ஜோதிடத்தில் எத்தனையோ உட்பிரிவுகள் இருப்பதைப் போலவே பிரசன்னம், தாம்பூலம், கைரேகை போன்ற டாரட் என்ற கார்டின் கலையும், பலன்களைப் பொருத்தவரை துல்லியமாகத்தான் பேசுகிறது. ஜோதிடத்தில் கணிதத்திற்கு தக்கபடி தசாபுக்திகள்- அந்தரம்- சூட்சுமம் என்று பேசும். சொல்லப்போனால் திசைக்குரிய பலன்களும், புத்திக்குண்டான பலன்களும், ஒவ்வொரு கிரகங்களின் காரக தத்துவமும் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பவைதான்.
கணிதமும், வாக்கு வண்மையும், அனுபவமும் கலந்திருப்பவர்களே மிகவும் நல்ல ஜோதிடர்கள் என்று மக்களுக்கு அடையாளம் காட்டுகிறது.
ஆனால் டாரட் கலை அப்படியல்ல. இதற்கு எந்தவொரு கணிதமும் இல்லை. தசையும் இல்லை. புக்தியும் இல்லை. ஆனால் இது முழுக்க முழுக்க கையாள்பவருடைய கலையைப் பொருத்தது. சொல்லப் போனால் இது ஒரு அமானுஷ்யமான ஆற்றல் நிறைந்த கலை என்றே நான் கருதுகிறேன். இங்கு அமானுஷ்யம் என்றாலே பெரும்பாலான மக்கள் ஏதோ பில்லி, சூனியம், ஏவல், பிசாசு போன்றது என்றே நினைக்கிறார்கள். ஆனால் அமானுஷ்யம் என்பதும் ஒரு தெய்வீகக் கலைதான் என்று புரிந்து, உணர்ந்தவர்களுக்குத் தெரியும்.
அப்படியானால் ஜோதிடத்தையும் தாண்டி இதனால் பலன் பார்க்கமுடியுமா என்று கேட்டால் கண்டிப்பாக பலன்கள் சொல்லமுடியும். அதேபோல, எந்தவொரு சாஸ்திரத்திலும் சொல்லப்படாத பரிகாரங்களைப் பற்றி பேசும். அப்படிப் பரிகாரங்களால் தீர்வு உண்டா என்று கேட்டால் ஆயிரமல்ல, லட்சம் மடங்கு தீர்வு கிடைக்கும்.
இது எல்லாம் சாத்தியமா என்று கேட்டால் எல்லாருக்கும் தீர்வு என்பது சாத்தியமல்ல என்றுதான் சொல்லமுடியும்.
வந்திருப்பவர்களுக்கு பார்த்தால் சரிவரும் என்று உள்மனமானது சொன்னால் மட்டுமே அவர்களுக்கு பார்க்கிறேன். பலன்கள் சரியாக வருகிறது. சொல்லும் தீர்வும் நடக்கிறது. பலர், பல வருடமாக தொடர்புகொண்டாலும், நேரில் வந்தாலும் காலம் அவர்களை அனுமதிப்பதில்லை; பார்ப்பதும் இல்லை.
ஒருவர் என்னை பலமாத காலமாக சந்திக்கவேண்டுமென விரும்பி தொடர்பு கொண்ட போதெல்லாம் மறுத்துவிட்டேன். சுமார் ஆறு மாத காலத்திற்குப்பிறகு என்னை சந்திக்க வந்துவிட்டார். இவர் என்னை ஏதோ ஆராய்ச்சி பண்ண வந்தவர்போல மனம் சொல்லியது. மேலும் அவருக்கு ஜோதிடம் தெரியும் என்றும் எனக்குள் சொல்லியது.
"சார் உங்களுக்கு ஜோதிடம் தெரியுமா?'' என்று கேட்டேன்.
"தெரியும் சார்!'' என்றார்.
"இவர் மற்றவர்களுக்கு சொல்வது எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது' என்று உள் மனம் சொல்ல "சார் நீங்கள் பலன் சொல்வது எல்லாம் நடந்துகொண்டுதானே இருக்கிறது?'' என்று கேட்க "ஆமாம் சார்!'' நடந்துகொண்டுதான் இருக்கிறது'' என்றார்.
பிறகு என்ன சார் பிரச்சினை?'' என்று கேட்க.
"ஐயா, இது ஒரு சொத்துப் பிரச்சினை. இரண்டு, மூன்று தலைமுறையாகிவிட்டது. அது என்னோட மனைவி உட்பட ஐந்து நபர்களுக்கு பாத்தியப்பட்டது. ஆனால் என்னோட மனைவியின் அண்ணன் அந்த சொத்துகளையும் சொத்துகளுக் குண்டான ஆவணங்களையும் வைத்துக் கொண்டு, சொத்தை பிரித்துத் தர மறுப்ப தோடு ஆவணங்களையும் தர மறுக்கிறார்.
நாங்களும் எவ்வளவோ முயற்சிசெய்து பார்த்தும் எதற்குமே சம்மதிக்க மறுப்ப தோடு, உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார் சார்'' என்றார்.
"சரி உங்களது ஜோதிடம் என்ன சொல்கிறது?'' என்று கேட்க.
"சொத்து கிடைக்கும் என்று சொல்கிறது ஐயா...!'' என்றார்.
"எப்படி கிடைக்கும்'' என்று சொன்னதா சார்?'' என்று கேட்க.
"அது சொல்லவில்லை சார். இந்த வருடத்தில் கிடைக்கும் என்று சொல்கிறது ஐயா!'' என்றார்.
இதுதான் ஜோதிடம். இதுக்குமேல் பேசாது. இதற்கு என்ன பரிகாரம் செய்தால் சொத்து கிடைக்கும் என்ற ஆதாரம் எந்த ஜோதிட நூல்களிலும் இல்லை.
இவரும் கேரளா உட்பட பார்த்துவிட்டார். பல பிரசன்னம் பார்த்துவிட்டார். பரிகாரம் சொல்லவில்லை. ஆனால் டாரட் என்ற கலைமூலம் நம்பமுடியாத சில அமானுஷ்யமான பரிகார வழிமுறைகளைக் கூறியது.
அதில் கிடைத்த அனுபவங்களையும்- அசாத்தியமான வழிமுறைகளையும் ஒரு தனி நூலே போட வேண்டியிருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அனுபவங்கள். சொன்னால் வாசகர்களே நம்ப மாட்டார்கள். ஆனால் நடந்தது. சொன்னபடி பதினெட்டே மாதங்களில் கிடைக்காத சொத்தை இவர்கள் பல கோடிக்கு விற்றுவிட்டார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், இன்றும் அந்த நண்பர்கள் இருக்கிறார்கள். இது ஒரு அமானுஷ்ய மான உண்மைச் சம்பவம். வாசகர்கள்
இது உண்மையா? என அறிய விரும்பினால் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்.
அவருடன் தொடர்புகொண்டு தெரிந்து வியந்துகொள்ளலாம். ஆக, டாரட் ஒரு அற்புதமான ஒரு தெய்வீகக்கலை.
இதைக் கையாள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல.
செல்: 96552 69723.