ரிஷப லக்னத்துக்கு, பூர்வ புண்ணிய, போன ஜென்மத்தைப் பற்றிக் கூறுமிடம், கன்னியாகும். இதன் அதிபதி புதன்.
இங்கு சுபர்கள் அமர்ந்திருந்தாலும், புதன் உச்சமானாலும் பூர்வ புண்ணியம் போன ஜென்மம் மேன்மையாக உள்ளது என அறிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசியின் 5-ஆமிடத்தில் பாவர் அமர்ந்த பலன் 5-ஆமிடத்தில் சனி போன ஜென்மத்தில் வியாபாரத்தில் எத்தனை லாபம், பணவரவு இருந்தாலும், குடும்பத்தில் அதனை மறைத்து, நஷ்டம்தான் என பொய் கூறியிருப்பீர்கள். இதனையே கடன் கொடுத்தவர்களிடமும் அதனையே கூறி ஏமாற்றியிருப்பீர்கள். பூர்வீக நிலம், வீடு, வயல் இவற்றை யாருக்கும் கொடுக் காமல் நீங்களே எடுத்துக்கொண்டிருப் பீர்கள். இதனை மிக புத்திசாலித்தனமாக செய்திருப்பீர்கள்.
இந்த ஜென்மத்தில் தொழில் ஏனோ ஓடாமல், ஒரு பக்கமாக உட்கார்ந்து சண்டித் தனம் பண்ணும். உங்களிடம் பணம் கைமாற்றாக வாங்கியவர்கள் திருப்பி தரவே மாட்டார்கள். வீடு என்பதை பேப்பரில்தான் எழுதி பார்க்கவேண்டும். இவ்விதம் ரிஷப ராசியின் 5-ஆமிடத்தில் சனி உள்ளவர்கள், புதன்கிழமைதோறும் பெருமாளுக்கு தீபமேற்றி வழிபடவும்.
5-ஆமிடத்தில் செவ்வாய் நீங்கள் திருமணம் செய்த மனைவி, பிள்ளைகளை அம்போவென விட்டுவிட்டு, வேறு ஒரு லவ்வருடன் ஓடிப் போயிருப்பீர் கள். வேலை செய்யும் இடத்தில், வயதான பெண்களை ஏமாற்றி பணத்தை பதுக்கி யிருப்பீர்கள். ஒரு பெண்ணை அல்லது பல பெண்களை காத-த்துவிட்டு, திருமணம் செய்யாமல் ஏமாற்றி இருப்பீர்கள். கோவில் நிலங்களை தன் பெயருக்கு பட்டா மாற்றி எழுதியிருப்பீர்கள்.
இந்த ஜென்மத்தில் அரசாங்கம் உங்கள் நிலத்தை எடுத்துக்கொள்ளும். உங்களிடம் பணிபுரிபவர்கள் உங்களை ஏமாற்றுவர். சிலசமயம் உங்களை செம மாத்து கொடுத்துவிட்டு, இருப்பதை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவர். உங்கள் மணவாழ்வில் நிறைய ஏமாற்றங்களையும் அதிருப்தியையும் எதிர்கொள்வீர்கள்.
இவ்விதம் உள்ளவர்கள், புதன்கிழமை நரசிம்மரை தீபமேற்றி வணங்கவும்.
5-ஆமிடத்தில் ராகு
கோவில் அல்லது கல்வி சார்ந்து நிலம், மனை கொடுப்பதாக வாக்கு கொடுத்துவிட்டு, பின் வசதியாக மறந்து, உங்கள் குடும்பத்தினர் பெயருக்கு பத்திர பதிவு செய்திருப்பீர்கள். வேலை செய்பவர்களிடம் அதிக வேலை வாங்கிவிட்டு, கூ-யை சரியாக கொடுக்காமல் ஏமாற்றியிருப்பீர்கள். நிறைய ஆட்களிடம் பணம், சொத்து இவற்றை வாங்கிவிட்டு அதனை திருப்பி கொடுக்காமல் இருந்திருப்பீர்கள்.
அவ்வாறு திருப்பிக்கேட்டு நச்சரித்தவர்களை, ஒரே போடாக போட்டு சம்பவம் பண்ணி இருப்பீர்கள்.
இந்த ஜென்மத்தில், உங்கள் வீடு, மனை இவற்றை பிறர் பிடுங்கிக் கொள்வர். வேலைக்கேற்ற சம்பளம் கிடைக்காது. எப்போதும் யாராவது ஒரு ரௌடியை பார்த்து பயந்துகொண்டே இருக்க நேரிடும். உங்கள் வாரிசுகள் தீய பழக்கத் துக்கு ஆளாவார்கள்.
புதன்கிழமை ஸ்ரீரங்க நாதப் பெருமாளை சேவிக்கவும். துளசி மாலை சார்த்தி வணங்கவும்.
5-ஆமிடத்தில் கேது ஆசிரியராக இருந்து, மாணவர்களுக்கு ஒழுங்காக பாடம் நடத் தாமல் இருந்திருக்கலாம். ஜோதிடம் கூறி, தம்பதி களை பிரித்திரிக்கக்கூடும். பக்கத்து வயல்காரனின் நிலத்தை உங்கள் வயல் பக்கம், தள்ளி வரப்பு கட்டி இருப்பீர்கள்.
அல்லது உங்கள் வீட்டு காம்பவுண்ட் சுவரை அடுத்தவர் வீட்டுக்குள் கட்டியிருப்பீர்கள். இளைய சகோதரியை கவனிக்காமல் இருந்திருப் பீர்கள்.
இந்த ஜென்மத்தில் உங்கள் வீடு, நிலம் இவற்றின் பாகம் பிரிப்பதில் சிரமம் உணர்வீர்கள். இளைய சகோதரி உங்களை துன்பப்படுத்துவாள். உங்கள் வாரிசுகள் ஆசிரியரிடம் வம்பிழுப்ப தால், நீங்கள் அவமானப் பட நேரிடலாம். புதன்கிழமைதோறும். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.
இவ்விதம் ரிஷப ராசியின் 5-ஆமிடத்தில் பாபர்கள் இருப்பின், திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளை அவ்வப்போது சேவிப்பது நன்று. விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்வதும் கேட்பதும் நல்லது.
ரிஷப ராசியின் 5-ஆமிடத்தில் பாவர்கள் அமர்வது, அடிவயிற்றில் பிரச்சினைகளைத் தரும்.
மிதுன லக்னத்துக்கு ஊழ்வினை விளைவுகள்
மிதுன லக்ன 5-ஆமிடம் துலாம். அதிபர் சுக்கிரன்.
5-ஆமிடத்தில் சனி
சனி பாவக் கிரகம் ஆனாலும் இங்கு உச்சமாவார் என்பது கவனிக்கத்தக்கது. சென்ற ஜென்மத்தில் நிறைய நன்மை செய்திருப்பினும் வேலை செய்யும் பணி யாளர்களை சற்று இம்சை படுத்தியிருப்பார். கறையற்ற பெண்களை, முறையற்ற வழியில் பயன்படுத்தி இருப்பார். வியாபாரத்தில் பங்குதாரரை மிரட்டி, பெரும்பகுதி லாபத்தை இவரே எடுத்திருப்பார். சனி உச்சமாகி இருப்பதால் மேன்மையான வாழ்வு நிலையும், கீழத்தரமான செயல்களுமாக இருந்திருப்பார்.
இந்த ஜென்மத்தில் கடன் தொல்லை, மனைவிக்கும், சின்ன வீட்டிற்கும் இடையே கிடந்து அல்லாடுவது, காதல் திருமணம் செய்து, அதில் தோல்வியடைவது, வெளிநாட்டிற்கு சென்று அல்லாடுவது, அரசிய-ல் நுழைந்து விளங்காமல் போவது, வேலை நிலைத்து நிற்க முடியாமல் இருப்பது என இவ்விதமான தொல்லை தொடர்கதையாகும்.
வெள்ளிக்கிழமையன்று, பெருமாளும் தாயாரும் சேர்ந்துள்ள சந்நிதியில் சென்று வணங்கவும்.
மிதுன ராசியின் 5-ஆமிடத்தில் செவ்வாய்
சென்ற ஜென்மத்தில் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்கியிருப்பீர்கள். ஊரை சுற்றி கடனை வாங்கிவிட்டு அனைவருக்கும் பட்டை நாமம் சாற்றியிருப்பீர்கள். வெளிநாட்டு வேலை, என கூறிவிட்டு, நடுக்கட-ல் இறக்கிவிட்டு வந்திருப்பீர்கள். பிறமதப் பெண்களை திருமணம் செய்கிறேன் என்று தா-யைக் கொடுக்காமல், பிள்ளையை மட்டும் கொடுத்திருப்பீர்கள். மருமகளை ரொம்ப கொடுமைப்படுத்தியிருப்பீர்கள். பூமி சார்ந்த பங்கிட்டில், ஒரு தலைபட்சமாக செயலாற்றி இருப்பீர்கள்.
இந்த ஜென்மத்தில் யாரிடமாவது, வேலைக்கு பணம் கொடுத்து ஏமாந்து விடுவீர்கள். மாமியாரின் இம்சையுண்டு. காத-ல் விரக்தி இருக்கும். மனை சார்ந்த மனக்கொதிப்புண்டு. வெளிநாட்டு வேலை கைக்கூடி வருவது மிக சிரமம் கொடுக்கும். மருமகனால் வெகு கஷ்டம் ஏற்படும்.
வெள்ளிக்கிழமைகளில், வள்ளி- தெய்வானையுடன்கூடிய முருகரை வணங்க வும்.
மிதுன 5-ஆமிடத்தில் ராகு
போன ஜென்மத்தில், வகை தொகையின்றி திருமணம் முடிந்திருப்பீர்கள். அப்போதைய பஞ்சாயத்துக்களில் செம கள்ளாட்டம் ஆடியிருப்பீர்கள். கற்பு, ஒழுக்கம் என்றால் விசை என்ன விலை எனக் கேட்கும் நிலையில் வாழ்ந்திருப்பீர்கள். சொந்த மனைவி, குழந்தைகளை கவனிக்காமல், பக்கத்து வூட்டுக்காரன் மனைவியை பேஷாக கவனித்திருப்பீர்கள். பிறப்பு எடுத்ததே காத-க்கத்தானே என நடந்துகொண்டி ருப்பீர்கள்.
இந்த ஜென்மத்தில் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களைவிட்டு பிரிய நேரிடும்.
நீங்கள் கல்லுகுண்டாட்டம் இருக்கும்போதே, வேறொரு துணையை தேடிக்கொள்வார். காதல் மிகுந்த மனவருத்தத்தைக் கொடுக்கும். பிறமத, பிற இனபெண்கள்மூலம் வில்லங்கம் வீடு தேடிவரும். வெளிநாடு சம்பந்த வியாபார பங்குதாரர், செமத்தியாக ஏமாற்றி விடுவார்.
வெள்ளிக்கிழமைகளில் பட்டீஸ்வரம் துர்க்கையை வணங்கலாம்.
மிதுன 5-ஆமிடத்தில் கேது
போன ஜென்மத்தில் மருமகளை வீட்டைவிட்டு துரத்தியிருப்பீர்கள். ஏதோ ஒரு காரணம் தொட்டு, ஒரு இளம் பெண்ணை போட்டுத் தள்ளியிருப்பீர்கள். கௌரவத்தைக் காரணம் காட்டி, வாழ்க்கைத் துணையை வீட்டைவிட்டு விலக்கி துன்புறுத் தியிருப்பீர்கள். பண்ணைகளில் வேலை செய்வோருக்கு, கூ- தராமல் மிரட்டி, விரட்டி இருப்பீர்கள்.
இந்த ஜென்மத்தில், நீங்கள் ஆணோ- பெண்ணோ உங்கள் மாமியார் உங்களை படாதபாடுபடுத்தி துன்புறுத்துவார். வேலையில் உப்புபெறாத காரணத்துக்காக, உங்களை நீக்கிவிடுவர். வேலையில் இருந்தாலும், தொடர்ச்சியாக சம்பளம் கிடைக்குமா என்பது சந்தேகமே. ஒரு பெண் விஷயத்தில், செய்யாத குற்றத்திற்கு நீங்கள் மாட்டிக்கொண்டு தவியாய் தவிப்பீர்கள்.
வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை கற்கண்டு, மோதகம்கொண்டு வணங்கவும்.
மிதுன ராசியின் 5-ஆமிடத்தில் பாவர்கள் இருப்பவர்கள், ஸ்ரீரங்கம் ரங்க நாச்சியாரை வணங்குவும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாரை வணங்குவதை வழக்கமாகிக்கொள்ளவும்.
மிதுன ராசியின் 5-ஆமிட பாவர்கள் சிறுநீர் சார்ந்த பிரச்சினைகளை உணர்த்து வார்கள்.
கடக லக்ன ஊழ்வினை விளைவுகள்
கடக லக்னத்தின் 5-ஆமிடம் விருச்சிகம். அதிபர் செவ்வாய்.
கடக லக்ன 5-ல் சனி
சென்ற ஜென்மத்தில், இவரது தந்தையை அல்லது வாழ்க்கைத் துணையை அலட்சியப்படுத்தி இருப்பார். தெய்வ வழிபாட்டில் இடையூறு செய்திருப்பார். சகோதரனுக்கு பூமி பிரிப்பதில் துரோகம் இழைத்திருப்பார். மிக சுயநலவாதியாக இருந்திருப்பார். தொழி-ல் பங்குதாரரை ஏமாற்றியிருப்பார். வேலை செய்பவருடன் கூ- விஷயமாக சண்டை வந்து ரத்தம் வருமளவுக்கு அடித்திருப்பார்.
இந்த ஜென்மத்தில் தந்தையுடன் கதா சண்டை, வாழ்க்கைத்துணையுடன் மன ஒற்றுமை இல்லாதது, வேலைக்கு வருபவர்கள் உங்களை ஏமாற்றுவர் அல்லது நீங்கள் செய்யும் பணிக்கு ஏற்ற சம்பளம் கிடைக்காமல் வருந்துவீர்கள். சிலர் காதல் விஷயத்தில் ஏமாற்றப்படுவர்.
செவ்வாய்க்கிழமையன்று சனீஸ்வரர் மற்றும் பைரவருக்கு, அபிஷேகப் பொருட்கள் வாங்கிக்கொடுக்கவும்.
கடக லக்ன 5-ல் செவ்வாய்
செவ்வாய் இங்கு ஆட்சிபலம் பெறுவார். எனவே அதிகமாக கெட்ட பாதிப்புகள் இராது. சென்ற ஜென்மத்தில் கோவில் பணி அல்லது ஆன்மிக சேவை செய்யும்போது, கொஞ்சமாக சுரண்டியிருப்பீர்கள். வெகுகாலம் காதல் விஷயத்தில் ஈடுபட்டு, பின் கௌரவத்தைக் காரணம் காட்டி, நிராகரித்து இருப்பீர்கள். கோவில் குத்தகை பணத்தை, ஆலயக் கணக்கில் சேராமல் உங்கள் வீட்டுக் கணக்கில் சேர்ந்திருப்பீர்கள். இளைய சகோதரனை கல்வியறிவு அல்லது வியாபார நுணுக்கம் இல்லாமை காரணமாகக் கூறி, விரட்டி இருப்பீர்கள்.
இந்த ஜென்மத்தில், ஆன்மிக பணி, உழவாரப் பணி செய்யும்போது, தேவையில் லாத சங்கடமும், கெட்ட பெயரும் வரும். காதல் சில சமயம் தோல்வியடையும். சிலசமயம் திருமணத்தில் முடிந்து, பின் ஏண்டா லப் பண்ணினோம் எனும் நிலைக்கு கொண்டுவிடும். உங்கள் இளைய சகோதரன் நிறைய செலவு அல்லது பெரிய வில்லங்கத்தில் உங்களை மாட்டி வைத்துவிட்டு ஓடிவிடுவான்.
திருச்செந்தூர் முருகரை வணங்கவும். அருகிலுள்ள முருகர் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமைதோறும் சென்று வழிபடுவது நல்லது.
கடக லக்ன 5-ல் ராகு
சென்ற ஜென்மத்தில், தர்ம ஸ்தாபன, கோவில் மற்றும் ஊர் சார்ந்த பொது சொத்துகளை, உங்கள் பெயருக்கும், உங்கள் குடும்பத்தினர் பெயருக்கும் பட்டா மாறுதல் செய்திருப்பீர்கள். நிறைய பெண்களை வலுக்கட்டாயமாக திருமணம் செய்திருப்பீர்கள். பரம்பரை சொத்துகளை விற்ற தொகையை பங்கு பிரிக்காமல் நீங்களே கையகப்படுத்தி இருப்பீர்கள்.
அடங்காத மனத் துணிவோடு வேண்டாத விஷயங்கள் நிறைய பண்ணி இருப்பீர்கள்.
இந்த ஜென்மத்தில் உங்களின் அளப்பறிய ஆற்றலை கேள்விப்பட்டு, கோவில் பக்கம் அல்லது தர்ம கணக்கு வழக்குகள் பக்கம்கூட சேர்க்க மாட்டார்கள். திருமண வாழ்வு அதிரி புதிரியாக அமையும். பரம்பரை சொத்து விற்ற தொகை, உங்களுக்கு மட்டும் ஒழுங்காக வந்துசேராது. உங்களின் சில ஈடுபாடுகள், கெட்ட வழக்கங்களை கண்டு, குலத்தில் இருந்தே உங்களை ஒதுக்கி வைத்துவிடுவர்.
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வழிபடவும். அருகிலுள்ள துர்க்கையை தவறாமல் வணங்கவும்.
கடக லக்னத்தில் 5-ல் கேது
சென்ற ஜென்மத்தில், மருத்துவ, ஆன்மிக சேவை செய்யும்போது, ஆள் தராதரம், தகுதி பார்த்துப் பலன் கொடுத்திருப்பீர்கள். பஞ்சாயத்து வழக்குகளில், ஒரு சார்பாக பதில், தீர்ப்பு கூறியிருப்பீர்கள். சில நேரங்களில், சிலபல விபரீத செயல்களை அசால்ட்டாக செய்திருப்பீர்கள். நிறைய இரகசிய நடவடிக்கைகளில் மிக ஆர்வமாக இணைந்திருப்பீர்கள். அது கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, காதல் என இன்ன பிற வௌங்காத செயல்களாக இருக்கக் கூடும்.
இந்த ஜென்மத்தில் மருத்துவ உயர் கல்வி உங்கள் பக்கத்தில் வந்தால் உதைப்பேன் என மிரட்டும். வியாபாரத்தில் உங்கள் பங்குதாரர் செமத்தியாக பட்டை நாமம் சாற்றிவிடுவார். மறைமுக தொல்லைகள் வந்தவண்ணம் இருக்கும். இரகசிய மனைவி காத- உங்களை தொந்தரவு செய்வாள்.
அங்காரக சதுர்த்தி விரதமிருப்பது நன்று. விநாயகரை செவ்வாய்க் கிழமைகளில் வழிபாடு செய்யவேண்டும்.
இவ்விதம் கடக லக்னத்தின் 5-ஆமிடத்தில் பாவர் இருப்பவர்கள் திருந்செந்தூர் முருகன் மற்றும் நீர் சார்ந்த இடத்தின் அருகேயுள்ள முருகரை வணங்கவேண்டும். ஈரோடு, சென்னி மலை முருகனை வணங்குவது சிறப்பு.
-தொடரும்
செல்: 94449 61845