ஒரு ஆத்மா தன்னுள் நிறுத்தும் கர்மா சொத்து, காமம், காசு என்ற மூன்று வழியாகவே உருவாகுகிறது. இந்த மூன்றும் தந்தை- தாய்வழி கர்மவினை மற்றும் முன்பிறப்பின் கர்மவினைமூலமாக ஒரு ஆன்மாவில் இயங்குகிறது. மனிதன் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், கடன்கள், பிரிவினைகள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத் தும் கர்மவினை தாக்கத்தால் வருபவை. சிவன் சொத்து குல நாசம் ஒரு கோவில் சொத்துகளை அபகரிகத்தால் குலமே (வம்சம்) நாசம் அடையும் என்பதுதான் சாஸ்திர நியதி. சிவன் கோவில் மட்டுமல்ல அனைத்து கோவில் சொத்துமேல் ஆசைப்படுபவர்கள் சந்ததிகள் அடியோடு நாசமாகி சீர்குலையும் என்பதாகும். அதாவது வரம்கொடுத்த இறைவன் தலையிலேயே கையை வைத்த பஸ்மாசுரன் நிலைதான் கோவில் சொத்தை அபகரித்தவர்களுக்கும் ஏற்படும். இதனால் தான் பலர் சிவன் கோவில் பிரசாதமான வீபூதியைக்கூட வீட்டிற்கு கொண்டுவருவது இல்லை என்பதில் ஒரு சிறு காரணமாக இருக்கலாம். உளவியல்ரீதியாக கோவில் சொத்தை அபகரிக்கும் எண்ணம் லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரும். சிலர் தர்ம காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள சந்தர்ப்பம் தேடி அலைகிறார்கள். பலர் கோவில் சொத்தை பராமரிக்க அரும்பாடு படுகிறார்கள்.
உண்மையில் சிவன் சொத்து குல நாசம் என்பதன் பொருள் இதுவல்ல. சிவன் என்றால் சிவம். சிவம் என்பது இயற்கையாய் எங்கும் நீக்கமன்றி இருக்கின்ற ஒரு மெய் பொருளாகும். மெய் பொருள் என்பது ஒவ்வொரு உயிரிலும் இயங்கிக் கொண்டு இருக்கும் ஆன்மா. சிவம் எனும் மனசாட்சிக்குப் புறம்பாக செய்யும் அனைத் துச் செயல்களும் வினையில் பதிவாகும். இதைத்தான் சிவன் (சிவம்) சொத்து குல நாசம் என்று கூறிவைத்தனர். அதாவது ஆன்மாவில் நிற்கும் சிவம் செத்தால் (மனசாட்சி செத்தால்) குலம் நாசமாகும் என்பதே இதன் பொருள். உடலும் (சந்திரன்), உயிரும் (சூரியன்) கலந்த சிவம் எனும் ஆன்மாவிற்கும் உள்ளுணர்விற்கும், மனசாட்சிக்கும் எதிராக செயல்பட்டவர்களுடைய வாழ்நாள் கொடூரமான நரக வேதனை மிகுந்ததாக இருக்கும்.
உடலும், உயிரும் துன்புறும்வகையில் பலதுயரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். பலபெரும் பணவசதி படைத்த வர்கள் வாரிசுகளால் தீராத மன வேதனை அனுபவிப்பதற்கு இதுவே காரணம். சென்ற பிறவிகளில் தீராத தீர்க்கமுடியாத பாவங்களை புரிந்தவர்கள் இந்த பிறவியில் மீளமுடியாத தண்டனையை பல்வேறு வழிகளில் அனுபவித்து தீர்க்கிறார்கள். யாரும் தான் செய்த தவறை ஒப்புக்கொள்வதில்லை என்பதால்தான் பிரபஞ்சம் கடந்துவந்த ஜென்ம நினைவுகளை மனிதர்களிடமிருந்து அகற்றிவிடுகிறது. அதேபோல் எவ்வளவு பரிகாரம் செய்தாலும் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவிப்பவர்களின் ஜாதகத்தில் நிச்சயம் கிரகண தோஷம் இருக்கும். அல்லது சூரியன், சந்திரனுக்கு ராகு- கேது சம்பந்தம் இருக்கும்.
கிரகண தோஷம் விண்வெளி யிலுள்ள அனைத் துக் கோள் களும் சூரிய னின் ஒளியைப் பெற்று இயங்குவதால் சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் மற்றும் அகச்சிவப்பு கதிர்களே பூமிக்கு பரிபூரண இயக்கத்தை தருகிறது. இந்த சூரிய ஒளியை நிழல் கிரகங்களான ராகு- கேதுக்கள் மறைக் கும்போது பூமிக்கு கிடைக்கும் ஒளி சக்தி திறன் குறைகிறது. அதனால் கிரகண காலத்திற்கு முன்- பின் ஏழு நாட்கள் பூமிக்கு தோஷ காலமாகும். கிரகண காலங்களில் பிறக் கும் குழந்தைகளின் வினைப்பதிவு சற்று கொடூரமாக இருக்கும்.
பூமியில் ஜனனமாகும் ஒரு ஆன்மா தன் வினைப் பதிவு முழுமையாக அனுபவிக்க கூடிய கிரக நிலவரம் எப்பொழுது வருகிறதோ அப்பொழுதுதான் பிறப்பு எடுக்கும்.
சூரிய கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகள் தந்தைவழி கர்மாவையும் சந்திர கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகள் தாய்வழி கர்மாவையும் அதிகம் சுமந்து பிறக்கும். கிரகணம் சம்பவிக்கும்போது ராகு- கேது, சூரியன்- சந்திரன் இணைவு பெறும் கிரகங்களும் அந்த சொந்த பாவகமும், நின்ற பாவகங்களும் பாதிக்கப்படும்.
கிரகணத்தில் பிறந்த ஜாதகருக்கு சூரியன் + ராகு- கேது அல்லது சந்திரன் + ராகு- கேது சேர்க்கை இருக்கும். இந்த கிரக இணைவை குரு பார்த்தாலோ அல்லது சேர்ந்தாலோ சூட்சம சக்திகள் இருக் கும். தீய சக்திகள், பில்லி, சூனியம், மாந்த ரீகம், செய்வினை எளிதில் தாக்காது. புண்ணியப் பலன் மிகுந்துகொண்டே இருக்கும்.
கிரகணத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன்+ராகு- கேது சேர்க்கையுடன் சனி "செவ்வாய் தொடர்பு பெற்றால் உடல் ஊனம், நோய் தாக்கம், மன வளர்ச்சி குறைவு, ஆயுள் குறைவு, தீராத கடன், வறுமை, வம்பு, வழக்கு, முன்னேற்றக் குறைவு, போதிய கல்வியின்மை, திருமணத் தடையாலும் பெரும்பாதிப்பை அடைகின் றனர். திருமணத்தடையை சந்திப்பவர்களில் தலைகீழாக நின்றும் திருமணமே நடக்கா தவர்கள் சிலர் கிரகண காலங்களில் பிறந்தவர் கள் என்பது எனது ஆய்வு.
அப்படி என்ன பாவம்செய்து கிரகண காலத்தில் பிறந்தார்கள் என்ற கேள்வி வாசகர் களுக்கு இங்கே எழும். மனசாட்சிக்குப் புறம்பான செயல்கள் மற்றும் பிரபஞ்ச நியதிக்கு எதிரான பின்வரும் காரியங்களில் ஈடுபட்டதன் வினைப் பதிவாகும். வட்டித் தொழில் செய்தவர்கள், காரணமே இல்லாமல் ஒருவரின் வாழ்க்கையை பொறாமையால் கெடுப்பது. நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தம்பதிகளைப் பிரிப்பது, ஒரு குடும்பத்தை கெடுப்பது, உழைத்த கூலியை கொடுக்காமல் ஏமாற்றுவது, வாங்கியப் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவது, பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றுவது, அடுத்தவர் சொத்தை அபகரிப்பது, திருடுவது, கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தவறுவது, தவறான வைத்தியம் செய்வது, பொய்யான வதந்தியை பரப்புவது, உணவுப்பொருட்களில் கலப் படம் செய்வது, கோவில் சொத்தை அபகரிப் பது, பசுக்களை, விலங்குகளை வதைப்பது, இயற்கையை மாசுபடுத்துவது, நோயை பரப்புவது, வீண் வதந்தியை கிளப்புவது போன்றவையாகும்.
சூரியன், சந்திரனுக்கு ராகு- கேது சம்பந்தம் இருப்பது கடுமையான கிரகண தோஷம். ஜனனகால ஜாதகத்தில் கடுமையான சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷத்தால், கிரகண தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு சரியான குலதெய்வம், பூர்வீகம் தெரியாது. அல்லது பூர்வீகச் சொத்தால், குலதெய்வத்தால் நிச்சயம் மன உளைச்சல் இருக்கும். பல தலைமுறையாக விற்க முடியாத, பயன்படுத்த முடியாத பூர்வீகச் சொத்துகள் இருக்கும்.
19-9-1959 அன்று காலை 11.05 மணிக்கு பிறந்தவர். மீன ராசி, ரேவதி நட்சத்திரம், விருச்சிக லக்னம். ஜாதகருக்கு தனது பூர்வீகம் பற்றிய எந்த தகவலும் தெரியாது. ஜாதகரின் தாய்- தந்தை விருப்ப விவாகம் செய்து கொண்டவர்கள். ஜாதகர் தனது தாயின் குலதெய்வத்தை தாய்மாமாவுடன் சேர்ந்து கும்பிட்டு வளர்ந்தவர். 9-ஆம் அதிபதி, பாதகாதிபதி சந்திரன் 5-ல் கேதுவுடன் சேர்க்கை பெற்றதால் பூர்வீகம், குலதெய்வம் முன்னோர்கள் பற்றி எதுவும் தெரியாது. 11-ல் சூரியன், புதன், ராகு, செவ்வாய், மாந்தி, சனியின் 10-ஆம் பார்வையில் சேர்ந்து நின்றது.
கிரகண தோஷ அமைப்பில் அஷ்ட மாதிபதி புதன் பாதகாதிபதி சந்திரன் சம்பந்தம் கடுமையான கிரகண தோஷ வலிமையை தெளிவுபடுத்தியது. தனது பூர்வீகம் பற்றிய விவரம் எதுவும் தெரியாத காரணத்தால் ஜாதகர் தனது தந்தையைப் பற்றியோ, தனது தந்தைவழித் தாத்தாவைப் பற்றியோ எதுவும் பேசவில்லை. தனது தாய்மாமாவையும் பற்றியே பிரதானமாக பேசிக்கொண்டு இருந்தார். ஜாதகர் நம்மை சந்தித்தபிறகே தாய்வழி குலதெய்வத்தை தனது குலதெய்வமாக தான் கும்பிடுவதை புரிந்து கொண்டார். 15 வருடங்களாக சில கோடி மதிப்புள்ள சொத்தை விற்க முடியவில்லை. ஜாதகரின் ஜாதகத்தின் மூலம் இவருக்கு தாய்வழி தாத்தாமூலம் கிடைத்த சொத்து என்பதை அறிய முடிந்தது.
அந்த ஜாதகரின் தாய்வழி தாத்தாவிற்கு இந்த சொத்து எப்படி கிடைத்தது என்பது தான் ஹைலைட். நிச்சயமாக இது உங்கள் தாத்தாவின் சுய உழைப்பு சொத்தாக இருக்க வாய்ப்பில்லை என்பதை ஆனித்தரமாக கூறப் பட்டது. ஜாதகரின் இந்த சொத்துகளுக்கு மிக அருகில் சிவன் கோவில் இருப்பதை ஜாதகம் பார்த்து உறுதி செய்தேன். நேரில் சென்று பார்த்ததில் மேலும் சில உண்மைகள் புலப்பட்டது. கோவில் சொத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்த ஜாத கரின் தாத்தா தன்மீது சொத்தை மாற்றி எழுதிக் கொண்டார் என்பது தெரியவந்தது.
ஜாதகரின் தாய்வழித் தாத்தாவால் அபகரிக் கப்பட்ட சொத்துகள் இரண்டு ஆண் வாரிசு ஒரு பெண் வாரிசு என மூன்று நபர்களுக்கு 50 வருடத்திற்குமுன்பு சொத்து மாற்றம் செய்யப்பட்டது. ஜாதகரின் தாய்மாமன்கள் இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை. திருமணம் நடந்தால் தானே வாரிசு உருவாகும். ஜாதகருக்கு மூன்று திருமணம் நடத்தும் வாரிசு இல்லை. 3-ம் விவாகரத்தாகிவிட்டது. இதற்குமேல் இந்த குலம் தழைக்க வழியே இல்லை. இதை விரிவாக புரியும் படி எடுத்துக் கூறியும் ஜாதகருக்கும் அவரது வயதான தாய்மாமாக்களுக்கும் கர்மா, பாவ புண்ணியம் பற்றியும் புரியவில்லை. ஜாத கருக்கு குழந்தை பிறந்து குலம் தழைக்க வேண்டும், சொத்தை விற்கவேண்டும் அதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்? என்ற கேள்வியை திரும்ப திரும்ப கேட்டார்கள்.. காலம் கடந்த முயற்சியில் இனி என்ன பலன்? கடந்த வாரத்தில் மட்டும் இதேபோல் மூன்று குடும்ப ஜாதகம், மூன்று குடும்ப சொத்தை பார்த்துவிட்டேன். காசு, காமம், சொத்து இந்த மூன்று விஷயத்தை தன் சுயநலத்திற்காக யாரை ஏமாற்றினாலும்.......? பிரபஞ்சத்திடமிருந்து தப்பிக்கமுடியாது. தான் செய்த தவறுகளுக்கு எந்த சாட்சியும் இல்லை என நினைத்து செய்யப்படும் தவறுகளை கால பகவான் தனது பதிவேட்டில் பதிவேற்றிக்கொண்டு இருக்கிறார்.
உலகின் மூலை முடுக்கில் நிகழும் அனைத்து சம்பவங்களையும் பிரபஞ்ச சக்தி படம் பிடித்துக்கொண்டு இருக்கிறது. தற்போது உலகில் நடக்கும் அனைத்து செயல்களையும் சாட்டிலைட் படம் எடுக்கிறது.
கோவில் சொத்து மட்டுமல்ல அரசாங்க சொத்தை அபகரித்தல், மக்களின் வரிப் பணத்தை ஏய்த்தல், பதவியை பயன்படுத்தி தவறாக சொத்து சேர்த்தல், அரசாங்கத்திற்கு வரி கட்டாமல் ஏமாற்றுதல் போன்ற அனைத்து குற்றங்களும் கிரகண தோஷமாக வெளிப்படும். இதுபோன்ற தோஷத் திற்கு பரிகாரம் உள்ளதா? பரிகாரம் கூறலாமா?
ராகு மற்றும் கேது என்பது முன்னோர் கள் வழிவழியாய் தொடர்ந்து செய்து வரும் பாவங்களை உணர்த்தும் கிரகங்கள். ராகு தந்தைவழி முன்னோர்கள் செய்த பாவங்களையும், கேது தாய்வழி முன்னோர் கள் செய்த பாவங்களையும் காட்டுகிறது.
அதாவது கேது சந்திரனின் பிம்பம் என்பதால், தாய்வழி பாவத்தை குறிக்கிறார்.
ஆக தாய்- தந்தைவழி முன்னோர் களின் மரபுவழி பாவங்கள் என்பதை அறியலாம்.
"ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்'' என்பது சிலப்பதிகார வரி. எனவே ஆன்றோர்களே, சான்றோர்களே உங்கள் வழித்தோன்றல் களுக்கு புண்ணிய பலன் கிடைக்க முயலுங்கள்.
இனி அடுத்த வாரம் குரு சண்டாள யோகத் தால் விற்காத சொத்தைப் பற்றிப் பார்க்கலாம்.
தொடரும்....
செல்: 98652 20406