முதல் நபரின் வீட்டிற்கும் இரண்டாம் நபரின் வீட்டிற்கும் பொதுச் சுவராக இருந்த போதிலும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ல்ர்ள்ண்ற்ண்ஸ்ங் ஸ்ண்க்ஷழ்ஹற்ண்ர்ய் இரண்டாவது நபரின் வீட்டில் இல்லை. ஆடம்பர வசதிகள் அதிகம் நிறைந்த வீடாக இருந்தது. காம்பவுண்டிற்குள் நுழைந்தவுடன் விரும்பத்தகாத ஒரு மணம் வருடியது. ஜாதகருக்கு இது தந்தையின்மூலம் கிடைத்த (வீட்டு மனை) சொத்து என்றும் வீடு கட்டி 20 வருடமாகிவிட்டது. மொத்தம் நான்கு வீடுகள். தரைத்தளத்தின் இரண்டு வீடுகள், முதல் தளத்தில் இரண்டு வீடுகள் மொத்தம் நான்கு வீடுகள். முதல் தளத்தின் முதல் வீட்டில் ஜாதகர் குடியிருந்தார். வீடு கட்டி வந்த இரண்டு வருடத்தில் தனது மனைவி இறந்துவிட்டதாகக் கூறினார். அதன்பிறகு தனது மகன் தனிக் குடித்தனம் சென்றுவிட்டதாகவும் கூறினார்.
நாம் பார்க்கச் சென்றபோது கீழ் தளத்தின் இரண்டாவது கீழ் வீட்டில் யாரும் இல்லை. கீழ் வீட்டிற்கு வாடகைக்கு வருபவர்கள் அதிகபட்சம் ஆறு மாதம் ஒரு வருடத்திற்குள் வீட்டை காலி செய்துவிடுகி றார்கள் என்று மனம் வருந்தினார். மேலும் இந்த குடியிருப்பை விற்றுவிட்டு பிள்ளைகளுக்கு உரிய பங்கை கொடுத்துவிட்டு தனது மகளுடன் சென்று வாழவிரும்புகிறேன் என்று கூறினார். குடியிருப்பு முழுவதும் கட்டட அமைப்புகளில் எந்த வாஸ்து குறைபாடும் இல்லை. வீடு கிழக்கு பார்த்த மனை. வீட்டின் முகப்பில் சூரிய ஒளி படருவதால் சிறிய மண் வாடை இருந்தது. பின் பகுதி வீட்டின் வெளிப்பகுதியில் சற்று அதிக மண் மணம் இருந்தது. முறையான டிரயினேஜ் இருந்தது. கழிவுகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது.
ஏன் இந்த விரும்பத்தகாத மணம் என்பதை கண்டரிய முடியவில்லை.
ஜாதகர் 21-4-1948 காலை 9.00 மணிக்கு பிறந்தவர்.
ரிஷப லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். லக்னாதிபதி சுக்கிரன் ஆட்சி. 4-ஆம் அதிபதி சூரியன் உச்சம்பெற்று ராசிக்கு 12-ல் ராகுவுடன் சேர்க்கை. அதே போல் 4-ஆம் அதிபதி சூரியனுக்கு 4-ல் சனி, செவ்வாய் மாந்தி. 4-ஆம் அதிபதி சூரியனுக்கு அஷ்டமாதிபதி குரு மற்றும் பாதகாதிபதி சனியின் பார்வை. 4-ஆமிடத்திற்கும் அஷ்ட மாதிபதி குருவின் பார்வை. 3-ஆம் அதிபதி சந்திரன் 5-ல் இடம் மாறிய குலதெய்வத்தை கும்பிடுபவர்.
அதாவது, தனக்கு மன நிம்மதி தரும் பிறரின் குலதெய்வத்தை தனது குலதெய்வமாக பாவித்து கும்பிடுபவர். சூரியன் ராகு, குரு ராகு சம்பந்தம் பூர்வீக தோஷம், சாபம். 5-ஆம் அதிபதி நீசம், குலதெய்வ சாபம். கோவில் சொத்தை அபகரித்தவர், ஜாதகர் திரயோதசி திதியில் பிறந்தவர். திதி சூன்யம். ரிஷபம், சிம்மம். அதாவது லக்னம், லக்னாதி பதி, 4-ஆமிடத்திற்கு திதி சூன்ய பாதிப்பு உள்ளது.
2, 5, 11 சம்பந்தம் ஜாதகர் ஓய்வுபெற்ற அரசு கல்லூரி விரிவுரையாளர்.
ஜாதகர் தனது மிகச்சிறு வயதில் பள்ளியில் சேரும்முன்பு இடம்பெயர்ந்து பெற்றோருடன் தற்போது வசிக்கும் ஊருக்கு வந்தது நினைவில் உள்ளது. (2, 3 வயதிற்குள்) ஆனால் எதற்காக இடம்பெயர்ந்து வந்தோம் என்ற காரணம் தெரியவில்லை என்று கூறினார். மேலும் தற்போது தான் வசிக்கும் வீட்டு மனை வாங்கி 60 வருடத்திற்குமுன்பு தந்தையால் வாங்கப்பட்டது. 40 வருடத்திற்கு முன்புவரை சிலர் குடிசை போட்டு ஆக்கிரமித்து வாழ்ந்தார்கள். தான் அதில் வீடு கட்டி 20 வருடமாக வாழ்ந்துவருவதாகவும் தெரிவித்தார். இரண்டு மூன்று முறை குடுகுடுப்பை அடிப்பவர் இந்த வீட்டில் சடலம் இருப்பதாக கூறி இருக்கிறார்கள். ஆனால் பயம் எதுவும் இல்லை. தான் படுத்தவுடன் தூங்கிவிடுவேன் வயோதிகம் காரணமாக சிறு சிறு உடல்நலக் கேடு உள்ளது. வீட்டின் அதிர்வலைகள் சரியாக இல்லாததை தானும் பல முறை உணர்ந்து இருக்கி றார். பலமுறை வீடு கட்ட முயற்சித்து தடையாகி நின்றுவிட்டது. கட்டு மானப் பணியும் நின்றுபோய் பல பூஜைகள் செய்து வீட்டை கட்டி முடித்தோம். ஏதாவது சாந்தி பூஜைகள் செய்தால் நான்கைந்து மாதம் மனம் இலகுவாக உள்ளது. சில மாதங் களில் மனபாரம் பல மடங்காக கூடி விடுகிறது. பலமுறை ஏன் வாழவேண்டும் என்ற எண்ணம் மிகைப்படுத்தலாக இருப்பதாக கூறினார். உண்மையில் ஜாதகர் பேசப் பேச மனச் சங்கடம் நமக்கும் கூடியது.
ஜாதகருக்கு தீர்வு கொடுக்க முடியுமா?
உண்மையில் அந்த இடத்தில் பிரேத சாபம் உள்ளதா? என்பதை கண்டறிய ஜாமக்கோள் பிரசன்னம் பயன்படுத்தப்பட்டது. 17-4-2024 புதன்கிழமை மாலை 1.57 மணிக்கு ஜாதகரின் வீட்டில் பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம். பிரசன்ன லக்னத்தில் சந்திரன் மாந்தி. 3-ல் நின்ற கவிப்பு சந்திரன் மாந்தியை பார்த்ததும் பிரேத தோஷத்தை உறுதிசெய்தது. விருச்சிக உதயம். மீன ஆரூடம். உதயத் திற்கு 4-ல் செவ்வாய், சனி. உதயமும் ஆரூடமும் திரி கோணமாக இருந்தால் பிரச்சினையை சீர்செய்ய முயற்சிக்கலாம் என்ற எண்ணம் வந்தது. ஆரூடத்தில் அஷ்டமாதிபதி புதன் நீசம்பெற்று நின்றதால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க சில மாத காலமாகலாம் என்று உணர்ந்தேன். அஷ்டமாதிபதி பாதகாதிபதிக்கு நேரடி தொடர்பில்லை என்றாலும் பாதகாதி சந்திரன் அஷ்டமாதிபதி புதன் சாரத்தில் நின்றது சிறு மன வருத்தத்தை தந்தது. அதேபோல் பிரச்சினைக்கு தீர்வு 10-ஆமிடம். உச்சம்பெற்ற 10-ஆம் அதிபதி சூரியனை நோக்கி ஆரூடம் நகர்ந்துகொண்டு இருந்தால் தீர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பாதக ஸ்தானத் தில் சந்திரன் மாந்தி இருந்தது. பாக்கியமே ஜாதகருக்கு பாதகமாக இருந்ததாலும் வழிபாட்டு முறையால் பாதகத்தை சாதகமாக மாற்றலாம்.
பரிகாரம்
வீட்டின் வடகிழக்குப் பகுதியில் 24 மணி நேரமும் எரியக்கூடிய சில விசேஷ எண்ணெய்கள் அடங்கிய தீபமுறை பரிந்துரைக்கப்பட்டது. நவதான்யத்தை பயன்படுத்தி வீட்டின் அதிர்வலைகளை மாற்றக் கூடிய சில வழி முறைகள் கூறப்பட்டது. வீடு, மனை தோஷங்களை நீக்கும் மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி திருக்கோவில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூருக்கு தேய்பிறை சதுர்த்தசி திதிக்கு தொடர்ந்து ஒரு வருடம் சென்றுவர வேண்டும்.
அருள்மிகு அறம் வளர்த்த நாயகி (தர்மசம்வர்த்தினி) உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோவில், பூமி சம்பந்தமான அனைத்துவிதமான குறைபாடுகளிலிருந்தும் தோஷங்களிலிருந்தும் நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. பூமி, வாஸ்து சம்பந்தமான 16 விதமான தோஷங்களையும் நிவர்த்தி செய்யக்கூடியவராக பூமிநாத சுவாமி திகழ்கிறார் என மாமுனிவர் அகத்தியர் தனது ஓலைச்சுவடியில் குறிப்பிட்டுள்ளதாக குறிப்புகள் உள்ளது. இந்த தோஷங்கள் நீங்க சில வரைமுறைகள் இத்திருக்கோவிலில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இங்கு மண் வழிபாட்டு முறை செய்து, சுவாமி மற்றும் அம்மனை வழி பட்டால் பலன்கள் அனைத்தையும் பெறலாம்.
மண் வழிபாட்டுமுறை
சொத்தின் உரிமை யாளர் அல்லது ரத்த சம்பந்தம் உடையவர்கள் தாங்கள் வாங்க, விற்க விரும்பும் வீடு, நிலம், மனை உள்ள இடத்திலிருந்து வடகிழக்கு (ஈசானிய, ஜல, சனி) மூலையிலிருந்து மூன்று கைப்பிடி அளவு மண்ணைப் புது மஞ்சள் துணியில் முடியவேண்டும்.
அந்த மண் முடிப்பை மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி திருக்கோவிலுக்கு எடுத்து வந்து, தேங்காய், வாழைப்பழம், மாலைகள், வெற்றிலைப்பாக்கு தட்சிணையுடன் சுவாமிக்கு அர்ச்சனைசெய்து, படைக்கவேண்டும். மண்ணையும் மனதையும் இறைவனிடம் ஒப்படைத்து, வேண்டுதல் நிறைவேறிட பிரார்த்தனை செய்யவேண்டும். அர்ச்சனை செய்யப்பட்ட பின்னர், பிரகாரத்தை வலம் வந்து கொடுக்கப்பட்ட மண்ணைத் தல விருட்ச மான வில்வ மரத்தடியில் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு இடவேண்டும்.
இரண்டாவது முறையாக பிரகாரத்தை வலம்வந்து, தலவிருட்சமான வன்னி மரத்தடியில் குலதெய்வத்தை வணங்கி, தங்கள் வேண்டுதலை மனதுக்குள் கூறி வன்னி மரத்தடியிலுள்ள மண்ணில் ஒரு கைப்பிடியை எடுத்து புது மஞ்சள் துணியில் முடித்துக் கொள்ளவேண்டும். பின்னர் மூன்றாவது முறையாக பிராகாரம் வலம் வரவேண்டும். முதல்முறை கோவில் பிராகாரத்தை வலம் வரும்போது பிரம்மா, இரண்டாவதுமுறை வலம் வரும்போது விஷ்ணு, மூன்றாவதுமுறை வலம் வரும்போது சிவனின் ஆசீர்வாதம் கிடைப்பதாக ஐதீகம்.
நவகிரகங்களை ஒன்பது முறைவலம் வந்து, வன்னி மரத்தடியிலிருந்து எடுத்த மண் முடிப்புடன் வீட்டுக்குச்சென்று பூஜையறை யில் வைக்கவேண்டும். இந்த மண் முடிப்பைப் புதன் அல்லது குரு ஓரையில் வீட்டின், மனையின், நிலத்தின் வடகிழக்கு மூலை யில் பூமியில் போட்டு, சூடமேற்றி வழிபட வேண்டும். அந்த புது மஞ்சள் துணியில் ரூபாய் ஐந்து நாணயத்தை வைத்து முடிபோட்டு பூஜையறையில் வைக்க வேண்டும். நினைத்த காரியம் நிறைவேறிய தும், ரூபாய் ஐந்து நாணய முள்ள மஞ்சள் துணி முடிப்புடன் அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோவிலுக்கு வந்து, முடிப் பையைக் காணிக்கையாகச் செலுத்தவேண்டும். குறைந்தது மூன்று மாதங்கள் முதல் ஐந்து மாதங்களுக்குள் பூமி சம்பந்தமான தோஷங்கள் நீங்கி, தாங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும் கோவிலின் நவகிரகங்கள் மற்ற கிரகங்களைக் காட்டிலும் சனிபகவான் சற்று உயரத்துடன் எழுந்தருளி, பொங்கு சனீசுவரராகக் காட்சியளிக்கிறார். செவ்வாய் பகவான் கையில் கதாயுதத்துடன் எழுந்தருளி அனைத்து சத்ருக்கள், மண் சம்பந்தப்பட்ட பயங்களை நீக்குபவராகவும், குரு பகவான் ஞான முத்திரையுடனும் காட்சியளிக் கின்றனர்.
இனி அடுத்தவாரம் சிவன் சொத்து குல நாசம் என்ற பழமொழிக்கு ஏற்ப சிவன் சொத்தால் நாசமான ஒரு குலத்தை பற்றி பார்க்கலாம்....