சல்லிய தோஷம்
நான் ஏற்கெனவே சல்லிய தோஷம் பற்றியும் வாஸ்து தோஷம் பற்றிய பல கட்டுரை கள் தெளிவாக நமது "பாலஜோதிட'த்தில் எழுதி இருக்கிறேன். அதனால் இந்த பகுதியில் சுருக்கமான தகவல் மட்டும் குறிப்பிட்டுள் ளேன். அதேபோல் சில ஜோதிடர்கள் போன் செய்து தொழில் ரகசியங்களை அதிகம் பகிருவதால் சக ஜோதிடர்களின் வாழ்வாதா ரம் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர். அதனால் தோஷத்திற்கான முழுமையான விதிகளை இந்த பகுதியில் குறிப்பிடவில்லை.
சல்லிய தோஷம்
பலர் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு பிரச்சினையில், விதியின் வசத்தால் மாட்டி வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவிக்கிறார்கள். எளிதில் உணரமுடியாத, கண்ணுக்குத் தெரியாத, விதிப்பயனை முழுமை யாக வெளிப்படுத்தும் ஒருவிதமான வாஸ்துப் பிரச்சினையே "சல்லிய தோஷம்'. ஒருசிலருக்கு இப்படி ஒரு தோஷம் இருப்பதே தெரியாது. ஒரு நிலத்தை புதிதாக வாங்கியவுடன் நிவர்த்தி செய்யவேண்டிய தோஷம் சல்லிய தோஷம். நிவர்த்தி செய்யப்படாத சல்லிய தோஷத்தினால் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
சல்லியம் என்ற சொல்லிற்கு வேண் டாத, துன்பம் தருகின்ற என்பது பொருள். சல்லிய தோஷம் என்பது குடியிருக்கும் வீடு, தோட்டம், பண்ணை நிலம், ஆலைகளின் பூமி யிலுள்ள குற்றம் மற்றும் குறைகளாகும். ஒருவர் வாங்கும் வீடோ, நிலமோ பல வருடங் களுக்கு முன்பாக வேறு மனிதர்களாலோ, விலங்குகளாலோ பயன்படுத்தப்பட்டு இருந்திருக்கலாம். அந்த இடத்தில் இறந்த மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல்கள், நகம், முடி, எலும்பு புதைத்திருக்கலாம். இது போன்று நிலத்திற்கு அடியில் உருவாகி அந்த இடத்தின் அதிர்வலைகளை கட்டுப்படுத்தும் தோஷம்தான் சல்லிய தோஷமாகும்.
பல வருடங்களுக்கு முன்பாக மனிதர்கள் நகருக்குள் வீடு கட்டி வசித்
சல்லிய தோஷம்
நான் ஏற்கெனவே சல்லிய தோஷம் பற்றியும் வாஸ்து தோஷம் பற்றிய பல கட்டுரை கள் தெளிவாக நமது "பாலஜோதிட'த்தில் எழுதி இருக்கிறேன். அதனால் இந்த பகுதியில் சுருக்கமான தகவல் மட்டும் குறிப்பிட்டுள் ளேன். அதேபோல் சில ஜோதிடர்கள் போன் செய்து தொழில் ரகசியங்களை அதிகம் பகிருவதால் சக ஜோதிடர்களின் வாழ்வாதா ரம் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர். அதனால் தோஷத்திற்கான முழுமையான விதிகளை இந்த பகுதியில் குறிப்பிடவில்லை.
சல்லிய தோஷம்
பலர் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு பிரச்சினையில், விதியின் வசத்தால் மாட்டி வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவிக்கிறார்கள். எளிதில் உணரமுடியாத, கண்ணுக்குத் தெரியாத, விதிப்பயனை முழுமை யாக வெளிப்படுத்தும் ஒருவிதமான வாஸ்துப் பிரச்சினையே "சல்லிய தோஷம்'. ஒருசிலருக்கு இப்படி ஒரு தோஷம் இருப்பதே தெரியாது. ஒரு நிலத்தை புதிதாக வாங்கியவுடன் நிவர்த்தி செய்யவேண்டிய தோஷம் சல்லிய தோஷம். நிவர்த்தி செய்யப்படாத சல்லிய தோஷத்தினால் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
சல்லியம் என்ற சொல்லிற்கு வேண் டாத, துன்பம் தருகின்ற என்பது பொருள். சல்லிய தோஷம் என்பது குடியிருக்கும் வீடு, தோட்டம், பண்ணை நிலம், ஆலைகளின் பூமி யிலுள்ள குற்றம் மற்றும் குறைகளாகும். ஒருவர் வாங்கும் வீடோ, நிலமோ பல வருடங் களுக்கு முன்பாக வேறு மனிதர்களாலோ, விலங்குகளாலோ பயன்படுத்தப்பட்டு இருந்திருக்கலாம். அந்த இடத்தில் இறந்த மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல்கள், நகம், முடி, எலும்பு புதைத்திருக்கலாம். இது போன்று நிலத்திற்கு அடியில் உருவாகி அந்த இடத்தின் அதிர்வலைகளை கட்டுப்படுத்தும் தோஷம்தான் சல்லிய தோஷமாகும்.
பல வருடங்களுக்கு முன்பாக மனிதர்கள் நகருக்குள் வீடு கட்டி வசித்தனர். விலங்குகள் காடுகளில் வாழ்ந்தன. தற்காலத்தில் மக்கள் தொகை பெருக்கத்தால் காடுகள், ஏரி, குளங் கள், குட்டைகள் என கிடைத்த இடத்தை வாங்கி வீடு கட்டுகின்றனர். அந்த இடங்களில் குப்பைமண், மக்கிய துர்நாற்றம் வீசுகின்ற மண், நாறுகிற மண், இறந்த உயிர்கள், எலும்புகள் என அனைத்தும் இருக்கத்தான் செய்யும். இது தெரியாமல் இருக்க மேற்புரத்தில் சுத்தமான மண்ணைக் கொட்டி விற்பவர்களிடம் ஏமாந்து மனை வாங்குபவர்களே அதிகம். இதற்கும் ஒருபடி மேலேபோய் சிலர் மலிவு விலை என பயன்படுத்தாத சுடுகாடு அல்லது சுடுகாடு இருந்த இடத்திற்கு அருகில் பிளாட் போடும் மனையை அறியாமையால் வாங்குகிறார்கள்.
அதுபோன்ற இடங்களில் சடலங்களின் எலும்புகள் புதையுண்டு கிடக்கும்.மேலும் பிணங்களை எரித்த சாம்பலும் பரவிக் கிடக்கும். அத்துடன் பலர் வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழுது புலம்பிய அழுகுரலின் அவல ஒலிகளின் அதிர்வலை கள் இருக்கும். இதை நம்பாதவர்கள் கூட காலப்போக்கில் பாதகத்தை அனுபவிக்கும்போது சல்லிய தோஷத்தை நம்புகின்றனர்.
வாஸ்து சாஸ்திரமானது நுல்களில் 16 வகையான பொருட்களைச் சல்லியம் என்று கூறுகின்றன.
அவை எலும்பு, தலையின் மண்டை ஓடு, செங்கல், மண் ஓடு, அடுப்பு, சிலை, சாம்பல், கரி, பணம், தானியம், பொன், கல், தேரை, விலங்கின் கொம்பு, எலும்புகள், ஜாடி மனிதர்களின் இன்ப- துன்பங்களுக்கு "சல்லிய தோஷம்' பிரதான காரணம் என வாஸ்து சாஸ்திரங்கள் வலியுறுத் தினாலும் சல்லியத்தை இரண்டாக வகைப்படுத்தலாம்.
1. நன்மை தரும் சல்வியங்கள்
மனையை தோண்டும்போது அரணை, சிலந்தி, நண்டு, பல்லி, தவளை, பசுவின் கொம்பு போன்றவைகள் தென்பட்டால் அதிகமான தீமைகள் இல்லை. தங்கம், வெள்ளி, செம்பு மற்றும் உலோகத்தினால் செய்பட்ட விக்ரகங்கள், மண் சிலைகள் கிடைத்த நிலத்தில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு சிறப்பான தொழில், செல்வச் செழிப்பு, காரிய சித்தி, புகழ், அந்தஸ்து, கௌரவம் கிடைக்கும்.
ஆனாலும் பூமியில் தென்படும் அனைத்து சல்லியத்தையும் வெளி யேற்றிய பிறகுதான் வீடு கட்டும் பணியை துவங்கவேண்டும்.
2. தீமை தரும் சல்லியங்கள்
மனையை தோண்டும்போது உடைந்த மண் ஓடுகள், சாம்பல், கரித்துண்டுகள், கரையான், எறும்பு புற்றுகள், பல், மரத்தின் வேர், வண்டு, ஓணான், உடும்பு, பாம்பு, தேள், சூலம் மற்றும் ஆயுதங்கள், எலி, விறகு, எறும்புகள், தேன் கூடு, ஆமை, முட்டை, நகம், மயிர், பிணம் போன் றவை நிலத்தை தோண்டும்போது கிடந்தால், அதில் தீமைகள்தான் அதிகம் ஆகும். ஆகவே இவற்றைத் தேடிப்பார்த்து முற்றிலும் அகற்ற வேண்டும்.
ஜோதிடரீதியாக ஜனனகால ஜாதகத்தில் லக்னத் திற்கு 4-ஆம் பாவகத்துடன் வக்ர கிரகங்கள், நீச, அஸ்தமன, பகை கிரகங்கள் தொடர்பு, ராகு- கேது, மாந்தி தொடர்பு பெறும்போதும் சல்லிய தோஷத்தால் பாதிப்பு ஏற்படுகிறது. என் அனுபவத்தில் மேஷ, சிம்ம ராசி மற்றும் லக்னத்தினருக்கு சல்லிய தோஷப் பாதிப்பு சற்று மிகைப்படுத்தலாகவே இருக்கிறது. இத்தகையவர்களுக்கு வீடு, மனை யோகம் சிறப்பாக கிடைக்கப்பெற்றாலும் அதை அனுபவிக்கும்போது பல்வேறு சிக்கல்கள் தொடர்கதையாக இருக்கிறது.
வாஸ்து தோஷம்
வாஸ்து என்றால் பூமிக்குமேல் உள்ள கட்டட அமைப்பு என்பது பலரின் நம்பிக்கை. பல வருடங்களாக வாஸ்து நிபுணர்கள் என்று கூறுபவர்கள் கூட பூமிக்குமேல் உள்ள கட்டடங்களின் அமைப்பை பார்த்து மட்டுமே வாஸ்து கூறுகிறார்கள். பூமியின் அதிர்வலைகள் எனப் படும் ங்ஹழ்ற்ட் ங்ய்ங்ழ்ஞ்ஹ்லிக்கு முக்கியத்துவம் வழங்குவதில்லை. என் அனுபவத்தில் நான் பூமிக்குமேல் உள்ள கட்டட அமைப்பு மற்றும் ங்ஹழ்ற்ட் ங்ய்ங்ழ்ஞ்ஹ்-க்கு முக்கியத்துவம் வழங்குகிறேன். தென்கிழக்கில் சமையல் அறையும் தென்மேற்கில் படுக்கையறையும் இருப்பது வாஸ்து அல்ல. பூமிக்குமேல் நல்ல- தீய சக்திகள் இருப்பதுபோல் பூமிக்குகீழ் உள்ள காந்த ஓட்ட சக்தியே ஒருவரின் வளர்ச்சிக்கு காரணமாக அமைகிறது. தமிழ் நாடு மட்டும் புதுச்சேரியில் தான் வாஸ்து பகுதியில் சில ஊர் களில் வீடுகள் மிகக் குறுகியதாக, சிறியதாக சமயலறை, கழிவறை அனைத்தும் குறிப்பிட்ட இடத்தில் அமைக்க இயலாத வகையிலேயே இருக்கும்.
அந்த மனைக்கு தகுந்தவகையில் வீடு கட்டடம் அமைக்கப்பட்டு இருக்கும். வாஸ்து விதிப்படி கட்டடம் இருக்காது. ஒரு பத்து அடி அகல முள்ள மனையில் வாஸ்து விதிப்படி அனைத்து அமைப்புகளையும் உருவாக்குவது மிகக் கடினம். அதனால்தான் நான் 500 சதுரடிக்கும் குறைவான வீடு மற்றும் மனைகளுக்கு பூமியின்மேல் உள்ள கட்டுமானத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதில்லை.
சமீபத்தில் இரண்டு வாரமாக நமது "பாலஜோதிடம்' கட்டுரையைப் படித்த நமது வாசக நண்பர்கள் இருவர் வாஸ்து பார்க்க என்னை அணுகினார்கள். இருவரும் அடுத் தடுத்த வீட்டில் குடியிருக்கிறார்கள். முதல் நபரின் அடுக்கு மாடி குடியிருப்பிற்கு வாஸ்து பார்த்தோம். அதில் 23 வீடுகள் உள்ளது. 30 வருடத்திய கட்டடம் என்பதால் லிப்ட் வசதி கிடையாது. கிழக்கு பார்த்த மனை. ஈசான்யம் (வடகிழக்கு) வாயு மூலை (வட மேற்கு) பகுதியில் படிக்கட்டுகள் இருந்தன. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் அந்த வீடுகளின் உரிமையாளர் அதன் ஈசான்ய பகுதியில் முதல் தளத்தில் குடியிருந்தார். ஈசான்ய படிக்கட்டில் ஏறித்தான் அவர் தனது வீட்டிற்கு செல்லவேண்டும். தம்பதி களுக்கு தற்போது 70-க்குமேல் வயதாகி ஆகி விட்டது. இதுவரை ஆதர்ஷன தம்பதிகளா கவே பேரன்- பேத்திகளுடன் சகல ஐஸ்வர்யங் களுடன் வாழ்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல அந்த அப்பார்மென்டில் குடியிருப்பவர் கள் சந்தோஷமாகவே இருக்கிறார்கள். அந்த பூமியிலுள்ள சுப அதிர்வலைகளே அதற்கு காரணம். அங்கு குடியிருப்பவர்கள் பெரும் பான்மையாக கௌரமான உத்தியோகத்தில் பணிபுரிந்தனர். ஈசான்ய மூலையில் படிக்கட்டு இருந்தும் அதற்கு எந்த பாதிப்பும் இல்லை.
ஆனாலும் படிக்கட்டை மாற்றி அமைக்கவும் அதற்கான மாற்று பகுதியையும் தேர்வு செய்து கொடுத்தேன்.
அந்த கட்டடத்திற்குள் நுழைந்த வுடனே நற்சக்திகளின் அதிர் வலைகள் நறுமணம் நம்மேல் தவழ்வதை உணரமுடிந்தது.
அந்த நறுமணம் அந்த பூமிக்கு மேல் வாழ்பவர்களுக்கு சுபிட்சத் தையும் ஐஸ்வர்யத்தையும் வழங்குகிறது.
அந்த அடுக்கு மாடி குடியிருப் பின் உரிமையாளர் 17-10-1955 காலை 1.10 மணிக்குப் பிறந்தவர். கடக லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். 2, 6, 9 சம்பந்தம் அரசு உத்தி யோகம். banking, auditing, teaching உத்தியோக மாக இருக்கலாம். தந்தைவழி சொத்தில் வருமானம் உண்டு எனக் கூறினேன். ஜாதகர் தான் ஓய்வுபெற்ற அரசு ஆசிரியர் என்றும் இது தந்தையின்மூலமாக கிடைத்த சொத்து என்றாலும் தங்களது சுய உழைப்பில் கடன் பெற்று கட்டிய கட்டடங்கள் என்றும் கூறினார்.
மனைவியும் ஆசிரியர் என்பதால் கடனை எளிதில் அடைத்து விட்டோம் என்றும் கூறினார்.
இரண்டாம் நபரின் வீடும் அடுக்கு மாடி நபரின் வீடும் அடுத்தடுத்து இருந்தது. முதல் நபரின் வடக்கு சுவரும் இரண்டாம் நபரின் தெற்கு பகுதி சுவரும் இருவருக்கும் பொதுச் சுவர். இரண்டாம் நபரின் வீட்டில் முழுமை யான சல்லிய தோஷம். சொத்தை விற்க விரும்பு கிறீர்களா எனக்கேட்டேன். ஆமாம் பத்து வருட மாக விற்க முடியவில்லை என்று கூறினார்.