நாளுக்கு நாள் உலகில் விமான விபத்துகள் அதிகமாகி விட்டன. உலகின் ஏதோவொரு மூலையில் ஏற்படுகின்ற கொடூரமான விபத்துகளில் ஏராளமானோர் மரணம் என்று தினசரி நாளிதழ்களில், ஊடகங்களில் செய்திகள் வராத நாளே இல்லை என்னும்படி அடிக்கடி துக்ககரமான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. குன்னூர், நஞ்சப்பா சமுத்திரம் அருகில், காட்டேரி மலைமுகட்டில், கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், நமது தேசத்தின் "சீஃப் ஆஃப் தி டிபென்ஸ் ஸ்டாஃப்' ஜெனரல் பிபின் ராவத் மற்றும் பல வீரர்கள் மரண மடைந்தது நாட்டை உலுக்கியது.

இத்தகைய விமான விபத்துக்களுக்கு ஜோதிடரீதியான காரணிகள் யாவை? கடந்த சில வருடங்களுக்குமுன், வலைத்தள ஆங்கில ஜோதிடக் குழுமம் ஒன்றில், பல ஜோதிட அறிஞர்களால் உரைக்கப்பட்ட காரணிகளின் அடிப்படையில், இதற்குமுன்னர் நடந்த பல விமான விபத்துகளின் விவரங்களைத் திரட்டி, விபத்து நடந்த அன்றைய கோட்சார நிலைகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்ததின் விளைவே இக்கட்டுரை.

ff

Advertisment

விமான விபத்தைப்பற்றி நினைக்கும்போதே, அனுபவம் மிக்க ஜோதிடரின் எண்ணத்தில் எழவேண்டியது நான்காமதிபதி மற்றும் நான்காமிடம், காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பத்தில் அமைதல் ஆகியவையாகும்.

இவையெல்லாம் விமான விபத்துக்குக் காரணிகள் ஆனாலும், மனித உயிரிழப்புக்கு, குருவின் பார்வையின்றி, லக்னாதிபதி நான்கில் அமர்தலே- தொடர்பு றுதலே காரணமாகும். மேலும், இந்த நான்காம் வீட்டு தீய தாக்கங்களைத் தவிரவும், பொது வான சில கிரக மற்றும் ராசி நிலைகளும் காரணிகளாகின்றன.

* கோட்சார சூரியன், காற்று ராசிகளுக்கு 6, 8 மற்றும் 12-ஆமிடங்களில் இருத்தல். (காற்று ராசிக்கு 6-ஆம் வீடு நீர் ராசியாகும்; 8 மற்றும் 12-ஆமிடங்கள் பூமி அல்லது நில இராசியாகும்.)

* கோட்சாரப் சந்திரன், காற்று ராசிகளுக்கு 6, 8 மற்றும் 12-ஆமிடங்களில் இருத்தல். (முன்னர் குறிப்பிட்டதுபோல் காற்று ராசிக்கு 6 ஆம் வீடு நீர் ராசியாகும்; 8 மற்றும் 12-ஆமிடங்கள் பூமி அல்லது நில ராசியாகும்.)

* மேலே கூறப்பட்டவற்றோடு, காற்று ராசியில் சனி இடம் பெறும்போதும் விமான விபத்து ஏற்படுகிறது.

* விபத்துக்குள்ளான விமானமானது அளவில் பெரியதாகின், சனி அல்லது சூரியன் காற்று ராசிகளில் இருக்கும்.

* கேதுவானவர் சூரியன், செவ்வாய் அல்லது சனிக்கு 4, 6, 8 மற்றும் 10-ஆம் வீடுகளில் அமர்தல்.

* செவ்வாய்- சூரியன் அல்லது சனிக்கு 6, 8-ல் இருத்தல்.

* செவ்வாய் மற்றும் கேது சஷ்டாஷ்டக மாக அமைதல்.

* சனிக்கு 6, 8 அல்லது 12-ல் சூரியன் இருத்தல்.

dd

* சூரியன் மற்றும் சந்திரன் சஷ்டாஷ்டக மாக அமைதல்.

* சனி, வக்ரநிலை அடைதல்- முக்கியமாக காற்று ராசிகளில்.

மேலே சொல்லப்பட்ட காரணிகளில் இரண்டுக்கு மேற்பட்ட நிலைகள் ஏற்பட விபத்தின் அளவு கூடுதலாக இருக்கும். கோட்சார நிலைகளை அனுசரித்துப் பயணங்களை ஒருசில நாட்கள் ஒத்திவைப்பதே நல்லது.

முதலில், மேற்சொன்ன விபத்துக்கான காரணிகளையும், பின்னர், இதற்கு முன்னர் பல தருணங்களில் ஏற்பட்ட ஹெலிகாப்டர், விமான விபத்துகளின் கோட்சார நிலைகளையும் ஆராய்ந்து, மேற்சொல்லப்பட்ட காரணி கள் எவ்விதம் பொருந்திவருகின்றன என பார்ப்போம்.

"சீஃப் ஆஃப் தி டிபென்ஸ் ஸ்டாஃப்' ஜெனரல் பிபின் ராவத் சென்ற விமான விபத்தின் கோட்சார நிலையை இங்கு காணலாம். விபத்து நிகழ்ந்த நேரம் பகல் 12.00 மணி. இடம் குன்னூர். கிரக அமைவுகள்: கும்ப லக்னம், லக்னத் தில் குரு, 4-ஆமிடத்தில் ராகு, 10-ஆமிடத்தில் செவ்வாய், புதன், சூரியன், கேது, 12-ஆமிடத்தில் சனி, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் அமர்ந்துள் ளனர். (ஜாதகக் கட்டம் காண்க.)

ராசி மண்டலத்தில் காற்று ராசி மிதுனம், துலாம் மற்றும் கும்பமாகும். இதில் ஒன்றான கும்பத்தில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட தருணம்- லக்னம் உதயமாகி உள்ளது. அதுவே விபத்தை குறிகாட்டுகிறது. நவாம்சத்திலும் லக்னம் வர்க்கோத்தமமானது விபத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. குரு, செவ்வாயின் நட்சத்திரத்தில் உள்ளதால் அசுபத் தன்மை பெறுகிறார். குரு ஒரு வாயு கிரகமாகக் கருதப் படுகிறது. குரு இயற்கை சுபராக இருப்பினும் கும்ப ராசிக்கு அவர் அனுகூலமற்றவர் ஆகிறார்.

மேலே குறிப்பிட்டுள்ளபடி நான்காம் பாவத்தில் ராகு அமர்ந்துள்ளார். 4-ஆமதிபதி சுக்கிரன், 12-ஆமதிபதி சனியுடன் இணைந்துள்ளார். பலத்த சத்தத்தோடு நொறுங்குதல் அல்லது முடிவை, மோட்சத்தைக் குறிப்பது 12-ஆமிடம். 12-ஆமிடம் மோட்சம், விடுதலை, விரய பாவமாகும். ராகுவே திசைமாறிய பயணத்திற்கும் காரணமாயிற்று. அந்த ஹெலிகாப்டர் உயரமான மரத்தில், மலைமுகட்டில் மோதி விபத்துக்குள்ளானதாகக் கருதப்படுகிறது. மேலும், விபத்து நடந்த இடத்தின் பெயர்களைப் பார்த்தோ மானால். காட்டேரி மலைமுகடு, நஞ்சப்பா சமுத்திரம் ஆகியவை ராகுவைத் தொட்டுக் காட்டுகின்றன.

காற்று ராசியான மிதுனத்துக்கு 6-ல் சூரியனும், 8-ல் சந்திரனும், மற்றுமொரு காற்று ராசியான கும்பத்துக்கு 12-ஆமிடத் திலும் மதி உள்ளார். காற்று ராசியான துலாத்தை, லக்னாதிபதி சனி பார்வை புரிகிறார். மேலே குறிப்பிட்ட காரணிகள் விபத்துக்குக் காரணமாயின.

அடுத்து, முன்னாள் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் செப்டம்பர் 2, 2009, காலை 09.40 மணியளவில் விபத்துக் குள்ளானது. அந்த கோர விபத்தில் அவரும் மரணமடைந்தார். அந்த விபத்து நேர்ந்த போது இருந்த கோட்சார கிரக நிலைகள்: துலா லக்னம், 4-ஆமிடத்தில் சந்திரன், ராகு, குரு (வக்ரம்), 9-ல் செவ்வாய், 10-ல் கேது, சுக்கிரன், 11-ல் சூரியன், சனி மற்றும் 12-ல் புதன் உள்ளனர்.

இதிலும் லக்னம் காற்று ராசியான துலாத்தில் எழுகிறது. நான்காம் இடத்தில் நீச குரு மற்றும் ராகு இணைந்துள்ளனர்.

4-ஆமிடத்தை விபத்துக் காரகனான செவ்வாய் பார்வை புரிகிறார். குரு, செவ்வாயின் நட்சத்திரத்தில் உள்ளதால் அசுபத் தன்மை பெறுகிறார்.

சந்திரனும் சூரியனும் சஷ்டாஷ்டகத்தில் உள்ளனர். 4-ஆமதிபதி சனியும் தனது 3-ஆம் பார்வையால் லக்னத்தைப் பார்க்கிறார்.

சந்திரனுக்கு 8-ல் சனி உள்ளார். காற்று ராசியான மிதுனத்துக்கு 8-ல் சந்திரன் உள்ளார். மேற்கண்ட காரணிகள் விபத்துக் குக் காரணமாயின எனலாம்.

அடுத்து, முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் பாலயோகி சென்ற ஹெலிகாப்டர் ஆந்திரப் பிரதேசம், பீமாவரம் அருகே 3-3-2002 அன்று காலை சுமார் 07.40 மணிக்கு விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார். அந்தநேர கோட்சார கிரக நிலைகள்: மகர லக்னம், லக்னத்தில் சூரியன், சுக்கிரன், 4-ல் செவ்வாய், 5-ல் சனி, ராகு, 6-ல் குரு, 9-ல் சந்திரன், 10-ல் கேது மற்றும் 12-ல் புதன் ஆகியோர் உள்ளனர்.

இந்த கோட்சார ஜாதகத்தில், விபத்துக் கான காரணிகளாவன: லக்னம் காற்று ராசியான கும்பம். 4-ல் சனி, ராகு, 4-ஆமதிபதி சுக்கிரன் லக்னத்தில் உள்ளார். சூரியன் காற்று ராசியில் உள்ளார். சனி லக்னத்தையும், செவ்வாய் ராசியையும் பார்க்கின்றனர். விதிப்படி, செவ்வாய்க்கு 8-ஆமிடத்திலும், சூரியனுக்கு 10-ஆமிடத்திலும் கேது உள்ளார். செவ்வாயும் கேதுவும் சஷ்டாஷ்டகத்தில் உள்ளனர்.

நான்காவதாக, முன்னாள் அருணாசலப் பிரதேச முதலமைச்சர் டோர்ஜி கண்டு பயணித்த ஹெலிகாப்டர், இட்டா நகர் அருகே விபத்துக்குள்ளானது. 30-4-2011 காலை சுமார் 9, 12 மணியளவில் விபத்து நேர்ந்தது. அப்போபோதிருந்த கோட்சார நிலைகள்: மிதுன லக்னம், லக்னத்தில் கேது, 4-ல் சனி, 7-ல் ராகு, 10-ல் குரு, செவ்வாய், புதன், சுக்கிரன், சந்திரன், 11-ல் சூரியன் ஆகியவை உள்ளன.

லக்னம், காற்று ராசியான மிதுனம். அதில் கேது அமர்வு. 4-ஆமிடத்தில் சனி.

அட்டமாதிபதி, வக்ர சனி மற்றும் ருண, ரோக சத்ரு ஸ்தானாதிபதியான செவ்வாயின் பார்வை லக்னத்தின்மீது விழுகிறது. கேது, சனிக்குப் பத்திலும், செவ்வாய்க்கு 4 ஆமிடத்திலும் உள்ளார். காற்று ராசியான துலாத்திற்கு 6-ல் சந்திரன் உள்ளார். சனிக்கு 8-ல் சூரியன் உள்ளார். பாதகாதிபதி குருவும், அட்டமாதிபதி சனியும் பரஸ்பர பார்வை. 4-ஆமதிபதி புதன் நீசம். இதன் காரணமாக விபத்து ஏற்பட்டது.

எனவே, அன்பர்களே! விபத்துக்கான சரியான நேரங்கள் கிடைத்திருந்தால் இன்னும் தெளிவாக இருந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எழுதியுள்ளதால் காரணி களை மட்டும் அறிந்துகொள்ளுங்கள்.

செல்: 97891 01742