ழிற் பெருவலி யாஉள மற்றொன்று

சூழினும் தான் முந் துறும்.

இது வள்ளுவப் பெருமானின் கூற்று. விதியைவிட வலிமைமிக்கது எது? விதியை விலக்குவதற்கு தடை எழும்பினாலும், விதி தடையைக் கடந்து முன்வந்து நிற்கும்.

Advertisment

ஊழிற் பெருவலி எனும் விதி என்பது யாது? வேறென்ன, போன ஜென்மத்து செயல்கள்தாம் அவையாகும்.

ஜோதிடம் போன ஜென்மம், பூர்வ ஜென்ம பலன் எனக் குறிப்பது லக்னத்தின் 5-ஆமிடத்தையே ஆகும்.

பொதுவாக மக்கள் சிலசமயம், வெகு துன்பம் ஏற்படும்போது, போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ, அதை இந்த ஜென்மத்தில் அனுபவிக்கிறேன் என்பர்.

Advertisment

இன்னும் சிலர் வாழ்வில் செழிப்பாக இருப்பதைப் பார்த்து, போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் பண்ணியிருப்பான். அதுதான் நன்றாக இருக்கிறான் என்பர்.

ஜோதிடப்படி இதன் காரணம் என்ன? லக்னத்தில் 5-ஆமிடத்தில் அமர்ந்த சுபர்கள், சுபத்தன்மையுடன் இருப்பின், போன ஜென்மத்தில் செய்த புண்ணியங்களை குறிப்பிட்டுக் காட்டுகிறார்கள்.

லக்னத்தின் 5-ல் அமர்ந்த பாவ கிரகம், அசுபத்தன்மையுடன் இருந்தால், போன ஜென்மத்துக் கொடுஞ்செயல்களை சுட்டிக் காட்டுகிறார்கள்.

12 லக்னமும், அதன் 5-ஆமிடமும்

இங்கு சுபர்களைப்பற்றி குறிப்பிடவில்லை. பாவர்களின் செயல்பாடு பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அது சரி, நோயுள்ளவர்கள் மருத்துவரிடம் செல்வர். அதுபோல் கஷ்டப்படுகிறவர்கள் மட்டுமே ஜோதிடத்தை நாடுவர். எனவே அசுப கிரக சம்பந்தம் பற்றிப் பேசுவதுதான் பொருத்தமானது ஆகும்.

12rasi

மேஷ லக்னம்

மேஷ லக்னத்தின் பூர்வபுண்ணியம் எனும் 5-ஆமிடம் சிம்மம் ஆகும்.

இந்த சிம்ம ராசியில் சுபர்கள் இருப்பின். இவர்கள் போன ஜென்மத்தில் அரசாங்கம், கல்வி, ஆரோக்கியம் சம்பந்தமாக, மிக அதிகமான நற்காரியங்களைச் செய்திருப்பர்.

மேஷ லக்ன 5-ல் சனி

போன ஜென்மத்தில் இவரது தந்தையையும், மூத்த சகோதரனையும் தொழில் விஷயத்தில் சண்டை வரச்செய்து பிரித்திருப்பார். செமத்தியாக காதல் செய்துபின் கைவிட்டிருப்பார். ஒரு பெண் விஷயமாக இவரது தந்தையை வெகு அவமானப்படுத்தி, கௌரவக் குறைச்சலாக நடத்தியிருப்பார். இவர் சதா தந்தையுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்திருப்பார். அல்லது அரசாங்கத்துக்கு எதிராக கலகம் செய்திருப்பார்.

இந்த ஜென்மத்தில், இவர் எப்போதும் தந்தையுடன் சண்டையிடுவதால், குடும்பத் தொழில், வியாபாரத்தில் இருந்து இவரை விலக்கி வைத்து விடுவர். திருமணத்திற்கு பின்பு ஏற்படும் காதல் விஷயம், இவரது தொழிலை மிகவும் பாதிக்கும். குழந்தை பிறப்பு, வாரிசு உருவாவது என இவர் விஷயத்தில் தடை, தாமதம், வருத்தம் ஏற்படும்.

மேஷ லக்ன 5-ஆம் இடம் என்பது சிம்ம சூரியனின் வீடு. இதனால் இவர்கள் தந்தை, அரசு, வாரிசு, புகழ், கௌரவம் சம்பந்தமாக வெகு இம்சைப் பட வேண்டி இருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானுக்கு நல்லெண்ணெய் ஏற்றி வழிபடுவதுடன், சனீஸ்வர பகவானையும் கும்பிட்டுக் கொள்ளவும்.

மேஷ லக்ன 5-ஆமிட செவ்வாய்

சென்ற ஜென்மத்தில் உங்களின் கண்கள் மிக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும். அல்லது உங்களின் தந்தையை விரட்டி இருப்பீர்கள். இஷ்ட திருமணம் செய்து, அவள் பேச்சைக் கேட்டு, வீட்டில் உள்ளோரை கொடுமைப் படுத்தி இருப்பீர்கள். முறையற்ற வழியில் உண்டான கருவை கலைத்திருக்கக் கூடும்.

தந்தையை இரத்தம் வருமள விற்கு அடித்திருப்பீர்கள். அரசுக்கு எதிராக, கடுமையான தீவிரவாத செயலை மேற் கொண்டிருப்பீர்கள்.

இந்த ஜென்மத்தில் தந்தை அனுசரனை இருக்காது. சிறு வயதிலேயே தந்தையை இழந்திருப்பீர்கள். உங்கள் காதல் திருமணம் வில்லங்கமாகி, சிறையில் இருக்க நேரிடும். உங்களுடைய உடன் பிறந்த சகோதரர், தீவிரவாத செயல்களில், ஈடுபடுவதால், நீங்களும் சேர்ந்து, அரசு தண்டனை அனு பவிக்க நேரிடும்.

ஞாயிற்றுக்கிழமைகளில், முருகருக்கு விளக்கேற்றி வழிபடவும். மலைமீது அமர்ந்த முருகரை வழிபடுவது நல்லது.

5-ஆமிடத்தில் ராகு இருந்தால் தந்தையை விரட்டியிருப்பார். நிறைய மதுப்பழக்கம், கணக்கில்லாத காதலிகள், அடுத்தவன் பெண்டாட்டியை தனக்கென தள்ளிக்கொண்டு வருதல், கலையுலகில் முறைதவறி நடப்பது, ஆச்சாரமான வைதீக பெரியவர்களை இழிவுபடுத்தி இம்சை கொடுப்பது போன்ற மட்டமான செயல்களைச் செய்திருப்பார்.

இந்த ஜென்மத்தில் தந்தையின் ஆதரவு இல்லாத நிலை, மனைவி நிலையாமை, காரண காரியம் தெரியாத நோய்கள் என வாழ்க்கையின் இன்பமே தெரியாமல், கிடைக்காமல் வெதும்புவார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடவும்.

5-ஆமிடத்தில் கேது

பிறரை பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு துன்பம் கொடுத்திருப்பார். குழந்தையையும், தந்தையையும் பிரித்திருப்பார். உண்மையான காதலர்களை பிரித்து வைத்து, அவர்களை கண்ணீரில் அல்லது இறுதியில் விழ வைத்திருப்பார். போலிப் பூசாரியாக இருந்து, சில்மிஷம் பண்ணியிருப்பார்.

இந்த ஜென்மத்தில், உங்களின் உண்மை யான ஆதர்சனமான காதல் கைகூடாமல் போகலாம். உங்கள் குழந்தைகள் உங்களை எதிரி மாதிரி பார்க்கலாம். பரிகாரங்கள் கை கூடாமல் போகலாம்.

ஞாயிற்றுக்கிழமை, சூரியனுக்கு சிறிது கொள்ளு அல்லது கொள்ளுசாதம் வைத்து வணங்கலாம்.

இவ்விதம் மேஷ லக்னத்தின், 5-ஆமிட மான சிம்ம ராசியில் பாவிகள் இருப்பின் ஞாயிற்றுக்கிழமைகளில், சூரிய வழிபாடு அவசியம் மேற்கொள்ளவேண்டும். ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் மிக நல்லது.

தஞ்சாவூர் சூரியனார்கோவில், திருக் கண்டியூர் வீரட்டம், திருப்புறவார் பனங் காட்டூர் என இத்தலங்களுக்கு சென்று வணங்க லாம்.

மேஷ லக்னத்தின் 5-ஆமிடத்தில் பாவர்கள் இருப்பது, கண்களையும் பாதிக்கும். அரசு உத்தியோகம், அரசியலில் தடைகளையும் தரும்.

செல்: 94449 61845