ஸ்வினி என்பது இந்திய வானியலிலும், ஜோதிடத்திலும், ராசி சக்கரத்திலும் பேசப்படும் 27 நட்சத்திரங்களில் முதலாவது நட்சத்திரமாகும்.

இது மேஷ ராசியில் அமையப்பெற்ற பிர காசமான, பிரம்மாண்டமான, உடைபடாத நட்சத்திரமாகும். இதனுடைய அறிவியல் பெயர் ARIETIS என்பார்கள். இதனை மேற்கிந்தியர்கள் ஹேமல் (HAMAL) என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த நட்சத்திரக் கூட்டம் கண்களுக்குப் புலப்படும். வகையில் வானில் அமையப் பெறும் என்பார்கள். அது உதயமாகும் நேரத்தை வைத்து நம் முன்னோர்கள் இரவில் மணி, நிமிடங்களைக் கணக்கிடு வார்கள் என்றும் கூறப்படுகிறது.

அஸ்வினி என்னும் பெயர் சமஸ்கிருத மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். இது இரவை, ஐப்பசி, யாழ், ஏறு, புரவி, பரி, சென்னி என்னும் தமிழ்ச் சொற்களால் அழைக்கப்படுவதாக சதுரகராதி, நாமதீப நிகண்டு, திவாகர சூடாமணி நிகண்டுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

Advertisment

இந்த அளப்பரிய அஸ்வினி நட்சத்திரம் சூரியனின் குறுக்களவை விடவும் 18 பங்கு பெரியது. சூரியனைப்போல் 4.5 பங்கு கனமுள்ளது. 55 பங்கு ஒளியுடையது. பூமியிலிருந்து 65.9 ஒளியாண்டுகள் தூரத்தில் இருப்பதால் இதன் தோற்ற ஒளிப்பொழிவு 2.01 ஆகும். வானத்தில் ஒளிரும் எல்லாவற்றிலும் ஒளிர்வில் 47-ஆவதாக இடம்பெற்றுள்ளது. இது ஆறு நட்சத்திரங்கள் அடங்கிய கூட்டம். கோலப்புள்ளிபோல அமைந்தது இந்த ஆறு நட்சத்திரத்தைத் தொட்டுக் கோடுபோட்டால் குதிரைத்தலைபோல தெரியும். அதனால்தான் அஸ்வினி நட்சத்திரத்தின் உருவம் ஆண் குதிரைத் தலையாக அமைக்கப்பட்டுள்ளது.

புராணரீதியாக இந்த அஸ்வினி நட்சத்திரம் சூரியனின் கர்மப் பதிவி னைக் கொண்டதாகக் கூறப் படுகிறது. சூரியதேவனின் ஒளி தீட்சண்யத் தைத் தாங்கமுடியாத அவரது மனைவி சந்தியா, தன் உருவத்தைப் போன்றே சாயா என்னும் மற்றொரு உருவத்தை உருவாக்கி உயிரூட்டினாள். பின் தவம் மேற்கொள்ளச் சென்றுவிட்டாள். இதையறிந்த சூரியதேவன் சந்தியா தவம் மேற்கொண்டிருந்த இடத்தை அடைந்தபொழுது அங்கே சந்தியா பெண் குதிரை வடிவெடுத்திருந்தாள். சூரியதேவன் தன் ஒளியினை எட்டு மடங்கு குறைத்துக் கொண்டு, ஆண் குதிரை வடிவத்தில் இணைந்த தில் பிறந்தவர்கள்தான் அஸ்வினி குமாரர்கள். இவர்கள் குதிரைமுகம் படைத்த இரட்டையர்கள். மருத்துவ சாஸ்திரத்தைத் தன்னகத்தே கொண்டிருந்த சூரியபகவான், தன் புதல்வர்களான அஸ்வினி குமாரர்களுக்கு அந்தப் பொறுப்பினை ஒப்படைத்ததாகவும், அவர்கள் தேவலோகத்தில் அமிர்த கலசத்துடன் மருத்துவராகத் திகழ்கிறார்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

Advertisment

sss

ஜோதிடத்தில் அஸ்வினியை கேது ஆள்கிறது. இந்த அஸ்வினி கேதுவின் நட்சத்திர மாக ஜோதிடத்தில் அறியப்படுகின்றது. மேஷ ராசியில் அமையப்பெற்ற இந்த அஸ்வினியில் சந்திரன் பயணிக்கும்போது ஜனித்தவர்கள் மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார் கள்.

இங்கு ராசிநாதன் செவ்வாய், நட்சத்திர நாதன் கேது, நவாம்சநாதர்கள்- அஸ்வினி 1-ஆம் பாதமென்றால் செவ்வாயாகவும், அஸ்வினி 2-ஆம் பாதமென்றால் சுக்கிரனாக வும், அஸ்வினி 3-ஆம் பாதத்தில் வரும்பொழுது புதனாகவும், அஸ்வினி 4-ஆம் பாதமாக விழுந் தால் சந்திரனாகவும் அமைவார்கள்.

ஒரு நட்சத்திரத்திற்கு பொதுவான பண்புகளும் குணங்களும் கூறப்பட்டிருந்தா லும், பாதசாரம் மற்றும் பாதங்களின் துணைக் கொள்ளும்பொழுது அதன் பண்புகள் மாறுபட்டுப் பலனளிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. மேலும் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மட்டுமல்ல; அந்த நட்சத்திரத்தில் ஏறி நின்ற கிரகங்களும் சில நுட்பமான பலன்களை நிகழ்த்தும்.

எதைச் செய்தாலும் அதை குறைவில்லா மல் செய்பவர்; பெண்கள்பால் அதீத அன்பும் மரியாதையும் உடையவர்; நிறைய தங்க ஆபரணம் அணிபவர்; வாய்மையைப் பேசுப வர்; நல்ல புகழ் மற்றும் பொறுமையுடன் வாழ்பவர் என்று கூறுகிறது ஜோதிடப் பாடல்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். தன்னை நேசிப்பவர்களுக்கும் தனக்குப் பிடித்தவர்களுக்காகவும் எதையும் செய்யும் துணிச்சலுடையவர்கள். ஆன்மிகப் பற்றாளர்கள். இறை நம்பிக்கையுடையவர்கள். "அவனின்றி ஓரணுவும் அசையாது' என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடையவர்கள். படபடப்பு, முன்கோபம், பிடிவாதம், பேச்சை வளர்க்காமல் வெட்டிப்பேசுவது போன்றவை இந்த நட்சத்திரத்தின் குணமாகக் கூறப்பட் டுள்ளது. சிற்சில சமயங்களில் சின்ன விஷயத்தைக்கூட ஊதிப் பெரிதாக்கி விடுவார் கள் என்கிறது நட்சத்திர நிகண்டு.

ஆடம்பரப் பிரியர்களாக இருந்தாலும் உழைப்பாளிகளாகத் திகழ்வார்கள். தங்களின் காலத்திலேயே பெரும் செல்வத்தை சேர்த்துவிடவேண்டுமென்னும் எண்ணம் படைத்தவர்கள். பலசமயம் இவர்களால் சேமிக்கப்பட்ட செல்வம் இவர்களுக்குப் பயன்படுவதில்லை.

இவர்களுக்கு ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் பெண் பிள்ளைகளே அதிகமாகப் பிறப்பார்கள். 30 வயதிற்குள் திருமணம் நடக்கலாம் என்கின்றது ஜோதிட செய்திகள். ஆனால் வேறுசில நூல்கள், மற்ற செல்வத்தை எல்லாம் இளமையிலேயே பெற்றுவிடலாம்; திருமணம் மட்டும் தாமதமாகலாம் என்கின்றன.

இவர்களுக்கு முகம் மற்றும் தொடைப் பகுதியில் மச்சம் மற்றும் மருக்கள் அமையப் பெற்றிருக்கும்.

மேஷ ராசியானது உடற்கூறில் தலைப் பகுதியைக் குறிக்கும். அதேசமயம் அஸ்வினி என்பது பாதத்திற்கு மேல்பகுதியைக் குறிக்கும். ஆகையால் இவர்களுக்கு தலை மற்றும் கால்பகுதியில் நோயின் தீவிரம் அமையப்பெறும்.

பொதுவாக அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் உடன்பிறந்த வர்கள்- அதாவது சிற்றப்பா, பெரியப்பா போன்றவர்கள் அல்லது பங்காளிகள், சிற்றப் பாவின் மகன்வழிகள் ஆகியோருடனான பகைமை இருந்துகொண்டே இருக்கும்.

இந்த நட்சத்திரக்காரர்கள் சூரியனின் நட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரம், உத்திராடம் மற்றும் செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரக்காரர்களோடு தொழில்முறை உறவு, கொடுக்கல்- வாங்கல், ரகசியம் பகிர்தல் போன்றவற்றைத் தவிர்ப்பது இவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

அஸ்வினி முதல் பாதத்தில் பிறந்தவர்கள்

உண்மையிலிருந்து தவறமாட்டார்கள். சுய உழைப்பால் வாழ்க்கையில் முன்னேறு வார்கள். ஆடம்பர செலவு செய்தாலும் நம்பி வந்தவர்களுக்கு உதவிசெய்யத் தயங்க மாட்டார்கள். சிறுவயதில் அடிக்கடி ஆரோக்கியம் பாதிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதரர்களால் பிரச்சினைகளை சந்திப்பார்கள் வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்ற- இறக்கங்களை சந்திக்க நேரிட்டாலும் அடிப்படை வசதிகளுக்கு எந்தக் குறைவும் இருக்காது. நட்புக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள்.

அஸ்வினி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

கலைகளில் ஆர்வமுள்ளவர்களாக இருப் பார்கள். பெற்றோர்கள் இவர்கள் கேட்டதை யெல்லாம் வாங்கித் தருவார்கள். மற்றவர் களைக் கவரும்படியான தோற்றத்துடன் காணப்படுவார்கள். எந்த சூழ்நிலையிலும் ஒரு பிரகாசம் இருந்தபடியே இருக்கும். உயர் கல்வி யோகமுண்டு அதிக நண்பர்களைப் பெற்றிருப்பார்கள். சிறுவயதிலேயே சொந்த வீடு, வாகன வசதிகள் அமையும். இவர்களுக் குப் பெரும்பாலும் காதல் திருமணமே நடைபெறும்.

அஸ்வினி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

அன்புக்குக் கட்டுப்படுவார்கள்; அதிகாரத்திற்கு அடிபணிய மாட்டார்கள்.

அனைவரும் விரும்பும்படி நடந்து கொள்வார்கள். நாசுக்காகப் பேசி காரியம் சாதிப்பார்கள். கணிதம், வானியல், ஜோதிடம் ஆகியவற்றில் ஆர்வமிருக்கும். பெற்றோர் களின் வார்த்தைகளுக்கு மதிப்புதந்து நடந்துகொள்வார்கள். அறிவுப்பூர்வமாக வாழ்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் தாழ்த்திப் பேசினாலும் அதனால் கலங்கமாட்டார்கள். வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைந்தபிறகுதான் திருமணம் செய்துகொள்ளவேண்டுமென்று நினைப்பார்கள். அதன்காரணமாக திருமணம் தாமதமாக நடக்கும். அளவற்ற வசதி வாய்ப்புகள் இருந்தாலும் எளிமையாக இருப்பதையே விரும்புவார்கள். அறிஞர்கள் கூடியிருக்கும் சபையில் கௌரவிக்கப்படுவார்கள்.

அஸ்வினி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

தாயிடம் அதிக பாசம் கொண்டிருப் பார்கள். பரபரப்பாகவே காணப்படுவார்கள். எப்பொழுதும் இவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். நவீனரக ஆடை, ஆபரணங்களை அணிவதில் ஆர்வம்கொண்டிருப்பார்கள். குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுவதில் மிகுந்த கவனமாக இருப்பார்கள். அழகிய தேக அமைப்பைப் பெற்றிருப்பர். சிரித்தால் கன்னத்தில் குழிவிழும். முகம் வட்ட வடிவமாக அமைந்திருக்கும். பால் தொடர்புடைய இனிப்பு வகையை அதிகம் விரும்பி சாப்பிடு வார்கள். இயல்பிலேயே தெய்வபக்தி அதிகம். ஏழை எளியவர்களுக்கு உதவிசெய்வதில் ஆர்வம் கொண்டவர்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: விநாயகர், முருகப்பெருமான் மற்றும் மகாவிஷ்ணு.

அணியவேண்டிய ரத்தினம்: பவளம்.

வழிபடவேண்டிய தலம்: வைத்தீஸ்வரன் கோவில்.

வணங்கவேண்டிய விருட்சம்: எட்டி மரம்.

(அடுத்த இதழில் பரணி)

செல்: 80563 79988