மனித வாழ்வியலில் அனைத்தையும் தீர்மானிக்கக்கூடிய கிரகங்களுக்குப் பாதையமைத்துப் பயணிக்கச் செய்யும் 27 நட்சத்திரங்களின் வரிசையில் கேட்டை 18-ஆவது நட்சத்திரமாகவும், புதனின் இரண்டாவது நட்சத்திரமாகவும் இடம் பெறுகிறது.
இது ஆக்ரோஷம் மற்றும் வீரியமுடைய செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் தனது நான்கு பாதங் களையும் பதித்து, செவ்வாயின் முழு குணத்தையும் கிரகித்து, புதனின் அறிவாற்றலோடு வெளிப்படுத்தும் தன்மை யுடைய நட்சத்திரமாகும். காலபுருஷனுக்கு எட்டாவது ராசியான, மறைபொருள் களும், மனோகிளர்ச்சியும் பொதிந்த விருச்சிகத்தில் அமையப்பெற்ற புதனின் நட்சத்திரம் இந்த கேட்டையாகும்.
இதன் ராசிநாதன் செவ்வாயாகவும், நட்சத்திர நாதன் புதனாகவும், நவாம்ச நாதர்களாக கேட்டை ஒன்றாம் பாதமென்றால் குருவாகவும், இரண்டென்றால் சனிபகவானாகவும், மூன்றென்றாலும் சனிபகவானாக வும், கேட்டை நான்காம் பாதமென்றால் குருவாகவும் அமையப்பெறுவார்கள்.
நமது ஜோதிடவியலின்படியும், வானியலின்படியும், சந்திரன் கேட்டை நட்சத்திர கோணப் பிரிவுகளுக்குள் பயணிக்கும் காலத்தில் பிறப்பவர்கள் தங்களை கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி என்று அறிமுகப் படுத்திக் கொள்வார்கள்.
கேட்டை என்பது தமிழ்ப் பெயர்தான். பல ஜோதிட நிகண்டுகளில் தழல், வல்லாரை, சேட்டை, இந்திரன் நாள், ஏரி என்ற பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. சமஸ்கிருதத்தில் இந்த நட்சத்திரத்தை ஜேஷ்ட் என்பார்கள். ஜேஷ்டா என்பது "மூத்த' என்று பொருள்படும். இதற்கு ஒரு புராணக் கதையும் உண்டு.
ராகு- கேது நவகிரக அந்தஸ்தைப் பெற்று ராசி மண்டலத்திற்கு வருவதற்கு முன்னால், அவர்களுக்கென்று தனி நட்சத்திரங்கள் இல்லை. இப்பொழுதுள்ள வழக்கம்போல் அஸ்வினியை முதலாவதாக எண்ணும் வழக்கமில்லை. கேட்டைதான் முதல் நட்ச
மனித வாழ்வியலில் அனைத்தையும் தீர்மானிக்கக்கூடிய கிரகங்களுக்குப் பாதையமைத்துப் பயணிக்கச் செய்யும் 27 நட்சத்திரங்களின் வரிசையில் கேட்டை 18-ஆவது நட்சத்திரமாகவும், புதனின் இரண்டாவது நட்சத்திரமாகவும் இடம் பெறுகிறது.
இது ஆக்ரோஷம் மற்றும் வீரியமுடைய செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் தனது நான்கு பாதங் களையும் பதித்து, செவ்வாயின் முழு குணத்தையும் கிரகித்து, புதனின் அறிவாற்றலோடு வெளிப்படுத்தும் தன்மை யுடைய நட்சத்திரமாகும். காலபுருஷனுக்கு எட்டாவது ராசியான, மறைபொருள் களும், மனோகிளர்ச்சியும் பொதிந்த விருச்சிகத்தில் அமையப்பெற்ற புதனின் நட்சத்திரம் இந்த கேட்டையாகும்.
இதன் ராசிநாதன் செவ்வாயாகவும், நட்சத்திர நாதன் புதனாகவும், நவாம்ச நாதர்களாக கேட்டை ஒன்றாம் பாதமென்றால் குருவாகவும், இரண்டென்றால் சனிபகவானாகவும், மூன்றென்றாலும் சனிபகவானாக வும், கேட்டை நான்காம் பாதமென்றால் குருவாகவும் அமையப்பெறுவார்கள்.
நமது ஜோதிடவியலின்படியும், வானியலின்படியும், சந்திரன் கேட்டை நட்சத்திர கோணப் பிரிவுகளுக்குள் பயணிக்கும் காலத்தில் பிறப்பவர்கள் தங்களை கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி என்று அறிமுகப் படுத்திக் கொள்வார்கள்.
கேட்டை என்பது தமிழ்ப் பெயர்தான். பல ஜோதிட நிகண்டுகளில் தழல், வல்லாரை, சேட்டை, இந்திரன் நாள், ஏரி என்ற பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. சமஸ்கிருதத்தில் இந்த நட்சத்திரத்தை ஜேஷ்ட் என்பார்கள். ஜேஷ்டா என்பது "மூத்த' என்று பொருள்படும். இதற்கு ஒரு புராணக் கதையும் உண்டு.
ராகு- கேது நவகிரக அந்தஸ்தைப் பெற்று ராசி மண்டலத்திற்கு வருவதற்கு முன்னால், அவர்களுக்கென்று தனி நட்சத்திரங்கள் இல்லை. இப்பொழுதுள்ள வழக்கம்போல் அஸ்வினியை முதலாவதாக எண்ணும் வழக்கமில்லை. கேட்டைதான் முதல் நட்சத்திரமாக அறியப்பட்டது.
இதனாலேதான் கேட்டையை மூத்த நட்சத்திர மாக புராணங்கள் கூறுகின்றன.
மேலும் கேட்டையில் பிறந்த பெண்களுக்கும் மூத்த கொழுந்தனுக்கும் ஆகாது என்ற பழைய வழக்கமுண்டு. அது வெறும் பழைய மொழிதான். இப்பொழுதுள்ள நிதர்சன வாழ்வில் அப்படியொரு நிகழ்வு இருப்பதில்லை என் பதே பல ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது.
கேட்டை என்பது மூன்று நட்சத்திரத் தொகுப்பு. இதை இணைத்தால் ஜிமிக்கி போன்றும், பதக்கம் போன் றும், கவிழ்த்த முக்கோணம் போன்றும் காட்சியளிக்கும்.
இதுவொரு பெண் நட்சத்திரமாகும். ராட்சச குணம்கொண்ட நட்சத்திர மாகவும் அறியப்படுகிறது. இதன் அதிதேவதை இந்திரன். பொதுவாக இந்திரன் தேவர்களின் தலைவன் என்று மட்டுமே தெரியும். ஆனால் ஒவ்வொரு மனிதனையும் இயக்கும் பஞ்சபிரானுக்கு உரியவர் இவர். இது வாயு தத்துவ நட்சத்திரமாகும்.
பஞ்சபாண்டவர்களில் தர்மன் பிறந்தது இந்த கேட்டை நட்சத்திரத்தில்தான்; இந்திரன் போரிட்டு மழையை மீட்டது இந்த கேட்டை நட்சத்திரத்தில்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. மேலும் இந்திரனின் சுபாவம் இந்த நட்சத்திரத்திற்கு இருக்கும் என்கின்றன நிகண்டுகள்.
இந்திரனின் சபலம் என்பது நாமறிந்ததே. எளிதில் காதல் வயப்படுவது பாலியல் வேட்கை. இதன் தொடர்பான ஏற்படும் பாலியல் நோய்கள் போன்றவற்றின் அடையாளம் இந்த கேட்டை நட்சத்திரமாகும்.
"கேட்டை கோட்டை கட்டும், கெட்ட குடிக்கு ஒரு கேட்டை' என்றெல்லாம் வழக்கு கள் உண்டு. இது எதனால் வந்ததென்று பார்த் தோமேயானால், விருச்சிகத்துக்கு ஒன்பதாமதி பதி சந்திரன். இந்த ஒன்பதாம் இடமானது பிதுர்வழி பங்காளி, பாரம்பரியம், பரம்பரை பாக்கியம், ஆன்மிகம், கௌரவம் ஆகியவற்றை சொல்லக்கூடிய இடம். அதன் அதிபதி சந்திரன் விருச்சிகத்தில் நீசமாகும்பொழுது, இவர்களின் பிறப்பு நடுத்தரக் குடும்பத்தில் நிகழ்ந்துவிடுகிறது. தங்களின் இளம்வயதில் பெரும் போராட்டங்களை சந்தித்து, தன்னந்தனியாக விழுந்து முளைத்து வளரும் விருட்ச மாக இவர்களின் நிலை உருவாகிவிடுகிறது. இதனால் தான் இப்படி ஒரு சொல வடை உருவானது.
பெரும் வசதிவாய்ந்த வீடுகளில் பிறந்திருந்தா லும் இவர்கள் வஞ்சிக்கப் பட்டவர்களாக இருக்கிறார் கள். பெரிய அளவில் உற்றார்- உறவினரின் அனுசரணையும் ஆதரவும் இவர்களுக்கு அமையப் பெறுவதில்லை.
புதன் பெறும் வலிமை யினைப் பொருத்தே இவர் களின் ஆரம்பக் கல்வியும் வளர்ச்சியும் அமையும்.
புதன் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம், சுபர் பார்வை என்னும் நிலையில் இருக்கும்போது இவர்கள் கல்வியின் நிலை சிறப்பாக அமைகிறது.
பெரும்பாலும் புதனின் நட்சத்திரங்கள் தனது நட்பு வீடுகளில் அமையாமல் பகை கிரகங்களின் வீட்டிலேயே அமைந்துவிடுவது வியப்பினைத் தந்து, இவர்களின் வாழ்விலும் ஒரு பெரும் முரண்பாட்டினை அளித்து விடுகின்றது.
இவர்கள் திட்டமிட்டு வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஆற்றலும், யாராக இருந்தாலும் நினைத்த யோசனையை பயப்படாமல் தெரிவிக் கும் தைரியமும் உடையவர்கள். சாப்பாட்டுப் பிரியர்கள். எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதக மாக மாற்றிக்கொள்ளும் தந்திரம் படைத்தவர் கள். நேர்ப்பட பேசி பல வம்புகளைத் தன் வசம் ஈர்க்கும் குணம் கொண்டவர்கள். காரிய வாதிகள். செய்நன்றி மறவாதவர்கள். எதையும் அலசி ஆராய்ந்து பார்க்கும் எண்ணம் கொண்டவர்கள்.
நட்புக்குப் பெயர்பெற்ற புதனின் நட்சத்திர மாகவே கேட்டை அமைந்திருந்தாலும், இவர் களுக்கு நண்பர்கள் குறைவாகவே இருப்பார் கள். மேலும் இவர்கள் நட்பு வட்டத்தைத் தீர்மானிக்கும்பொழுது மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டும். இவர்களுக்கு ஏற்படும் இளமைக்கால நட்புகள் குற்றங்களை செய்யத் தூண்டும் நட்புகளாகவும், தவறான பழக்க வழக்கங்கள் கொண்ட நட்புகளாகவுமே பெரும்பாலும் அமைந்துவிடுகிறது. இவர்கள் போதை வஸ்துகள்வசம் சார்ந்துவிட்டால், அதிலிருந்து இவர்களை மீட்டெடுப்பதென்பது குதிரைக் கொம்பாகிவிடும்.
யாரிடமும் அடங்கி வேலைசெய்யும் எண்ணம் இவர்களுக்கு அறவே இருக்காது. உழைப்பினை முழுதாகப் போடும் குணமும் இருக்காது. வேலை செய்வதுபோல் நடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். சற்று நேர்மையுடன் இருப்பது இவர்களைக் காக்கும் அரணாக அமையும். குற்றச் செயல்களை ஈடுபடுத்தி அதற் கான தண்டனையை வாங்கிக்கொடுக்கும் இடமும் கிரக நிலைகளும் இந்த விருச்சிகத்தை சார்ந்தது. அனுஷம் தண்டனையை வாங்கிக் கொடுக்கும் நட்சத்திரம்; விருச்சிகம் தண்டனையளிக்கும் பாவகம்.
இந்த கேட்டை சந்திரனின் கர்மப் பதிவு கொண்ட நட்சத்திரமாக அமைந்துள்ளது.
அவர்களின் வம்சாவளிகளில் கண்டிப்பாக நீரின் கண்டத்தால் உயிரிழந்தவர்கள் இருப்பார்கள். மேலும் சஞ்சலம், சலனம், இடமாற்றம், ஆராயாமல் எடுக்கப்படும் முடிவு, தாயின் ஆதிக்கம், சளித் தொந்தரவு, சைனஸ், நீர் சம்பந்தப்பட்ட நோய்கள், ஆஸ்துமா போன்ற தொந்தரவுகள் நிறைந்தவர்கள் இந்த வம்சாவளி யில் இருப்பார்கள்.
கேட்டை முதலாம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களது சந்திரன் நவாம்சத்தில் குருவின் வீடான தனுசில் சென்றடையும். இவர்களின் இளமைக் கல்வி சற்று கேள்விக்குரியது. புதன் பெறும் வலிமையைப் பொருத்து இவர்களின் கல்வி நிலை அமையப்பெறும். இவர்கள் கஷ்டப் பட்டு உயர்நிலைக் கல்வியை எட்டிப் பிடிப்பார் கள். அரசு, அரசு சம்பந்தப்பட்ட துறைகளிலும், சீருடை மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட துறைகளிலும் இவர்கள் சிறப்படைய வாய்ப்புகள் அதிகம்.
கேட்டை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களது சந்திரன் நவாம்சத்தில் சனியின் வீடான மகரத்தை நோக்கிப் பயணிக்கும். நிலையானது கீழ்நிலை அடிமைத் தொழில், ஆராய்ச்சித் துறை, புதிய கண்டுபிடிப்பு, அடிமை ஜீவனம், நிலைத்த தன்மையற்ற தொழில்கள் போன்றவை அமையும்.
கேட்டை மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களது சந்திரனும் நவாம்சத்தில் சனியின் வீடான கும்பத்தை நோக்கிப் பயணித்து நிலைபெற்றிருக்கும். இந்த நிலையானதும் இரண்டாம் பாதத்திற்குக் கூறிய பலன்களை ஒத்தே அமைந்திருக்கும்.
கேட்டை நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் குருவின் மற்றொரு வீடான மீனத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும். இந்நிலையில், இவர்களுக்கு புதன் தசை சில ஆண்டுகளே பயணிக்கும். மேலும் கேது தசையும் முடியும் நேரம் இவர்களின் கல்விப் பயணத்தில் இருப் பார்கள். இந்நிலை உயர்கல்வியை இவர்கள் எட்டிப் பிடிப்பதற்கு ஏதுவாக அமைந்து, கல்வி யின்மூலம் சிறப்படையும் தறுவாய் இவர் களுக்கு அமையும். இந்த இடம் சுக்கிரன் உச்சம் பெறும் இடமாக அமையப்பெறுவதனால், கலை சம்பந்தப்பட்ட இயல், இசை, நாடகம் சம்பந்தப்பட்ட துறைகளில் இவர்கள் தங்களை சிறப்படைய வைத்துக்கொள்வார்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பூர்வீகம் பெரும் சுபிட்சமாக அமையப் பெறுவதில்லை. இவர்கள் அந்நிய மாவட்டம், அந்நிய நாடு, அந்நிய தேசம் போன்ற இடங் களிலேயே சிறப்புற வாழ்பவர்களாக பெரும் பான்மையினர் அறியப்படுகின்றார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தொழில் மற்றும் பணியிடங்களில் காதணி, ஜிமிக்கி சின்னம் அல்லது குடை சின்னம் பயன்படுத்துவதன்மூலம் தொழிலில் சிறப் படைய முடியும்.
வணங்கவேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சியம்மன்.
வணங்கவேண்டிய: விருட்சம் பலாமரம்.
அணியவேண்டிய ரத்தினம்: மரகதம்.
(அடுத்த இதழில் மூலம்)
செல்: 80563 79988