27 நட்சத்திரங்களுக்கும் ராகு தரும் பலன்கள்+பரிகாரங்கள்! அஸ்தம், சித்திரை, சுவாதி

/idhalgal/balajothidam/astham-chithirai-swathi-natchathiram

13. அஸ்தம்

இது கன்னி ராசியில், 10.00 டிகிரிமுதல் 23.20 டிகிரிவரை உள்ளது. அஸ்த நட்சத்திர சாரநாதர் சந்திரன் ஆவார்.

நீங்கள் எந்த லக்னம், எந்த ராசியில் பிறந்திருந்தாலும், ராகு உங்கள் பிறந்த ஜாதகத்தில், கன்னி ராசியில்,அஸ்த நட்சத்திரத்தில் நின்றிருந்தால் விளையும் பலன். இது ராகு+சந்திரன் எனும் கணக்கில் வரும்.

மச்சம்: உங்கள் விரல்களில் மச்சம் இருக்கும்.

குணம்: ராகு என்பவர் வெகுவேக பரப்பான கிரகம். சந்திரனும் மிக வேக கிரகம் ஆவார். எனவே இந்த இரு வேக கிரகங்களும் இணையும்போது, வேகத்திற்கு கேட்பானேன். பேசும்போதுகூட, வெகுவேக மாக, மூச்சுவிடாமல் பேசுவர். செய்யும் வேலைகளை, பரபரவென்று செய்து முடித்துவிடுவர். வாயு வேகம், மனோ வேகம் என செயல்பாடுகள் அமையும். விரைவாக நடப்பர். யோசிக்கும் திறனும் அதிவேகமாக அமையும். இவர்கள் இருக்கும் இடத்தில் மற்றவர்களைவிட வேகமாக, தனது யோசனைகளை வெளிப்படுவதும், தனதுகருத்துக்களை விவரிப்பதுமாக இருப்பர். இதனால் பிறர் இவர்களை, சரியான முந்திரிக்கொட்டை என நக்கல் செய்வார்.

நல்ல பலன்+தொழில்: சாரநாதர் சந்திரன் சுபமாகி இருப்பின் இவர்களது சிந்தனை நிறம் வேகப்படுவதால், இவ்வகை அமைப்புள்ள குழந்தைகள், தேர்வில் முதலாவதாக எழுதி முடிப்பதுடன், முதல் மார்க்கும் வாங்கிவிடுவர். இவர்களில் நிறைய பேர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் மருந்து துறையில் படித்து, மருந்தாளுனராக இருப்பர். நிறைய கதை, கவிதை, வசனம் எழுதக்கூடியவர்கள். பயண விருப்பம் உள்ளவர்கள். ஆதலினால் கப்பல், விமான போக்குவரத்து துறையில் கால் பதிப்பர். மனோதத்துவ துறை மருத்துவர் பேராசிரியராக இருப்பர். சிலர் மதுபான கடைகளை ஏலம் எடுத்து வியாபாராம் செய்வர் அல்லது டாஸ்மார்க்கில் வேலை செய்வர். ஏற்றுமதி- இறக்குமதி விஷயங்களை கப்பல்வழி செய்வர்.

கெட்ட பலன்கள்: சந்திரன் கெட்டிருந்தால் ராகு என்ற பொல்லா கிரகம், சந்திரனின் சாரத்தில் செல்லும்போது, ஒரு மனோகாரகனின் வழி செல்வதாக அர்த்தம். எனவே இவர்களின் சில செயல்பாடுகள், ஊரோடு ஒத்து இராது. உலகுகிற்கு எதிர்மறை சிந்தனையோடு செயல்படுவர். எல்லாரும் ஒருமாதிரி சிந்தனை செய்ய இவர்கள் முற்றிலும் வேறுவிதமாக யோசிப்பர். எனவே உலகம் இவர்களை, தீவிர சிந்தனையாளன், போராட்ட குணம் உடையவர், புரட்சியாளர், மாற்று சிந்தனை கொண

13. அஸ்தம்

இது கன்னி ராசியில், 10.00 டிகிரிமுதல் 23.20 டிகிரிவரை உள்ளது. அஸ்த நட்சத்திர சாரநாதர் சந்திரன் ஆவார்.

நீங்கள் எந்த லக்னம், எந்த ராசியில் பிறந்திருந்தாலும், ராகு உங்கள் பிறந்த ஜாதகத்தில், கன்னி ராசியில்,அஸ்த நட்சத்திரத்தில் நின்றிருந்தால் விளையும் பலன். இது ராகு+சந்திரன் எனும் கணக்கில் வரும்.

மச்சம்: உங்கள் விரல்களில் மச்சம் இருக்கும்.

குணம்: ராகு என்பவர் வெகுவேக பரப்பான கிரகம். சந்திரனும் மிக வேக கிரகம் ஆவார். எனவே இந்த இரு வேக கிரகங்களும் இணையும்போது, வேகத்திற்கு கேட்பானேன். பேசும்போதுகூட, வெகுவேக மாக, மூச்சுவிடாமல் பேசுவர். செய்யும் வேலைகளை, பரபரவென்று செய்து முடித்துவிடுவர். வாயு வேகம், மனோ வேகம் என செயல்பாடுகள் அமையும். விரைவாக நடப்பர். யோசிக்கும் திறனும் அதிவேகமாக அமையும். இவர்கள் இருக்கும் இடத்தில் மற்றவர்களைவிட வேகமாக, தனது யோசனைகளை வெளிப்படுவதும், தனதுகருத்துக்களை விவரிப்பதுமாக இருப்பர். இதனால் பிறர் இவர்களை, சரியான முந்திரிக்கொட்டை என நக்கல் செய்வார்.

நல்ல பலன்+தொழில்: சாரநாதர் சந்திரன் சுபமாகி இருப்பின் இவர்களது சிந்தனை நிறம் வேகப்படுவதால், இவ்வகை அமைப்புள்ள குழந்தைகள், தேர்வில் முதலாவதாக எழுதி முடிப்பதுடன், முதல் மார்க்கும் வாங்கிவிடுவர். இவர்களில் நிறைய பேர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் மருந்து துறையில் படித்து, மருந்தாளுனராக இருப்பர். நிறைய கதை, கவிதை, வசனம் எழுதக்கூடியவர்கள். பயண விருப்பம் உள்ளவர்கள். ஆதலினால் கப்பல், விமான போக்குவரத்து துறையில் கால் பதிப்பர். மனோதத்துவ துறை மருத்துவர் பேராசிரியராக இருப்பர். சிலர் மதுபான கடைகளை ஏலம் எடுத்து வியாபாராம் செய்வர் அல்லது டாஸ்மார்க்கில் வேலை செய்வர். ஏற்றுமதி- இறக்குமதி விஷயங்களை கப்பல்வழி செய்வர்.

கெட்ட பலன்கள்: சந்திரன் கெட்டிருந்தால் ராகு என்ற பொல்லா கிரகம், சந்திரனின் சாரத்தில் செல்லும்போது, ஒரு மனோகாரகனின் வழி செல்வதாக அர்த்தம். எனவே இவர்களின் சில செயல்பாடுகள், ஊரோடு ஒத்து இராது. உலகுகிற்கு எதிர்மறை சிந்தனையோடு செயல்படுவர். எல்லாரும் ஒருமாதிரி சிந்தனை செய்ய இவர்கள் முற்றிலும் வேறுவிதமாக யோசிப்பர். எனவே உலகம் இவர்களை, தீவிர சிந்தனையாளன், போராட்ட குணம் உடையவர், புரட்சியாளர், மாற்று சிந்தனை கொண்டவர் என்றெல்லாம் கூறுவதோடு, இன்னும் ஒருபடி மேலே போய், லூசுப்பயல் எனவும் முத்திரை குத்திவிடும். மற்றும் ராகு+சந்திரன் இணைவு, மொடாக் குடியராக மாற்றிவிடும்.

எனவே இவ்வித அமைப்புள்ள குழந்தைகளை ஆரம்பித்திலேயே, சதுரங்கம் போன்ற புத்திபூர்வ விளையாட்டில் ஈடுபடுத்திவிட வேண்டும். வேகமான சிந்தனை ஆற்றல், விளையாட்டு தெய்வீக மந்திரங்களை ஒப்பிப்பது, திருக்குறளை ஓதுவது என திசை திருப்பிவிடவேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சீரான பாதையில் செல்லும். இல்லாவிடில் பாதை மாறிவிடும்.

நோய்: மஞ்சள்காமலை, பசியின்மை, ஈரல் சார்ந்த நோய்கள், வாயுத் தொல்லை, அஜீர்ணம் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.

நாடி ஜோதிடம்: நாடியில் சந்திரனை தாய் என்பர். இதில் ராகு சேரும்போது தாயாரின் மனநலம் பாதிப்படையும் அல்லது சம்பந்தப்பட்ட ஜாதகரின் மனநலம் பாதிக்கும். உங்கள் மனதில் பயங்கரமான சிந்தனைகள் தோன்றும். கப்பல், படகு, ஓடம், பரிசல் போன்ற பயணம் ஆர்வம் அதிகம் இருக்கும். இதில் சாகஸம் செய்ய முனைவீர்கள்.

பரிகாரம்: புன்னை நல்லூர் அல்லது இராமேஸ்வரம் சென்று வணங்கவும். அம்பாள் அபிஷேகத்திற்கு, தேன் வாங்கிக்கொடுக்கவும். இனிப்பான பானங்கள் வினியோகம் நன்று. அல்லது பானகம் தயாரித்து பிறருக்கு கொடுக்கலாம்.

14. சித்திரை

இது கன்னி ராசியில் 1, 2-ஆம் பாதமும், துலா ராசியில் 3, 4-ஆம் பாதமும் கொண்டுள்ளது. கன்னி ராசியில் 23.20 டிகிரிமுதல் 30.00 டிகிரிவரையும் துலா ராசியில் 6.40 டிகிரிவரையும் பரவி உள்ளது. சித்திரை நட்சத்திரத்தின் சாரநாதர் செவ்வாய் ஆவார்.

நீங்கள் எந்த லக்னம், எந்த ராசியில் பிறந்திருந்தாலும், ராகுபகவான், கன்னி, துலா ராசிகளில், சித்திரை நட்சத்திரத்தில் நின்றால் உண்டாகும் பலன்கள். இது ராகு+செவ்வாய் எனும் கணக்கில் வரும்.

மச்சம்: கழுத்தில் மச்சம் அமையும்.

குணம்: உங்களுக்கு அடிப்படையாக ஒரு முர்க்கக்குணம் இருக்கும். அது வெளிப்படையாக சிலசமயம் தெரியும். பல சமயங்களில் கோபத்தை பதுக்கி வைத்துக்கொண்டு, தகுந்த சமயம் பார்த்து பழி வாங்கிவிடுவீர்கள். இன்னொரு குணம், உங்களுக்கு ஒரு நீக்கு போக்காக, பதவிசாக நடந்து கொள்ளத் தெரியாது. விட்டுக்கொடுக்கும் குணம் அறவே கிடையாது. எனவே இவர்களால் ஒரு வேலையில் சேர்ந்தோம், அதில் நீடித்து நிலைத்து வேலை பார்த்தோம் என இருக்க இயலாது. அவன் அதைச் சொன்னான், இவன் இதைச் சொன்னான் என்று வேலையை விட்டுவிட்டு வந்து விடுவார்கள். இதேபோல் திருமண வாழ்விலும் நொள்ளை, நொட்டை சொல்லி பிரியும் வழியை ஏற்படுத்துவர். அல்லது இருக்கிற புருசன் அல்லது மனைவியை குறை சொல்லிவிட்டு, பின் முறையற்ற தொடர்புகளை ஏற்படுத்துக்கொள்வர்.

நல்லபலன்+தொழில்: சுபமான சித்திரை நட்சத்திரம் வாங்கி செல்லும் ராகு, பல அபூர்வமான தைரிய செயல்களைத் தருவார். இராணுவத்தில் முதல் ஆளாக நின்று, எதிரிகளுடன் போரிடுவர். காவல்துறையில், பிறர் நெருங்கத் தயங்கும் எதிரிகளை, ரௌவுடிகளை சுட்டு பிடித்துவிடுவர். இதுமாதிரி சீருடை பணிகளில் முதன்மை பெற்று விளங்குவர். அதன்மூலம் பாராட்டுகளையும், புகழையும் பெறுவர். சமூக சேவையிலும் இவர்களை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. எவரும் செய்யத் தயங்கும், சேவைப் பணிகளை கொஞ்சமும் அசூயையின்றி ஆற்றுவர். இதற்கு மிகுந்த மனதைரியமும், அளப்பறிய இரக்கக்குணமும் தேவை. இதனால் வாழ்வில் சொகுசுசில்லாத சிரமமான வாழ்க்கை முறை இருப்பினும், அதனை லட்சியம் செய்யாமல் பின்பற்றுவர். இந்த சேவை மனப்பான்மை இவர்களுக்கு உயரிய விருதை கொடுக்கும். இதேபோல், இவர்கள் மிக விரும்பும் பெண் அல்லது ஆண் எந்த மதம், எந்த இனமாக இருப்பினும், பிடிவாதமாக அவரையே திருமணம் செய்துகொள்வர். ஒரு காதல், இத்தனை போராட்டத்தையும் தாண்டி வெற்றிபெறுமா என்கிற மலைப்பை பிறருக்குத் தரும். குறிப்பாக, துலா சித்திரையில் செல்லும் ராகு, இவ்வித காதல் திருமணத்தை ஊக்குவிப்பார். சித்திரையில் செல்லும் ராகு, வீர தீர செயல்களைச் செய்ய ஜாதகரை தூண்டுவார்.

கெட்ட பலன்: ஒரு செவ்வாய் சாரம் வாங்கிய சித்திரை நட்சத்திரத்தில் செல்லும் ராகு, ஜாகதரை எப்போதும் ரத்தக்களறி ஆக்கிவிடுவார். எப்போதும் சண்டை, அடிதடி என இருந்தால் சண்டையில் சட்டையும், உடம்பும் கிழியாமல் இருக்குமா, வெட்டிப் பஞ்சாயத்து செய்வதில் கில்லாடியாக இருப்பார். எல்லாவற்றையும்விட ரொம்ப ஊமைக்குசும்பு செய்து, சண்டை இழுத்துவிட்டு ரசிப்பார். மேலும் மானாவாரியாக காதல் செய்வதில் சமர்த்தர். இனம், மொழி, நாடு, கண்டம் என எதையும் சட்டையே செய்யமாட்டார். கண்டம்விட்டு கண்டம் காதல் செய்வார். கொஞ்சம் அசந்தால், "எனக்கு நிலாவில் ஒரு கேர்ள் ப்ரண்ட் இருக்கிறாள்' என்பர். இதுமாதிரி மல்யுத்தப் போட்டி, சேவல் சண்டை, பாம்பு கீரி யுத்தம் என இவை நடத்துகிறேன் என கடைசிவரை சண்டை மாதிரி செட்டப் செய்துவிடுவார். இவரை புரிந்துகொண்ட மக்கள், இவர் இருக்கும் திசை பக்கம்கூட வரமாட்டார்கள். இதற்கு சாரநாதர் செவ்வாய் அசுபத்தன்மை பெற்றிருப்பர்.

நோய்: குடல் சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.

நாடி ஜோதிடக் கணக்கு: நாடி ஜோதிடம் செவ்வாயை உடன்பிறப்பு எனக்கூறுகிறது. சித்திரை நட்சத்திர சாரநாதர் செவ்வாய். எனவே சித்திரை நட்சத்திரத்தில், ராகு செல்லும்போது, ஒன்று சிலரின் உடன்பிறப்புகள் வெளிநாடு செல்வர். அல்லது உடன் பிறந்தவர் ரொம்ப பிராடாக இருப்பர். உடன்பிறப்பு அரிதான, வீர தீர செயல்கள் செய்பவராகவோ அல்லது கலைத்துறையில் எடிட்டிங் வேலை செய்பவராகவோ இருக்கக்கூடும்.

பரிகாரம்: பிரத்தியங்கரா போன்ற துர்க்கையை வணங்குவது நல்லது. துர்க்கையை குங்குமம் கொண்டு வழிபடவும். எலுமிச்சை பழ மாலை அணிவித்து வணங்கலாம்.

15. சுவாதி

இது துலா ராசியில் 6.40 டிகிரியில் இருந்து 20.00 டிகிரிவரை பரவியுள்ளது. சுவாதி நட்சத்திர சாரநாதர் ராகு ஆவார். துலா ராசி அதிபதி சுக்கிரன் ஆவார். ஆக, துலா ராசியில் சுவாதி நட்சத்திரத்தில், ராகு நின்றிருந்தால், அங்கு சுக்கிரன்+ராகு+ராகு எனும் நிலை உண்டாகும். ஒரு ராகு நட்சத்திரக் காலில் ராகு செல்கிறார் என்றுஅர்த்தம்.

நீங்கள் எந்த லக்னம், எந்த ராசியில் பிறந்திருந்தாலும், சுவாதி நட்சத்திரத்தில் ராகு சென்றால் ஏற்படும் பலன்.

மச்சம்: இவர்களுக்கு மார்பில் மச்சம் இருக்கும்.

குணம்: ஒரு சுவாதி எனும் ராகுவின் காலில் ராகுபகவான் அமர்ந்திருக்கும் போது, அந்நிலையானது, இரு ராகு சேர்க்கை ஆகிறது. இந்த சுவாதி நட்சத்திரம் துலா ராசியில் இருப்பதால், இவர்கள் வெளியாட்களிடம் பழகுவதில் கைதேர்ந்தவர்களாக இருப்பர். அதுவும் வியாபாரிகள் எனின், வியாபார சம்பந்த விஷயங்களை நுணுக்கமாக பேசுவர். இத்தகைய அமைப்புடைய குழந்தைகள், ஐ.த.ஞ எனும் ஐன்ம்ஹய் தங்ள்ர்ன்ழ்ஸ்ரீங் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ் ஆகும். கல்வியை கற்று, மனித வள மேம்பாட்டு துறை அதிகாரியாகவிடுவர். இவர்களது கருத்துக்களை, எதிரில் இருப்பவர், நம்பக்கூடிய அளவில், அழுத்தமாக பேசுவர். இதனாலயே இவர்கள் வாழ்வில் வெற்றிபெரும் வாய்ப்பை பெறுவர். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, இவர்கள் கூறும் பொய் புரட்டுகளை, தங்களது அலங்கரிக்கப்பட்ட ஜரிகை வார்த்தைகளால், உண்மைபோல் காட்டிவிடுவர். எவ்விஷயங்களையும் செய்யத் தயங்காதவர்.

நல்லபலன்+தொழில்: ராகு சுபத்தன்மை பெறின் இவர்களின் வியத்தகு பேராற்றால், நல்ல வியாபாரி ஆக்கிவிடும். கலைத்துறையில் பங்கெடுக்கவும், பணியாற்றவும் தகுதியான மனிதர்கள் இவர்கள்தான். மெய்யை பொய்யாகவும், பொய்யை மெய்யாகவும் வெளிப்படுத்துவர். சினிமா உலகின் டைரக்டர் மற்றும் எடிட்டர், கலை சம்பந்த வேலை செய்வர். இவர்கள் நல்ல வழக்கறிஞர்களாக, அதுவும் குறிப்பாக கிரிமினல்

வக்கீலாக முதன்மை பெறுவர். புகழ்பெற்ற ஜோதிடர் ஆகிவிடுவர். அணுசக்தி துறை விஞ்ஞானியாகக்கூடும். கற்பனை மிகுந்த எழுத்தாளர் ஆவார். எக்ஸ்ரே துறை சார்ந்த வேலை பார்க்கலாம். வெளி வர்த்தகத்தில் நல்ல ஈடுபாடு கொண்டவர். மிகச்சிலர், சட்ட புறம்பான வேலைகளும் செய்வர்.

கெட்ட பலன்: ராகு அசுபத்தன்மை பெறின் ஒரு துலாம் எனும் சுக்கிரன் வீட்டில், ராகு நட்சத்திரத்தில் ராகு செல்லும்போது, திருமண வாழ்க்கை சற்று கட்டுக்கோப்பாக இராது. காதல் திருமணம் ஒன்றல்ல, பல காதல் திருமணம் செய்துகொள்வார். மற்றும் கலப்பு மணமாகவும் அமையும். திருமண விஷயத்தில் கண்டிப்பாக ஏமாற்று வித்தை இருக்கும். சில மட்டமான, பிறர் அறுவெறுக்கும் செயல்களை, கூச்ச நாச்சமின்றி செய்வர். எப்போதும் எதிர்பாலாரிடம் டபுள் மீனிங்கில் பேசுவர். இந்த அமைப்பு உள்ள குழந்தைகளை, ஆரம்பத்தில் இருந்தே கண்காணிப்புடனும், நிறைய விளையாட்டு ஈடுபாட்டுனும் வளர்த்தால் நன்மையாக இருக்கும்.

நோய்: இவர்களுக்கு அனேகமாக, மர்ம உறுப்பு குறைகளான, சிறுநீரகக் கோளாறு, குடல்நோய், கர்ப்பப்பை அல்லது கர்ப்ப வாய் சம்பந்த நோய்கள் வரக்கூடும்.

நாடி ஜோதிடம்: ஒரு சுக்கிரனின் வீட்டில் இரு ராகு நகர்வு. சுக்கிரன் மனைவியையும், ராகு கள்ளத் தனத்தையும் குறிப்பார். மனைவியிடம் பொய் சொல்வதில் சமர்த்தர். அல்லது வேறு இன, பிற மத மனைவியை மணந்து கொள்வர். வெகுசிலர் வெளிநாட்டில் இருந்து பெண் எடுத்து மணந்து கொள்வர். அல்லது உங்கள் பாட்டனார் படு ஜாலி பேர் வழியாக இருந்திருப்பார்.

பரிகாரம்: திருநாகேஸ்வரம் சென்று வணங்கலாம். அருகிலுள்ள கோவிலில் உள்ள இரு நாகர்கள் இணைந்த நிலையில், வெள்ளிக்கிழமைகளில் பால் அபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமம் சாற்றவும்.

(அடுத்த இதழில்விசாகம், அனுஷம், கேட்டை)

-ஆர். மகாலட்சுமி

balajothidam 08-06-24
இதையும் படியுங்கள்
Subscribe