சர்ப்ப தோஷம்
ஒருவரின் ஜாதகத்திலுள்ள தோஷங்களின் பாதிப்பு ஜாதக ரின் உயிர் அல்லது பொருள் காரகத்தையும் பாதிக்கும். வீரிய மான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கிரகம் எந்த பாவகத்தில் உள்ளதோ அந்த பாவகரீதியான உயிர் காரகத்துவம் மற்றும் பொருள் காரகத்துவத்தையும் சிதைக்கும் வல்லமை உண்டு. அதே நேரத்தில் அஷ்டம பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறாத தோஷம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அஷ்டமபாதக ஸ்தானத் துடன் சம்பந்தம்பெறும் தோஷம் ஜாதகரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும். ஒருவருக்கு ஜோதிடத்தில் எந்த முறையில் பலன் கூறினாலும் அஷ்டமாதிபதி மற்றும் பாதகாதிபதிக்கு முக்கியத்துவம் கொடுத்து பலன் கூறினால் பலன் 100 சதவிகிதம் ஒத்துப்போகும்.
மனிதர்களுக்கு மட்டுமல்ல; ஒருவரின் சொத்திற்கும் சர்ப்ப தோஷ பாதிப்பு உண்டு. வீடு, நிலம் தோட்டம் என கரையான் கட்டும் புற்றில் குடியேறி வாழ்வது சர்ப்பங்களின் இயல்பு. தனக்கென சுயமாக இருப்பிடம் ஏற்படுத்த முடியாத காரணத்தால் அடுத்தவரின் வசிப்பிடத்தில் குடியேறி நிரந்தரமாக தங்கிவிடும். கரையானின் ஆயுட்காலம் குறைவு. ஆனால் இனப்பெருக்க சக்தி அதிகம் உள்ளதால் கரையான் புற்று வேகமாக வளரும் தன்மைகொண்டது. சர்ப்பங்களின் ஆயுட்காலம் அதிகம்.
எளிதில் தான் வசிக்கும் இடத்தைவிட்டு வெளியேறு வதில்லை அல்லது மாற்று வதில்லை. அறிவியலும் ஜோதிடமும் இதை உண்மை என்று சொல் கிறது. ஜாதகக் கட்டத்தில் தனக்கென்று சொந்த வீடு இல்லாத ராகு கேதுகள் தாம் நின்ற பாவகத்தினை சொந்த வீடாக்கி தனது பலன்களை வெளிப்படுத்துகிறது.
2016-ல் மலை வாசஸ்தலத்தில் வசிக்கும் "பாலஜோதிட' வாசகர் தனக்கு ஒரு மனப் பகுதியில் சொத்துகள் உள்ளது. 60 வருடங் களாக தனது வம்சாவளிக்கு சொந்தமான பூமியை விற்க முடியவில்லை. அதற்கு தீர்வு தேடி நம்மை அணுகினார்கள். அந்த நபரின் ஜாதகத்தைப் பார்த்து அந்த இடங்களில் புற்றுகள் உள்ளதா எனக்கேட்டேன். ஆமாம் என்றார். அந்த இடத்தை நேரில்சென்று பார்க்கமுடியுமா எனக்கேட்டேன். சர்ப்ப நடமாட்டம் அதிகம் உள்ளது என்று கூறினார். தான் அந்த பூர்வீக பூமிக்கு அருகில் சென்று 35 வருடத்திற்கு மேலாகிவிட்டது என்று கண் கலங்கினார். சினிமாவில் காட்டுவதுபோல் அடர்ந்த வனப் பகுதி. அந்த இடத்திற்கு மூன்று கிலோமீட்டர் முன்புவரை உள்ள நிலங்களின் உரிமையாளர் கள் விவசாயத் தில் அதிக வருமானம் சம்பாதித்துக் கொண்டு இருக்கி றார்கள். அந்த
நிலத்திற்கு அருகில் யாரும் செல்லமுடியாது என்று கூறினார். நிலத்தின் பரப்பளவு அதிகம் என்பதால் இதை எப்படி சரி செய்யமுடியும் என்ற மன சஞ்சலம் எனக்கும் வந்தது. ஜாதகர் அந்த நிலத்தை ஏதாவது கோவில் அல்லது அரசிற்கு தானமாக வழங்கிவிடலாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டார்.
18-6-1964 பகல் 12.16 மணிக்கு பிறந்த அந்த நபர் மீன லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம். 4-ஆமிடமான மிதுனத்தில் ராகு சுயசாரமான திருவாதிரையில் 9 டிகிரி. 6-ஆம் அதிபதி சூரியன் 3 டிகிரி. 8-ஆம் அதிபதி சுக்கிரன் 6 டிகிரி. சுக ஸ்தானமான 4-ஆமிடத்தில் ருண, ரோக சத்ரு ஸ்தானாதிபதி சூரியன் மற்றும் அஷ்ட மாதிபதி சுக்கிரன். 6, 8-ஆம் அதிபதிகள் நெருக்கமான பாகை இணைவில் நின்றதால் சுக ஸ்தான காரகத் துவங்களின் அனைத்து பாதிப்பும் ஜாத கருக்கு இருந்தது.
சொத்தை பயன்படுத்த முடியாத நிலை. தொழில் கடன், வழக்கு நோய் தாக்கம் ஆகிய வற்றால் மன உளைச்சல் போன்ற சங்கடங் கள் இருந்தது. நீங்கள் சொந்த வீட்டில் வசிக் கிறீர்களா எனக்கேட்டேன். ஆமாம் என்றார்.
எப்படி இது சாத்தியமாகும் என்று கேட்டேன்.
தான் காதல் திருமணம் செய்துகொண்ட மாமன் மகளான தனது மனைவியின் பூர்வீகச் சொத்தில் வசிப்பதாக தெரிவித்தார். தான் எக்ஸ்போட் தொழில் செய்வதாக கூறினார். தனது பெயரில் பூர்வீக சொத்து இரண்டைத் தவிர வேறு எதுவுமில்லை என்று கூறினார்.
மனைவி, மக்கள் பெயரில் சில சொத்துகள் இருப்பதாக கூறினார். இவரின் ஜாதகம் விடுபட்ட கால சர்ப்ப தோஷ அமைப்பு. பூர்வபுண்ணிய ஸ்தான அதிபதி சந்திரன் மட்டும் சுய சாரமான அஸ்தம் நட்சத்திரத்தில். ராகு கேதுவின் அச்சிற்கு வெளியே ராகு கேதுவின் மையப்புள்ளியில் நின்றது. 4-ஆம் அதிபதி புதன் 2, 9-ஆம் அதிபதி செவ்வாய் மற்றும் மாந்தியுடன் சேர்ந்து நின்றது பூர்வீக தோஷத்தை வெளிப்படுத்தியது.
பரிகாரம்
ஜாதகரை திருவாரூர் மாவட்டம் திருப் பாம்புரம் பாம்புரேஸ்வரர் திருக்கோவிலுக்கு மாதம் ஒருமுறை பிரச்சினை தீரும்வரை சென்றுவர அறிவுறுத்தப்பட்டது. இந்தக் கோவில் மிகச்சிறந்த ராகு- கேது பரிகாரத் ஸ்தலமாகும். இந்தக் கோவிலிலுள்ள இறைவனை, ஆதிசேஷன், ராகு மற்றும் கேது, அஷ்டமா நாகங்கள் ஆகியோர் சிவராத்திரி யின் மூன்றாம் ஜாமத்தில் வழிபட்டு தங்கள் சாபங்களில் இருந்து விமோசனம் பெற்றிருக் கிறார்கள்.
கும்பகோணம், திருநாகேஸ்வரம், காளகஸ்தி, கீழப்பெரும்பள்ளம், நாகூர் ஆகிய நாகதோஷப் பரிகார ஸ்தலங்கள் அனைத் தையும் வழிபட்ட பலன், திருப்பாம்புரம் தலம் ஒன்றை தரிசித்தாலே கிடைக்கும்.
அத்துடன் சர்ப்ப கணங்களின் பாதிப்பை குறைக்க நவதானியங்களை பயன்படுத்தி சில தாந்தரீக முறைகள் வழங்கினேன்.
அவசரப்பட்டு சொத்தை யாருக்கும் தானம் வழங்க வேண்டாம் என்று கூறினேன்.
அவ்வப்பொழுது போனில் பேசும் ஜாதக ரிடம் சிறு நம்பிக்கை குறைவு வெளிப்படும். ஐந்து வருடங்களுக்குபிறகு சர்ப்பங்களின் நடமாட்டம் குறையத் துவங்கியுள்ளதாக கூறினார்.
தற்போது சர்ப்பங்களின் நடமாட்டம் அந்தப் பகுதியில் இல்லையென்று அந்த பகுதி மக்களிடமிருந்து தகவல் வருகிறது என்று கூறிவந்தார். சுமார் ஆறு வருடம் கழித்து 2023-ல் நேரில் சந்தித்த ஜாதகர் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் பிளாட்போட்டு விற்க அந்த குறிப்பிட்ட சொத்தை வாங்க முன் வந்து இருப்பதாக கூறினார். அந்த சொத்திற்கு எதிர்பார்த்த தொகை கிடைக்காவிட்டாலும் சில கோடிகளை பெற்றதால் ஜாதகர் மகிழ்ந்தார்.
சர்ப்ப தோஷம் மனிதர்களுக்கு மட்டு மல்ல; பூமிக்கும் உண்டு என்பதை நான் அந்த சம்பவத்தில்தான் முதன்முதலில் உணர்ந்தேன். சர்ப்பங்களின் எதிரி கருடன். ராகு- கேதுவால் ஏற்படும் பாதிப்பை சீர் செய்யும் வலிமை ஆகாச கருட கிழங்கிற்கும் நவதானியத்திற்கும் உண்டு.
இனி அடுத்த வாரம் பித்ரு தோஷத்தால் தடைபட்ட சொத்து விற்பனை பற்றி பார்க்கலாம்.
தொடரும்....
செல்: 98652 20406