வாழ்வில் வெற்றி தரும் லக்னபாவம்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/ascendant-gives-success-life-melmaruvathur-s-kalaivani

ரு ஜாதகத்தில் லக்ன பாவத்தின் செயல் திறனே அந்த மனிதனின் வாழ்நாள் இறுதி வரை வழிநடத்தும் மந்திர சாவி ஆகும். அந்த சாவி யினை கொண்டே பல இன்னல்கள் நிறைந்த பூட்டுக் களை திறக்க முடியும். மேலும் அந்த பாவத்தின்மூலம் அழிக்கவே முடியாத நம் வாழ்வியல் விஷயங்களான குணம், நிறம், குளம், வல்லமை, பாலினம் போன்றவை நிர்ணயிக்கப்படுகின்றது.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் லக்னபாவம் மட்டும் பலமாக அமைந்து விட்டால் போதுமானது மற்ற பாவங்களின் நிலையும் முக்கியத்துவம் என்றாலும், லக்னம் மற்றும் லக்ன அதிபதியின் சிறப்பான நிலையானது எல்லா இடர்பாடுகளையும் தாங்கும் வல்லமையினை தந்துவிடும்.

லக்ன பலம் மற்றும் பலவீனம் எவ்வாறு அறிவது என்று பார்த்தோமேயானால், லக்னத்தில் சுப கிரகங் களான குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதன், போன்ற கிரகங்கள் அமர்வதும் பார்வை செய்வதும் லக்ன அதிபதி ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம், யோகியின் நட்சத்திரப் புள்ளியில் அமர்வது, கர்ணன் நாதன் உடன் இணைவது, இந்து லக்னத்தில் அமர்வது போன்றவை லக்னத்தில் பலத்தை எடுத்துரைக்கும்.

dsds

மேலும் லக்னத்தின் பலவீனம்

ரு ஜாதகத்தில் லக்ன பாவத்தின் செயல் திறனே அந்த மனிதனின் வாழ்நாள் இறுதி வரை வழிநடத்தும் மந்திர சாவி ஆகும். அந்த சாவி யினை கொண்டே பல இன்னல்கள் நிறைந்த பூட்டுக் களை திறக்க முடியும். மேலும் அந்த பாவத்தின்மூலம் அழிக்கவே முடியாத நம் வாழ்வியல் விஷயங்களான குணம், நிறம், குளம், வல்லமை, பாலினம் போன்றவை நிர்ணயிக்கப்படுகின்றது.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் லக்னபாவம் மட்டும் பலமாக அமைந்து விட்டால் போதுமானது மற்ற பாவங்களின் நிலையும் முக்கியத்துவம் என்றாலும், லக்னம் மற்றும் லக்ன அதிபதியின் சிறப்பான நிலையானது எல்லா இடர்பாடுகளையும் தாங்கும் வல்லமையினை தந்துவிடும்.

லக்ன பலம் மற்றும் பலவீனம் எவ்வாறு அறிவது என்று பார்த்தோமேயானால், லக்னத்தில் சுப கிரகங் களான குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதன், போன்ற கிரகங்கள் அமர்வதும் பார்வை செய்வதும் லக்ன அதிபதி ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம், யோகியின் நட்சத்திரப் புள்ளியில் அமர்வது, கர்ணன் நாதன் உடன் இணைவது, இந்து லக்னத்தில் அமர்வது போன்றவை லக்னத்தில் பலத்தை எடுத்துரைக்கும்.

dsds

மேலும் லக்னத்தின் பலவீனம் என்பது பாவ கிரகங்கள் என்று அறியப்படும் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது தேய்பிறை சந்திரன் போன்றோர் அமர்வதும், லக்ன அதிபதி நீசம், அஸ்தங்கம், திதி சூனியம், வக்ரம் இதுபோன்ற சூழ்நிலையில் அகப்படுவதும், 6, 8, 12 போன்ற பாவகங்களில் தொடர்பு பெறுவதும், லக்னத்தின் பலவீனத்தை குறிக்கும்.

அதோடு மட்டுமல்லாமல் லக்ன அதிபதி அமரும் சூழலும், இணையும் சூழலும், இதன் வலிமைக்கு பெரும் பங்குவகிக்கும்.

லக்னாதிபதி ஆறெட்டு, பன்னிரண்டாம் வீடுகளில் அமர்வது, அவர்கள் சொந்த ஊரில் பெருமளவு ஜெய்ப்ப தில்லை. இவர்கள் வெளியூர், வெளிநாடு, போன்ற இடங்களுக்கு சென்று சிறப்பாக வாழ்வதைக் கண்கூடாக காண முடிகின்றது.

அதேபோன்று லக்னாதிபதி வக்ரமானால், இவர்களின் மனோ நிலையானது சக மனிதர்களின் மனரீதியான சூழ்நிலைக்கு ஒத்துசெல்லாமல் விடாப் பிடியாகவும், ஒத்திசைவு இல்லாமல் இருப்பார்கள். இவர்கள் சரியில்லாத நபர்கள் என்று சுற்றத்தாரால் தூற்றப்படுவார்கள்.

லக்னத்தில் சூரியன் அமரும்போது தன்னிலையே, முன்னிலை, என்ற எண்ணத்தில் பயணிப்பார்கள். மேலும் கோபம், ஆளுமை, அரசு சார் எண்ணங்கள், கொடை குணம், தந்தைமீதான பாசம் போன்ற செயல்களில் இவர்கள் இருப்பார்கள். இவர்கள் எதிலும் தனக்கே முதல் உரிமை தந்தாக வேண்டும் என்று வாழ்வார்கள்.

லக்னத்தில் சந்திரன் அமையபெற்றவர்கள் மனரீதியான உணர்வு நிலைப்பாட்டிலும், வட்ட வடிவமான முகத்துடன்கூடிய உருவ அமைப்பும், தாயார்மீதான பாசத்திலும், உணர்வுரீதியாகவும், உணவுரீதியாகவும், வெளிப்படும் மனோநிலை பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

லக்னத்தில் செவ்வாய் அமரும்பொழுது கணவர் மீதும், சகோதரர்மீதும், அதீத பற்று உடையவர்களாகவும், எதிலும் சட்டு என்று உணர்ச்சிவசப்படக் கூடியவர் களாகவும், கோபம், வெறுப்பு போன்றவற்றை பிறர்மீது உமிழும் தன்மை உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு பூமி, மண்மீதான பற்று மிகுதியாக காணப்படும்.

புதன் அமையப்பெற்றவர்கள் ஒரு துள்ளலுடன்கூடிய வாழ்வை அனுபவிப்பார்கள், இவர்களுக்கு நகைச்சுவை உணர்வுடன் இருப்பது மிகவும் பிடிக்கும். இவர்கள் நண்பர்களின்மீதும் அதீத பற்றுடன் இருப்பார்கள். கலா ரசனை மிகுந்த நபர்களாக இவர்கள் வலம்வருவார்கள்.

லக்னத்தில் குரு அமரப்பெற்றவர்கள் பிறரின் நலனில் பெரும் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.

கௌரவத்திற்காக தனது வலியினை மறைத்து புன்னகையுடன் வலம்வருவார்கள். தான் கற்ற கல்வியை, சூழ்நிலையை, பிறர் புரியும் வண்ணம் எடுத்துரைக்கும் வல்லமை பெற்றவர்களாக அமைந்திருப்பார்கள்.

லக்னத்தில் சுக்கிரன் அமையப்பெற்றவர்கள் எதிலும் ஒரு அழகியலோடும், கர்வத்தோடும், ஈர்ப்புடனும், இருப்பார்கள் தன்னை முன்னிலைப்படுத்தி மேம்படுத்திக்கொள்ளும் ஆற்றல் இவர்களிடம் இயற்கையாகவே அமைந்திருக்கும். எப்பொழுதும் ஒரு நளின பாவத்துடன் இவர்களின் வாழ்வு மலரும். பிறரை ஈர்க்கும் வசீகரமும், வலியைகூட அழகியலுடன் வெளிப்படுத்தும் தன்மை உடையவர்களாகவும் இருப்பார்கள்.

லக்னத்தில் சனி அமையப் பெற்றவர்கள் சற்று சோம்பேறித் தனத்துடனும், தாழ்வு மனப்பான்மை யுடனும், இருப்பார்கள். இவர்களை பிறர் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள முடியாது.

லக்னத்தில் ராகு இருப்பவர்கள் தனது குளத்தில் இதுவரை நடந்தி டாத சூழ்நிலையை தனக்காக நடத்திக் கொள்பவர்களாக இருப்பார்கள். மாற்று சிந்தனை நிரம்ப உள்ளவர் களாகவும், எதிலும் ஒரு பிரம்மாண் டத்தை எதிர்பார்ப்பவர்கள் ஆகவும், இருப்பார்கள். இவர்களின் எண்ணம் யாராலயுமே அறியமுடியாது.

லக்னத்தில் கேது அமையப்பெற்றவர்கள் உலக விஷயங்கள் அனைத்தைப் பற்றிய தரவிலும் ஈர்ப்புடையவர்களாக இருப்பார்கள். எந்த சூழ்நிலையில் சார்ந்த கேள்விகள் கேட்டாலும் அதற்கான தக்க பதிலை உரைக்கும் வல்லமை பெற்றவர்களாகவும், எதிலும் ஒரு விரக்தியுடனும் ஆழ்ந்த மௌனத் துடனும் காணப்படுவார்கள்.

ஜாதகத்தில் லக்னத்தில் சூழ்நிலை எவ்வாறு இருந்தாலும் இந்த லக்னத்தை பலப்படுத்துவதன்மூலமாக வாழ்வியலில் சூழ்ந்துள்ள சிறப்புகளை ஆளும் திறன் உருவாகும்.

லக்னத்தை எப்படி பலப்படுத்துவது? உங்களின் லக்ன அதிபதி ஏறிய சாரநாதன், எந்த கிரகமும் அந்த கிரகத்தின் விருட்ச வழிபாடும், உங்களின் லக்னம் அமைந்த ராசியில் சின்னத்தை தொழில் மற்றும் நீங்கள் வசிக்கும் இடங்களில் வைப்பதன் மூலமாகவும், உடலில் லக்ன பாவம் என்று சொல்லக்கூடிய தலைப் பகுதியை பராமரிப்பதன் மூலமும், பிறந்த இடத்திற்கு சென்று வருவதன் மூலமும் இந்த லக்ன பாவகம் இயங்கத் தொடங்கும். இதன் மூலம் லக்னத்தை பலப்படுத்தி வாழ்வில் பல வெற்றிகளை அடைய முடியும்.

செல்: 80563 79988

bala011223
இதையும் படியுங்கள்
Subscribe