கும்ப லக்னம் தசா புக்திப் பரிகாரங்கள்! 11 -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/aquarius-ascendant-dasa-enlightenment-remedies-11-prasanna-astrologer-i

னியின் ஆதிக்கம்பெற்ற கும்ப லக்னம் காலபுருஷ 11-ஆமிடமான லாப ஸ்தானம் என்பதால் ஆதாயம் இல்லாத காரியத்தில் ஈடுபடமாட்டார்கள். ஒரு பிரச்சினைக்கு நியாயத் தீர்ப்பு வழங்குவதில் வல்லவர்கள். கடுமையான உழைப்பாளிகள். கும்பம் தரையில் இருந்தாலும் கோபுரத்தில் இருந்தாலும் மகிமையுடையது. அதேபோல் நீங்கள் போய் நின்றவுடன் அந்த இடம் கலை கட்டும். கூட்டம் இல்லாத கடைக்கு நீங்கள் சென்றால்கூட கூட்டம் கூடிவிடும். உங்கள் ராசியின் மகிமை அப்படி. எளிதில் உங்களுக்கு என்று நண்பர் கூட்டங்களை உருவாக்கும் வலிமை படைத்தவர். மற்றவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்ற மனதுடையவர். உங்கள் கோபம் நட்பு வட்டாரத்தையே சிதறடிக்க வைத்துவிடும். கும்பம் காலபுருஷ பாதகாதிபதியல்வா? கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும். நல்ல கல்வி அறிவுகொண்டவர். ஜோதிடம், மாந்த்ரீகத்தில் ஆர்வம்மிக்கவர். இனி தசா புக்திப் பரிகாரங்களைக் காணலாம்.

சனி தசை

சனி கும்ப லக்னத்திற்கு லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி. சனி பலம் பெற்று தசை நடத்தினால் ஆன்மிக ஈடுபாடு உண்டு. பொறுப்பானவர்களாக அமைதியாக இருப்பார்கள். அதிகார வர்க்கத்தின் தொடர்பும் சேவை மனப்பான்மையும் மிகுதியாகும். பயணம் செய்வதில் விருப்பம் மிகும். அந்த ஜாதகருக்கு வெளிநாட்டு யோகம் அமையும். வெளிநாட்டில் தங்கி வேலை, தொழில் செய்யும் நிலை உருவாகும். சனி பலம் குறைந்து தசை நடத்தினால் வெளிநாட்டில், வெளியூரில் கஷ்ட ஜீவனம் நடத்தும் நிலை உண்டாகும்.கட்டுக்கடங்காத விரயம் இருந்துகொண்டே இருக்கும். சிலர் கடனுக்காக குற்றத் திற்காக தலைமறைவாக வாழ்வார்கள். இரவு நேர வேலை, இரவு நேர தொழில் சிறப்பாகும். இரவில் உறக்கம் கெடுவதால் உண்டாகும் நோய்களும் ஏற்படு

னியின் ஆதிக்கம்பெற்ற கும்ப லக்னம் காலபுருஷ 11-ஆமிடமான லாப ஸ்தானம் என்பதால் ஆதாயம் இல்லாத காரியத்தில் ஈடுபடமாட்டார்கள். ஒரு பிரச்சினைக்கு நியாயத் தீர்ப்பு வழங்குவதில் வல்லவர்கள். கடுமையான உழைப்பாளிகள். கும்பம் தரையில் இருந்தாலும் கோபுரத்தில் இருந்தாலும் மகிமையுடையது. அதேபோல் நீங்கள் போய் நின்றவுடன் அந்த இடம் கலை கட்டும். கூட்டம் இல்லாத கடைக்கு நீங்கள் சென்றால்கூட கூட்டம் கூடிவிடும். உங்கள் ராசியின் மகிமை அப்படி. எளிதில் உங்களுக்கு என்று நண்பர் கூட்டங்களை உருவாக்கும் வலிமை படைத்தவர். மற்றவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்ற மனதுடையவர். உங்கள் கோபம் நட்பு வட்டாரத்தையே சிதறடிக்க வைத்துவிடும். கும்பம் காலபுருஷ பாதகாதிபதியல்வா? கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும். நல்ல கல்வி அறிவுகொண்டவர். ஜோதிடம், மாந்த்ரீகத்தில் ஆர்வம்மிக்கவர். இனி தசா புக்திப் பரிகாரங்களைக் காணலாம்.

சனி தசை

சனி கும்ப லக்னத்திற்கு லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி. சனி பலம் பெற்று தசை நடத்தினால் ஆன்மிக ஈடுபாடு உண்டு. பொறுப்பானவர்களாக அமைதியாக இருப்பார்கள். அதிகார வர்க்கத்தின் தொடர்பும் சேவை மனப்பான்மையும் மிகுதியாகும். பயணம் செய்வதில் விருப்பம் மிகும். அந்த ஜாதகருக்கு வெளிநாட்டு யோகம் அமையும். வெளிநாட்டில் தங்கி வேலை, தொழில் செய்யும் நிலை உருவாகும். சனி பலம் குறைந்து தசை நடத்தினால் வெளிநாட்டில், வெளியூரில் கஷ்ட ஜீவனம் நடத்தும் நிலை உண்டாகும்.கட்டுக்கடங்காத விரயம் இருந்துகொண்டே இருக்கும். சிலர் கடனுக்காக குற்றத் திற்காக தலைமறைவாக வாழ்வார்கள். இரவு நேர வேலை, இரவு நேர தொழில் சிறப்பாகும். இரவில் உறக்கம் கெடுவதால் உண்டாகும் நோய்களும் ஏற்படும். சிலர் வாழ்வின் பெரும் பகுதியை மருத்துவமனையில் கழிப்பார்கள்.எந்த நோய் எந்த மருந்தை எடுப்பது என்று தெரியாமல் குழம்புவார்கள்.

பரிகாரம்

சனிக்கிழமை சனி ஓரையில் சிவ வழிபாடு செய்யவேண்டும்.

குரு தசை

குரு கும்ப லக்னத்திற்கு 2, 11-ஆம் அதிபதி. தன, லாப ஸ்தான அதிபதி. குரு பலம் பெற்று தசை நடத்தினால் குடும்பம் கோவிலாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைத்திருக்கும். வாக்கு வன்மைபெறும். தனது வாக்குத் திறமையை வைத்து சம்பாதிப்பார்கள். பாக்கிய பலம் நிரம்பியவர்கள். நல்ல குணம் ஆத்ம சக்தி அதிகரிக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும். லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள். அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி வகிப்பவர். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குபவர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் வருமானம் கிடைக்கும். வீடு, வாகனம் என சகல ஐஸ்வர்யங் களும் உண்டு. இரண்டு குடும்பம் உண்டு. இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு உயர்வு உண்டு. வட்டித் தொழில், வாக்குத் தொழில், கமிஷன் தொழிலில் லாபம் பெறுவார்கள். மூத்த சகோதரம், சித்தப்பா ஆதாயமும் உண்டு. குரு பலம் குறைந்து தசை நடத்தினால் நிலையான வருமானம் இருக்காது. வறுமை கஷ்ட ஜீவனம் இளைய தாரத்திடம் அல்லது தவறான நட்பில் பொருள் இழப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நட்டம், தொழில் இழப்பு போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதி குறையும்.

பரிகாரம்

சனிக்கிழமை குரு ஓரையில் கோவில் யானைக்கு கரும்பு தானம் வழங்கவும்.

செவ்வாய் தசை

செவ்வாய் கும்பத்திற்கு 3, 10-ஆம் அதிபதி. சகாய ஸ்தான அதிபதி, தொழில் ஸ்தான அதிபதி செவ்வாய் பலம் பெற்று தசை நடத்தினால் முயற்சியை மூலதனமாககொண்டு முன்னேறுபவர்கள். விடாமுயற்சி, தன்நம்பிக்கை, துணிச்சல், புகழ், கீர்த்தி, வெற்றி, சுய வருமானம், நேர்மை, திறமை, இளைய சகோதர விருத்தி, மங்காத புகழ் உடல் வலிமையுடையவர்கள். புதிய தொழில் முயற்சியால் சுய வருமானத்தில் செல்வம் சேரும். சுய தொழில் ஆர்வம் மிகுந்தவர். கவர்ச்சியான விளம்பரத்தால் தொழிலில் உச்சத்தை அடைவார்கள். உடன்பிறந்தவர்களுடன் இணைந்து கூட்டுத்தொழில் செய்வார்கள். பெரிய அந்தஸ்து, அதிகாரம் நிறைந்த பதவியில் இருப்பார்கள். செவ்வாயும் ஆட்சி உச்சம்பெற்று சுபத்தன்மை பெற்று லக்னம் மற்றும் பத்தாமிடத்தோடு தொடர்பு கொள்ள காவல்துறை, இராணுவம் போன்ற சீருடை பணிகளில் பணியாற்ற முடியும். செவ்வாய் பலம் குறைந்து தசை நடத்தினால் தகுதி, திறமைக்கு தகுந்த நிரந்தர, தொழில் உத்தியோகம் அமையாது. உடன்பிறந்த வர்களால் நிம்மதி குறையும்.

பரிகாரம்

சனிக்கிழமை செவ்வாய் ஓரையில் பழநி முருகனை ராஜ அலங்காரத்தில் வழிபட வேண்டும்.

dd

சுக்கிர தசை

சுக்கிரன் கும்ப லக்னத்திற்கு 4, 9-ஆம் அதிபதி. சுக ஸ்தான அதிபதி. பாக்கியாதிபதி மற்றும் பாதகாதிபதி. சுக்கிரன் பலம் பெற்று தசை நடத்தினால் பூர்வீக சொத்து, தந்தை, தந்தைவழி முன்னோர்களால் உருவாக் கப்பட்ட சொத்துக்கள் கிடைக்கும். சுய உழைப்பிலும் சிறப்பான வீடு, மனை யோகம் உண்டு. கல்வி நிறுவனம் நடத்துவார்கள். தாய், தந்தையுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்வார்கள். தன்னை சார்ந்தவர்களுக்கு ஆலோசனை வழங்கி வழி நடத்துபவர்கள். பலருக்கு வேலை வாய்ப்பு வழங்குபவர்கள். வீடு தெய்வ கடாட்சம் நிறைந்து கோவில் போல் இருக்கும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். குலம் தலைக்கும். வாழ்க்கை சுகமாகவும் அமைதியாகவும் இருக்கும். பதவி, புகழ், அந்தஸ்துடன் கோடீஸ்வராக வாழ்வார்கள். உயர் கல்வி யோகம் உண்டு. சுக்கிரன் பலம் குறைந்தால் தந்தை, தந்தைவழி முன்னோர்கள் முறையாக பித்ரு கடன் நீக்காதவர்கள். வில்லங்க சொத்து பங்காளி பகை உண்டு.தாய், தந்தைக்கு நோய் பாதிப்பு உண்டு. கற்ற கல்வியால் பயன் இருக்காது. சனியும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்பதால் கும்பத்திற்கு பாதக தோஷம் பாதிப்பைத் தராது என்ற கருத்து நிலவினாலும் சுக்கிரன் நின்ற நிலைக்கு ஏற்ப சாதகமும் பாதகமும் கலந்தே நடக்கும்.

பரிகாரம்

வியாழக்கிழமை சுக்கிர ஓரையில் மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபடவேண்டும்.

புதன் தசை

புதன் கும்ப லக்னத்திற்கு 5, 8-ஆம் அதிபதி. பூர்வபுண்ணிய ஸ்தான அதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. புதன் பலம்பெற்று தசை நடத்தினால் தாய், தந்தை மற்றும் முன்னோர்களின் நல்லாசி உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி நிம்மதி பங்குச் சந்தை ஆதாயம் உண்டாகும். கூட்டுக் குடும்பமாக வாழ்வார்கள். பலருக்கு வேலை வாய்ப்பு வழங்குபவர்கள். வீட்டின் அருகில் மதப்பற்று மிகுந்தவர்கள், ஆச்சாரங்களை கடைபிடிப்பவர்கள் அதிகமாக இருப்பவர் கள். குலதெய்வம், முன்னோர்களின் நல்லாசி உண்டு. சிலருக்கு அதிர்ஷ்ட வாரிசு இல்லாத உயில் சொத்து, பினாமி சொத்து கிடைக்கும். புதன் பலம் குறைந்து தசை நடத்தினால் விபத்து, கண்டம், அவமானம், சர்ஜரி, கண் திருஷ்டி பாதிப்பு உண்டாகும். பூர்வீகத்தை விட்டு மனக் கஷ்டத்துடன் வெளிமாநிலம், வெளிநாடு செல்வார்கள். கடைசி காலத்தில் பூர்வீகம் திரும்ப விரும்புபவர்கள். குலதெய்வ கோபம் உண்டு. காலதாமதமாக கடுமையான வைத்தியத்திற்கு பிறகு குழந்தை பிறக்கும் அல்லது தத்து குழந்தை கிடைக்கும்.

பரிகாரம்

குலதெய்வத்தை வழிபடவேண்டும்.

சந்திர தசை

சந்திரன் கும்ப லக்னத்திற்கு ஆறாம் அதிபதி. சந்திரனைவிட சனி வலிமை பெற்று இருந்தால் வாங்கிய கடனால் நன்மை பெருகி வாழ்வாதாரம் உயரும். கடனால் வளர்ச்சி ஏற்படும் கடனை அடைக்கக்கூடிய சூழல் உண்டாகும். எந்த நிலையிலும் கடன் சார்ந்த பிரச்சினை இருக்காது. கடன் பெற்று தொழில் தொடங்கும் அமைப்பு உண்டாகும். சந்திரன் பலம் குறைந்தால் வாழ்நாள் முழுவதும் தொடரும் கடன். உற்றார், உறவினர், நண்பர்களே எதிரியாக இருப்பார்கள். ஜாமின் பெறுவதாலும், கொடுப்பதாலும் பொருளாதார பிரச்சினையை விலை கொடுத்து வாங்குவார்கள். நிலையான வேலை, உத்தியோகம் இருக்காது.

பரிகாரம்

மைத்திர முகூர்த்த நாட்களில் கடனை அடைக்க பாதிப்பு எளிதில் குறையும்.

சூரிய தசை

சூரியன் கும்ப லக்னத்திற்கு ஏழாம் அதிபதி. நண்பர்கள், தொழில் கூட்டாளி, வாடிக்கையாளர்கள், சமுதாய அங்கீகாரம் மற்றும் களத்திரம் பற்றிக் கூறுமிடம். சூரியன் பலம் பெற்று தசை நடத்தினால் உரிய வயதில் திருமணம் நடக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர் களால் சமுதாய அந்தஸ்து உயரும். சூரியன் பலம் இழந்து தசை நடத்தினால் நண்பர்கள், கூட்டாளிகள் சம்பந்திகள் வெளியில் நண்பர் களாகவும் உள்ளுக்குள் வெறுப்பையும் உமிழ் வார்கள். திருமண வாழ்க்கையில் மாரகம் நிறைந்ததாக இருக்கும். சிலர் மனதிற்குள் அழுது புழுங்கி நரகமான வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். சிலர் துணிந்து இல்லற பந்தத்தில் இருந்து விடுபடுகிறார்கள்.

பரிகாரம்

சனி பிரதோஷ காலத்தில் வில்வ மாலை அணிந்து சிவ வழிபாடு செய்ய வேண்டும். ராகு தசை நடப்பவர்கள் ராகு காலத்தில் துர்க்கையை வழிபட வேண்டும். கேது தசை நடப்பவர்கள் அரச மர விநாயகரை வழிபட வேண்டும்.

தொடரும்....

செல்: 98652 20406

bala250823
இதையும் படியுங்கள்
Subscribe