப்பீர்கள். தொழில் பங்குதாரரை ஏமாற்றி, அவரின் வீட்டை அபகரித்து இருப் பீர்கள். இவனும், இவனது தாயாரும் சேர்ந்து, பில்-, சூனியம் போன்ற விஷயங்களில் ஈடுபட்டு இருப்பார்கள்.
இந்த ஜென்மத்தில் தொழில் முன்னேற் றம் மிக வேகமாக இருக்கும். இதனை கண்டு பொறாமை கொள்ளும் உறவினர்கள், இவருக்கு எதிர்மறை செயல்கள் செய்து பைத்தியமாக்கி விடுவர். திருமணம், மீண்டும் மீண்டும் செய்யும்படியான நிலை இருக்கும். காதல் விஷயமும் நிறைய மாற்றம் பெறும். இவருக்கு நிறைய விஷயங்கள் இரட்டிப்பு இரட்டிப்பாக அமையும். தாயார், மனைவி, சின்னவூடு, கல்வி, தொழில், குழந்தைகள் என எல்லாம் இரட்டையாக அமையும்.
சமயபுரம் மாரியம்மனை வணங்கவும்.
மீன லக்ன 5-ல் கேது
சென்ற ஜென்மத்தில், தொழில் விஷயமாக மனைவி, குழந்தைகளை குடும்பத்தைவிட்டு, கடல் கடந்து வியாபாரம் செய்ய சென்றி ருப்பீர்கள். சொத்து வருமானத்திற்காக, உங்கள் வாரிசை, உங்கள் மூத்த சகோதரனுக்கு தத்து புத்திரனாக தானம் செய்திருப்பீர்கள். காதல் விஷயம் கண்டிப்பாக இருந்திருக்கும். அதிலும் அது முறையற்ற காதலாக அமைந் திருக்கும். இதனால் தாயாரை, வீட்டைவிட்டு பிரிந்திருப்பீர்கள்.
இந்த ஜென்மத்தில் உங்கள் தொழில், வியாபாரம் ஓஹோவென்று செல்லும்போது, ஒரு வயதான பெண்ணின்மேல் உள்ள ஈர்ப்பால், வியாபார தடங்கல் ஏற்படும். உங்கள் வாரிசுகள் வெளிநாடு செல்லும்போது தடை, தாமதம் ஏற்படும். உங்களுக்கு ஏற்படும் காதல், வீடு, தாயார் மற்றும் வாழ்க்கைத்துணையை பிரித்துவிடும்.
கடல் அருகிலுள்ள விநாயகரை வணங்கவும்.
இவ்விதம் மீன ராசிக்கு 5-ல் பாபர்கள் இருந் தால் கடல் அருகே உள்ள கன்னியாகுமரி அம்மன் வழிபாடு செய்வது சிறப்பு.
செல்: 94449 61845