5-புதன்

5, 14, 23, 32, 41, 50, 59, 68, 77, 86, 95, 104 ஆகிய எண்களில் பெயர் அமைந்தவர்களும்; 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் புதனின் ஆதிக்கம் பெற்றவர்கள். இது அனைவராலும் மிகவும் விரும்பப்படும் எண். அனைத்து எண்களுக்கும் இந்த எண் பொதுவானது. மிக நன்மையும் அதிர்ஷ்டமும் தரும் எண்ணாகும்.

புதனின் ஆதிக்கம் மிகுந்தவர்களுக்குப் பெரிய யோகங்களைக் கொடுக்கும். புதனின் ஆதிக்கம் இல்லாதவர்களுக்கும் இந்த ஆதிக்கமானது நல்ல பலன்களைத் தரவல்லது. இதனாலேயே பெரும்பாலான எண்ணியல் நிபுணர்கள் பெயர் எண் 5 வரும்படி அமைத்துக் கொடுக்கிறார்கள்.

புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் பல திறமை களைத் தன்னுள் கொண்டவர்கள். தான் மட்டும் அறிவாளியென்று நினைக்கக்கூடிய வர்கள். ரகசியத்தை வாழ்நாள் முழுவதும் காப்ப வர்கள். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்பவர்கள். எதையும் எளிதில் புரிந்துகொண்டு வேலையை சிறப்பாக முடிப்பார்கள். பலதுறைகளில் தேர்ச்சிபெற்றவர்கள். இளமையான தோற்றம் கொண்டவர்களாகவும், இனிமையாகப் பேசுபவர்களாகவும் இருப்பார்கள். பழமையை வெறுப்பவர்கள்; புதுமையை விரும்புபவர்கள். திருமண விஷயத்தில் அவசரப்படக் கூடியவர்கள்.

Advertisment

ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது யோசனைகள் பிரஞ்சத்திடமிருந்து இவர்களுக்கு வந்துகொண்டே இருக்கும். மும்மூர்த்திகளில் அறிவுக்கும் யுக்திக்கும் பெயர்பெற்றவர் விஷ்ணு பகவான். அவரின் முழுக்கடாட்சமும் பொருந்திய எண் என்பதால், வேறு எந்த எண்ணிற்கும் இல்லாத காந்தசக்தி இந்த 5-ஆம் எண் நபர்களுக் குண்டு. மக்களைக் கவர்வதில் இவர்களுக்கு நிகர் எவருமில்லை.

இவர்களது பேச்சில் கேலியும் கிண்டலும் சிரிப்பும் கலந்திருக்கும். எத்தகைய நபர்களைச் சந்தித்தாலும், தங்களது தனித்தன்மையை அவர்களுக்கு சீக்கிரம் உணர்த்திவிடுவார்கள். பல வருடகாலம் நண்பர்களாக நீடித்துத் தொடர்பு கொள்ளும் தன்மையும், கவர்ச்சியும், நட்பு பலமும் இந்த எண்காரர்களுக்கு உண்டு. கடும் உழைப்பால் புகழையும், பெருஞ்செல்வத்தையும் மிகச்சிறப்பாகத் தேடிக்கொள்வார்கள்.

எழுத்தாளர் பணியில் இவர்கள் நன்கு பிரகாசிப்பார்கள். பேனா நண்பர்கள் அதிகம் உடையவர்கள். அரசியல்துறையிலும் அதிர்ஷ்டம் உடையவர்கள். இவர்கள் எந்த வியாபாரமும் செய்யலாம். பொதுஜன ஆதரவுண்டு. இவர்கள் இருக்கும் இடத்திற்குக் கூட்டம் அதிகம் வரும்.

Advertisment

தரகர்கள், கமிஷன் முகவர்கள், டிராவல்ஸ் ஏஜென்டுகள், கணிதம், சார்ட்டட் அக்கவுண்ட் தொழில், ஃபைனான்ஸ், கதை, கட்டுரை, கவிதை எழுதுதல், அக்கவுன்டன்ட், மார்க்கெட்டிங், பேச்சாளர், அறிவியல், கலைத்துறை, ஜோதிடம் போன்ற துறைகளும் ஏற்றவை. நடிகர்கள், நடிகைகள், கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்களாகப் புகழ்பெறுவார்கள்.

உலகத்தின் நாடுகளுக்கிடையே அமைதியை ஏற்படுத்தும் தூதுவர்களாக விளங்குவர். வான ஆராய்ச்சி, செய்தி பரப்புத் துறைகள், பொதுமக்கள் தொடர்பு (ட.த.ஞ) சம்பந்தமான தொழில்களிலும் நன்கு பிரகாசிப்பார்கள்.

இருப்பினும் ஒரு தொழிலை நன்கு செய்துகொண்டிருக்கும்போது, இன்னொரு தொழில் செய்தால் இதைவிட நன்றாக இருக்குமே என்று யோசிப்பார்கள். பின்பு இதை நடுவில் விட்டுவிட்டு, புதிய தொழிலில் துணிந்து இறங்கிவிடுவார்கள். இதைப் போன்று அடிக்கடி செய்யும் தொழில்களை, வியாபாரங்களை மாற்றுவது சிறப்பல்ல. ஆனால் தாங்கள் செய்துகொண்டிருக்கும் தொழில்களில் புதுமையைப் புகுத்தி வெற்றியடைவார்கள். இந்த எண்காரர்களின் அறிவு மிகவும் அற்புதமானது. மற்ற எண்காரர்கள் தங்களது துன்பங்களையும் துயரங்களையும் கண்டு கலங்கும்போது, இவர்கள் மட்டும் அவற்றை சவால்களாக எடுத்துக் கொள்வார்கள்.

இவர்களுக்குக் காதல்மீது மோகம் அதிகம். துணிந்து காதலில் ஈடுபடுவார்கள்.

அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர் களால் அதிகம் ஈர்க்கப்படு வார்கள். 1, 3, 6-ஆம் தேதி களில் பிறந்தவர்களை மணக் கலாம். குழந்தை பாக்கியம் இவர்களுக்குக் குறைவு.

எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு. பொதுவாக மற்ற எண்காரர்கள் அனைவரும் இவர்களுக்கு நண்பர்களே. குறிப்பாக 1, 6, 9 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இவர்களுடன் மிகவும் அதிகமாகப் பழகுவார்கள். இவர்கள் யாருடனும் சேர்ந்து கூட்டுத்தொழில் செய்யலாம். மற்ற எண்காரர்களை அனுசரித்துச்சென்று வெற்றிபெற்று விடுவார்கள்.

பெயரெண்- 5: தனித்த புதனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுகமான வாழ்க்கை, புகழ், உயர்ந்த அந்தஸ்து, விடாமுயற்சி, மனவுறுதி கொண்டவர்கள். ஊரில் பெரிய மனிதர்களாக விளங்குவார்கள். நகராட்சி, ஊராட்சி, மாநகராட்சி போன்றவற்றில் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். அறிவென்னும் அற்புதத்தின் விளக்கம் இவர்கள்தான். புதிதாக எதையும் அறிந்துகொள்ளும் ஆர்வமும், அதை வாழ்வில் உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ளும் திறமையும் உண்டு. எந்த வகையான சோதனைகளையும், சிரித்துக்கொண்டே சமாளித்துவிடுவார்கள். தன்னம்பிக்கை மிகுந்தவர்கள். சீக்கிரமாக- அதுவும் அதிகமாக சம்பாதிக்கவேண்டு மென்ற முயற்சியுடன் ஈடுபட்டு, லாபமடை வார்கள்.

maths

பெயரெண்- 14: சூரியன் மற்றும் ராகுவின் ஆதிக்கம் கலந்த எண். தந்தையுடன் இணங்கிப்போகமாட்டர்கள். சூழ்நிலைக்குத் தகுந்தபடி தன்னை மாற்றிக்கொள்ளும் குணம் கொண்டவர்கள். பயணத்தில் நாட்டம் உள்ளவர்கள். எதிர்பாராத பல சம்பவங்கள் இவர்களின் வாழ்க்கையில் நடைபெறும். வியாபாரத்திற்கேற்ற எண். எல்லாவித வியாபாரமும் பலிதமாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் ஏற்படும். மக்களைக் கவர்கின்ற சிறந்த எண் இது.

எனவே எப்போதும் இவரைச் சூழ்ந்து பத்துப் பேர் இருப்பார்கள். அரசியலிலும் இவர் களுக்கு அதிர்ஷ்டம் உண்டு. எதிர்பாலினத்த வர்மூலம் பலவிதமான இடையூறுகள் ஏற்படும். காதல் திருமணம் போன்றவற்றில் அவசரப்படுவார்கள் அல்லது ஏமாற்றம் அடைவார்கள். காதல் விஷயங்களில் கவனமாக இல்லாவிட்டால், பின்பு வாழ்க்கையே கசந்துவிடும்.

பெயரெண்- 23: சந்திரன் மற்றும் குருவின் ஆதிக்கம் கலந்து குருச்சந்திர யோகம் பெற்ற அதிர்ஷ்டமான எண். எடுத்த காரியத்தில் வெற்றிதரும் ராஜவசியம் கொண்ட எண். இவர்கள் போடும் திட்டமெல்லாம் வெற்றி யடையும். பிறர் செய்யமுடியாத காரியங் களையும் செய்து சாதிப்பார்கள். மிதமிஞ் சிய அதிர்ஷ்டசா-. சாதாரண மனிதர்கள் ஆதரவு முதல் ஆட்சியில் இருப்பவர்கள் ஆதரவுவரை உண்டு. எல்லா துறையிலும் வேகம் மற்றும் விவேகத்துடன் செயலாற்று பவர்கள். பிறரைத் தூண்டிவிட்டு வேகமாக எந்த வேலையையும் மிரட்டி வாங்கி விடுவார்கள். உடலுழைப்பைவிட மூளை உழைப்பில் சிறந்து விளங்குவார்கள். அரசாங்க ஆதரவு, சமூகத்தில் உயர்ந்த பதவிகள் கிடைக்கும். அரசனைப்போன்று அனைத்து வசதிகளுடனும் வாழ்வார்கள்.

பெயரெண்- 32: குரு மற்றும் சந்திரன் ஆதிக்கம் கலந்து குருச்சந்திர யோகம் பெற்ற எண். பலவிதமான மனிதர்களின் ஆதரவுண்டு. புதுப்புது கருத்துகளைத் தன்னையறியாமல் வெளிப்படுத்துவர். பிறர் யோசனைப்படி நடக்க மாட்டார்கள். சமயோசிதபுத்தி, வேடிக்கை யாகப் பேசும் திறன், மேதாவித்தனம் நிரம்பிய வர்கள். முதுமையிலும் இளமையாக இருப்பார் கள். ஒருவிதக் குருட்டு தைரியம் இவர்களுக்கு மனதில் இருந்துகொண்டே இருக்கும். புதிய சாதனைகளை விரைந்து செய்யவேண்டுமென்ற விருப்பம் நிறைந்தவர்கள். இவர்களுக்கு இறைவனின் அருளால், திடீர் யோசனைகள் அல்லது ஞானோதயம் ஏற்படும். எல்லா துறையிலும் தனித்தன்மையுடன் ஜொலிப் பவர்கள்.

பெயரெண்- 41: ராகு மற்றும் சூரியனின் ஆதிக்கம் சேர்ந்த எண். மற்றவர்களைவிட அறிவுத்திறனும் திறமையும் உண்டு. தொழில் நெளிவுசுளிவுகள் மிகத் தெரிந்தவர்கள். மற்றவர்களோடு இணைந்து செயல்படுவதில் விருப்பமில்லாதவர்கள். பிறரை அடக்கியாளும் எண்ணம் உள்ளவர்கள். வெற்றி வீரர்கள். லட்சியவாதிகள். முன்னேற்றத்தில் தீவிர ஆர்வமிருக்கும். சக்திக்கு மிஞ்சிய காரியங்களில் ஈடுபட்டு வெற்றியடைவர். எந்தத் துறையில் ஈடுபட்டாலும் ஒரு சர்வாதிகாரியைப்போல் செயல்படுவார்கள். துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகம் காணப்படும். ஸ்திரமான சுகவாழ்வு வாழ்வார்கள்.

பெயரெண்- 50: தனித்த புதனின் ஆதிக்கம் கொண்ட எண். மிதமிஞ்சிய புத்திசாலிகள். கல்வி, தேர்வில் புலமை பெற்றவர். பிரசித்தி பெற்ற ஆசிரியர்கள். 50 வயதுக்குமேல் திடீர் தனலாபம் உண்டு. ஆயுள் அதிகமாகும். சிலர் மதபோதகர்களாகவும் செயல்படுவார்கள். அடக்கம், அன்பு செலுத்துதல், புகழ் விரும்பாமை, பேராசையற்ற மனப்போக்கு ஆகிய குணங்கள் காணப்படும். மற்றவர்களை நம்புவதைக் காட்டிலும், தன் கையே தனக்குதவும் என்ற எண்ணமுண்டு. நல்ல பொருளாதார நிலையை உடையவர்கள். ஓரளவு பிடிவாத குணம் இருக்கும். நஷ்டம் வந்தபோதும் கலங்கமாட்டார்கள். மிகுந்த சிந்தனைகள் செய்பவர்களாதலால் நரம்பு பலவீனமடையும். எனவே எளிதில் எரிச்சலும் கோபமும் கொள்வார்கள்.

பெயரெண்- 59: புதன் மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் கலந்த எண். நிறைய பணம் கிடைக்கிறதென்றால், தீயவழிகளிலும் துணிந்து இறங்கிவிடுவார்கள். ஆனால் எப்படியாவது தண்டனையிலிருந்து தங்களது புத்தியால் தப்பித்துக் கொள்வார்கள். இவர் களைப் புகழ்ந்தால் அப்படியே மயங்கி விடுவார்கள். எனவே, இவர்களைப் புகழ்ந்தே மற்றவர்கள் தங்களது காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். அனைத்து பிரச்சினைகளுக்கும் மிக எளிதில் தீர்வுசொல்லி விடுவார்கள். ஆராய்ச்சியுடையவர்கள். நகைச்சுவை உணர் வோடு கூடிய எழுத்தாளர்கள்; பத்திரிகை யாளர்கள். பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பர். கதை, கட்டுரை எழுதுதல், கவிதை இயற்றுதல், நடிப்பு போன்ற கலைத்துறையில் நாட்டம் ஏற்படும்.

பெயரெண்- 68: சுக்கிரன் மற்றும் சனியின் ஆதிக்கம் இணைந்த எண். அதிர்ஷ்டமான எண்ணல்ல. வசதியான, வேலைபார்க்கும் மனைவியையே தேடுவார்கள். பணம் சம்பாதிக்கும் தொழில்களிலேயே இவர்களது எண்ணம் செல்லும். எவ்வளவு பெரிய காரியமானாலும் பயமோ, தயக்கமோ இன்றித் துணிந்து ஈடுபட்டுத் துன்பமடைவார்கள். திடீரென தனலாபத்தில் குறைவேற்படும். பேராசையே இவர்களது வாழ்க்கையைக் கெடுக்கும். நடுத்தரமான வாழ்க்கை நிலையை மட்டுமே ஏற்படுத்தும்.

பெயரெண்- 77: கேதுவின் ஆதிக்கத்தைப் பிரதிபலிக்கும் புதனின் எண். நல்ல தெய்வீக வாழ்க்கை அமையும். அறிவும் தெளிவும் உண்டு. இவர்கள் மற்றவர்களை மதிப்பவர்கள். அழகான தோற்றம் உடையவர்கள். இவர்களின் பேச்சிலும் நடத்தையிலும் ஒருவித ஈர்ப்புசத்தி உண்டு. சிறு வயதுமுதலே குறிப்பிட்ட லட்சியத்துடன் வாழ்க்கையை நடத்துவார்கள். மற்றவர்களை ஏமாற்றத் தெரியாது. சுயமுயற்சி, தன்னம்பிக்கை, பெரும்புகழ் உண்டாகும்.

அயல்நாட்டுப் பயணங்கள் ஏற்படும். மிகுந்த செல்வச் செழிப்புடன் வாழாவிட்டாலும், பொருளாதாரக் கஷ்டமில்லாமல் தேவைக் கேற்ப சம்பாதித்து மிகவும் நிம்மதியான வாழ்க்கை நடத்துவார்கள்.

பெயரெண்- 86: சனி மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த எண். சொந்தத் தொழில் செய்யவே விரும்புவார்கள். ஆனால் மற்றவர்களிடம் வேலைசெய்யும் அமைப்பே உண்டாகும். முதலாளிகளுக்கு பல ஆலோசனை களையும், பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளையும் கூறுவார்கள். அதனால் முதலாளி களால் மிக விரும்பப்படுவார்கள். தனியார் நிறுவனங்களில் வேலைசெய்யும் இவர்கள் அடிக்கடி வேலையை மாற்றும் இயல்பினர்.

சம்பள உயர்வே இவர்களது நோக்கம். ஏதாவது உபதொழில் செய்து வருமானத்தைப் பெருக்குவதில் நாட்டமாக இருப்பார்கள். மிகவும் சாமானிய சூழ்நிலையிலிருந்து, ஏராளமான இடையூறுகளை சமாளித்து நிலையாக முன்னேறுவார்கள்.

பெயரெண்- 95: செவ்வாய் மற்றும் புதனின் ஆதிக்கம் கலந்த எண். தங்களது பேச்சிலும், முடிவெடுப்பதிலும் வேகமாக செயல்படுவார்கள். மற்றவர்களுக்குப் புரியவில்லையென்றால் கோபம் எளிதில் வந்துவிடும். அதிக உழைப்பும், ஓயாத அலைச்சலும், ஆற்றலும், புத்திசாதுரியமும் அதிகம். கட்டுப்பாடான வாழ்க்கையை விரும்புபவர். வீரதீரச் செயலினால் புகழ் உண்டு. நூதனமான பொருட்களை விற்பனை செய்பவர்கள்.

தங்களைப்பற்றி பலர் வியப்போடு பேசக்கூடிய சூழ்நிலையை அமைத்து மிகச் சுலபமாக பிரபலமாகி விடுவார்கள்.

பெயரெண்- 104: சூரியன் மற்றும் ராகுவின் ஆதிக்கம் சேர்ந்த எண். விசேஷமாக தொடங்கிய வாழ்க்கை போகப்போகச் சுமாரான நிலைக்கு வரும். புகழ் மட்டும் மிஞ்சும். பொருளாதார முன்னேற்றமில்லை. தங்களின் அறிவாற்றல், சாதனைகள்மூலம் மக்களுக்கு மத்தியில் புகழ்பெறுவார்கள். இவர்களது வாழ்வில் பெருமளவுக்கு பொருளாதாரம் பெருகாது. அரசாங்கப் பணியைவிட சொந்தத் தொழிலே சிறப்புத் தரும். கூட்டு எண்கள் இணங்கி வந்தால் மட்டுமே அரசாங்கப் பணி சிறப்புத் தரும். இந்த எண்காரர்களை வேலைக்கு வைக்கும் முதலாளிகள் அதிக லாபம் சம்பாதித்துவிடுவார்கள், இவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டுத் தாங்கள் செய்யும் தொழிலை அடிக்கடி மாற்றிக் கொள்ளக் கூடாது. நிரந்தரமான ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து, அதில் புதிய வழிமுறைகளையும், புதுமையையும் புகுத்தி வெற்றி பெறவேண்டும். ஆழம் தெரியாமல் ஒன்றில் இறங்கக்கூடாது.

எண் 5 வரும்படி பெயர் வைக்கும்போது 68, 86, 104 ஆகியவற்றைத் தவிர்ப்பது உத்தமம். புதனின் ஆதிக்கத்தை அதிகரிக்க மரகதப் பச்சை மற்றும் வைரம் அணியலாம். பச்சை மற்றும் வெள்ளை, இளநிற ஆடைகளை அணியலாம்.

புதன்கிழமை மகாவிஷ்ணு மற்றும் சக்ரத்தாழ்வாரை வழிபடுவது மகத்தான மாற்றங்களைத் தரும். தினமும் விஷ்ணு சகஸ்ஹர நாமம் பாராயணம் செய்வதும், கேட்பதும் சிறப்பு. புதன்கிழமை பச்சைப்பயறு தானம் செய்யலாம்.

அதிர்ஷ்ட தேதிகள்: 5, 14, 23; 9, 18, 27.

அதிர்ஷ்டக் கிழமை: புதன், வெள்ளி, ஞாயிறு.

அதிர்ஷ்ட ரத்தினம்: மரகதப் பச்சை.

அதிர்ஷ்ட திசை: வடக்கு.

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, வெள்ளை, வெளிர் நிறங்கள்.

அதிர்ஷ்ட தெய்வம்: மகாவிஷ்ணு, சக்ரத்தாழ்வார்.

அதிர்ஷ்ட மலர்: துளசி.

அதிர்ஷ்ட மூலிகை: நாயுருவி.

அதிர்ஷ்ட உலோகம்: பித்தளை.

(தொடரும்)

செல்: 98652 20406