முகூர்த்தம் என்ற சொல்லுக்கு மீண்டும் வருவது என்பது பொருளாகும். அதாவது ஒரு சுப வேளையில் செய்கின்ற .செயலுக்கான நற்பலனை மீண்டும் மீண்டும் மனிதனுக்கு வழங்குவத னால் அதற்கு முகூர்த்தமென பெயராம். இதனை நாம் எதிர்மறையாக சிந்திப்போம் என்றால் தீமை யான காலத்தில் நீங்கள் ஒரு சுபகாரியங்களைச் செய்தீர்கள் என்றால், அந்த தீமையான காலத்தில் தீமை மீண்டும் மீண்டும் மனிதனுக்கு துன்பம் விளைக்கும் என்பது உணரத்தக்கதாகும். மனிதனுக்கு தீங்கு விளைகின்ற காலத்தை உணர்ந்து அந்த நேரத்தில் சுபகாரியங்களைத் தவிர்ப்பதுவே முகூர்த்தம் என்பதன் நோக்கமாகும்.

முகூர்த்தம் என்பது சாஸ்திரங்கள் சொல்கின்ற ஜோதிடத்தில் ஆறு பெரும் பகுதிகளில் ஒன்றாகும். ஜாதகம், கோளம், நிமித்தம், பிரசன்னம், முகூர்த்தம், கணிதம் என்பதே ஜோதிடத்தில் ஆறு பெரும் பிரிவுகள் ஆகும். முகூர்த்தங்களுக்கு விதிகளை சொல்கின்ற நூல்கள் பல உள்ளன. முகூர்த்தம் என்றதும் அது திருமணத்திற்காக மட்டும் எடுக்கப்படுவது அன்று. புதுமனை புகுவது, திருமணம் முடிப்பது, முதல்முதலாக குழந்தைகளுக்கு அன்னம் ஊட்டுவது, உபநயனம் செய்துகொள்வது இப்படி எண்ணற்ற நற்காரியங்களுக்கு முகூர்த்தம் பார்க்கப்படுகின்றது.

ss

முகூர்த்த சாஸ்திரம் கற்றுக்கொள்ளாத ஜோதிடரை ஜோதிட சாஸ்திரம் ஏற்றுக்கொள்வதில்லை. முகூர்த்த சாஸ்திர நூல்களையும், அஷ்டமங்கள பிரசன்ன விதிகளையும் நாம் ஒப்பிட்டு பார்த்தால் முகூர்த்தங்களுக்கு விலக்கப்பட்ட தீய காலங்கள் மனிதனுக்கு எத்தகைய பாதிப்பை தரும் என்பதனை உணர்ந்துகொள்வதோடு அதனை ஆய்வு செய்யும்போது அனுபவத்தில் மிகச்சரியாக வருவதை நாம் காணமுடிகிறது. குறிப்பாக முகூர்த்தங்களுக்கு விலக்கப்பட்ட நவ தோஷங்கள் என்னும் குளிகன், விஸ்டி, கண்டாந்த காலம், நட்சத்திர விஷ காலம், நட்சத்திர உஷ்ணகாலம், சக்கரார்த்த தோஷம், லாட தோஷம், வைதிர்த தோஷம் என்பவையாகும். இந்த காலங்கள் ஒவ்வொன்றும் பலவிதமான தீமைகளை மனித சமூகத்திற்கு தருகின்ற காலங்களாகும்.

இவற்றையே முகூர்த்த சாஸ்திரங்கள் சுப முகூர்த்தம் செய்வதற்கு விலக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகின்றது. இந்த ஒன்பது தோஷங்கள் மட்டும் அல்லாமல் 32 விதமான தோஷங்கள் முகூர்த்தங்களுக்கு விலக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றது, .அது அல்லாமல் சுப காரியங்களைச் செய்வதற்கு இன்னும் பல விதியும், விதி விலக்குகளும் உள்ளன. உடல்நலன் வேண்டுவோர் கண்டார்ந்த காலங்களில் முகூர்த்தங்கள் வைக்க மாட்டார்கள், குடும்ப ஒற்றுமையோடு தம்பதிகள் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்றால் திதி சந்தி, நட்சத்திர சந்தி, லக்ன சந்தியில் நவாம்சக சந்தியில் முகூர்த்தம் வைக்கமாட்டார்கள். இப்படி எண்ணற்ற சூட்சுமங்கள் இருக்கின்றன. முகூர்த்த லக்னத்திற்கு எட்டில் செவ்வாயோடு, முகூர்த்த லக்னத்தில் சந்திரனோடும் முகூர்த்தம் குறிப்பவன் எமதூதன் என்று சாத்திரங்கள் சொல்கின்றன. எனவே முகூர்த்தங்கள் என்பது மனிதன் வளமோடு வாழ்வதற்கு ரிஷிகளால் முனிவர்களால், கற்றறிந்த பண்டிதர்களால் உருவாக்கப்பட்ட கலை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Advertisment

செல்: 94438 08596