ஜோதிடத்தில் ஒரு ஜாதகத்தில் பலன்சொல்ல பல்வேறு முறைகள் உள்ளது. குறிப்பாக பாரம்பரியம், பிரசன்னம், கிருஷ்ணமூர்த்தி பத்ததி, அட்சய லக்ன பத்ததி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதில் எந்த முறையில் பலன் உரைத்தாலும் ராசிகளின் தன்மை, செயல்பாடு, குண நலன்கள் மாறாது. காலபுருஷ தத்துவத்தின்படி மேஷத்தில் தொடங்கி மீனம் வரை உள்ள பன்னிரண்டு ராசிகளிலும் பல்வேறு தத்துவங்கள்- ரகசியங்கள் அடங்கியுள்ளன. கிரகங்களின் நகர்வின் அடிப்படையிலும் ராசிகளின் தன்மை, வேகம் மற்றும் செயல்படும் விதத்தின் அடிப்படையிலும் பன்னிரு லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவுகளாக நமது ஜோதிட முன்னோடிகள் பிரித்திருக்கிறார்கள். இந்த கட்டுரையில் சரம், ஸ்திரம் உபயத்தின் செயல்பாடுகளையும் அவற்றை அன்றாட வாழ்வில் எவ்வாறு பயன்படுத்துவது எனவும் காணலாம்.

dd

சரம்

மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு லக்னங்களும் சரத்தில் அடங்கும். சரம் என்றால் வெகு சலனமுடையது, தடையற்ற இயக்கம்கொண்ட அமைப்பாகும். சர லக்னத்திற்கு சுபமோ- அசுபமோ எளிதில் வந்தடையும். ஒருவடைய வாழ்நாளில் சில குறிப்பிட்ட காலத்தை மட்டும் வழிநடத்தும்.வந்த தடமும் இருக்காது. போன சுவடும் தெரியாது. சர லக்னம் படைத்தல், வளர்ச்சி தத்துவத்தை தன்னுள் அடக்கியது. சர லக்னம் ராசியினர் மற்றும் ராசியில் பிறந்தவர்கள் ஓயாமல் எப்பொழுதும் உழைத்துக்கொண்டே இருப்பார்கள். ஒரு ஜாதகத்தில் சர ராசிகள் வலிமைபெற்று அதில் நின்று ஒரு கிரகம் தசா புக்திகள் நடத்தினால் ஜாதகருக்கு நன்மைகள் வேகமாக நடக்கும். இவர்கள் சரியான சந்தர்ப்பத்திற் காக காத்திருப்பார்கள். கிடைத்த சந்தர்ப் பத்தை சரியாக பயன் படுத்துபவர்கள். எதிலும் வேகம், விவேகம் என எல்லா விஷயத்திலும் அனுபவம் உடையவர் கள். ஆதாயம் இல்லாத விஷயத்தை செய்யமாட் டார்கள்.

Advertisment

குறுகிய காலத்தில் பல நன்மைகளை அனு பவிப்பார்கள்.

அடிப்படை வாழ்வாதாரத்திற்கு சிரமப் பட்ட சிலர் மிக குறுகிய காலத்தில் தேவைக்கு அதிகமாக சம்பாதித்து வீடு, வாசல் என செட்டிலாகி விடுவார்கள்.

dd

Advertisment

ஸ்திரம்

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கும் ஸ்திர லக்னத்தில் அடங்கும். ஸ்திரம் என்பது சலனமற்றது, அசைவற்றது, நிலையானது போன்றவற்றை கொண்ட தன்மையாகும். சுபமோ, அசுபமோ எதிர் பாராதவிதத்தில் வந்தடையும். வந்தால் நீண்ட காலத்திற்கு நிலையாக இருக்கும். ஏன், வாழ்நாள் முழுவதும்கூட வழிநடத்தும். ஸ்திர லக்னம் காத்தல் தத்துவத்தை அடக்கி யது. இந்த ராசி, லக்னத்தில் பிறந்தவர்கள் கொள்கை மற்றும் லட்சிய பிடிப்பு உள்ள வர்கள். இவர்கள் ஒருமுறை எடுத்த முடிவை யாராலும் மாற்றமுடியாது. அதாவது- இவர்கள் பேச்சை இவர்களே கேட்க மாட்டார்கள். ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி.

அது சரியாக இருந்தாலும், தவறாக இருந் தாலும் அதிலிருந்து மாறாமல் மாட்டார்கள். எங்கும் எதிலும் நிலைத்து நிற்பார்கள். தாம் எடுத்த முடிவில் பிடிவாதமாக இருப்பார்கள். நிலையான வெற்றியைப் பெறுவார்கள். வாழ்க்கையில் ஜெயிக்காமல் ஓயமாட்டார்கள்.

ஸ்திர ராசியில் நின்று ஒரு கிரகம்

சுபவலிமை பெற்று தசை புக்திகள் நடத்தி னால் நிலையான பல யோகங்களை ஜாதகரின் வாழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

உபயம்

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கும் உபய லக்னத் தில் அடங்கும். உபய லக்னம் சர, ஸ்திர லக்னங் களின் தன்மையும் உள்ளடக்கியது.

அதாவது ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு நகரும்போது கிரக தன்மை சரம். மாறியபிறகு ஸ்திரம். ஒரு ராசியின் அல்லது லக்னத்தின் முதல் 15 டிகிரி சரமாகவும் அடுத்த 15 டிகிரி ஸ்திரமாகவும் செயல்படும். அதனால் இது நிலையற்றது. இந்த லக்னம் அழித்தல் தத்துவத்தையும் தனக்குள் கொண்டுள்ளது. உபய ராசி லக்னத்தில் பிறந்தவர்களின் செயல்பாடுகள் நிலையற்ற தன்மையில் இருக்கும். சமயத்தில் இவர்களின் செயல்பாடுகள் இவர்களுக்கே புரியாது. ஒருவருடைய சுய ஜாதகத்தில் உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் வலிமை பெற்ற கிரகத்தின் தசா புக்திகள் நடைபெற்றால் ஜாதகருக்கு தொடர்ந்து ஏற்றமும், இறக்கமும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும்.

மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் வல்லவரான இவர்கள் தங்கள் சொந்த பிரச்சினைக்கு அப்படி செய்யலாமா- இப்படி செய்யலாமா என யோசித்துகொண்டே சொதப்பி தமக்கு தாமே சொந்த செலவில் சூன்யம் வைக்கும் புத்திசாலிகள். எதிலும் இரட்டை நிலைதான். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட மாட்டார்கள். ஒவ்வொரு நிமிடமும் சிந்தனைகளையும் எண்ணங்களையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். மனசு மாறிக்கிட்டே இருக்கும். ஏமாற்றம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

ஒரு கிரகம் சரத்தில் நின்று தசை நடத்தினால் தசை ஆரம்பித்தவுடனே பலன் தெரியத் துவங்கும். ஒரு கிரகம் ஸ்திரத்தில் நின்று தசை நடத்தினால் தசையின் மத்திம பகுதியிலும் பலன் கொடுக்கும். உபயத்தில் நின்று தசை நடத்தினால் தசையின் முடிவில் மட்டுமே பலனை எதிர்பார்க்க முடியும்.

அதேபோல் ஒருவரின் ஜாதகத்தில் சர ராசியில் அதிக கிரகம் நின்றால் இளம் வயதிலேயே உயர்வான நிலையை எட்டுவார்கள். ஸ்திரத்தில் அதிக கிரகம் நின்றால் மத்திம வயதில் வாழ்க்கையில் செட்டிலாகுவார்கள். உபயத்தில் அதிக கிரகம் நின்றால் வயோதிக காலத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.

dd

மனிதர்களாய் பிறந்தவர்கள் வாழும் காலத்தில் சுமாரான வாழ்க்கைக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம், திருமணம், குழந்தை பேறு, நல்ல தொழில், உத்தியோகம் போன்ற அனைத்தையும் உரிய காலத்தில் அடைய சரம், ஸ்திரம், உபயம் மூன்றின் இயக்கமும் தேவை.

சரத்தால் உருவாகும் குறைபாட்டை ஸ்திரத்தால் சரி செய்யமுடியும். ஸ்திரத்தால் உருவாகும் கால தாமதத்தை சரத்தால் சரி செய்யமுடியும். சரம், ஸ்திரத்தால் ஏற்படும் பாதிப்பை உபயத்தால் சரி செய்ய முடியும்.

இதை ஒரு உதாரண ஜாதகத்துடன் பார்க்கலாம். 15-1-1985-ல் 1.12-க்கு திருநெல் வேலியில் பிறந்த இந்த ஜாதகர் ஒரு சிறு மளிகைக்கடை நடத்திவந்தார். ஜென்ம லக்னம் துலாம். சர லக்னத்தில் பிறந் தவர். 10-ஆம் அதிபதி சந்திரன் லக்னத்தில் அமர்ந்ததால் ஒரு ஜோதிடரின் ஆலோசனைப்படி மளிகைக்கடை நடத்திவந்தார். மாத வருமானம் 25 ரூபாய் ஈட்டினார். தொழில் துவங்கி பத்து வருடமாகியும் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை என ஆன்லைன்மூலம் நம்மிடம் ஜாதகம் பார்த்தார். எப்பொழுதும் ஒரு ஜாதகத்தில் கேந்திரங்கள் அனைத்தும் ஒரே தன்மையை கொண்டவைகளாகவே இருக்கும். இந்த ஜாதகர் துலாம் லக்னம். லக்னமும் சரம், 10-ஆமிடமான கடகமும் சரம். 10-ஆம் அதிபதி சந்திரன் சர லக்னத் தில் துலாம் சர வீட்டில் நின்றதால் ஜாத கரை ஒரே இடத்தில் ஸ்திரமாக அமர்ந்த நிலையில் தொழில் செய்யாமல் அங்காங்கே அலைந்து திரிந்து மளிகைப் பொருட்களை சிறிய கடைகளுக்கு விநியோகிக்கும் மார்க் கெட்டிங் செய்தால் வியாபாரத்தில் முன்னேற் றம் கூடும் என்று கூறினேன். தற்போது ஜாதகர் மாதம் 60- 65 ரூபாய் வரை சம்பாதிப்பதாக கூறுகிறார். அது மட்டுமல்ல தனக்கு கீழ் நான்கு நபர்களை வேலைக்கு வைத்து தொழிலை மேலும் விரிவாக்கம் செய்யப் போவதாகவும் கூறியுள்ளார். சரம், ஸ்திரம், உபயம் என்ற ராசிகளின் தன்மைக்கு மனிதர்களின் வாழ்வாதாரத்தை வலிமைப்படுத்தும் சக்தியுள்ளது. இந்த மூன்றில் எந்த தன்மையை செயல்படுத்த வேண்டும் என்ற சூட்சமம் அறிந்தால் ஜாதகருக்கு வெற்றி நிச்சயம்.

மிகச் சுருக்க மாக சரம் என்றால் வளர்ச்சி, ஸ்திரம் என்றால் நிலையானது, உபயம் என்றால் நிலையற்றது. இரண்டு மணி நேரம் என்பது ஒரு லக்னம். சூரியன் உதயமாகும் மாதத்தை, நேரத்தை பொறுத்து சரம், ஸ்திரம், உபயம் என்ற மூன்று லக்னங் களும் மாறிமாறி இயங்கும். நமக்கு எந்த லக்னம் தேவை என்பதை கணித்து தேர்வு செய்து பயன்படுத்த காரிய சித்தி உண்டாகும்.

சர லக்னம், சர மாதத்தில் செய்யவேண்டியவை சர லக்னம்: மேஷம், கடகம், துலாம், மகரம்.

சர மாதம்: சித்திரை, ஆடி, ஐப்பசி, தை.

தங்க நகை வாங்கலாம். அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கலாம்.

வெளியூர், வெளிநாட்டு, ஆன்மிக பயணத்தை துவங்கினால் பயணம் சுமூகமாகும்.

உதவி கேட்கலாம்.

கல்வி கற்க துவங்கலாம்.

விதை விதைக்கலாம்.

ஸ்திர லக்னம், ஸ்திர மாதத்தில் செய்யவேண்டியவை ஸ்திர லக்னம்: ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்.

ஸ்திர மாதம்: வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி.

திருமணம், புதுமனை புகுதல், சொத்திற்கான பத்திர பதிவு, வீடு மாற்ற, புதிய வேலையில் சேர உகந்தது.

முக்கிய பேச்சு வார்த்தைகளை நடத்தலாம்.

உபய மாதம், உபய லக்னத்தில் செய்யவேண்டியவை உபய லக்னம்: மிதுனம், கன்னி, தனுசு, மீனம்.

உபய மாதம்: ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி நோய்க்கு வைத்தியம் துவங்கலாம்.

கடன் தீர்க்கலாம்.

இதுபோன்று நேரம் காலம் பார்த்து செய்யும் செயல்களால் சுபத்தை மிகைப்படுத்த முடியும்.

செல்: 98652 20406